Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 77)                         

ரஜினியுடன் சில அனுபவங்கள்
ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்


ரஜினிகாந்தின் சிறப்புகள் பற்றி, பட அதிபர் ஏவி.எம்.சரவணன் மனம் திறந்து பாராட்டினார்.

ஏவி.எம். பேனரில் முரட்டுக்காளை, போக்கிரிராஜா, பாயும்புலி, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத், மனிதன், ராஜாசின்னரோஜா, எஜமான் ஆகிய 8 படங்களில் ரஜினி நடித்துள்ளார். விரைவில் வர இருக்கும் "சிவாஜி'', ஏவி.எம். பேனரில் அவருடைய 9-வது

படம்.ஏவி.எம்.சரவணனுக்கும், ரஜினிக்கும் நெருங்கிய பழக்கம் உண்டு. கட்டுரை ஒன்றில், ரஜினி பற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

தியானம்

"ரஜினி இப்போதெல்லாம் தனிமையிலிருக்கவும் தியானத்துக்கும் அதிக நேரம் செலவிடுகிறார். ஆன்மீகப் புத்தகங்கள் படிக்கிறார். சொற்பொழிவுகள் கேட்கிறார். அவரது சொல்லும், செயலும் நாளுக்கு நாள் மெருகேறி வருவதற்கு, அவரது இந்த ஆன்மீக ஈடுபாடுதான் காரணமென நான் நினைக்கிறேன்.

ரோட்டரி கிளப்பில் ஒரு மாநாட்டுக்கு ரஜினியைப் பேச அழைத்திருந்தார்கள். அங்கே வந்திருந்தவர்களுக்கு ரஜினி என்ன பேசப்போகிறார் என்பதைவிட அவரைக் கிட்டே பார்க்கும் ஆர்வம்தான் அதிகமாக இருந்தது. ரஜினி பேச ஆரம்பித்தார்.

`அமெரிக்காவுக்குப் போய் ஜாலியா - சந்தோஷமா இருக்கணும்னா ரூபாயை `டாலராக' மாத்தி எடுத்துக்கிட்டுப் போகணும், ஜப்பான் போகணும்னா `யென்னா' மாத்தி எடுத்துக்கிட்டுப் போகணும். ஆனால் ஓர் இடத்துக்குப்போய் நிம்மதியா சந்தோஷமா இருக்கணும்னா உங்ககிட்ட இருக்கிற ரூபாய் பயன்படாது. அதற்கு நீங்க நிறைய சேர்க்கணும். பணம், காசு இல்லை.. புண்ணியம். உங்களுடைய உழைப்பால், நினைப்பால், செயலால் புண்ணியம் சேர்க்கணும். அந்த இடம்தான் நாம் எல்லோரும் கடைசியில் போய் சேருகிற இடம்' என்று சொல்லி கையை மேலே காட்டினார். `அங்கே போய் நாம் நிம்மதியா இருக்கணும்னா, நாம் இங்கே சேர்க்கிற புண்ணியம்தான் பாஸ்போர்ட், விசா, எக்ஸ்சேஞ் எல்லாமே' என்று ரஜினி பேசி முடித்தவுடன் ஒரே கிளாப்ஸ்.



சாதாரண கண்டக்டர் வாழ்க்கையை ஆரம்பித்து நடிகராக புகழ் பெற்றிருக்கும் ரஜினிக்கு இத்தனை ஆழமான ஆன்மீக ஞானமா? என்று அனைவருக்கும் ஆச்சரியம். ரஜினியிடமிருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பார்க்கவே இல்லை. "எவ்வளவு பெரிய விஷயத்தை எத்தனை சிம்பிளாகச் சொல்லிவிட்டார்'' என்று பல சீனியர் ரோடேரியன்களே வியந்தார்கள்.

சீனியர்களுக்கு மரியாதை

திரையுலகில் என்றைக்குமே சீனியர்களுக்கு மரியாதை கொடுப்பார் ரஜினி. இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு ரஜினியுடன் நெடுங்காலமாக நெருக்கம் உண்டு. அதனால் அவர் ரஜினியை உரிமையுடன் `ரஜினி... நீ...' என்றே அழைப்பார். ஆனால் ரஜினியோ, எஸ்.பி.எம்மை எப்போதுமே "முத்துராமன் சார்'' என்றுதான் அழைப்பார்.

அதுமட்டுமில்லை. ரஜினி தன் உதவியாளரான ஜெயராமனை அழைக்கும்போதுகூட `நீங்க... வாங்க...' என்று மரியாதை தரத்

தவறமாட்டார்.எம்.ஜி.ஆர். போஸ்டர்

எங்கள் தயாரிப்பான `சகல கலா வல்லவன்' படத்தில் கமலுடைய சண்டைக்காட்சி ஒன்றில் ஓர் இடத்தில் சுவரில் ஒட்டப்பட்ட எம்.ஜி.ஆர். படப் போஸ்டர் வரும். அந்தக் குறிப்பிட்ட காட்சியின்போது தியேட்டர்களில் ரசிகர்களின் கைதட்டலும், விசிலும் அதிகமாக இருக்கும்.

அந்தக் காட்சிக்கு கிடைத்த அதிகப்படியான வரவேற்பைப் பார்த்து விட்டு, நாங்கள் ரஜினியை வைத்து `பாயும்புலி' படம் எடுத்தபோதும் ஒரு சண்டைக் காட்சியின்போது சுவரில் எம்.ஜி.ஆர். படப்போஸ்டர் வரும்படி செய்திருந்தோம். ஆனால் அந்தக் காட்சியைப் படம் பிடித்தபோது ரஜினி சுவரில் இருந்த எம்.ஜி.ஆர். படப்போஸ்டரை எடுக்கச் சொல்லிவிட்டார்.

நாங்கள் அந்த போஸ்டர் எதற்காக என்று விளக்கியபோது, கண்டிப்பாக அதனை எடுக்கச் சொல்லிவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் `என்னைப் பார்க்க விரும்புகிறவர்கள் என் படத்துக்கு வரவேண்டும். எம்.ஜி.ஆர். என்ற பெரிய மனிதரின் புகழைப் பயன்படுத்தி எனக்கு பாராட்டு கிடைக்கும்படி செய்வது நியாயமில்லை.' ரஜினியின் கருத்துப்படியே எம்.ஜி.ஆர். போஸ்டர் அகற்றப்பட்டது.



ஆட்சி மாற்றம்

1996-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு ரஜினி எந்த அளவுக்குக் காரணம் என்பதை நாடே அறியும். ஆனாலும் கூட கலைஞர் முதல்-அமைச்சர் ஆனவுடன் அவரைச் சந்தித்தபோது `என் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு அதைச் செய்து கொடுங்கள். இதைச் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டு யாரும் வரக்கூடாது என்று என் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் சொல்லி இருக்கிறேன். அப்படியே யாராவது வந்தாலும் நீங்கள் நம்பவேண்டாம்' என்று தெளிவுபடுத்தியதாக ரஜினியே என்னிடம் சொன்னபோது இப்படியும் ஒரு மனிதரா? என்று வியந்து போனேன்.

மனோரமா

`தேர்தல் நேரத்தில் ரஜினி பற்றி அரசியல் ரீதியாக அல்லாமல் தனிப்பட்ட முறையில், சினிமா உலகில் நாங்கள் எல்லோருமே மிகவும் மரியாதைக்குரியவராகக் கருதும் பெண்மணியான `ஆச்சி மனோரமா' விமர்சித்தது பற்றி அறிந்தபோது நான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். சாகும் வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆச்சியின் திரையுலக வாழ்க்கைக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துக் கொள்ளும்படி ஆகிவிட்டதே என்று நான் ரொம்ப வருந்தினேன். ஆச்சிக்கு புதிய படங்கள் புக் ஆகவில்லை. ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களிலிருந்து அவரை நீக்கிவிட்டார்கள். அது மட்டுமா? அவர் இடம் பெற்ற டி.வி. விளம்பரங்களைக் கூட நிறுத்திவிட்டார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ரஜினியே ஆச்சியின் பேச்சை மனதில் வைத்துக்கொள்ளாமல், தன் படத்தில் முக்கியமான ரோல் ஒன்றைக் கொடுத்து ஆச்சிக்கு திரையுலகில் ஒரு மறுவாழ்வை அளித்தது, ரஜினியின் மனித நேயத்தைக் காட்டுகிறது.''

இவ்வாறு சரவணன் கூறியுள்ளார்.

(ராகவேந்திரர் மீது ரஜினி கோபம் - நாளை)

***

ரஜினி `சுயதரிசனம்'

"எப்படியும் வாழலாம் என்று நினைக்கக்கூடாது. இப்படித்தான் வாழணும் என்று வாழ்ந்தால்தான் அது வாழ்க்கை. வசதி, வாய்ப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடாது.

எல்லோரும் வாழணும், எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைப்பவன்தான் மனிதன். அந்த மனிதன் தர்மத்தை மீறக்கூடாது.

இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால்தான் மன நிம்மதி கிடைக்கும். மன நிம்மதி இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். இல்லை என்றால் அது வாழ்க்கை அல்ல.''

- ரஜினிகாந்த்.


Next Page>>> Part 78



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information