Related Articles
தலைவர் தான் அந்த Trend Setter !!
லேட்டாக வந்தாலும் கரெக்ட்டா அடிக்கணும்.. 2.O விழாவில் தலைவர் வைத்த பன்ச்!
தலைவர் சந்திப்பு - என் நிலை உணர்ந்து அணைத்துக் கொண்டார்
காலா 100வது நாள் கறி விருந்து அசத்திய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்!
ரஜினியுடன் மேரி கோம் சந்திப்பு… பாக்சிங் போஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்!
Kerala flood relief fund distribution by Rajinifans.com
பத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு . . ரஜினியை பத்தி எழுதுனாநெறைய பேரு படிப்பாங்க
முதல்வர் கனவு சுடலை எனும் மு.க.ஸ்டாலினினுக்கு கானல் நீரான கதை
Actress Malavika Mohanan thrilled to work with Thalaivar Rajinikanth in Petta
Exercise caution in matters of religion: Rajinikanth on Sabarimala issues

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
Zee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி
(Tuesday, 6th November 2018)

Zee தமிழில் தலைவரின் இன்றைய பேட்டி :

போனால் போகட்டும் போடா பாடல்தான் ரொம்பப் பிடிக்கும் என்று ஆரம்பித்ததில் இருந்து சரவெடி. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது போல முதல் பதிலிலேயே அபாரம்.

கனவாக இருப்பது நனவாகும் போது அவ்வளவு ஈர்ப்பாக இல்லை - அது எல்லாவற்றிலும்தான் - கல்யாணத்தையும் சேர்த்து என்றதில் அடுத்த அட்டகாசம்.

எல்லாரும் சொல்லுற ‘சிம்பிளிசிடி’ பற்றிய கேள்விக்கு வெளிப்படையாக போயஸ் கார்டன், பி.எம்.டபிள்யூ காரிலே போறோம்.. இதிலே என்ன சிம்பிளிசிட்டி என்ற கேள்வி..

ஷங்கரைப் பாராட்டிய விதம்.. மொத்த கிரெடிட்டையும் அவருக்குக் கொடுத்தது.. அவர் செய்ததைப் பார்த்தால் நான் ஒண்ணுமே செய்யலை என்ற தன்னடக்கம். டைரக்டரைக் கேட்காமல் எதுவும் சொல்ல முடியாதுங்க என்பது அருமை. எத்தனை உயரம் தொட்டாலும் இயக்குநரை மதிப்பது கலக்கல்.

என்னோட நல்ல நேரம் ஷங்கர் நடிப்புக்கு வரலை என்றதும், ஸ்டைல் பண்ணனுமுன்னு இப்பவும் நான் பண்றது கிடையாது என்பதும் கூட தன்னடக்கத்தின் உச்சமே.

ஃபடாபட் ஜெயலட்சுமி..ராதிகா.. எதிர்பாராத பதில்

ஈர்ப்பை எப்படி உருவாக்குறீங்க? என்பதற்கு ஆண்டவனைக் கை காட்டியது அருமை.

திடீருன்னு பணம் வந்திடுச்சே.. நாம தனிப்பிறவியோ.. ஆண்டவன் நம்மை தனியா உருவாக்கிட்டானோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. எல்லாம் நேரம்தான் என்று அப்புறம்தான் புரிய வந்திச்சு. 60களில் வந்திருந்தால் நாம அவுட்டுதான். நாம வந்தப்ப எம்.ஜி.ஆர்., சிவாஜியெல்லாம் இல்லை.

எப்பவுமே சந்தோஷம் இருக்கும். அதான் பவர் ஆஃப் ட்ரூத்.. இது சத்தியமான உண்மை.

அக்‌ஷய்குமார்தான் ஹீரோ..அவர்தான் வில்லன். இதில் ரஜினிகாந்தே தேவையில்லை என்பதெல்லாம் வேற லெவல்.

சகநடிகர்கள் எமிஜாக்சன், அக்‌ஷய்குமார் பற்றியெல்லாம் பாராட்டிப் பேசியது அட்டகாசம். தயாரிப்பாளரை சுபாஷ்கரணைப் பாராட்டியதும் கலக்கல்.

எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க என்று பார்த்ததைப் பிறகும் பாராட்டாமல் விடுப்பது சரியல்ல என்றது நல்ல மனசு.

அமிதாப்ஜியின் பாராட்டு பற்றிய பேச்சு எத்தனை காலமானாலும் மறக்காத தன்மை.

அபூர்வ ராகங்கள் வீடு நமக்குக் கிடைக்கவில்லை என்றவுடன் அதன் பிறகு அது பற்றி யோசிக்கவில்லை என்பது சூப்பர்.

பேட்டியின் போது Sorry to interrupt..ன்னு சொல்லுறதெல்லாம். தலைவருக்கு மட்டுமே உரியது.

மாஸ்.. மனதைத் தொடுவது.. - மக்களின் பல்ஸ

பெங்களூரு கோவில் பெங்காலி அம்மாள் சம்பவம் வேற ரகம். சிலிர்ப்பு & சிறப்பு.

இதில் சினிமாவில் வந்த போது எப்படி எம்.ஜி.ஆர்., சிவாஜி இல்லாததால் பெருவெற்றி பெற முடிந்ததோ, அப்படியே இப்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ள தமிழக அரசியலில் பெரிய வெற்றியை அடையமுடியும் என்றதொரு எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும். அது ஓரளவுதான் உண்மை. அவர்கள் இருந்திருந்த போதே வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியும் என்றாலும் முன்பு பேசிய வெற்றிடம் இருக்கிறது என்பதன் தொடர்ச்சியாக இதைப் பார்க்க முடிகிறது.

என்னதான் வெற்றிக்கு அதி முக்கிய 90% காரணம் என்றாலும், ‘நான் ஒண்ணும் செய்யலை.. டீம் வொர்க்தான்’ என்பது போலவே தொடரந்து பேசிவருவது ’நல்ல அறிஞர்கள் ஆலோசனையுடன் நல்லாட்சி செய்வேன்’ என்று கூறியதன் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

ராதிகா போன்றோர் தொடர்ந்து எதிர்கருத்து பேசி வரும் வேளையில் எதிர்பாராவிதமாக அவர் பெயரைக் குறிப்பிட்டது ‘பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்பது போல மனோரமா ஆச்சி சம்பவத்திலிருந்தே நிருபிக்கப்பட்டுவரும் தன்மையின் தொடர்ச்சி.

போன தலைமுறை பெண்கள் இன்னமும் கூட படாபட் ஜெயலட்சுமி, ராதிகா ஆகியோர்தான் தலைவருக்கு சரியான ஜோடி திரைப்படத்தில் என்று இன்னமும் கூட பேசுவதுண்டு. மக்களின் பல்ஸை இன்னமும் தெரிந்தே வைத்துள்ளீர்கள் என்பதற்கு இந்த பதிலே சாட்சி.

திரைப்படத்தில் மட்டுமல்ல அரசியலிலும் கமல்ஹாசன் நமக்கு எதிர் என்பது போல ஊடகங்கள் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முனைந்தாலும் அப்படியே அவரை தூக்கி வைத்துப் பாராட்டிப் பேசியது தலைவரைத் தவிர வேறு யாருக்கும் சாத்தியமில்லை. அதுவும் அவரை சூப்பர் ஸ்டார் என்று! வாய்ப்பே இல்லை.
இந்த மனநிலை வேறு யாருக்கும் வராது. குறிப்பாக கமலுக்கு  Sorry to say.

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்வது, பிச்சை எடுக்கச் செய்வது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது..  அவர்களை நடு ரோட்டில் சுடணும்.. இந்த டாபிக் யாரும் பெரிய அளவில் தொட்டதே இல்லை.. மனிதாபிமானம்.

எம்.ஜி.ஆர். ஒரு தெய்வப் பிறவி. அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. இதிலும் அரசியல் சாயல் மீண்டும். :-)

உடல்நிலையைப் பற்றி யார் இப்படி தெளிவாகப் பேசுவார்கள்? அதுவும் திரை மற்றும் அரசியல் உலகில்?

சூப்பர் ஸ்டார் சார் நீங்க என்றதற்கு.. வெட்கத்துடன் சிரிப்பு.. நீங்க வேற என்றதெல்லாம் வேறு யாரால் முடியும்? தூங்குறதிலே என்னங்க ஸ்டைல் இருக்கு? செம்ம.. செம்ம.. Goosebumps.

வெட்கம்..சிரிப்பு.. சிலிர்ப்பு.. பாராட்டு.. என பல வகைப்பட்ட பாவங்களில் தலைவர் அளித்த பேட்டி பலருக்கு பல இடங்களில் ‘நான் தலைவர் ரசிகன்டா’ என்று நெஞ்சு நிமிர்த்தி பெருமிதம் கொள்ளச் செய்யும் விதமாகவே இருந்தது.

- மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்

 

 

 

 






 
0 Comment(s)Views: 466

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information