Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 110)                         

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்''
நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி


ரஜினிகாந்தின் நடிப்புத் திறமையையும், மனித நேயப் பண்புகளையும் நடிகர் - நடிகைகள் பாராட்டிப் புகழாரம் சூட்டினார்கள்.

பிரபு

ரஜினியுடன் "தர்மத்தின் தலைவன்'', "குருசிஷ்யன்'', "சந்திரமுகி'' உள்பட சில படங்களில் இணைந்து நடித்த நடிகர் பிரபு கூறியதாவது:-

"அன்புக்குரிய அண்ணன் ரஜினி பற்றி சொல்வதானால், அது ஒரு நாளில் முடிந்து விடக்கூடியதல்ல. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும், அவரைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் நடித்த "ராகங்கள் மாறுவதில்லை'' வெளிவந்த சமயம். ரஜினி, அந்தப் படத்தை மிகவும் ரசித்துப் பார்த்திருக்க வேண்டும். "பிரபு, நீங்கள் நல்லா `பைட்' பண்றீங்க. உங்க டான்ஸ் மூவ்மெண்ட் கூட அழகா இருக்கிறது'' என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்.

எத்தனை நடிகர்களிடம் இந்த விரிந்த மனப்பான்மை - சக நடிகர்களை தட்டிக் கொடுக்கும் தாராள மனம் இருக்கிறது?

"தர்மத்தின் தலைவன்'' படத்தில் முதன் முதலாக நாங்கள் சேர்ந்து நடித்தோம்.

அப்பாவுடன் முதன் முதலாக "சங்கிலி'' படத்தில் நடித்தபோது மிகவும் பயமாக இருந்தது. ஆனால் ரஜினியுடன் நடிக்கும்போது ரொம்ப ஆர்வமாக இருந்தது.

"நம்ம நடிப்பை ரஜினி எப்படி ரெஸ்பான்ஸ் பண்ணப்போகிறார்? அவர் கூட நடிக்கும்போது, நம் அசைவுகள் எப்படி இருக்கும்?'' என்றெல்லாம் முதல் நாளில் இருந்தே முடுக்கிவிட்டேன், கற்பனைக் குதிரையை. அவ்வளவு ஆர்வம்!

ஏராளமான படங்களில் நடித்து முடித்த பிறகும், ஷாட் முடிந்ததும் "நல்லா பண்ணினேனா?'' என்று மற்றவர்களிடம் அப்பா கேட்டுத் தெரிந்து கொள்வார். இதே பழக்கம் ரஜினிக்கும்! அவரது அமோக வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.

அப்பாவைப் பற்றி அவர் சொல்லும் ஒரே வார்த்தை "அடேங்கப்பா!'' இந்த "அடேங்கப்பா''வில்தான் எத்தனை ஆழமான விமர்சனம் அடங்கியிருக்கிறது! அடேங்கப்பா!

நட்புக்கு மதிப்பு கொடுப்பவர் ரஜினி. போலியும், பொய்ப்பூச்சும் படியாத தூய்மையான நட்பை அவரிடம் பார்க்கிறேன். வயது, வசதி, பேதம் பார்க்காமல் அனைவருடனும் நட்புணர்ச்சியுடன் பழகும் அன்புள்ளம் கொண்டவர், ரஜினி.''

இவ்வாறு பிரபு கூறினார்.

ரோஜா

"வீரா'', "உழைப்பாளி'' ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ரோஜா கூறியதாவது:-

"என்னுடைய கேரியரில் மறக்க முடியாத மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் யார் என்றால் ரஜினி சாரைத்தான் சொல்வேன். அதுமட்டுமல்ல. என் வாழ்க்கையில் நான் வியந்த ஒரே மனிதரும் அவர்தான்.

எப்படி என்று சொல்கிறேன்.

நடிப்பு என்பது எல்லோருக்கும் வாய்த்து விடாது. என்னைப் பொறுத்தவரை அது ஒரு வரம். நடிப்பதற்காக மேக்கப் போட்டுக்கொண்டு செட்டுக்கு வந்துவிட்டால் சொந்த சோகங்களை எல்லாம் மறந்து விடவேண்டும். வீட்டை நினைத்துக் கொண்டிருந்தால் நடிப்பில் கோட்டை விட்டு விடுவோம்.



அதே சமயம் எல்லோராலும் இப்படி டெடிகேஷனாக இருந்துவிட முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் என்னால் கூட முடியாது. நானும் சராசரியான மனுஷிதானே?

செட்டுக்குள் வரும்போது சில சமயம் சொந்தப் பிரச்சினைகள் மண்டையைக் குடைந்து கொண்டே இருக்கும். அதனால் இன்வால்வ் ஆகி நடிக்க முடியாது. அப்படியான சந்தர்ப்பங்களில் ரீடேக் வாங்க வேண்டியதாகி விடும். என்னால் மனதை ஒருமுகப்படுத்தவே முடியாது.

இப்படி இருந்த நான், இப்போது எப்படி இருக்கிறேன் தெரியுமா? என் சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சோகம், கஷ்டம் இருந்தாலும் செட்டில் கரெக்ட்டாக இருக்கிறேன். என் பிரச்சினைகளை என் முகத்தில் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த பக்குவத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது ரஜினி சார்தான்.

அவர் படத்தில் படு ஜாலியாக நடிப்பார். ஆனால் நிஜ வாழ்க்கையில் படு சீரியசான மனிதர். நடித்து முடித்து விட்டு சேரில் வந்து உட்கார்ந்து, சிகரெட்டை பற்ற வைப்பார். கையில் சிகரெட் புகைந்து கொண்டிருக்கும். அவரது சிந்தனைகள் எங்கோ இருக்கும். படு சீரியசாக ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். அவர் அப்படி உட்கார்ந்திருக்கும்போது எதிரில் எது நடந்தாலும் அவருக்குத் தெரியாது. தவத்தில் இருப்பது போல் இருப்பார்.

அதே சமயம், "ஷாட் ரெடி'' என்று குரல் கேட்டதும், மான் போல துள்ளிக் குதித்து எழுந்து, படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.''

இவ்வாறு ரோஜா கூறினார்.

வடிவேலு

"சந்திரமுகி'', "முத்து'', "வள்ளி'' ஆகிய படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்த வடிவேலு கூறியதாவது:-

"என்னை வளர்த்துவிட்ட மவராசன்கள்ல ரஜினி சாரும் ஒருத்தர்.

மதுரையில் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு ராஜ்கிரண் சார் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தார். என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து அறிமுகப்படுத்தினார்.

அந்த இரு படங்கள் வெளிவந்ததும் எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. பாராட்டுகள் கிடைத்த அளவுக்கு வருமானமோ, நகைச்சுவை நடிகன் என்ற அந்தஸ்தோ கிடைக்கவில்லை. அப்படி இருந்த என்னை ரஜினி சார்தான் கை தூக்கிவிட்டார். "வள்ளி'' படத்திற்கு என்னை அழைத்து வாய்ப்புக் கொடுத்தார்.

அவர் மட்டும் சான்ஸ் கொடுக்கவில்லை என்றால் என் வளர்ச்சி கேள்விக்குறியாகி இருக்கும்.

"வள்ளி''யில் என்னை அவர் நடிக்க வைத்த பிறகுதான் திரையுலகின் பார்வை என் மீது திரும்பியது. நிறைய படங்களும் என்னைத் தேடி வர ஆரம்பித்தன. அதற்காக ரஜினி சாருக்கு அன்றும் இன்றும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

மதுரையில் இருந்தபோது தீவிர சினிமா பைத்தியமாக இருந்தேன். ஒரு படத்தைக்கூட மிஸ் பண்ணமாட்டேன். பகல் முழுக்க கண்ணாடி கடையில் வேலை பார்த்துவிட்டு, ராத்திரியானால் சினிமாவுக்குப் போய்விடுவேன். அதிலும் ரஜினி சார் படம் என்றால் முதல் நாள், முதல் காட்சியே பார்த்துவிட்டுத்தான் மறுவேலை.

அந்தளவுக்கு ரஜினி சார் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தேன். திரையில் பார்த்து வியந்த ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று கனவிலும் நான் நினைத்துப் பார்த்தது இல்லை.

அதனாலோ என்னவோ வள்ளி படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. ஷூட்டிங் ஆரம்பித்து, கேமரா முன் நின்றபோதுதான் எனக்கு நம்பிக்கையே வந்தது.

முதல் நாள் ரஜினி சாரை பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சினிமாவில் ஜாலியாக நடிக்கும் அவர் நேரில் ரொம்ப சீரியசாக இருந்தார். அதனால் அவர் நம்மிடம் பேசுவாரோ என்னவோ என்ற அச்சத்துடன் கொஞ்சம் தள்ளியே இருந்தேன். அதைக் கவனித்த ரஜினி சார் என்னைக் கூப்பிட்டு அவர் அருகிலேயே உட்கார வைத்துக்கொண்டார்.



அதுமட்டுமல்ல, என்னைப் பற்றியும் என் குடும்பப் பின்னணி பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார். நான் நடித்த படங்களை எல்லாம் பார்த்ததாகவும், என் நடிப்பு வித்தியாசமாக இருப்பதாகவும் பாராட்டினார். அதோடு `சினிமாவில் நீடித்து நிற்க வேண்டும் என்றால் நம்முடைய குணம் நல்ல மாதிரி இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்' என்றும் அறிவுரை வழங்கினார்.

இந்த நிமிஷம் வரைக்கும் சினிமாவில் எதையும் சாதித்ததாக நான் நினைக்கவில்லை. ரஜினி சாரின் அன்பைப் பெற்றது மட்டுமே என் சாதனை!''

இவ்வாறு வடிவேலு கூறினார்.


Next Page>>> Part 111



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information