Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 92)                         

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு!
ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

படப்பிடிப்புக்காக சிக்மகளூர் சென்றபோது, ரஜினிக்கு ஓட்டலில் ரூம் கிடைக்கவில்லை! இதனால் காருக்குள் படுத்து தூங்கினார்!

இந்தத் தகவலை டைரக்டர் பி.வாசு வெளியிட்டார்.

பெரும் பிரச்சினைக்கு உள்ளான "உழைப்பாளி'' படத்தை இயக்கியவர் பி.வாசு. அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து, அவர் கூறியதாவது:-

ரஜினியால் கிடைத்த வாய்ப்பு

"விஜயா - வாஹினி பட நிறுவனம் 20 வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் படமெடுக்க முன்வந்தபோது எடுத்த முதல் படம்தான் "உழைப்பாளி.'' படம் எடுப்பது தொடர்பாக அவர்கள் ரஜினி சாரிடம் பேசியபோது, அவர்தான் `பி.வாசு டைரக்ட் செய்யட்டும்' என்று சொல்லியிருக்கிறார். படத்தயாரிப்பு வேலைகள் மளமளவென தொடர்ந்தன.

இந்த சமயத்தில்தான் நடிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, ரஜினி படத்தை வாங்கக் கூடாது என்று தடை போட்டு விட்டார்கள்.

அப்போது "உழைப்பாளி'' படத்துக்கு பூஜை போடப்போகிற நேரம். அடுத்து என்னாகுமோ என்ற அசாதாரணமான சூழ்நிலை நிலவியது.

மறுபரிசீலனை

ரஜினி சாரிடம் ஒரு வித்தியாசமான குணாதிசயம் உண்டு. தனது கருத்தில் மற்றவர்களுக்கு மாறுபாடு இருப்பதாகத் தெரிந்தால், தான் செய்தது சரிதானா என்பதை மறுபரிசீலனை செய்வார். விநியோகஸ்தர்கள் முடிவு அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள் என்னிடம் போனில் பேசினார். "நான் அந்தக் கூட்டத்தில் பேசியது சரியா, தப்பா? அவசரப்பட்டுட்டேனா?'' என்றெல்லாம் கேட்டார்.

நமது வார்த்தைகள் மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்று ஏற்கனவே என்னிடம் படப்பிடிப்பு தளத்தில் சொல்லியிருக்கிறார். "வாசு! ஒரு நாள் காலையில் தொடங்கி ராத்திரி நாம் படுக்கைக்கு போகிற வரைக்கும் நம்மோட செயல்களால், யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருக்குதான்னு யோசிச்சுப் பார்க்கணும். நான் அப்படித்தான் யோசித்துப் பார்ப்பேன். யாரையாவது என் வார்த்தைகளாலோ, செயல்களாலோ காயப்படுத்தியிருப்பதாகத் தோன்றினால் அப்போதே போன் போட்டு மன்னிப்பு கேட்டுடுவேன். இதனால் மறுநாள் எந்த உறுத்தலும் இல்லாமல் நம்ம வேலைகளை தொடங்க முடியும்'' என்று சொன்னார்.

அவரது இந்த உயர்ந்த சிந்தனை என்னுள் ஆழப்பதிந்தது. அன்று முதல் இன்று வரையிலும் நானும் அவரது இந்த கொள்கையை கடைப்பிடித்து வருகிறேன்.

"உழைப்பாளி'' படம் இப்படி பிரச்சினைகளுடன் தொடங்கியது.

படம் வளரும்போதே பிரச்சினைகள் மறையத் தொடங்கின. சினிமா என்பது ஒரு குடும்பம். அண்ணன், தம்பிகளைக்கொண்ட கூட்டுக்குடுமபம். அதனால் பிரச்சினைகள் சினிமா என்ற எங்கள் வீட்டுக்குள்ளேயே பேசி தீர்த்து வைக்கப்பட்டன.

மொத்தப் படப்பிடிப்பையும் 58 நாட்களில் முடித்தேன்.

"விழா வேண்டாம்''

படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்தபோது ரஜினியிடம் `விழா எடுக்கலாமே' என்று கேட்டேன். அதற்கு அவர், "விழா வேண்டாம்'' என்று கூறிவிட்டார்.

பல பிரச்சினைகளை கடந்து படம் வெளிவந்து வெற்றி பெற்றதை, `கொண்டாட்டம்' என்ற பெயரில் பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று ரஜினி நினைத்ததே இதற்குக் காரணம்.

செலவுகள்

எனக்கு பட வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளருக்கு, தேவை யில்லாத எந்த செலவும் வைக்கக்கூடாது என்பதை நான் கொள்கையாகவே வைத்திருக்கிறேன். என்னைப்பற்றி தெரிந்த தயாரிப்பாளர்கள் எவரும், நான் இயக்கும் படங்களின் செட்டுக்குக்கூட வருவதில்லை. நான் அவர்களிடம், "உங்க கேஷியரையும், அக்கவுண்டண்டையும் மட்டும் அனுப்புங்க போதும். மற்ற எந்த விஷயமானாலும் எனது படங்களின் தயாரிப்பு நிர்வாகி ராமதுரை பார்த்துக்கொள்வார் என்று சொல்லி விடுவேன்.

இந்தப் படத்திலும் அதுதான் தொடர்ந்தது. படப்பிடிப்புக்காக மங்களூரில் இருந்து சிக்மகளூர் போகவேண்டும். பயண நேரம் எவ்வளவு என்று கேட்டதற்கு, "காரில் போனால் 4 மணி நேரத்தில் போய்விடலாம்'' என்றார்கள்.

ரஜினி மாலை 4 மணிக்கு காரில் கிளம்பிப் போனார். மற்றவர்களை அனுப்பிவிட்டு நான் கடைசியாக புறப்படும்போது மாலை 6ஷி மணி ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 7 மணி நேரம் பயணமாகிவிட்டது.

நான் சிக்மகளூரை அடைந்தபோது நள்ளிரவு 2 மணி. அங்கு நாங்கள் தங்குவதாக இருந்த ஸ்டார் ஓட்டலில் போய் இறங்கி ரூம் கேட்டேன். `ரூம் இல்லை' என்று சொல்லிவிட்டார்கள்.

அப்போதுதான் எனது மானேஜர்களில் ஒருவர் அட்வான்ஸ் கொடுத்து ரூம் `புக்' பண்ணாததும், எங்கள் வருகையில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக அவர் தனது அறையில் தூங்கிவிட்டதும் தெரியவந்தது.

நான் ரிசப்ஷனில் இருந்தவரிடம், "நான் டைரக்டர் பி.வாசு. படப்பிடிப்புக்காக வந்திருக்கிறோம். உங்கள் ஓட்டலில் ஒரு வாரம தங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இப்போது ரூம் கொடுத்தீர்களானால், காலையில் எங்கள் மானேஜர் பணத்தை கொடுத்து ஒரு வாரத்துக்கு புக் செய்து விடுவார்'' என்றேன்.

அவர்கள் கேட்பதாக இல்லை. "எங்கள் ஓட்டல் நிர்வாகத்தின் விதிப்படி, `அட்வான்ஸ்' செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் ரூம் கொடுப்பதாக இல்லை'' என்றார்கள், விடாப்பிடியாக.

ரஜினி எங்கே?

அப்போதுதான் எனக்கு இன்னொரு அதிர்ச்சி. நாம் 2 மணிக்கு வந்திருக்கிறோம். நமக்கு முந்தி புறப்பட்ட ரஜினி சார் எப்படியும் ராத்திரி 12 மணிக்குள் இங்கே வந்திருப்பார். அவருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டதா?'' என்று மனசுக்குள் ஒரு பரபரப்பு கேள்வி எழுந்தது.

உடனே நான் பதட்டமாகி, "எனக்கு முன்னால் ரஜினி சார் வந்திருப்பாரே. அவருக்காவது ரூம் கொடுத்தீர்களா, இல்லையா?'' என்று கேட்டேன்.

அவர்களோ ரொம்ப கூலாக, "ராத்திரி 11ஷி மணிக்கு வந்தார். அவருக்கும் ரூம் கொடுக்கவில்லை'' என்றார்கள்.

"அடப்பாவிகளா!'' என்று அதிர்ச்சி தாங்காமல் அலறியவன், "அப்படீன்னா ரஜினி சார் எங்கேதான் போயிருப்பார்?'' என்று படபடக்கும் இதயத்துடன் ஓட்டலை விட்டு வெளியே ஓடிவந்தேன்.

ஓட்டலையொட்டி கொஞ்ச தூரத்தில் ரஜினி வந்த கார் நின்றது. ரஜினிக்கு உதவியாளராக வந்த பையன் வெளியில் நிற்க, உள்ளே காரின் பின்சீட்டில் வெள்ளைத் துணியால் உடம்பை மூடிப் படுத்திருந்தார் ரஜினி.

இதைப் பார்த்ததும் என் கோபம் அதிகமாகிவிட்டது. "என்னதான் ரூல்ஸ் என்றாலும் வருகிற ஆள் யாரென்று தெரியவேண்டாம்? ஒரு பிரபல நடிகரை, மக்கள் அபிமானம் பெற்றவரை, சூப்பர் ஸ்டாரை இப்படி காருக்குள் படுக்க வைத்திருக்கிறீர்களே. இப்போதாவது ரூம் கொடுங்கள். நான் டைரக்டர் பி.வாசு. ஒரு டைரக்டருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா? என்று சூடாக குமுறல் வார்த்தைகளை கொட்டியபோது, என் முதுகில் தட்டியது ஒரு கை. திரும்பிப்பார்த்தால் புன்னகை முகத்துடன் நிற்கிறார் ரஜினி!

அப்போது ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? "வாசு! நாம யாருன்னு அவங்கதான் நமக்கு சொல்லணும். ரூம் கிடைக்காததுக்கு காரணம் நம்மவங்க செய்த தப்புதானே! முன்கூட்டியே நாம் அனுப்பியிருந்தவங்க அட்வான்ஸ் புக்கிங் பண்ணாததால், நாம் இவங்களை கோபிச்சுக்கிறதில் நியாயம் இல்லை. நம்ம மேலே தப்பு வெச்சிக்கிட்டு நாம அவர்களை குறை சொல்லக்கூடாது'' என்றார்.

இப்படியொரு சம்பவம் வேறு நடிகருக்கு ஏற்பட்டிருந்தால், உடனே கோபித்துக்கொண்டு போயிருப்பார். ஆனால், கவனக்குறைவால் ஏற்பட்ட தடங்கல்களை புரிந்து கொண்டு, காருக்குள் படுத்துக்கொண்டது மட்டுமல்ல, நிதானமாய் அந்தப் பிரச்சினையை அணுகினார்.

மறுநாள் படப்பிடிப்பு எந்த சிரமமுமின்றி நடந்தது.

இதற்குப்பிறகு இன்று வரை நான் என்னைப்பற்றி யாரிடமும் சொல்லிக்கொண்டதில்லை. "சந்திரமுகி'' படத்தின் பெரிய வெற்றிக்குப்பிறகு வெளியில் என்னைப் பார்த்த ஒருவர், "நீங்க டைரக்டர் பி.வாசுதானே'' என்று கேட்டபோதுகூட, எனக்கு ரஜினி சார் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.

இப்படி தன்னுடன் பழகுபவர்களுக்கும் ஒரு பக்குவ நிலையை ரஜினி சார் தந்துவிடுவார். சந்திரமுகி படம் 700 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் போதும், இந்த வெற்றிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் அதே எளிமையும் இனிமையுமான ரஜினியைத்தான் இப்போதும் பார்க்கிறேன்.''

இவ்வாறு டைரக்டர் பி.வாசு கூறினார்.


Next Page>>> Part 93



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information