Related Articles
விகடன் ... இதெல்லாம் ஒரு பிழைப்பா?
ரஜினிக்கு ஆதரவாக பாரதிராஜா, பி.வாசு, அமீர், சீமான் . .
Rajinikanth clarified his stand on the recent Apology to Kannadigas
Vadivelu speaks about our Thalaivar
Kuselan audio launch at Le Meridian
Rajinikanth the 50 most admired Indians!
Rajinikanth style finds eager fans in Pakistan
Rajini starrer Kuselan movie new stills released
SuperstarRajinikanth in CBSE School Book
Rajinikanth is my biggest role model - Salman Khan

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ஞாநிக்கு சில கேள்விகள்
(Thursday, 7th August 2008)

ருத்து சார்ந்த நிலைப்பாட்டை தாண்டிய தனிமனித காழ்புணர்ச்சியின் அடிப்படையில் ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கும் ஞாநி, அதை நிரூபிக்கும் வகையில் ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்.


உங்கள் மேல் பரிதாபப் படுகிறேன், இன்றோடு நீங்கள் காலி, -இப்படிப்பட்ட வாசகங்களுடன் ரஜினிக்கு முடிவுரை எழுத முயன்ற முயற்சி எத்தனை காலமாக நடந்து வருகிறது. அதையும் மீறிதானே இருந்து வருகிறார் ரஜினி.உங்களுக்கு புரிபடாத இந்த ரசிக அபிமானத்தைதானே உங்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.


ரஜினி உதைப்பேன் என்று சொன்னவுடன் பூச்செண்டு கொடுத்தீர்கள். இன்று வருத்தம் தெரிவித்தவுடன் குட்டு வைக்கிறீர்கள். ரஜினியின் நிலைப்பாட்டை ஒரு சினிமா நடிகருக்கான பலவீனம் .சுயநலத்திற்காக அப்படிசெய்தார் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்க நான் முயலவில்லை. ஆனால் மேன்மைமிகு பத்திரிக்கை தொழில் நடத்தும் தங்களது நிலைப்பாடு என்ன..ரஜினி உதைப்பேன் என்பதற்கு பூச்செண்டு கொடுத்தீரே? உதைப்பது வன்முறைச் செயல்- நீங்கள் வன்முறையை ஆதரிக்கும் தீவிரவாதியா? ஏற்பில்லா கருத்தை சொல்லும் மனிதர்களை உதைப்பதுதான் உங்கள் நியாயமா?.


கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் காணாமல் போய்விட்டது என்பது உங்களது அடுத்த கண்டுபிடிப்பு. இவ்வகையான நப்பாசையுடன் உங்களை போல எத்தனை பேர் எத்தனை வருடங்களாக அலைகிறார்கள் தெரியுமா? விடிஞ்சா கல்யாணம் விமர்சனத்தில் ஆனந்த விகடன் “அடுத்த வருட சூப்பர் ஸ்டார் சத்தியராஜ்â€Â என்று எழுதியது. இன்று 2008- சத்தியராஜின் நிலைமை என்ன? சத்தியராஜ் மேடைகளில் கைத்தட்டல் வாங்க “கேணக் கூ---â€Â என்று பேசிக்கொண்டிருக்கிறார். நீங்களெல்லாம் இவ்வாறு எழுதுவது ரஜினி சூப்பர் ஸ்டார் ஆன பின்னணியை அறியாததால்தான்.


தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவர் பேசிய அரசியல் வசனங்கள்தான அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கி தந்தது என்று நம்பினால் உங்களை காட்டிலும் ஏமாளி வேறு யாருமில்லை. கடந்த இரு படங்களில் (சிவாஜி, சந்திரமுகி) அரசியல் வசனமே கிடையாது. அப்படங்கள் மகத்தான வெற்றி பெற்றன. அதற்கும் சில சப்பைகட்டுகள் உங்களிடம் இருக்கின்றன- ஜோதிகா நடிப்புக்காகவும், ஸ்ரேயாவின் இடுப்புக்காவும் படம் ஓடியது என்று.


இந்த வாதத்தை முன்வைக்கும் அறிவு ஜீவிகளிடம் கேட்கிறேன். எழுபதுகளில் வந்த எம்.ஜி.ஆர் படங்களில் (உலகம் சுற்றும் வாலிபன் முதல் மீனவ நண்பன் வரை) அதீத கவர்ச்சி காட்சிகள் உண்டு. அந்த படங்களெல்லாம் ராதா சலூஜா,லதாவிற்காக ஓடியதா? எம்.ஜி.ஆரின் பங்கு ஒன்றுமேயில்லையா?


எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மனிதர்களின் வெற்றியை அலசும்போது, அதன் பிண்ணனியில் உள்ள உளவியல் காரணங்களை நீங்கள் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். ரஜினியின் வெற்றி, கறுப்பு நிற்த்தையும், வேகமான வசன உச்சரிப்பையம் மீறி,சினிமாவில் பிரகாசிக்க முடியும் என்று நிரூபித்ததில் துவங்கியது. எவ்வித பின்புலம் இல்லாமல், எதிர்ப்புகளை மீறி ஒரு சாதாரண மனிதன் தொடர் வெற்றிகளை பெற்ற போது சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது. ஒரு நடிகனாவதற்கு காலகாலமாக இருந்து வந்த இலக்கணங்களை உடைததவர் ரஜினி. இந்த ரஜினிக்கு ரசிகர்களானவர்கள்தான் உண்மையான ரஜினி ரசிகர்கள். இவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம்.


இந்த ரஜினி ரசிகனுக்கு, ரஜினி என்ற மனிதனை பிடிக்கும். அவனுடைய பலம் மற்றும் பலவீனங்களையும் பிடிக்கும். அவனுக்கு வேண்டியது தீபாவளி மற்றும் பொங்கலுக்கு ரஜினி படம்.முதல்நாள் டிக்கெட். அதன் பின்னால் அவன் பிழைப்பு அவனுக்கு. இத்தகைய ரஜினி ரசிகர்கள்தான் இன்று வரை ரஜினியின் வெற்றிக்கு காரணம். அரசியல் ஆசையில் பேனர் கட்ட வந்தவர்கள் எல்லாம், விஜயகாந்த் கட்சிக்கு போய் விட்டார்கள். ரஜினியின் அரசியல் நிலைப்பாடு உண்மையான ரஜினி ரசிகனை பாதிக்கலாம். ஆனால் அதன் கோபதாபங்கள் ரஜினி என்ற திரைநட்சத்திரத்தை ரசிப்பதிலிருந்து தடுக்காது. இல்லாவிடில் 1997 பாராளுமன்ற தேர்தலில் ரஜினி கருத்து தெரிவித்த போதே அவரது சூப்பர்ஸ்டார் பட்டம் காணாமல் போயிருக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினியின் திரை ஆளுமைக்கு கிடைத்தது. அரசியல் நிலைப்பாடுகள் அதனை பாதிக்காது. இதனால்தான் பாபாவிற்கு பின்னால் ரஜினியால் மற்றுமொரு வெற்றியை பெற முடிந்தது.


தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற ஜனநாயக நிலைப்பாட்டை எடுக்க சொல்கிறீர்கள்( 49 ஓ). ஆனால் ரஜினி மற்றும் பொதுப்பிரச்சனைகளில் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன? தமிழ்நாட்டு மக்களை வைத்து சம்பாதித்ததால் அவர் கருத்து தெரிக்க வேண்டுமென்றால், ரிலையனஸும், டாடாவும் கூடத்தான் தமிழர்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஏன் நீங்கள் கேட்கவில்லை. எல்லாப் பொது விசயங்களிலும் ரஜினியை கருத்து தெரிவிக்க நிர்பந்தித்து அவரை அரசியல்வாதி ஆக்குவது உங்களை போன்ற பத்திரிக்கைகாரர்கள்தான். ரசிகர்களல்ல.


பிரகாச்ராஜ், அர்ஜுன் ஆகியோருக்கு பிரச்சனை வருவதில்லையாம். ரஜினியின் திரை ஆளுமையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லாத இந்நடிகர்களுடன் ஒப்பிடுவதிலிருந்தே உங்களது காழ்புணர்ச்சி புரிகிறது. இவர்களை போன்ற ஒரு சாதாரண நடிகனாக ரஜினியை மாற்ற வேண்டும் என்பதுதானே உங்கள் ஆசை.


ரஜினி படத்தின் ஆபாச காட்சிகளை பற்றிய உங்கள் விமர்சனம் சிரிப்பை வரவழைக்கிறது. நீங்கள் முன்பு எழுதிய விகடனிலும் சரி, தற்பொழுது எழுதும் குமுதத்திலும் சரி, இருக்கும் அரை/முக்கால் நிர்வாணப்படங்கள் உங்கள் கண்ணில் படவில்லையா? இத்தகைய பத்திரிக்கைகள் ஏற்படுத்தும் பாதிப்பை குறித்து உங்களுக்கு அக்கறை இல்லையா? நீங்கள் எழுதுவதை மட்டும் வைத்து பத்திரிக்கை விற்க முடியாது என்பதால்தானே இப்படங்களையும் பத்திரிக்கைள் வெளியிடுகின்றன.


நீங்கள் குசேலனை முழுவதும் போட்டுத் தாக்காமல் இருப்பதற்கு மறைமுகக் காரணங்கள் உண்டு. இப்படம் பிரமிட் சாய்மீராவால் விநியாகிக்கப் படுகிறது. தங்களுடைய ஒற்றைரீல் இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நிறுவனம் பிரமிட் என்ற காரணத்தால் மட்டுமே நீங்கள் படத்தை பாராட்டுவது போல் பாசாங்கு செய்துள்ளீர்கள்.


ரஜினி என்ற சக்தியின் வீழ்ச்சியை வேடிக்க பார்க்கும் ஆசை உங்களிடம் அதீதமாயிருக்கிறது. தங்களுக்கு தற்காலிக வெற்றியும், மகிழ்ச்சியும் கூட கிடைத்து விட்டதைப் போல் தோன்றலாம். ஆனால் அது மாயை.


ரஜினியின் வேலையை அறிவு ஜீவித்தனமான வாதங்களால் சிதைக்க வேண்டும் என்பதே உங்கள் முயற்சி. நீங்கள் வேண்டுமானால் மற்றவர் தொழில் நடத்துவதில் தவறு காணலாம்..  நாங்கள் அப்படியில்லை.


பாவம் நீங்கள்! உங்கள் தொழிலை நடத்துங்கள்!


M.Rajkumar

http://poetraj.blogspot.com

 

 

ஞானிக்கு குட்டு
(Tuesday, 12th August 2008)

ரஜினியை பார்த்து பரிதாபப்படும் ஞாநி அவர்களுக்கு,

ரஜினி முள்ளும் மலரும் படத்திலே கூட ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை என பாடினர். அது போல பல பழைய படங்களில் அரசியல் வசனம் வரும். அப்போது அது அரசியலாக்க படவில்லை. ஆனால் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று கூறியதை அரசியலாக்கி ஆதாயம் தேடியது உங்களை போன்ற மீடியா தான். அந்த வசனம் ஒரு முறை தான் படத்தில் வரும். ஆனால் அதை வைத்து எத்தனை கட்டுரை எழுதி சம்பாதித்திருக்கும் உங்கள் மீடியா.

நான் வந்தா என்ன வராட்டி என்ன? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போகவேண்டியதுதானே'' என்கிறார் ரஜினி. ரஜினி தெளிவாக பேசுவதில்லை என்று கூறும் உங்களை போன்றவர்கள் ரஜினியின் மீது கவனத்தை திருப்பியது ஏன் என்று தெரியவில்லை. உங்களால் போக முடியாயது ஏன் என்றால் பிழைக்க ரஜினி வேண்டும்.

//உங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை ? இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் ?//

ரஜினி இந்த பதிலை அடுத்த நாளே கன்னட தொலைக்காட்சிக்கு தெளிவாக கூறி உள்ளார். உங்களுக்க கன்னடம் புரியவில்லையா/ அல்லது ஆங்கிலம் கூட புரியவில்லையா இல்லை ரஜினியை விமர்சிப்பதற்காக மறைத்து விட்டிர்களா? குமுதம் தவிர வேற ஏதும் படிப்பதில்லையா. குமுதமும் சேர்ந்து மறைத்து விட்டதா?

இதற்கு தாங்கள் அடுத்த இதழில் பதில் சொல்ல தயாரா?

ரஜினி இமையமலை செல்ல தேவை இருக்காது என்று சொல்லி உள்ளிர்கள். ரஜினிக்கு தேவை இருக்காது ஆனால் குமுதத்துக்கு பாபா குகை என 10 issue போட்டு காசு பாக்க வேண்டிய கட்டாயம் இருக்குமே.

சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டதாக சொல்லி உள்ளிர்கள். இதற்கு முன்பே ரஜினி சொன்ன பதிலை ஞாபக
படுத்துகிறேன். பாபா படம் எதிர்பார்த்த வசூல் இல்லாத போது காவி பிரச்சனையில் ரஜினியை தனிமைப் படுத்த உங்களை போன்றவர்கள்
முயற்சித்த போது ரஜினி சொன்ன பதில் "ஒரு படம் சரியாயாக போக
வில்லை என்றால் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து போய் விடுமா அப்படி போய்விடும் என்றால் அந்த பட்டம் எனக்கு தேவை இல்லை என்று கூறினார். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தது ரசிகர்கள். அதை கொடுக்கவும் எடுக்கவும் ரசிகர்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு.

உங்களை போன்றவர்களுக்கு ரஜினியை புரிய வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு தேவை இல்லை. ஏன் என்றால் உங்களை போன்றவர்கள் துங்குவதை போல நடிப்பவர்கள்.

உங்களுக்கு மட்டும் அல்ல மீடியாவுக்கும் ஒரு கேள்வி ரஜினியை வைத்து பிழைக்க மாட்டோம் என தெளிவான் உறுதியான முடிவு எடுக்க தயாரா?ரஜினி படத்தில் சில இடங்ககளில் ஆபாசமான காட்சிகள வருவதாக குறை கூறி உள்ளிர்கள். குமுதத்தில் ஆபாசமான படங்ககள் இருந்தால் ஒ பக்கங்ககள் எழுத மாட்டேன் என விகடனை விட்டு விலகியதை போல குமுதத்தை விட்டு விலகி ஆபாச/சினிமா நடிகை கவர்ச்சி படம் இல்லாத பத்திரிகையில் மட்டும் எழுதுவேன் என உறுதியான முடிவு எடுக்க தயாரா?

ரஜினியின் ஆதரவு யாருக்கு அல்லது அரசியலுக்கு வருவாரா என குமுதம் கட்டுரை எழுதினால் அதை குமுதம் ஒ பக்கத்தில் விமர்சிக்கும் பலம் உங்களுக்கு உள்ளதா.

கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் நான் நேரடியாக பூச்செண்டு கொடுக்கிறேன்

உங்களுக்காக எங்களது ஒரே பதில்


ரஜினியிடம் தோற்ப்பதற்கு உங்களை போல் காத்திருப்பவர் எத்தனை பேரோ?

ராஜா
http://parattai.blogspot.com/2008/08/blog-post_11.html






 
11 Comment(s)Views: 591

mano,india
Saturday, 23rd August 2008 at 12:58:06

beatiful.we love it as your comments.
vigneshganesan,india
Monday, 18th August 2008 at 07:06:09

today onwards all rajini fans take one descision that is we are supposed not to buy both vikadan and kumadam they are the beggers begging to get money in the matter rajini they have only chance sell their books by putting thalaivar still and matter they are selffishes
ManikandanBose,Chennai
Saturday, 16th August 2008 at 10:07:23

Mr Gnani.. Can you answer for this..
I know you can.. Because you are writing well with lies, imaginations and polishing that with your Stomach burning on our super star.

Nee yellam oru Manithan entru Boomiyil Irukkathey..
Unaakkum Biscuitkkaga vaalai attum Naikkum Difference romba Kammi...

George,
Saturday, 16th August 2008 at 07:21:42

my request to all rajini fans.please stop buying vikadan and kumutham magazines.this is the best way we can show our protest to those people.please advocate this policy to fellow rajini fans whoever you meet.
bala,india/cbe
Thursday, 14th August 2008 at 09:25:35

ha.. Gnani is not qualified to talk abt rajni... has he helped people like rajni???? knows only to criticize tats his job....Human being are bound to do mistakes and aplogies...is gnani a perfect man of ideas???morever wat SS rajni is not a mistake at all....gnani is doing only for publicity..
Aru,Singapore
Wednesday, 13th August 2008 at 23:52:52

Great article. Why these stupids ask Rajini about everything? Everyone makes mistakes but who in the world will publicly accept it? Nonsense people like this Gnani (who always used to deride Abdul Kalam as well) are simply abusing the chances given to them by writing off those who they dont like for stupid reasons.
Arasan,Malaysia
Wednesday, 13th August 2008 at 09:41:39

ஞானி அவர்களே, நீங்கள் பேரில்தான் ஞானி. ஆனால் ரஜினி உண்மையான ஞானி. அவருடைய ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பாடம். Listen to his every speech. He is a great philosopher.
Krishna,Germany
Wednesday, 13th August 2008 at 07:11:06

Gnani is a Drunken monkey. We should not bother about such creatures.

Fittest reply by rajkumar. If Gnani got any sense he should die pulling his tongue out.

santhosh kumar,
Wednesday, 13th August 2008 at 02:10:42

Good
Raj,
Wednesday, 13th August 2008 at 01:28:34

It is a fantastic reply to Gnani. But, unless it is published in a popular weekly, the message will not reach the mass. I think efforts may be made to publish this in any of the leading weekly or a newspaper, so as to show the real face of Gnani's presumptuous posture to the public.
Gokul,
Tuesday, 12th August 2008 at 12:30:06

Hi Raj,

Fantastic work . Point by point reply to knani.

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information