Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 75)                         

ரஜினி கட்டிய திருமண மண்டபம்
கருணாநிதி திறந்து வைத்தார்
14-12-1989




நடிகர் ரஜினிகாந்த், தனது தெய்வமாக வழிபடும் ராகவேந்திரா சுவாமிகளின் பெயரால், சென்னையில் திருமண மண்டபம் கட்டியுள்ளார். அதை முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

"ராகவேந்திரா மண்டபம்'' என்று பெயரிடப்பட்டுள்ள இத் திருமண மண்டபம், சென்னை கோடம்பாக்கத்தில் லிபர்டி தியேட்டர் அருகே நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரம் பேர் உட்கார்ந்து, நிகழ்ச்சிகளை காணலாம்.

கருணாநிதி

இந்தத் திருமண மண்டபத்தின் திறப்பு விழா 1989 டிசம்பர் 14-ந்தேதி நடைபெற்றது. விழாவுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி, மண்டபத்தைத் திறந்து வைத்தார்.

அவர் ஒரு பொத்தானை அழுத்தியதும் மண்டபத்தின் திருமண முகூர்த்த மேடையை மூடி இருந்த பட்டுத்திரை விலகியது.

கருணாநிதி வாழ்த்துரை வழங்கி பேசும்போது கூறியதாவது:-

அன்புத்தம்பி

"இங்கே அனைவரையும் அழைத்து அன்பினை பொழிந்து வரவேற்ற அன்பிற்குரிய தம்பி ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்குவதில் பெருமைப்படுகிறேன். பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏதோ நான் ஆட்சிப் பொறுப்பில் உள்ள இப்போதுதான் அன்புத்தம்பி ரஜினிகாந்த் என்னிடத்தில் அன்பு கொண்டவர் அல்ல. ஆட்சிப் பொறுப்பில் இல்லாது பல்வேறு அல்லல்களை நான் அனுபவித்துக் கொண்டிருந்தபோதே என்னிடம் அன்பு கொண்டிருந்தவர். அதை அவர் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் ரகசியமாக என்னிடத்தில் பாசத்துடன் பழக்கம் கொண்டிருந்தவர். அவருடைய விழாவில் நான் கலந்து கொண்டதை நன்றிப்பெருக்குடன் ஆற்றும் கடமையாக கருதுகிறேன்.

மண்ணின் மைந்தர்

தொடக்கத்தில் ரஜினிகாந்த் பேசும்போது தனது தந்தை தமிழகத்தில் கிருஷ்ணகிரி அருகில் உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர் என்று கூறினார். அதைக் குறிப்பிட்டு அதற்கு பின்பு இங்கே பேசிய நண்பர் வாழப்பாடி ராமமூர்த்தி, ரஜினிகாந்த் எனது கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்தவர். அதனால் எங்களுடைய "மண்ணின் மைந்தர்'' என்று குறிப்பிட்டு பேசினார்.

மண்ணின் மைந்தர் என்ற கொள்கையை அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்வதில்லை. ஆனாலும் வாழப்பாடி ராமமூர்த்தி மண்ணின் மைந்தர் என்று சொன்னதை கேட்டதும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு "யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்று பாடிய கணியன் பூங்குன்றனார் நினைவுக்கு வருகிறார். அவரும் தான் பிறந்த ஊரை தனது பெயருடன் சேர்க்க தவறியதில்லை. அதனால் மண்ணின் மைந்தர்கள் என்று சொல்வதில் நியாயம் உள்ளது.

ஏழைகள் திருமணம்

ஏழை, எளியோருக்கும் திருமணம் நடத்த இங்கே இடம் அளிக்கப்படும் என்று ரஜினிகாந்த் கூறியது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியது.

இது எனது குடும்ப விழா. இதில் கலந்து கொள்வதில் மீண்டும் எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.''

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

ரஜினிகாந்த் பேச்சு

தொடக்கத்தில் ரஜினிகாந்த் பேசுகையில் கூறியதாவது:-

"என்னைப் பற்றிச் சொல்வார்கள் `கன்னடக்காரன், தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறான்' என்று. உண்மைதான். ஆனால் ஆராய்ந்து பார்த்தால், அதில் இன்னும் சில விஷயங்கள் தெரியவரும்.

எங்களுடைய பூர்வீகம் கிருஷ்ணகிரி. என் தந்தை கிருஷ்ணகிரியிலுள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்தவர், வாழ்ந்தவர். கிருஷ்ணகிரி தமிழ்நாட்டில் உள்ளது.

நான் தெய்வமாக வழிபடும் ஸ்ரீராகவேந்திரா சுவாமி, ஒரு தமிழர். ஆன்மீகத்தில் நான் குருவாக வழிபடும் ரமணமகரிஷி ஒரு தமிழர்.

சிவாஜிராவாக இருந்த எனக்குப் பெயர் சூட்டி, தமிழ் கற்றுத்தந்து, எனக்கு மறுவாழ்வு கொடுத்து, என்னைத் தத்தெடுத்து அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் அவர்கள் தமிழர்.

ஆரம்பத்திலிருந்தே என்னைச் சினிமாவில் சேரச்சொல்லி ஊக்கப்படுத்திய என் ஆப்த நண்பர் ராஜ்பகதூர் தமிழன்.

வாழ்நாள் முழுவதும் துணைவருவதாகக் கூறி, என் வீட்டில் விளக்கேற்றிய என் மனைவி லதா ஒரு தமிழச்சி.

என் குழந்தைகள் வாய் திறந்தவுடன் பேசிய முதல் வார்த்தை, தமிழ்.

உயிரினும் மேலான தமிழ் ரசிகர்கள்

எனக்கு அன்பையும், ஆதரவையும் அள்ளிக்கொடுத்து, என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கும் என் உயிரினும் மேலான ரசிகப்பெருமக்கள் தமிழர்கள்.

அப்படியென்றால் நான் யார்? நீங்களே சொல்லுங்கள்.''

இவ்வாறு ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.



பாலசந்தர்

ரஜினியின் குருவான டைரக்டர் பாலசந்தர், குத்துவிளக்கேற்றி வைத்துப் பேசினார்.

விழாவில் சிவாஜிகணேசன், ஆர்.எம்.வீரப்பன், தமிழ்நாடு இ.காங்கிரஸ் கட்சி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, பட அதிபர் ஏவி.எம்.சரவணன், பட அதிபரும் கதை வசனம் பாடல் ஆசிரியருமான பஞ்சு அருணாசலம், இசை அமைப்பாளர் இளையராஜா, எழுத்தாளரும், நடிகருமான சோ, ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட், ரஜினிகாந்த் பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்தபோது அவருடன் 5 ஆண்டுகள் பஸ் டிரைவராக இருந்து பணியாற்றியவரும், ரஜினிகாந்த் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்து முன்னேற உதவி செய்தவருமான ராஜ்பகதூர் ஆகியோர் பாராட்டிப் பேசினார்கள்.

முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் விழாவில் பாராட்டுரை நிகழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்தின் மனைவி லதா மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

விழாவுக்கு வந்தவர்களை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், விஜயகுமார், அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் சத்யநாராயணா ஆகியோர் வரவேற்றனர்.


Next Page>>> Part 76



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information