Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 79)                         

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி!
"நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''



திரைப்படக் கல்லூரியில் தன்னுடன் படித்த பழைய நண்பர்களை இன்னும் மறக்காமல், அவர்களுக்கு உதவி செய்து வருகிறார், ரஜினிகாந்த்.

"நட்பு என்றால் மூன்றெழுத்து; ரஜினி என்றாலும் மூன்றெழுத்து. நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்'' என்று ரஜினியின் பழைய நண்பர்கள் கூறினார்கள்.

இத்தகைய நண்பர்களில் ஒருவரான விட்டல் பிரசாத், ரஜினி பற்றி கூறியதாவது:-

கறுப்பு வைரம்

1973-ல் சென்னை அடையாறு பிலிம் இன்ஸ்டிடிட்டில் சேர்ந்தபோதுதான் சிவாஜி (ரஜினியின் பெற்றோர் வைத்த பெயர் சிவாஜிராவ்) என்ற அந்த கறுப்பு வைரத்தை பார்த்தேன்.

இன்ஸ்டிடிட்டுக்கு படிக்க வந்த புதிதில் முதலில் இரண்டொரு வாரம், எங்களிடம் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார். பார்த்தால் ஒரு முரட்டுத்தனம் தெரியும்.

ஆனால் ஒரு மாதத்தில் பழகிவிட்டார். பழகியபிறகுதான் தோற்றத்தில் முரடாகத் தெரிந்த அவர், உள்ளத்தில் குழந்தை என்பதை தெரிந்து கொண்டோம்.

இன்ஸ்டிடிட்டில் சில பேரை `வாடா போடா' என்று அழைப்பார். இப்போது சூப்பர் ஸ்டாராகி புகழேணியின் உச்சியில் இருக்கும் நிலையிலும் நண்பர்கள் விஷயத்தில் அதே `வாடா போடா'தான். அவருடன் படித்த சதீஷ், இப்போதும் ரஜினியைப் பார்த்தால் அவரது பழைய பெயரில் "என்னடா சிவாஜி?'' என்றுதான் அழைப்பார். இது நட்புக்கு ரஜினி கொடுக்கிற மரியாதை என்றுதான் சொல்லவேண்டும்.



செலவு

ரஜினி நடிக்க ஆரம்பித்த புதிதில் பொருளாதார நிலை அவ்வளவாக சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை. ஆனாலும் தம்பிக்கு `பணம்' ஒரு பிரச்சினையாக இருந்து விடக்கூடாது என்பதற்காக அவரது அண்ணன் சத்யநாராயணன் மாதாமாதம் பணம் அனுப்பி வைப்பார். ரஜினியின் பஸ் டிரைவர் ராஜ்பகதூரும் பணம் அனுப்பி வைப்பார். இரண்டு பேர் அனுப்புகிற பணமும் ரஜினியின் சிகரெட் செலவுக்குப் போதாது.

இந்த ராஜ்பகதூர் இப்போது `டிரைவர்' பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ரஜினி அழைத்தால் புறப்பட்டு சென்னை வந்துவிடுவார். "சந்திரமுகி'' படத்தில்கூட ராஜ்பகதூரை ஒரு சிறு வேடத்தில் நடிக்க வைத்தவர், ரஜினி.

ஆரம்ப காலத்தில், புதுப்பேட்டையில் இருந்த எங்கள் வீட்டில் என்னோடு ரஜினி தங்கியிருந்தார் என்பது, இன்றளவும் எனக்கு மகிழ்ச்சியான

விஷயம்.டைரக்ஷன் பயிற்சி

நடிப்புப் பயிற்சி முடிந்தபின், எனக்கு நடிப்புக்கான வாய்ப்புகள் அத்தனை சரியாக அமையாததால், டைரக்டர் கே.பாலசந்தரிடம் "டைரக்ஷன் பயிற்சி''யில் சேர்ந்தேன். சில மாத பயிற்சிக்குப்பிறகு விட்டல் ஞானம் என்ற பெயரில் "சித்திரமே சித்திரமே'' என்ற படத்தை இயக்கினேன். நான் படம் இயக்குகிறேன் என்று தெரிந்ததும் ரஜினியே முன்வந்து `கெஸ்ட் ரோலில்' நடித்துக் கொடுத்தார்.

ரஜினியின் பல படங்களில் எனக்கு சின்ன வேஷமாவது இருக்கும். தர்மதுரை, மாவீரன் போன்ற படங்களில் நடிப்போடு தயாரிப்பு நிர்வாகப் பொறுப்பையும் கொடுத்தார். இப்போது நடித்து வரும் `சிவாஜி' படத்தில் நானோ, மற்ற நண்பர்களோ நடிக்கவில்லை. நானே ஒரு நாள் ரஜினியிடம் இதுபற்றி கேட்டேன். ரஜினி சொன்ன பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. டைரக்டர் ஷங்கரின் படங்களில் யாராவது நடிக்க விரும்பினால் அவரிடம் முழு பயோடேட்டாவையும் கொடுக்க வேண்டுமாம். அவர் அதை கம்ப்ட்டரில் பதிவு செய்து கொண்டு, கதைக்கு நாம் சரியாக இருப்போம் என்று தோன்றுகிற பட்சத்தில் நமக்கு அழைப்பு விடுப்பாராம்.

இதுபற்றி முன்பே தெரிந்திருந்தால் நானும் "பயோடேட்டா'' கொடுத்திருப்பேனே என்று நான் சொல்ல, ரஜினியிடம் இருந்து பதிலாக வந்தது சிரிப்புதான்.

நாங்கள் ரஜினியின் திருமணம் திருப்பதியில் நடந்தபோதும், அவருடன் இருந்திருக்கிறோம். அவரது மகள் திருமணத்தின்போதும் அவருடன் இருந்தோம். சமீபத்தில் பேரன் பிறந்து `தாத்தா' ஆனபோது அவர் எங்களுடன் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட விதம் இருக்கிறதே, அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

நான்கூட அவரிடம், "படத்தில் சில வினாடிகளே இடம் பெறுகிற ஒரு காட்சிக்காக உடம்பை இவ்வளவு தூரம் வருத்திக் கொள்ள வேண்டுமா?'' என்று கேட்டிருக்கிறேன். பதிலுக்கு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? "என் ரசிகர்களின் முழு திருப்திக்காக என்னை தயார் செய்கிறேன். அதில் ஏற்படும் சிரமங்கள், உடல் அவஸ்தைகள் எனக்கு இரண்டாம் பட்சம்தான்'' என்றார்.

நண்பர்கள் வீட்டில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும், ரஜினி வராமல் இருந்ததில்லை. பண்டிகைகள் தவறினாலும் அவர் அனுப்பி வைக்கிற அன்பளிப்புகள் தவறாது. கடவுள் எங்கள் மீது வைத்த அன்புதான் எங்களுக்கு ரஜினி நண்பராக கிடைத்திருக்கிறார்.''

இவ்வாறு விட்டல் பிரசாத் கூறினார்.

ராஜ்மதன்

ரஜினியின் மற்றொரு நண்பர் ராஜ்மதன். இவர், கே.பாலசந்தர் இயக்கிய `தண்ணீர் தண்ணீர்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.

புதுச்சேரியை சேர்ந்த இவர் கூறியதாவது:-

எனக்கு உருது, தெலுங்கு தெரியும். நண்பர்களுடன் பேசும்போது பெரும்பாலும் இந்த மொழிகளிலேயே பேசுவேன். ஆனால் ரஜினியோ என்னிடம், "நீ தமிழிலேயே பேசு. புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்'' என்பார். தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ரஜினி அத்தனை ஆர்வமாக இருந்தார். அதிலும் டைரக்டர் கே.பாலசந்தரின் பார்வை அவர் மீது பட்ட பிறகு தமிழைக் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதில் `வெறி'யாகவே இருந்தார் எனலாம்.

படிப்பை முடித்துவிட்டு வந்த பிறகு நடிக்க முயற்சித்தேன். சினிமா வாய்ப்பு தள்ளிப் போனதால், கோமல் சுவாமிநாதன் நாடகக் குழுவில் இடம் கிடைத்தது. அவரது குழுவில் நடித்த `தண்ணீர் தண்ணீர்' நாடகம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நாடகத்தை பார்க்க வந்த டைரக்டர் கே.பாலசந்தர் இதை படமாக இயக்கினார். நாடகத்தில் நான் நடித்த அதே ஹீரோ வேடத்தையே படத்திலும் எனக்கு

தந்தார்.தொடர்ந்து "ஒரு இந்தியக் கனவு'', "அனல் காற்று'', "யுத்தகாண்டம்'' போன்ற சமூக அக்கறை கலந்த படங்களே வந்தன. இதனால் `ஆக்ஷன் ஹீரோ' என்ற பட்டியலுக்குள் என்னால் வரமுடியவில்லை. (இந்தப் படங்களில் `ஒரு இந்தியக் கனவு' படம் சிறந்த படமாக மத்திய அரசின் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது)

தொடர்ந்து ரஜினியே தயாரித்த `வள்ளி' படத்தில் வாத்தியார் வேடம், `வால்டர் வெற்றிவேல்' படத்தில் நடிகர் சத்யராஜின் தங்கை கணவர் என சில படங்களில் நடித்தேன். ரஜினியுடன் நான் நடித்த படங்களில் "சங்கர் சலீம் சைமன்'', "பாண்டியன்'' ஆகியவை

முக்கியமானவை.தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. "விழுதுகள்'', "சித்தி'', "அண்ணாமலை'', "மனைவி'' போன்ற தொடர்களில் நல்ல கேரக்டர்கள் அமைந்தது.



நண்பர்களிடன் சந்திப்பு

நண்பர்கள் என்ற முறையில் இப்போதும் மாதம் ஒரு தடவையாவது எங்களை சந்தித்து விடுவார் ரஜினி. அப்படி அவர் சந்திக்கும் நாட்களில் எங்களில் யாராவது ஒருவர் வரவில்லை என்றால், "எங்கே அவன்? அவ்வளவு பிசியாயிட்டானா?'' என்று கேட்பார். நண்பர்களிடம் பேசும்போது தன்னை மிகவும் ரிலாக்சாக உணருகிறார்.

அவர் குடும்ப நிகழ்ச்சிகள் பற்றி நாங்களாக கேட்கமாட்டோம். அவராக சொல்வார். மகள் திருமண விஷயம் பற்றிக்கூட அவராகவே எங்களிடம் சொன்னார்.

சில படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு கதை அவருக்கு வித்தியாசமாகவோ, பிரமிப்பாகவோ தெரிந்தால் அந்தக் கதையை எங்களிடம் சொல்வார். காட்சிகளை சொல்லும்போது எங்கள் முகங்களில் வெளிப்படும் ரியாக்ஷனை கவனிப்பார். அருணாச்சலம், வீரா, படையப்பா போன்ற படங்களின் முழுக்கதையையும் சொல்லி, எங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

எளிமை

ஒரு நண்பராக ரஜினியிடம் இப்போதும் எனக்குப் பிடித்த விஷயம், அவரது எளிமை. இன்ஸ்டிடிட் மாணவராக சந்தித்த நாட்களில் எப்படிப் பழகினாரோ, அதேதான் இப்போதும் `சூப்பர் ஸ்டார்' என்ற இமேஜ் அவரை எங்களிடம் இருந்து கொஞ்சம் கூட தள்ளிவைக்கவில்லை.

நட்புக்கு இலக்கணம் ரஜினி.''

இவ்வாறு ராஜ்மதன் கூறினார்.


Next Page>>> Part 80



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information