Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 72)                         

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்'
200 நாட்கள் ஓடிய படம்




சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த `மன்னன்' படத்தில் ரஜினியும், லேடி ஜேம்ஸ்பாண்ட் என்று புகழ் பெற்ற விஜயசாந்தியும் இணைந்து நடித்தனர். படம் 200 நாட்கள் ஓடியது.

திமிர் பிடித்த பணக்கார மனைவியை, திருத்தி வழிக்குக் கொண்டு வருவதுதான் கதை.

முதலாளி - தொழிலாளி

தொழிற்சாலை அதிபர் விசு, தனது நிர்வாகத்தை திறம்பட நிர்வகித்து, தொழிலாளர்களின் அன்புக்குரியவராக இருக்கிறார். இந்த அன்புப் பிணைப்பு, தொழில் அதிபரின் மகள் விஜயசாந்தியினால் உடைபடுகிறது. தொழிலாளர்கள் என்றாலே `தீண்டத்தகாதவர்கள்' என்று நினைக்கிறார் விஜயசாந்தி. நிர்வாகப் பொறுப்பை அவர் ஏற்ற பிறகு, தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மனதுக்குள் குமுறலோடு, தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த தொழிற்சாலையில் தொழிலாளராக வேலையில் சேருகிறார், ரஜினி. வேலையில் சேர்ந்த சில நாட்களுக்குள் சக தொழிலாளர்களின் அன்பைப் பெற்று விடுகிறார்.

ரஜினி ஏழை என்றாலும் கோழை இல்லை. அநீதிக்கு பொங்குவார். பாசத்திலும் மன்னன். பக்கவாதத்தால் கை, கால்கள் விழுந்து போன தன் தாயாரை அன்பாக கவனித்துக் கொள்கிறார்.

ஒருநாள், தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடையும் ஒரு தொழிலாளியை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல கார் கிடைக்கவில்லை. முதலாளியின் கார் மட்டுமே இருந்த நிலையில், காயம் அடைந்தவரை காரின் பின்சீட்டில் படுக்க வைத்து ஆஸ்பத்திரிக்கு செல்கிறார், ரஜினி.

இந்த விஷயம் `முதலாளி' விஜயசாந்திக்கு தெரியவர, "தொழிலாளியின் ரத்தம் தனது புத்தம் புதிய காரை வீணாக்கிவிட்டதே'' என்று ஆத்திரம் கொண்டு, தனது காரை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுகிறார். முதலாளியம்மாவின் இந்த ஆணவ போக்கை ரஜினி தட்டிக்கேட்கிறார்.

பழி வாங்கும் படலம்

பதிலுக்கு ரஜினி மீது ஆத்திரமான விஜயசாந்தி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி சில நெருக்கடிகளை கொடுக்கிறார். ஆனால் அவை எதற்கும் ரஜினி அசருகிற ஆளில்லை என்பது புரிந்து போகிறது. "முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்'' என்ற முடிவுக்கு வரும் விஜயசாந்தி, ரஜினியை திருமணம் செய்து கொண்டு பழிவாங்க எண்ணுகிறார். இதற்காக ரஜினியின் தாயார் பண்டரிபாயை சந்தித்து, அவரின் அன்பை பெறுகிறார்.

விஜயசாந்தி தன் தாயாரிடம் காட்டிய அன்புக்குப் பின்னணியில் தன்னை மாட்ட வைக்கும் சதிவலை பின்னப்பட்டு இருப்பதை ரஜினி உணர்கிறார். விஜயசாந்தி தன்னை மணக்க விரும்புவதாக தாயார் மூலம் அறிந்ததும் அதிர்ந்து போகிறார். ஆனால் தாயாரின் விருப்பமும் அதுவே என்பதை தெரிந்து கொண்டதும் திருமணத்துக்கு தலையசைக்கிறார்.

சவால்

திருமணம் முடிகிறது. முதல் இரவிலேயே `அடக்குவது யார்? அடங்குவது யார்?' என்ற போட்டி ஆரம்பமாகி விடுகிறது. "உன் அதிகாரம் என்னை எதுவும் செய்துவிட முடியாது. முடிந்தால் எனக்கெதிரான உன் அஸ்திரங்களை ஏவிப்பார்'' என்று சவால் விடுகிறார் ரஜினி.



`முதலாளியம்மா' விஜயசாந்தியை ரஜினி மணந்து கொண்டாலும், வழக்கம் போல தொழிலாளருக்கான சீருடை அணிந்து, வேலையை தொடருகிறார். இதனால் தொழிலாளர்களின் ஆதரவு அவருக்கு கூடுகிறது.

இதை உணர்ந்து கொண்ட விஜயசாந்தி, ரஜினியின் செல்வாக்கை தகர்க்கும் நோக்கத்தில் தொழிற்சாலையின் பழைய பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு தனக்கு விசுவாசமான புதியவர்களை நியமிக்கிறார்.

இதனால் தொழிற்சாலையில் போராட்டம் வெடிக்கிறது. காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்குகிறது. இந்த வேலை நிறுத்தத்தை பொறுப்பேற்று நடத்துபவர் ரஜினி என்பதை அறியும் விஜயசாந்தி, ஆத்திரம் மேலிட தொழிற்சாலையை மூடுகிறார். தனது தந்தையின் புத்திமதியையும் ஏற்க மறுக்கிறார்.

நீண்டநாள் ஸ்டிரைக்கில் இருக்கும் இந்த தொழிற்சாலையை அரசாங்கம் தனது பொறுப்பில் எடுக்க முடிவு செய்கிறது. இது தெரிந்த விசு, தொழிலாளர் பிரச்சினையை சரிசெய்து தொழிற்சாலையைத் திறக்க முடிவு செய்கிறார்.

இந்த முடிவு தொழிலாளர்களுக்கு வெற்றியாக அமைநது விடவே, எரிமலையாகிறார், விஜயசாந்தி. தனது கணவரின் வெற்றியை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதியவர், தனது பங்களாவில் இருக்கும் அத்தனை பொருட்களையும் அடித்து நொறுக்குகிறார். இப்போது தனது மனைவியை சந்திக்கும் ரஜினி, புத்திமதி சொல்கிறார். `வீண் பிடிவாதம் வாழ்க்கையின் சந்தோஷ ஆணிவேரை தகர்த்து விடும்' என்பதை புரிய வைக்கிறார்.

விஜயசாந்தியின் அறிவுக்கண் திறக்க, கணவரின் `உயர்ந்த உள்ளம்' பிடிபடுகிறது. தன்னை மாற்றிக்கொண்டு மன்னனுக்கேற்ற மகாராணியாகிறார்.

பி.வாசு

கன்னடத்தில் வெற்றி கண்ட "அனுராக அரளிது'' என்ற படத்தின் `ரீமேக்'தான் "மன்னன்.'' வசனம் எழுதி இயக்கியவர் பி.வாசு.

1992 பொங்கலுக்கு வெளிவந்த இப்படம் 200 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

இந்தப்படத்தில், ரஜினியை ஒரு தலையாக காதலிக்கும் பாத்திரத்தில் குஷ்பு நடித்தார்.

வாலி, கங்கை அமரன் எழுதிய பாடல்களுக்கு இசை: இளையராஜா.

"அம்மா என்றழைக்காத உயிரில்லையே'' என்ற பாடலை ரஜனிக்காக உருக்கமாகப் பாடியிருந்தார் கே.ஜே.ஜேசுதாஸ்.

ரஜினி - விஜயசாந்தியின் முதலிரவுப் பாடலாக இடம் பெற்ற "அடிக்குது குளிரு'' பாடலில் வசனப் பகுதியை மட்டும் ரஜினி பேசியிருந்தார்.

மற்றும் `கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு', `சண்டிராணியே நீ எனக்கு கப்பம் கட்டு', `ராஜாதி ராஜா உன் மந்திரங்கள்' போன்ற பாடல்களிலும் இளையராஜாவின் கொடி பறந்தது.

படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து போவார், பிரபு. படத்தின் தயாரிப்பாளர் இவரே.

படம் முழுக்க கலகலப்பாக வந்த ரஜினி, கவுண்டமணியுடன் சேர்ந்து காமெடியிலும் தூள் கிளப்பினார்.

இந்தப்படம் பிறகு "கரானமொகுடு'' என்ற பெயரில் தெலுங்கிலும், "வாட்லா'' என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டது.

(ரஜினியிடம் சிவகுமார் கேள்வி - நாளை)


ரஜினி `சுயதரிசனம்'

"பணம், புகழ், இமேஜ் இவைகளுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டு நிற்கிறேன். ஆசாபாசம் அதிகம் உள்ள இந்த உலகத்தில் உழன்று கொண்டிருப்பதை விடுத்து, அமைதியாக என் கடமைகளைச் செய்ய விரும்புகிறேன். பணத்தால் என்னை யாரும், எப்போதுமே வாங்க முடியாது. நான் விரும்பினால்தான் எதையும் செய்வேன். விருப்பம் இல்லாவிட்டால், யார் சொன்னாலும் கேட்கமாட்டேன்.

அமைதியான சூழ்நிலையில், மனம் ஆழமாக பக்தி மார்க்கத்தில் ஆழ்ந்திருந்தால், அடையப்போகும் இன்பத்திற்கு ஈடு இணையே இல்லை.

- ரஜினிகாந்த் (1985)


Next Page>>> Part 73



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information