Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 32)                         

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா'
இரட்டை வேடங்களில் அசத்தினார்



ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் பெரிய வெற்றிப் படம் "பில்லா.'' இதில், இரட்டை வேடங்களில் பிரமாதமாக நடித்தார்.

ரஜினியை முழு ஆக்ஷன் ஹீரோவாக வெளிப்படுத்திய படம் இது.

கதை

சர்வதேச கடத்தல்காரர்களில் ஒருவனான பில்லா (ரஜினி) அடிதடிக்கு அஞ்சாதவன். எத்தனை அசகாய போலீசாக இருந்தாலும் பில்லாவை நெருங்க முடியவில்லை. அந்த அளவுக்கு சாமர்த்தியத்திலும் வல்லவனாக இருக்கிறான் இந்த பில்லா.

சென்னை நகர போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டர் (பாலாஜி), பில்லாவை பிடிப்பதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறார்.

இதற்கிடையே சர்வதேச போலீஸ் அதிகாரி (மேஜர் சுந்தர்ராஜன்) சென்னை வருகிறார். சர்வதேச அளவில் பிரபலமான கடத்தல்காரர்கள் அத்தனை பேரும் தங்கள் தொழில் தொடர்பான ஒரு `மீட்டிங்'குக்காக சென்னைக்கு வந்திருப்பதை கூறி, போலீஸ் வட்டாரத்தை உஷார்படுத்துகிறார்.

பில்லாவிடம் விசுவாசமாக இருந்த ஜானி என்ற இளைஞனுக்கு, கடத்தல் வாழ்க்கை அலுத்துப் போகிறது. அவன் பில்லாவுக்கு `டிமிக்கி' கொடுத்துவிட்டு காதலியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சிக்கிறான். இதை மோப்பம் பிடித்து விட்ட பில்லா, அவனது பயணத்தை தடுப்பதுடன் உயிரையும் நிறுத்தி விடுகிறான்.

பழிக்குப்பழி

இதனால் வெகுண்டெழுந்த அவன் காதலி (பிரவீணா) தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் பில்லாவை சந்திக்கிறாள். அவனை தனது வசீகரப் புன்னகையில் மயக்கியபடியே போலீசுக்கும் ரகசிய தகவல் கொடுத்து விடுகிறாள்.

போலீஸ் டி.எஸ்.பி. தலைமையில் ஒரு போலீஸ் பட்டாளமே பில்லா தங்கியிருந்த ஓட்டலை சுற்றி வளைக்கிறது. ஆனால் பில்லா அந்தப் பெண்ணையே தனக்குப் பாதுகாப்பாக பயன்படுத்தி, தப்பித்து விடுகிறான். அதோடு அந்தப் பெண்ணையும் கொன்று விடுகிறான்.

ஜானியின் தங்கை ராதாவுக்கு (ஸ்ரீபிரியா) இந்த தகவல் தெரியவர, அவள் தனக்கு வேண்டிய ஒரு கராத்தே மாஸ்டர் மூலம் `பில்லா'வின் கூட்டத்தில் சேருகிறாள்.

பில்லா அவளை நம்பத் தொடங்கிய நேரத்தில் அவள் கொடுத்த ரகசியத் தகவல் போலீசை எட்டுகிறது. இம்முறை `பில்லா'வால் தப்ப முடியவில்லை. போலீசின் துப்பாக்கி, பில்லாவைத் துளைக்கிறது.

அரைகுறை உயிருடன் ஆற்றில் விழுந்து அப்போதைக்கு தப்பிக்கும் பில்லா, கடைசியில் `டி.எஸ்.பி' அலெக்சாண்டரின் காரில் ஏறிக்கொண்டு, அவரையே மிரட்டி தனது இருப்பிடத்துக்கு கொண்டு விடச்சொல்கிறான். ஆனால் பாதி வழியில் அவன் உயிர் பிரிந்து விடுகிறது.


போலி பில்லா

பில்லா இறந்து போனது டி.எஸ்.பி. அலெக்சாண்டருக்கு மட்டுமே தெரியும். `பில்லா'வை உயிருடன் பிடித்திருந்தால் அவன் மூலம் சர்வதேச அளவிலான கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்களை திரட்டியிருக்க முடியும். பில்லாவின் கடத்தல் கூட்டத்தையும் ஒட்டுமொத்தமாக பிடித்திருக்க முடியும். இந்த இரண்டுமே நடக்காததால், பில்லாவை ஒரு கல்லறைத் தோட்டத்தில் ரகசியமாய் புதைக்க ஏற்பாடு செய்த டி.எஸ்.பி. `பில்லா' சாயலில் ரோடுகளில் ஆடிப்பாடி பிழைப்பு நடத்தி வந்த ராஜப்பா (இன்னொரு ரஜினி) என்ற இளைஞனை `பில்லா' போல தயார் செய்கிறார்.

ராஜப்பா புதிய `பில்லா'வாக எதிரிகள் இருப்பிடத்தில் நுழைகிறான்.

இதற்கிடையே பில்லா மீண்டும் தனது கூட்டத்துடன் இணைந்து கொண்ட தகவல் போலீசை எட்டுகிறது. அவர்கள் பில்லாவை வேட்டையாட நடவடிக்கை எடுக்கிறார்கள்.

`பில்லா'வாக நடிக்கும் ராஜப்பாவின் நிலைதான் பரிதாபம். போலீசிடம் மாட்டினாலும் உயிர் உத்தரவாதமில்லை. கடத்தல் கூட்டம் தெரிந்து கொண்டாலும் பரலோகம் நிச்சயம். அதோடு தனது அண்ணன் ஜானியை கொன்றதற்காக எப்போது கொல்லலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ராதா ஒரு பக்கம்.

இந்த மாதிரியான இக்கட்டான சூழலில் சர்வதேச போலீஸ் அதிகாரியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், கடத்தல்காரர்களின் ஒரிஜினல் தலைவன் என்பது ராஜப்பாவுக்கு தெரியவருகிறது. போலி போலீஸ் அதிகாரி, `ராஜப்பா'வை பில்லாவாக தயார் செய்திருந்த டி.எஸ்.பி.யை `குளோஸ்' பண்ணிவிட்டு, `பில்லா'வாக நடிக்கும் ராஜப்பாவுக்கு குறி வைக்கிறார்.

ராஜப்பா தனது பாடல் குழுவினருடன் அதிரடியாக மோதல் களத்தில் இறங்கி, போலி சர்வதேச போலீஸ் அதிகாரியை உலகுக்கு அடையாளம் காட்டுகிறார்.

இதற்கிடையே ராஜப்பாவை யாரென்று தெரிந்து கொண்ட ராதாவும் உதவுகிறாள்.

சர்வதேச கடத்தல் கூட்டம் ராஜப்பாவால் பிடிபட, போலீஸ் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.

ராஜப்பா - ராதா திருமணத்தில் படம் முடிகிறது.

பில்லா, ராஜப்பா என இரண்டு வேடத்தில் ரஜினி நடிப்பில் கலக்கிய படம். பில்லாவாக தனக்கே உரிய ஸ்டைலில் அசத்தினார்; ராஜப்பா என்ற கிராமத்துப் பாடகன் கேரக்டரிலும் நெளிவும் குழைவும் கலந்து ரசிகர்களை கவர்ந்தார்.

போலீஸ் டி.எஸ்.பி. அலெக்சாண்டராக பாலாஜி சிறப்பாக நடித்தார். படத்தை தயாரித்ததும் இவரே.

அதுவரை காமெடி செய்து கொண்டிருந்த தேங்காய் சீனிவாசனை குணச்சித்திர கேரக்டரில் அறிமுகப்படுத்திய பெருமை இந்தப் படத்துக்கு உண்டு.

நடிகர்கள் ஏவி.எம்.ராஜன், அசோகன், கவுரவ வேடத்தில் தோன்றினார்கள்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "நாட்டுக்குள்ளே எனக்கொரு ஊருண்டு'', "நினைத்தாலே இனிக்கும் சுகம்'', "மை நேம் இஸ் பில்லா'' போன்ற பாடல்கள் இப்போது கேட்டாலும் திகட்டாத ரகம்.

டைரக்ட் செய்தவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பினால், அதற்குப் பிறகு தனது பெயரை `பில்லா' ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்று மாற்றிக்கொண்டார்.

26-1-1978-ல் வெளியாகி, 260 நாள் ஓடி சாதனை படைத்த இப்படம், வசூலிலும் புரட்சி செய்தது. ரஜினியை நாயகனாக்கி படமெடுத்தால் `நிச்சய லாபம்' என்ற நம்பிக்கைக்கு நிரந்தரமாக அஸ்திவாரமிட்ட பெருமையும் இந்த `பில்லா' படத்துக்கு உண்டு.

பில்லாவுக்குப் பிறகு 4-6-1980-ல் "ராம் ராபர்ட் ரகீம்'' வெளிவந்தது. இந்தியில் வெளியான "அமர் அக்பர் ஆன்டனி'' படத்தின் கதையை வைத்து எடுக்கப்பட்ட படம் இது.



அன்புக்கு நான் அடிமை

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான "அன்புக்கு நான் அடிமை'' 19-7-1980-ல் வெளியாகி சக்கை போடு போட்டது. இதில் ரஜினியுடன் கராத்தே மணியும் இணைந்து நடித்தார்.

ரஜினிக்கு ஜோடியாக ரதி நடித்தார்.

படத்தை சி.தண்டாயுதபாணி தயாரித்தார். ஆர்.தியாகராஜன் டைரக்ட் செய்தார்.


Next Page>>> Part 33



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information