Related Articles
Superstar Rajinikanth is the second Indian to be a part of Bear Grylls adventure show
லிங்கா - 140 கோடி அல்ல 180 கோடி - உண்மை ஒரு நாள் வென்றது!
நடந்ததை சொன்னேன் பெரியார் குறித்த பேச்சு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ரஜினிகாந்த் திட்டவட்டம்
பெரியாரை வைத்து பிழைக்கும் கும்பல்கள் தான் எதிரிகள்
முரசொலி வாசகர்களை முட்டாள்கள் என கூறினாரா ரஜினி?
தர்பார் படம் விமர்சனம் - ஒரு ரசிகனின் தரமான விமர்சனம்
S-U-P-E-R S-T-A-R என வர ஆரம்பிக்கும் அந்த நொடி....... எப்போ தான்டா விடியும் !!!
ஒரு கபாலியாகத் தர்பார் சரித்திரம் படைத்துவிடுமோ?
Superstar fan opens a hotel serves cheap and healthy food
Ties up with Airtel for Darbar-branded SIM cards

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
இஸ்லாமியர்களுக்காக முதலில் குரல் கொடுப்பேன்: ரஜினி பேட்டி!
(Wednesday, 5th February 2020)

குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மாணவர்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என பல தரப்பிலிருந்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ரஜினிகாந்த் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்று இது குறித்து பேசியுள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முன்னதாக கருத்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த் சமூக விரோதிகள் பேரணியில் உள்ளே புகுந்துவிட்டனர் என பேசினார். அதற்கு அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தில் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, “எனக்கு இன்னும் சம்மன் வரவில்லை. சம்மன் வந்தால் எனது கருத்தை ஆணையத்திடம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கீடு ஆகியவை குறித்து எழுப்ப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். “தேசிய மக்கள் தொகை கணக்கீடு அவசியமானது; முக்கியமானது. இதற்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. யார், யார் உள்ளனர், எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர் என்ற விவரங்கள் பெறுவது அவசியம்.

தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படவில்லை. யோசனை பண்ணிக்கொண்டுள்ளனர். அது வரும்போது அதில் உள்ளவற்றை குறித்து பேச முடியும்.

குடியுரிமைச் சட்டத் திருத்தம் மூலம் இந்தியாவில் வாழும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அண்டை நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதா வேண்டாமா என்பதுதான் பிரச்சினை. இஸ்லாமியர்களுக்கு இதன்மூலம் அச்சுறுத்தல் என பீதி கிளப்பிவிட்டனர். பிரிவினை காலத்தில் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று சொன்னபோது இதுதான் என் தாய் நாடு என்று கூறி இருந்தவர்கள் அவர்கள். அவர்களை எப்படி வெளியேற்றுவார்கள். அப்படி வந்தால் அவர்களுக்காக முதல் குரல் நான் கொடுப்பேன். தேவையில்லாமல் சில அரசியல் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக பிரச்சினையாக்குகிறார்கள் இதற்கு சில மத குருமார்கள் துணை போகின்றனர். இது மிகத் தவறானது.”

இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ரஜினிகாந்த், “இந்தியாவில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். அங்கிருக்கும் தமிழர்களுக்கு அல்ல. இதுவே எனது நிலைப்பாடு” என்று கூறினார்.

“மாணவர்கள் இது போன்ற விவகாரங்களில் தீர ஆராய்ந்து, தங்கள் பேராசிரியர்களிடம் கேட்டு போராட்டத்தில் ஈடுபடவேண்டும். எஃப்ஐஆர் போட்டால் அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குள்ளாகிவிடும். அரசியல் கட்சிகள் அவர்களை பயன்படுத்திக்கொள்வார்கள் ” என்றார்.

வருமான வரி செலுத்தவில்லை என்றும், வட்டிக்கு கடன் கொடுத்ததாக ரஜினி கூறிய வாக்குமூலம் குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் முறையாக வரி செலுத்துபவன், வருமான வரித்துறைக்குத் தெரியும். நான் சட்டவிரோதமாக எந்த காரியத்திலும் ஈடுபடவில்லை” என்று கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.






 
0 Comment(s)Views: 959

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information