Related Articles
விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது: ரஜினி இரங்கல்
இயக்குனர் விக்ரம் தலைவரோடு ஒரு பேட்டி - குமுதம் 1990
தமிழக சட்டமன்ற தேர்தல் : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாக்களித்தார்!
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே உயரிய விருது
February 2021 - Rajini Buzz
Superstar Rajinikanth visits Maestro Ilaiyaraaja new studio
Bollywood movie Hum completes 30 years today
தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயல் வீரர்கள் கூட்டம் அமோகமாக நடைபெற்றது
போகிறவர்கள் தாராளமாகப் போகலாம்!
போராட்டம் நடத்தி என்னை யாரும் வேதனைப்படுத்த வேண்டாம்: ரஜினி

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
கொரோனா 2வது அலை குறித்து அன்றே சொன்ன ரஜினி
(Tuesday, 27th April 2021)

உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்று டுவிட்டரில் இன்று(ஏப்., 27) தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

நான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் களம் காண்பதாக அறிவித்து இருந்தார். ஆனால் கடந்தாண்டு அண்ணாத்த படப்பிடிப்பில் நடித்து வந்தபோது அங்கு படக்குழு சிலருக்கு கொரோனா பிரச்னை ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதோடு, ரஜினிக்கு ரத்த அழுத்தம் பிரச்னையும் ஏற்பட்டது. அதுநாள் வரை அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி வந்த ரஜினி பின்பு தன் முடிவை மாற்றிக்கொண்டார். உடல்நிலையையும், கொரோனா பிரச்னையையும் காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரவில்லை என கூறினார்.

இதுதொடர்பாக அப்போது அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கடைசி சில வரிகளில் அவர் குறிப்பிட்ட விஷயம் முக்கியமானது. அதாவது, ‛‛இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை என தெரிவித்து இருந்தார்.

இப்போது இந்த வரிகளை சுட்டிக்காட்டி இன்று(ஏப்., 27) டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர் ரஜினி ரசிகர்கள். ரஜினி கூறிய விஷயம் தான் இப்போது நாட்டில் நடக்கிறது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையால் நாடு என்ன நிலைமையில் தவித்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பல மாநிலங்களில் இந்நோய்க்கு ஆளானவர்களுக்கு மருத்துவமனையில் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்தளவுக்கு கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்து தான் அப்போதே அப்படி ஒரு அறிக்கையை ரஜினி கொடுத்தார். நிஜமாகவே பல உயிர்களை ரஜினி காப்பாற்றி உள்ளார். உண்மையான சூப்பர் ஸ்டார் அவர் தான் என கூறி டுவிட்டரில், #அன்றே_சொன்ன_ரஜினி என்ற ஹேஷ்டாக்கை ரசிகர்கள் வைரலாக்கினர். இந்த ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. ரஜினியின் ரசிகர்கள் இதை வரவேற்று கருத்து பதிவிட்டனர்.






 
0 Comment(s)Views: 1060

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information