Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 69)                         

மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி''
100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டது


ரஜினிகாந்தின் திரை உலகப் பயணத்தில், ஒரு முக்கியமான மைல்கல் "தளபதி.'' இது மணிரத்னம் டைரக்ட் செய்த படம். ரஜினியுடன் மம்முட்டி இணைந்து நடித்தார்.

இப்படம் 1991 நவம்பர் 5-ந்தேதி திரையிடப்பட்டது. தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஒரே சமயத்தில் 100 தியேட்டர்களில் ரிலீஸ்

ஆகியது.நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில், ரஜினியின் நடிப்பு மேலும் மெருகேறி

வெளிப்பட்டது.ரஜினியின் நண்பராக நடித்த மம்முட்டியும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மகாபாரதத்தை நினைவூட்டும் கதை

மகாபாரதத்தில் திருமணத்துக்கு முன்பே சூரியபகவானை நினைத்து கர்ணனை பெற்ற குந்திதேவி, கர்ணனை ஓடுகிற ஆற்றில் பேழையில் வைத்து விட்டு விடுவார். தளபதி படத்தில் ஸ்ரீவித்யாவுக்கும் இதே மாதிரி ஏற்பட்ட ஒரு விபரீத சூழலில் ரஜினி உருவாகிறார். பிறந்த குழந்தை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாட முடியாத நிலை, ஸ்ரீவித்யாவுக்கு.



குழந்தை அனாதையாக `கூட்ஸ்' வண்டியில் விடப்படுகிறது. காலம் காயம் ஆற்றிய வேளையில் ஸ்ரீவித்யா, ஜெய்சங்கருக்கு

வாழ்க்கைப்படுகிறார்.தாதா

அனாதை முத்திரையுடன் அந்தப் பகுதி மக்களால் அன்புடன் வளர்க்கப்படுகிறார், ரஜினி. வளர்ந்து வாலிபனான நேரத்தில் அடிதடி தாதா ரேஞ்சுக்கு வந்துவிடுகிறார். இவரது வளர்ச்சி பக்கத்து ஏரியாவில் உள்ள தாதாக்களை கலவரம் அடையச் செய்கிறது.

பக்கத்து ஏரியாவில் பிரபல தாதாவாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார் மம்முட்டி. அவரது அடியாட்களில் ஒருவன் திடுமென கொல்லப்பட, சந்தர்ப்பம் ரஜினியை குற்றவாளியாக்குகிறது. ரஜினியே கொலை குற்றவாளி என மம்முட்டி முடிவுசெய்து ரஜினியை போலீசில் மாட்ட வைக்கிறார். ரஜினி ஜெயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

சில நாட்களிலேயே, தனது அடியாளின் மரணத்துக்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது மம்முட்டிக்கு தெரியவருகிறது. அதனால் ரஜினியை ஜெயிலில் இருந்து விடுவிக்கிறார்.

ரஜினி பற்றி ஏற்கனவே அரசல்புரசலாக தெரிந்து வைத்திருந்த பிரபல ரவுடி அம்ரிஷ்பூரி, அவரை தன்னுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார். `ராஜா மாதிரி வாழவைக்கிறேன்' என்று நம்பிக்கை கொடுக்கிறார். ஆனால், அவர் தனது நண்பன் மம்முட்டியின் பரம எதிரி என்பதை புரிந்து கொண்ட ரஜினி, அம்ரிஷ்பூரியின் விருப்பத்தை நிராகரிக்கிறார். `என் நண்பனின் எதிரியுடன் ஒருநாளும் கைகோர்க்க மாட்டேன்' என்று மறுத்துவிடுகிறார்.

இந்த தகவல் மம்முட்டிக்குத் தெரிய வந்ததும் நெகிழ்ந்து போகிறார். `நீ என்னுடன் இருக்க வேண்டியவன். இனி நீதான் என் தளபதி' என்று உணர்ச்சிவசப்படுகிறார். இப்போது மம்முட்டி அணியில் மிகப்பெரும் சக்தியாக ரஜினி விளங்குகிறார்.

காதல்

அடிதடி, ரகளை மட்டுமே வாழ்க்கை என்றிருந்த ரஜினிக்குள் காதல் எட்டிப் பார்க்கிறது. பணக்கார குடும்பத்தின் ஷோபனா, அவரைக் கவர்கிறார். ரஜினியின் தயாள குணம், கம்பீரம் ஷோபனாவைக் கவர, அவரும் காதல் வசப்படுகிறார்.

ஆனால் இந்தக் காதலுக்கு ஆயுள் குறைச்சல். ரஜினி மீதிருந்த `தாதா' முத்திரையும், `அனாதை' என்ற அடைமொழியும் காதலியை அடைய தடையாக இருக்கின்றன.



மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக பொறுப்பேற்கும் அரவிந்த்சாமி, தனது எல்லைக்குள் தலைவலியாக இருக்கும் தாதாக்களை களையெடுக்க விரும்புகிறார். கலெக்டரின் பதவி ஏற்பு விழாவின்போதே தாதாக்கள் தங்கள் கோஷ்டி சண்டையை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அது திட்டமிட்டு நடந்த சண்டை என்பதும், தனது நண்பன் மம்முட்டியை கொல்ல அம்ரிஷ்பூரி ஏற்பாடு செய்தது என்பதும் ரஜினிக்கு தெரியவர, மம்முட்டியை கொல்ல முயன்றவனை தீர்த்துக்கட்டி விடுகிறார்.

இந்த வழக்கில் சாட்சி சொல்ல வருகிறார் ஜெய்சங்கர். அவர் மூலமாக, தான் அனாதையல்ல, தனது தாயார் ஸ்ரீவித்யா, தனது தம்பிதான் மாவட்ட கலெக்டராக இருக்கும் அரவிந்த்சாமி என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார், ரஜினி.

பெற்ற தாயையே தன் தாய் என்று சொல்ல முடியாத வேளையில், மனதுக்குள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார், ரஜினி. தனது தாயாரை அவளறியாமல் தூரத்தில் நின்றபடி பார்த்து உருகுகிறார்.

இந்த நேரத்தில் தாதாக்கள் களையெடுப்பு தொடங்குகிறது. இதில் மம்முட்டி கைது செய்யப்படுகிறார். தகவல் தெரிந்து துடித்த ரஜினிக்கு, இன்னொரு அதிர்ச்சியான செய்தி கிடைக்கிறது. தனக்கும் மம்முட்டிக்கும் எதிரியான அம்ரிஷ்பூரி மூலம் போலீஸ் தங்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருப்பதை தெரிந்து கொள்கிறார்.

ரஜினி தன் மகன் என்ற உண்மை, தாயார் ஸ்ரீவித்யாவுக்கு தெரிகிறது. மகனைக் காப்பாற்றும் ஆசையில் கலெக்டரான தன் மகன் அரவிந்த்சாமியிடம், உண்மையை சொல்லி ரஜினியின் உயிருக்கு உத்தரவாதம் தரும்படி மடிப்பிச்சை கேட்கிறார்.

உறவுகள் ஒருங்கிணைய இருக்கும் நேரத்தில் மம்முட்டி ஜெயிலில் இருந்து விடுதலையாகி வருகிறார். கலெக்டர் மீதான கோபத்தில் அவரை `போட்டுத் தள்ளும்'படி நண்பன் ரஜினியிடம் கேட்டுக்கொள்கிறார்.

தம்பியா? நண்பனா? யார் முக்கியம்? பாச ஊசலாட்டத்தில் தடுமாறுகிறார் ரஜினி. நண்பனை சமாதானப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில், தம்பியைக் கொல்ல மறுத்துவிடுகிறார்.

ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சி விடுகிறது. அம்ரிஷ்பூரியின் ஆட்கள் மம்முட்டியை கொன்று விடுகிறார்கள். ஆவேசமான ரஜினி, தனக்கு கிடைத்த புதிய உறவைக்கூட துச்சமாக எண்ணி, நண்பனைக் கொன்ற கூட்டத்தை ஓடஓட விரட்டிக் கொல்கிறார்.

கோர்ட்டில் ரஜினி செய்த கொலைகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாததால், அவர் விடுதலையாகிறார். தனது மகனை அன்புடன் கட்டித்தழுவி, பாவக்கறையை கண்ணீரால் கழுவுகிறார், தாய்.

"சுந்தரி கண்ணால் ஒரு சேதி'', "அடி ராக்கம்மா கையைத்தட்டு'', "சின்னத்தாயவள் தந்த ராசாவே'', "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கொன்றும் பஞ்சமில்லே'' போன்ற பாடல்கள் இளையராஜாவின் இசையில் இனிமை வாய்ந்தவை.

அரவிந்த்சாமி அறிமுகமான படம் இது. ரஜினி விரும்பிய ஷோபனாவை அரவிந்த்சாமி திருமணம் செய்து கொள்வார்.

பானுப்பிரியா கவுரவ வேடத்தில் தோன்றினார். மம்முட்டிக்கு ஜோடி கீதா.

கால்ஷீட்

ரஜினி வழக்கமாக ஒரு படத்துக்கு அதிகபட்சம் 35 நாள் கால்ஷீட் கொடுப்பார். தளபதிக்காக இந்த எல்லையை தாண்டி நூறு நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்திருந்தார்.

தளபதி 192 நாட்கள் ஓடி வெற்றிவாகை சூடியது.



நாட்டுக்கு ஒரு நல்லவன்

ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க, கன்னடப் பட உலகின் பிரபல ஹீரோ வி.ரவிச்சந்திரன் தயாரித்த படம். இந்தப்படத்தில் அவரும் நடித்திருந்தார்.

சிறுவர்கள் படிக்கும் பள்ளியொன்று கொலைக்கூடமாக மாறுகிறது. சிறுவர்கள் காணாமல் போகிறார்கள். பள்ளியில் ஏதோ சமூக விரோத செயல்கள் நடப்பதை புரிந்து கொள்ளும் ரஜினி, உண்மை நிலையை கண்டறிய தன் காதலி ஜகிசாவ்லாவை அந்தப் பள்ளியில் ஆசிரியை வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.

பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களது கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்படுவதை ஜகிசாவ்லா அறிகிறார். ஆனால் இந்த ரகசியம் தெரிந்து கொண்ட அவரை வில்லனின் ஆட்கள் தீர்த்துக்கட்டி விடுகிறார்கள்.

இதனால் தனது நண்பன் ரவிச்சந்திரன் மற்றும் ரகசிய போலீஸ் அதிகாரிகள் சிலருடன் சுரங்கப்பாதை அமைத்து பள்ளிக்குள் நுழைகிறார், ரஜினி. கொலைக்கும்பலை பூண்டோடு அழித்து, சிறுவர்களையும் மீட்கிறார்.

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு 2-10-1991-ல் வெளியான இந்தப்படம், ரசிகர்களை அதிக அளவில் கவரவில்லை.

இந்தப் படத்தின் சிறப்பு அம்சம், ரஜினி ஜோடியாக பிரபல இந்தி நடிகை ஜகி சாவ்லா நடித்ததுதான்.


Next Page>>> Part 70



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information