Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 105)                         

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம்
`நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002




காவிரி தண்ணீர் பிரச்சினையில், தமிழ்நாட்டுக்கு நீதி கோரி ரஜினிகாந்த் சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் விட மறுப்பதால், காவிரி வறண்டு கிடக்கிறது. இதுபற்றிய மத்திய அரசின் உத்தரவையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் கர்நாடக அரசு ஏற்கவில்லை.

கர்நாடக அரசு, நீண்ட காலமாகவே இந்தப் போக்கைக் கடைபிடித்து வருகிறது.

உண்ணாவிரதம்

தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கர்நாடகத்துக்கு நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி, தமிழக நடிகர் - நடிகைகள் 2002-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி பேரணி நடத்தினார்கள். இந்தப் பேரணி நெய்வேலியில் நடந்தது.

இந்தப் பேரணியில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை. அதற்குப்பதிலாக, மறுநாளே தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டம், சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே 2002 அக்டோபர் 13-ந்தேதி நடைபெற்றது. உண்ணாவிரதத்துக்காக பெரிய மேடை அமைக்கப்பட்டு, அதில் மெத்தை போடப்பட்டு இருந்தது.

காலை 6 மணிக்கு அங்கு வந்த ரஜினிகாந்த், 8 மணிக்கு உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

ரஜினி, வெள்ளை நிறத்தில் பைஜாமாவும், குர்தாவும் அணிந்திருந்தார். மொட்டைத் தலையுடனும், சுத்தமாக சவரம் செய்யப்பட்ட முகத்துடனும் காட்சி அளித்தார். சட்டையில் கறுப்பு `பேட்ஜ்' குத்தியிருந்தார்.

வாழ்த்து

உண்ணாவிரதம் இருந்த ரஜினிகாந்துக்கு நடிகர் - நடிகைகள் உள்ளிட்ட ஏராளமான திரை உலக பிரமுகர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பொன்னாடை, மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவருடன் சிறிது நேரம் உண்ணாவிரத மேடையில் அமர்ந்து இருந்தனர்.

ரசிகர்களும் திரண்டு வந்து ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பழச்சாறு குடித்தார்

சரியாக மாலை 5 மணிக்கு "இப்போது ரஜினிகாந்த் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வார்'' என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நடிகர்கள் சரத்குமாரும், நெப்போலியனும், நடிகை ரேகாவின் மகள் அபிரைனாவின் கையில் ஆரஞ்சு பழச்சாறை கொடுத்து ரஜினிகாந்திடம் கொடுக்கும்படி கூறினார்கள்.

சிறுமி அபிரைனா ரஜினிகாந்திடம் ஆரஞ்சு பழச்சாறை கொடுத்தார். அதை ரஜினிகாந்த் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

அதன் பின்னர் மேடை முன்பு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அவர் கூறியதாவது:-

நன்றி

"இங்கே வருகை தந்திருக்கும் என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களே! ரசிக பெருமக்களே! திரை உலகைச் சேர்ந்த நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே வந்து என்னை வாழ்த்திய அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி. பத்திரிகையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

இவ்வளவு சிறப்பாக இந்த உண்ணாவிரதம் நடைபெற உதவிய காவல்துறைக்கு என் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கலைஞர்

உண்ணாவிரதத்துக்கு இந்த இடத்தை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி.

தென் இந்தியாவின் மூத்த தலைவராக இருக்கும் டாக்டர் கலைஞர் இங்கே கட்டாயம் வாழ்த்த வருவேன் என்று கூறினார். நான்தான் வரவேண்டாம் என்று கூறிவிட்டேன். அவர் வாழ்த்துக்கடிதம் அனுப்பியிருக்கிறார். டாக்டர் கலைஞருக்கும் என்னுடைய நன்றி.



வெற்றியா?

இந்த உண்ணாவிரதம் இங்கே நல்ல முறையில் நடந்து முடிந்து இருக்கிறது. இந்தப் போராட்டம் வெற்றியா, தோல்வியா? என்பது கர்நாடகத்தின் கையில் உள்ளது . சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளது.

மத்திய அரசு என்ன செய்யுமோ, எப்படி செய்யுமோ தெரியாது. ஆனால் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டே ஆகவேண்டும். இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. தண்ணீர் வந்தாகவேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தண்ணீர் கொடுக்கவேண்டும். இதை வலியுறுத்தி அரசிடம் மனு கொடுக்க செல்கிறேன்.''

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

கோரிக்கை மனு

அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் காரில் ஏறி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

அங்கு கவர்னர் இல்லாததால் அவரது செயலாளர் ஷீலா பிரியாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு திரும்பிய ரஜினிகாந்த், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

"உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?'' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

"நான் இந்த வரவேற்பை எதிர்பார்த்தேன். தமிழ் மக்களைப்பற்றித் தெரியும். முதலில் என்ன நடந்தது அப்புறம் என்ன நடந்தது என்பதையெல்லாம் மறந்துவிடலாம்'' என்று கூறிவிட்டு, முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று குறிப்பிடும் வகையில் "கதம் கதம்'' என்றார்.

அடுத்தது என்ன?

அடுத்து என்ன திட்டம் என்று நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

"பிரதமர் வந்ததும், தமிழ் திரை உலகத்தினருடன் சென்று பார்ப்பேன். கன்னட திரை உலக நண்பர்களையும் கூட்டிச்செல்ல முயற்சிப்பேன். இது எல்லாம் தற்காலிகமான ஒன்றுதான்.

நதி இணைப்பு

முக்கியமாக கங்கை, காவிரி இணைப்புத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் இந்திய மக்களுக்கு ஒரு பொற்காலத்தை கொண்டு வரவேண்டும்.

கங்கை, காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 40-50 ஆண்டுகள் கூட இதற்கு ஆகலாம். பாரதியார் கூட இந்தத் திட்டத்தை கூறியுள்ளார். இந்த திட்டத்தை அமல்படுத்தினால் அமெரிக்கா மாதிரி, சுவிட்சர்லாந்து மாதிரி ஆகும். 30 ஆண்டு ஆனாலும் பரவாயில்லை.

ரூ.1 கோடி தருகிறேன்

அந்த கங்கா நதியை இணைக்க முடியாவிட்டால் குறைந்த பட்சம் தென்னிந்திய நதிகளையாவது இணைக்க வேண்டும். எவ்வளவு பணம் என்று கவலைப்படாதீர்கள். நாளைக்கே அறிவித்தால் நாளையே ரூ.1 கோடி தருகிறேன்! எனது பாக்கெட்டில் இருந்து தருகிறேன்.

பணத்தைப் பற்றி அரசியல்வாதிகள் கவலைப்பட வேண்டாம். பணம் வேண்டும் என்றால் மக்களிடம், எங்களிடம் விடுங்கள். பார்த்துக் கொள்கிறோம்.''

இவ்வாறு பதில் அளித்த ரஜினிகாந்த், "நன்றி வணக்கம்'' என்று கூறிவிட்டு கவர்னர் மாளிகையில் இருந்து சக நடிகர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.

Next Page>>> Part 106



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information