Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 108)                         

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

"சந்திரமுகி''யில் சிம்ரன் நடிப்பதாக இருந்த சந்திரமுகி வேடத்தில், ஜோதிகா நடித்தார். இதற்கான காரணத்தை டைரக்டர் பி.வாசு வெளியிட்டார்.

"சந்திரமுகி'' அனுபவங்கள் பற்றி பி.வாசு தொடர்ந்து கூறியதாவது:-

"சந்திரமுகி''யில் ரஜினி சார் நடிக்கிறார் என்றதும், அடுத்து 2 விஷயங்கள் முக்கியமாகப்பட்டது. ஒன்று: கதாநாயகி. அடுத்து: இசை.



சவுந்தர்யா

கன்னடத்தில் சவுந்தர்யா நடித்திருந்தார். 100 சதவீதம் சந்திரமுகியாகவே மாறிப்போனார். சவுந்தர்யா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் `சந்திரமுகி' கேரக்டருக்கு வேறு ஒரு நடிகையை யோசித்திருக்கவே மாட்டோம். துரதிர்ஷ்டவசமாக, அவர் விமான விபத்தில் இறந்து விட்டார்.

சந்திரமுகியாக யாரைப் போடலாம் என்று யோசித்தேன். இப்போது என் மனதுக்குள் சந்திரமுகியாக வந்து போனவர் நடிகை சிம்ரன்.

சிம்ரன் சிறந்த நடனக்கலைஞர். அவர் நாயகி என்று முடிவானதும் இசைக்கு என் மனதில் வந்து போனவர் வித்யாசாகர். வித்தியாசமான இசையை கதைக்கு தேவையான விதத்தில் தருபவர் என்பதால் என் விருப்பத்தில் அவர் இருந்தார். தெலுங்கில் வரும் "ராரா''பாட்டு ரொம்பப் பிரபலம். அதுபற்றி வித்யாசாகரிடம் பேசியபோது, "அதே டின் வேண்டாம். நான் ஒரு டின் போடுகிறேன். பிடித்திருந்தால் வைத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

அப்படி அவர் புதிதாக டின் போட்டு ஹிட்டானதுதான் சந்திரமுகியில் வரும் "ராரா'' பாட்டு.

புதிய சந்திரமுகி ஜோதிகா

"சந்திரமுகி'' கேரக்டரில் நடிக்க சிம்ரன் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார். திருமணமாகி அவர் கருவுற்றிருந்த நேரம் அது. படத்தில் `ராரா' பாட்டில் சந்திரமுகி குதித்துக் குதித்து சுழன்றாடியபடி நடனமாட வேண்டும். அப்படி சிம்ரன் ஆடும்போது நிச்சயம் கருவில் வளரும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்பு அதிகம்.

இதை சிம்ரனிடம் சொல்லி "சந்திரமுகி வாய்ப்பா? குழந்தையா?'' என்ற முடிவை அவரிடமே விட்டோம். சிம்ரனின் தாய்மையுணர்வு வென்றது. அதனால் அவர் விலகிக்கொள்ள "சந்திரமுகி''யாக என் மனதில் அடுத்த கணமே வந்து போனவர்தான் ஜோதிகா.

இயல்பில் நடனக் கலைஞராக இல்லாவிட்டாலும், ஜோதிகா தனது ஆர்வத்தில் அந்த சந்திரமுகி கேரக்டரோடு கலந்து போனார் என்பதே உண்மை.

ரஜினி சாரை பற்றி சொல்ல வேண்டுமானால், தனது கேரக்டர் என்னவென்று உறுதியானதுமே, அந்த கேரக்டரை தனது மனதுக்குள் `டிசைன்' பண்ணத் தொடங்கிவிடுவார். சரவணன் கேரக்டர், வேட்டையன் கேரக்டர் இந்த இரண்டும் எப்படி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி என்னிடம் விவாதித்துக் கொள்வார். இந்தப் படத்தில் ரஜினி சாருக்கே உரிய பஞ்ச் டயலாக்குகள் கிடையாது என்பதை முதலிலேயே முடிவு செய்து கொண்டோம். இருந்தாலும், படத்தில் என்னென்ன செய்யலாம் என்பதை அவர் மனதுக்குள் `டிசைன்' செய்து விட்டார்.

ஒருநாள் என்னை அழைத்த ரஜினி, "படத்தில் வேட்டையன் வரும்போது ஏதாவது புதுமையாக இருந்தால் நல்லது'' என்றார். அதோடு நில்லாமல், "இப்போ நான் ஒரு சீன் பண்ணிக் காட்டுகிறேன். எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்'' என்றவர், ஒரு பத்து அடி தூரம் நடந்து போனார்.

அடுத்த கணம் அதே வேகத்தில் திரும்பினார். என்னை நெருங்கியதும் முகத்தில் ஆக்ரோஷமான பாவனையுடன் `லகலகலகலக' என்று செய்து காட்டினார்.



நான் என்னையும் அறியாமல் `சூப்பர்' என்றேன்.

என்றாலும் அவருக்கு சந்தேகம். "அதெப்படி உடனே `சூப்பர்'னு சொல்லிட்டீங்க...?'' என்று கேட்டார்.

பதிலுக்கு நான் அவரிடம், "ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னது மாதிரி'' என்று நீங்கள் முன்பு கூறிய வசனம் ரசிகர்களிடம் எப்படி `ரீச்' ஆனதோ, அதுமாதிரி இந்த `லகலகலகலக'வும் பிரபலம் ஆகும். முதலில் நான் ஒரு ரசிகனா உங்களைப் பார்க்கிறேன். பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது. இதையே வேட்டையனுக்கான கெட்டப்பில் நீங்கள் செய்யும்போது இன்னும் பிரமாதமாய் இருக்கும்'' என்றேன்.

தெலுங்கிலும் சாதனை

இந்தப்படம் தமிழில் ரிலீசான 14-4-2005 அன்றே தெலுங்கிலும் `டப்' செய்து வெளியிடப்பட்டது. 280 நாட்கள் ஓடி பெரிய `ஹிட்.'

அந்த ஆண்டு தெலுங்கில் நேரடிப்படமாக வந்த தெலுங்கு ஹீரோக்கள் நடித்த படங்களைவிட, இந்தப்படம் அதிகம் வசூல் செய்தது.

இந்தப்படத்தின் பெயரை சொல்லத் தெரியாத சிறுவர்கள் கூட தங்கள் பெற்றோர்களிடம் "லகலகலகலக படத்துக்குப் போவோம்'' என்று நச்சரிப்பு செய்து, தங்கள் பெற்றோரை தியேட்டருக்கு அழைத்துப்போனதாக அறிந்தபோது, ரஜினி சாரின் `லகலக' மகத்துவம் தெரிந்தது.

வேட்டையன் கேரக்டருக்குள் ரஜினி சார் எப்படி ஒன்றிப்போனார் என்பது இன்னும் ஆச்சரியம். `லகலக' சொல்லிவிட்டாரே தவிர, வேட்டையன் கெட்டப்பில் எப்படியிருப்பார் என்பது முடிவாகவில்லை. அதற்கும் அவரே விடையாக வந்தார். குஷால்தாஸ் கார்டனில் படப்பிடிப்பு நடந்தபோது, வேட்டையன் கேரக்டரை `ஸ்டில்' எடுக்கலாமே என்று பேசினோம். "வாசு சார்! ஒரு மணி நேரத்தில் வருகிறேன்'' என்று சொல்லிவிட்டு கேரவனுக்கு போனவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் படத்தில் நீங்கள் பார்த்த அந்த வேட்டையன் "கெட்டப்''பில் வெளிப்பட்டார். முதலில் அவரை யாரென்றே னிட்டில் உள்ளவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. வெறித்தனமான பார்வையில் கம்பீரம் கலந்த வேட்டையனாக ரஜினி சாரை பார்த்தபோது, என் மனதில் இருந்த வேட்டையன் என் எதிரே நிற்பதாகவே உணர்ந்தேன்.

கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் தொடர்ந்து 6 இரவுகள் எடுத்தோம். எந்தவித தயக்கமும் இன்றி இரவு 9 மணிக்கு தொடங்கும் படப்பிடிப்பில், விடியகாலை 4 மணி வரை நடித்துக் கொடுத்துவிட்டுப் போனார் ரஜினி.

80 நாட்கள்

மொத்தப் படத்தையும் 80 நாட்களில் எடுத்து முடித்தேன். படத்தில் நடிகர் - நடிகைகள் தவிர கதவு, படி, வீடு மூன்றையும் கேரக்டராக்கியதையும் ரஜினி சார் பாராட்டினார்.

இந்த படத்துக்கான காட்சிகள் சென்னை குஷால்தாஸ் கார்டனில் படமாக்கப்பட்டது போல தெரியும். உண்மையில் வீட்டின் படிகள் மைசூரிலும், கதவுகள் பெங்களூரிலும், வேட்டையன் அறை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், "சந்திரமுகி'' ஜன்னல் வழியாக பார்க்கிற காட்சி பெங்களூரில் இந்திரா கார்டனிலும் படமாக்கப்பட்டது. இந்தக்கதையின் ஒவ்வொரு காட்சியுமே `ஆப்த மித்ரா' மூலம் எனக்குள் பதிவாகியிருந்ததால் குழப்பம் எதுவும் இன்றி இந்த மாதிரியான காட்சிகளை கையாள முடிந்தது.

வாழ்த்து

படத்தின் நூறாவது நாளில் இருந்து 200-வது நாள், 300-வது நாள் என தொடர்ந்து ரஜினி சார் என்னிடம் போனில் வாழ்த்து தெரிவித்து விடுவார். படம் 700-வது நாள் வந்தபோது, என்னிடம் பேசி வாழ்த்தியவர், "நான் இப்போது ராகவேந்திரா கோவிலில் இருந்து உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறேன்'' என்றார். கோவிலுக்கு வந்த இடத்திலும் மறக்காமல் வாழ்த்துகிற அந்த பண்பு என்னை ரொம்ப நேரம் பரவசத்தில் வைத்திருந்தது.

படம் `பிரிவி'வின்போது ரஜினி சார் மனைவி லதாவுடன் வந்திருந்தார். படம் முடிந்து போகும்போது `வரேன்' என்று மட்டும் சொல்லி கை கொடுத்துவிட்டுப் போய்விட்டார். மறுநாள் என்னை வீட்டுக்கு அழைத்தவர், நான் போனதும் உற்சாகமாய் வரவேற்றார். அப்போது அவர் என்னிடம், "எனது ஒவ்வொரு படத்தையும் என்னுடன் இருந்து லதா (மனைவி) பார்ப்பார். படம் அவருக்கு பிடித்திருந்தால், படம் முடியும்போது எனது வலது கை மணிக்கட்டை அழுத்தமாக ஒரு பிடி பிடிப்பார். அப்போதே அவருக்கு படம் பிடித்து விட்டதை உணர்ந்து கொள்வேன். படம் ரொம்ப பிடித்திருந்தால் இந்த `பிடி' அழுத்தமாக இருக்கும். நேற்று "சந்திரமுகி'' பார்த்து முடித்த பிறகு அவரிடம் ஒரு சின்ன `ரியாக்ஷன்' கூட இல்லை. வீட்டுக்கு வந்த பிறகுதான் அதற்கான காரணத்தை கேட்டேன்.

அதற்கு லதா என்ன சொன்னார் தெரியுமா? "படம் முடிந்தபோது ஏற்பட்ட பிரமிப்பில் இருந்து நான் விடுபடவே ரொம்ப நேரம் ஆயிற்று. பிறகு எப்போது உங்கள் கையை அழுத்தி படம் பற்றிய ரிசல்ட்டை சொல்றது? இப்ப சொல்றேன். இதுமாதிரி படம் இதுவரைக்கும் நீங்க பண்ணலை. அந்த அளவுக்கு அற்புதமான படம்.''

அதைக் கேட்ட பிறகுதான் எனக்கு உயிரே வந்தது. உடனே உங்களை பாராட்ட வேண்டும் என்றே நேரில் வரச்சொன்னேன்'' என்றார், ரஜினி.

சாதனை

எம்.கே.தியாகராஜ பாகவதரின்

3 தீபாவளி கண்ட "ஹரிதாஸ்'' பட சாதனையை சந்திரமுகி முறியடிக்கும் என்கிறார்கள். லதா ரஜினிகாந்தின் பிரமிப்பை படம் பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் அடைந்ததால்தான் இந்த சாதனையை "சந்திரமுகி'' படைக்கிறது என்பேன்.''

இவ்வாறு பி.வாசு கூறினார்.

Next Page>>> Part 109



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information