Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 100)                         

8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்''
லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்



பட உலகைச் சேர்ந்த 8 பேர்களுக்கு உதவ நினைத்தார், ரஜினிகாந்த். உடனே, ஒரு படக்கம்பெனி தொடங்கி 8 பேர்களையும் பட அதிபர்களாக்கி "அருணாச்சலம்'' படத்தை தயாரித்தார். அதில் கிடைத்த லாபத்தை 8 பேர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தார்.

உதவியவர்களுக்கு உதவி

தான் வளரும் நேரத்தில் தன்னை வளர்த்துவிட்டவர்கள் மீது ரஜினி தனி பிரியம் வைத்திருந்தார். இவர்களுக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டுமே என்பது அவர் உள்ளத்துக்குள் பதிந்து போய் இருந்திருக்கிறது.

இப்படித்தான் தன்னை அதிக படங்களில் இயக்கிய டைரக்டர் எஸ்.பி.முத்துராமனுக்கு ஏதாவது செய்ய விரும்பினார். அதன் விளைவாகவே எஸ்.பி.முத்துராமனின் மொத்த னிட்டுக்காக `பாண்டியன்' என்ற படத்தில் நடித்துக் கொடுத்தார்.

ஆரம்ப காலத்தில் இருந்தே தனக்கு பக்கத்துணையாக இருந்த நண்பர்களையும் மறக்கவில்லை. அவர்களுக்காக `வள்ளி' என்ற படத்தில் நடித்துக் கொடுத்து உதவினார்.

இப்படியாக அவரது உதவும் நோக்கம் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், நடிப்பிலும் இமயமாய் உயர்ந்தார். ரசிகர்களின் உச்ச நட்சத்திரமானார். இப்போதும் அவரது உதவும் குணம் அவரை விட்டுப் போய்விடவில்லை.

அருணாச்சலம்

தன் நண்பர்களில் சிலருக்கு உதவிடும் நோக்கில் ஒரு படத்தை நடித்துக் கொடுக்க முடிவு செய்தார். அந்தப் படத்துக்கு `அருணாச்சலம்' என்று பெயரும் சூட்டினார்.

ரஜினியின் ஜோடியாக ரம்பா, சவுந்தர்யா நடித்தனர். குஷ்புவின் கணவரும், டைரக்டருமான சுந்தர் சி. இந்தப்படத்தை இயக்கினார். தேவா இசை அமைக்க, வசனத்தை கிரேசி மோகன் எழுதினார்.

1997 ஏப்ரல் 10-ந்தேதி வெளிவந்த இந்தப்படம், 37 தியேட்டர்களில் 100 நாட்களைக் கடந்து ஓடியது. சென்னையிலும், மதுரையிலும் 200 நாள் ஓடியது.

கலைப்பயணத்தில் தனக்கு உதவியாக இருந்த 8 பேர்களை இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக உயர்த்தினார், ரஜினி. அவர்கள் விவரம்:-

1. கே.பாலசந்தர் இயக்கத்தில் ரஜினியின் முதல் படத்தை தயாரித்த "கலாகேந்திரா'' பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் பி.ஆர்.கோவிந்தராஜ் - துரை ஆகியோர் இருவரும் ஒரு பங்குதாரர்கள்.

2. தயாரிப்பு நிர்வாகி கே.எஸ்.நாகராஜன் ராஜா இன்னொரு பங்குதாரர். இவர் ரஜினியின் சில படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணி யாற்றினார். நேரம் காலம் பார்க்காத இவரது கடின உழைப் புக்காக இந்தப்பரிசு.

3. கே.முரளிபிரசாத்ராவ். இவர் ஏற் கனவே "வள்ளி'' படத்தில் ரஜினியின் உதவி பெற்ற கே.விட்டல்ராவின் சகோதரர். சகோதரர்கள் இருவரும் தங்கள் தாயாருடன் ஆந்திராவில் இருந்து சென்னை வந்தவர்கள். சென்னை புதுப்பேட்டையில் இவர்கள் இருந்த வீட்டில்தான் ரஜினியும், தனது நடிப்பின் ஆரம்ப காலத்தில் தங்கியிருந்தார். இவர்களின் தாயார் ரஜினியையும் தன் மகனாகவே எண்ணி அன்பு செலுத்தினார். பழசை மறக்காத ரஜினியின் பார்வை முரளிபிரசாத் மீதும் நிலைத்ததால் அவரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்தார்.

பட அதிபர்

4. ரஜினி நடித்த "காளி'' படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்த தயாரிப்பாளர் ஹேம்நாக்கும் ஒரு பங்குதாரர். "காளி'' படப்பிடிப்பில் குதிரைகள் தீயில் கருகி பொருளாதார ரீதியில் பலத்த இழப்பை சந்தித்திருந்தார், ஹேம்நாக். படம் வெற்றி பெற்று லாபம் வந்திருந்தாலும், குதிரைகள் உயிரிழப்புக்காக அவர் சந்தித்த பிரச்சினைகளுக்கு ஏராளமாகப் பணம் செலவு செய்ய வேண்டியிருந்தது. அதை மனதில் வைத்து ரஜினி இவருக்கும் தன் பங்கு பட்டியலில் இடம் கொடுத்தார்.

5. ரஜினியின் எல்லாப் படங்களிலுமே நடிகர் வி.கே.ராமசாமி இருப்பார். ரஜினியின் மரியாதைக்குரியவர்கள் லிஸ்ட்டிலும் இடம் பிடித்திருந்தவர், வயது முதிர்ந்த நிலையில் நடக்கவே சிரமப்படும் நிலை, அதற்கான மருத்துவச் செலவு என இருந்த கையிருப்பும் இறக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்த நேரத்தில் ரஜினி தனது படத்தின் பங்குதாரர்களில் ஒருவராக்கி கைகொடுத்தார்.



முன்னதாக தனக்கு ஒரு படம் செய்து தர ரஜினியிடமே கேட்டிருந்தார் வி.கே.ராமசாமி. அதையும் மனதில் பதித்து வைத்திருந்த ரஜினி, ஏற்ற சமயத்தில் படம் தருவதாக கூறியிருந்தார். வி.கே.ராமசாமி இந்த வகையிலும் பங்குதாரர்களில் ஒருவரானார்.

பண்டரிபாய்

6. குணச்சித்திர வேடங்களிலும், அம்மா வேடத்திலும் நடித்து தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகை பண்டரிபாய். "மன்னன்'' படத்தில் பக்கவாதத்தால் முடமாகிப்போன தாயாராக வரும் பண்டரிபாய்க்கு ரஜினியே சகலமுமாக இருப்பார். தாயாரை கோவில் கோவிலாக தூக்கியபடி "அம்மா என்றழைக்காத உயிரில்லையே'' என்று ரஜினி பாடி நடித்த காட்சிகள் இப்போதும் கண்களுக்குள் இருந்து கங்கையை வரவழைக்கும்.

பண்டரிபாய், பஸ் விபத்தில் ஒரு கையை இழந்து, துயரத்தில் இருந்த நேரத்தில் இவரையும் தனது பங்குதாரர் வரிசைக்குள் கொண்டு வந்தார், ரஜினி.

கலைஞானம்

7. வில்லனாக நடிப்பில் கலக்கிக் கொண்டிருந்த ரஜினியை முதன் முதலாக தனது `பைரவி' படத்தில் கதாநாயகனாக்கியவர் தயாரிப்பாளர் கலைஞானம். `பைரவி'யின் வெற்றிக்குப்பிறகு ரஜினியின் "நாயகன் அந்தஸ்து'' நிலைப்படுத்தப்பட்டது.

ரசிகர்கள் தன்னை `வில்லனாக' பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் நாயகனாக்கி, தனது கலைவாழ்வில் திருப்பம் ஏற்படுத்தியதை மறக்காத ரஜினி, பங்குப்பட்டியலுக்குள் கலைஞானத்தையும் கொண்டு வந்துவிட்டார். இந்த சமயத்தில் கலைஞானம் தயாரிப்பில் வெளிவந்த ஒரு படம் ஏற்படுத்திய நஷ்டத்தில் கடனில் இருந்தார். இது ரஜினியின் காதுக்கு வந்தபோது கலைஞானத்தையும் படத்தின் ஒரு பங்குதாரர் ஆக்கிவிட்டார்.

எம்.ஜி.ஆரின் விசுவாசி

8. இதுவரை இடம் பெற்ற பங்குதாரர்கள் ஏழுபேரும் ஏதாவது ஒரு விதத்தில் ரஜினியுடன் தொடர்பு உடையவர்கள். எட்டாவதாக இந்த பட்டியலில் ரஜினி இணைத்த பத்மனாபனோ ரஜினியுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர். சரியாக சொல்லப்போனால் இந்த பத்மனாபன் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி. எம்.ஜி.ஆருக்காக உயிரையும் விடத் தயங்காதவர் என்ற முறையில் எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்றிருந்தவர். எம்.ஜி.ஆருக்காக வாழ்ந்து அவர் மறைந்த சில மாதங்களில் அதே கவலையில் இறந்தும் போனார்.

அப்படிப்பட்டவர், எப்படி ரஜினியின் உதவும் பட்டியலுக்குள் வந்தார்?

எம்.ஜி.ஆர். நாடக கம்பெனி தொடங்கி நடத்தியபோதே உடனிருந்தவர் இந்த பத்மனாபன். எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியிலும் உடனிருந்தவர். எம்.ஜி.ஆர். வளர்ந்து புகழ் பெற்ற நேரத்தில் அவருக்கு வலதுகரமாக திகழ்ந்தவர். எம்.ஜி.ஆர். வெளிருக்கு போகிற சமயங்களில் கூடும் திரளான ரசிகர்கள் கூட்டத்தில், எம்.ஜி.ஆரை பூப்போல தாங்கி கூட்டத்தை தனது கட்டுக்கோப்பால் ஒழுங்குபடுத்தியவர்.

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்து முதல்-அமைச்சரான போதும் அவருடன் பத்மனாபன் இருந்தார். இவருக்கு 6 பெண்கள். குடும்ப சூழ்நிலையும், சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை என்பதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். இவருக்கு உதவ விரும்பினார். நோயின் பிடியில் ஆட்பட்டு பேச்சு சரிவர வராதிருந்த அந்த நேரத்தில் பத்மனாபனை அழைத்த எம்.ஜி.ஆர், சைகை மூலமாக தனது உதவும் நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அந்த உதவியை கண்ணீருடன் மறுத்த பத்மனாபன், "உங்கள் நலம் மட்டுமே என் சொத்து. எனக்கு அதுவே போதும்'' என்று கூறிவிட்டு வந்துவிட்டார்.

இரண்டொரு நாளிலேயே எம்.ஜி.ஆர். இறந்துவிட, அதன் பிறகு வாழ்ந்த ஒன்றிரெண்டு மாதங்களும் மிக சிரமத்தோடு வாழ்ந்திருக்கிறார், பத்மனாபன். எம்.ஜி.ஆர். மேல் விசுவாசத்தை வைத்தவரின் சுவாசமும் அவரை எண்ணியே போய்விட, ஆறு பெண்களை வைத்துக்கொண்டு தலையில் கைவைத்தபடி திக்பிரமைக்குள்ளாகி விட்டார் பத்மனாபனின் மனைவி.

பத்மனாபன் பற்றிய இத்தனை விஷயங்களும் தனது கலை நண்பர்கள் மூலம் ரஜினிக்குத் தெரியவந்திருக்கிறது. ஒரு தலைவருக்காக விசுவாசத்தை மட்டுமே காட்டி, அவர் மூலம் கிடைக்கவிருந்த வளமான எதிர்காலத்தையும் துச்சமாக கருதிய பத்மனாபன் ரஜினிக்குள் ஏற்படுத்திய பிரமிப்புதான், தனது உதவும் பட்டியலுக்குள் அவரைக் கொண்டு வந்தது. பத்மனாபனின் பெண்களில் இருவர் தங்கள் தாயாருடன் வந்து, ரஜினி கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டார்கள்.

(கலைஞானம் பேட்டி - நாளை)


ரஜினி `சுயதரிசனம்'


"எனக்கு நான்தான் நல்ல நண்பன். அதாவது சிவாஜிராவ். அதற்கு இன்னொரு பெயர் மனசாட்சி. தூங்குவதற்கு முன்னும், தூங்கி எழுந்தபின்னும் கிடைக்கும் தனிமையில்தான் என் நண்பனிடம் மனம் விட்டுப் பேசிக்கொள்வேன்.

- ரஜினிகாந்த்.

Next Page>>> Part 101



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information