Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 52)                         

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி?
பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்


"அன்புள்ள எம்.ஜி.ஆர்'' என்ற பெயரில் தயாராக இருந்த படம், பிறகு "அன்புள்ள ரஜினிகாந்த்'' என்ற பெயரில் தயாராகி வெளிவந்தது.

இந்தப் படத்தை கதை-வசன ஆசிரியர் தூயவனும், "அழகன்'' தமிழ்மணியும் சேர்ந்து தயாரித்தனர்.

தூயவன், புகழின் உச்சியில் இருந்தபோதே எதிர்பாராதவிதமாக காலமானார்.

தமிழ்மணி, பின்னர் "தர்மபத்தினி'', "சோலைக்குயில்'', "சித்திரைப்பூக்கள்'', "அன்பே உன் வாசம்'' ஆகிய படங்களைத் தயாரித்தார். இப்போது, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொருளாளராக இருக்கிறார்.

படம் உருவான கதை

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானபோது நடந்த ருசிகர நிகழ்ச்சிகளை அழகன் தமிழ்மணி வெளியிட்டார்.



அவர் கூறியதாவது:-

"25 ஆண்டுகளுக்கு முன், நான் பத்திரிகையாளராக இருந்தேன். நிருபராக பணிபுரிந்ததால், திரை உலகத்தினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, சில நண்பர்களுடன் சேர்ந்து, "மலைர் மம்பட்டியான்'' படத்தைத் தயாரித்தேன். இதில் தியாகராஜன் (பிரசாந்த்தின் தந்தை), சரிதா ஆகியோர் நடித்தனர். ராஜசேகர் டைரக்ட் செய்தார். இளையராஜா இசை அமைத்தார்.

இது 200 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றிப்படம்.

இந்தப்படம் வெளியான பிறகு, பங்குதாரர்கள் தனித்தனியே பிரிந்தோம்.

பட விழா

இந்தக் காலக்கட்டத்தில், நானும், பிரபல கதை - வசன கர்த்தாவாக விளங்கிய தூயவனும் நெருங்கிய நண்பர்களானோம்.

டெல்லியில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு நாங்கள் சென்றோம். அங்கு ஒரு திரை அரங்கில் "டச் ஆப் லவ்'' (அன்பின் ஸ்பரிசம்) என்ற படத்தை திரையிட்டார்கள். எங்கள் இரண்டு பேரைத் தவிர, மேலும் 3 பேர்தான் அந்தப் படத்தை பார்க்க வந்திருந்தார்கள்!

ஊனமுற்ற குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது. எங்களைத் தவிர, மற்ற மூன்று பேரும் நடுவிலேயே தூங்கி விட்டார்கள்! நாங்கள் இருவரும் ஆர்வத்துடன் படத்தைப் பார்த்தோம்.

இந்தப் படத்தின் கதாநாயகனாக எல்விஸ் பிரஸ்லி என்ற பாப் பாடகர் நடித்திருந்தார். படத்தின் தொடக்கத்தில், அவர் தோன்றமாட்டார். டெலிபோனில் பேசுவது, கடிதங்கள் எழுதுவது போன்ற காட்சிகளில்தான் (முகத்தை காட்டாமல்) வருவார். உச்சகட்ட காட்சியில்தான் நேரடியாகத் தோன்றுவார்.

படத்தைப் பார்த்தபோது சில காட்சிகளில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டோம். அந்த அளவுக்கு படம் உருக்கமாக இருந்தது.

"இந்தக் கதையை அடிப்படையாக வைத்து, தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும். அது நமது லட்சியப்படமாக அமையவேண்டும்'' என்று நானும், தூயவனும் முடிவு செய்தோம்.

சென்னை திரும்பியவுடன், ஒரு மாத காலத்தில் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி முடித்தோம். ஒரு பிரபல நடிகரை கவுரவ வேடத்தில் நடிக்கச் செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.

எம்.ஜி.ஆர்.

அப்போது, எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தார். அவரை சந்தித்து, கதை முழுவதையும் சொன்னோம். உருக்கமான கட்டங்களை சொன்னபோது, அவர் கண் கலங்கினார். "இந்தப் படத்தில் தாங்கள் கவுரவ வேடத்தில் தோன்றவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டோம்.

"அரசாங்க அலுவல்கள் பல இருந்தாலும், கவுரவ வேடத்தில் தோன்றுகிறேன். இதுபற்றி, மேற்கொண்டு அமைச்சர் அரங்கநாயகத்திடம் சென்று பேசுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

அதன்படி, அரங்கநாயகத்தை சந்தித்தோம். "படத்தின் பெயர் என்ன?'' என்று அவர் கேட்டார். நான் சட்டென்று "அன்புள்ள எம்.ஜி.ஆர்'' என்று கூறினேன். உண்மையில், படத்தின் பெயர் அதுவரை முடிவாகவில்லை. ஏதோ என் மனதில் தோன்றியது; சொன்னேன்.

கதை முழுவதையும் கூறும்படி அரங்கநாயகம் கேட்டார். தூயவன் முழுக்கதையையும் சொன்னார். அரங்கநாயகத்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. "கதை, திரைக்கதை, வசனத்துக்காக ஒரு நல்ல தொகை கொடுக்கிறேன். படமாக்கும் உரிமையை எனக்குக் கொடுத்துவிடுங்கள்'' என்றார்.

யோசித்துச் சொல்வதாக கூறிவிட்டுத் திரும்பினோம்.

இதை எங்கள் லட்சியப் படமாகத் தயாரிக்க நாங்கள் முடிவு செய்திருந்ததால், உரிமையை யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை. "பிச்சை எடுத்தாவது, நாமே இந்த படத்தைத் தயாரிப்போம்'' என்றார், தூயவன். நாங்கள் ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருந்த காலம் அது.

ரஜினியிடம் தூது

தேவர் பிலிம்சில் உதவி டைரக்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ரஜினியின் நண்பர் கே.நட்ராஜை சந்தித்தோம். "எங்களிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது. அதில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும். உங்களை டைரக்டராகப் போடுகிறோம். நீங்கள் ரஜினியை சந்தித்து, அவரிடம் தூயவன் கதை சொல்ல, நேரம் கேளுங்கள்'' என்று கூறினேன்.

அதேபோல் நட்ராஜ், ரஜினியிடம் சென்று நேரம் கேட்டு வந்தார். குறிப்பிட்ட நாளில், ரஜினியை தூயவன் சந்தித்து கதையை விரிவாகச் சொன்னார். கதை ரஜினிக்குப் பிடித்து விட்டது. கவுரவ வேடத்தில் நடிக்க சம்மதித்தார். ஆறு நாட்கள் கால்ஷீட் தருவதாகக் கூறினார்.

படத்தின் பெயர் என்ன என்பதை நாங்கள் அவரிடம் கூறவில்லை.

பணம் திரட்டினோம்

அந்த நேரத்தில் என்னிடமும், தூயவனிடமும் பணமே கிடையாது. தெரிந்தவர்களிடம் கொஞ்சம், கொஞ்சமாக வாங்கி, ரூ.15 ஆயிரம் திரட்டினோம்.

ரஜினியுடன் நடிக்க அம்பிகா, ஒய்.ஜி.மகேந்திரன், ராஜ்குமார் ஆகியோரை ஒப்பந்தம் செய்தோம். பேபி மீனா, பேபி சோனியா, மாஸ்டர் டிங்கு ஆகியோரை குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகம் செய்தோம்.



1983 மார்ச் 31-ந்தேதி ஏவி.எம். ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கியது. அன்றைய தினம்தான், "தினத்தந்தி''யில் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில் "அன்புள்ள ரஜினிகாந்த்'' என்ற பெயரைக் குறிப்பிட்டோம். ரஜினிக்கும் அன்றுதான் படத்தின் பெயர் தெரியும்!

படப்பிடிப்பு முழுவதும் சென்னை சாந்தோமில் உள்ள உயர்நிலைப்பள்ளியில், 300 மாணவ-மாணவிகளை வைத்து நடந்தது.

ரஜினி உதவி

இந்தப் படத்துக்காக ரஜினிகாந்த் அளித்த ஒத்துழைப்பை என் வாழ்நாளில் மறக்க முடியாது. படம் முழுவதும், 15 "செட்'' உடைகளை மட்டும் பயன்படுத்தி நடித்தார். தனக்கென தனி ஒப்பனையாளர், "டச்சப்'' உதவியாளர் என்று யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. எங்களுக்கு செலவு வராமல் பார்த்துக்கொண்டார்.

ஆரம்பத்தில் 6 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்திருந்த ரஜினி, படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக மேற்கொண்டு 10 நாட்கள் ஒதுக்கி, பத்து பைசாகூட வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.

ரஜினி வீட்டில் படப்பிடிப்பு

ரஜினிகாந்தை அவர் வீட்டில் மீனா சந்திப்பது போல் ஒரு காட்சி வருகிறது. அதைச் சொன்னதும், "இந்தக் காட்சியை வேறு எங்கும் போய் எடுக்க வேண்டாம். என் வீட்டிலேயே படமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். அது மட்டுமல்ல; தன் மனைவி லதாவையே டிபன் பரிமாறும்படி கூறி, எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தார்.

படத்தில் வரும் "கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே'' என்ற பாடலை லதா ரஜினிகாந்த் பாடினார். திரைப்படத்துக்காக அவர் பாடியது இதுவே முதல் தடவை.

டைரக்டர் கே.பாக்யராஜ் மிகவும் `பிசி'யாக இருந்த நேரம் அது. அவருடன் ரஜினியே பேசி, கவுரவ வேடத்தில் நடிக்கச் செய்தார். அந்த காமெடி ஓரங்க நாடகம் (கிருஷ்ண தேவராயர் - தெனாலிராமன்) இன்றளவும் ரசிகர்களால் பேசப்படுகிறது.

படம் நன்றாக அமைந்ததால், என்னையும், தூயவனையும் அழைத்து ரஜினி பாராட்டிய சொற்கள், இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன.

லாபம்

அந்தக் காலக்கட்டத்தில், எங்களுக்கு வசதி அதிகம் கிடையாது. 24 பிரதிகள் எடுத்து, ரூ.24 லட்சத்துக்கு விற்றோம். எனக்கும், தூயவனுக்கும் ஆளுக்கு 1ஷி லட்சம் லாபமாகக் கிடைத்தது.

எனினும், படம் பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றதை பெரிய லாபமாகக் கருதினோம்.

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடிகொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளித்த ஒத்துழைப்பினால்தான் இந்தப் படத்தை எங்களால் உருவாக்க முடிந்தது. இதற்காக வாழ்நாள் முழுவதும், நானும், தூயவன் குடும்பத்தினரும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்.''

இவ்வாறு அழகன் தமிழ்மணி கூறினார்.


Next Page>>> Part 53



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information