Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 82)                         

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு
`பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்




தன்னால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று எண்ணி டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், மனைவி இறந்த துயரத்தையெல்லாம் இதயத்துக்குள் போட்டு பூட்டிவிட்டு, "பாண்டியன்'' படத்தின் இறுதிக் காட்சிகளை எடுத்து, குறித்த நாளில் படத்தை ரிலீஸ் செய்தார்.

"பாண்டியன்'' படம் வெளிவர 10 நாட்கள் இருக்கும்போது, முத்துராமனின் மனைவி கமலா திடீரென்று மாரடைப்பால் காலமானார். அப்போது அவருக்கு வயது 56.

"படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாம்'' என்று ரஜினி உள்பட எல்லோரும் கூறியும்கூட, எஸ்.பி.முத்துராமன் அதற்கு சம்மதிக்கவில்லை.

"படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டோம். தியேட்டர்களிலும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது படத்தை தள்ளிப்போட்டால் சம்பந்தப்பட்ட அனைவரும் பாதிக்கப்படுவார்கள். நான் இதுவரை என் கடமையைச் சரிவரச் செய்து வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவள் என் மனைவி. அவள் ஆன்மா சாந்தியடைவதற்காகவாவது, இந்தப் படத்தை நான் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் செய்ய வேண்டும்'' என்று கூறிய முத்துராமன், மனைவி இறந்த 3-வது நாளிலேயே படப்பிடிப்பில் ஈடுபட்டார். மீதி இருந்த காட்சிகளை எடுத்து முடித்து, ஏற்கனவே அறிவித்தபடி 25-10-1992 தீபாவளி அன்று ரிலீஸ் செய்தார்.

ஜெயசுதா

அக்கா-தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் "பாண்டியன்.''

ரஜினி கதாநாயகனாக நடிக்க வந்த புதிதில் நடிகை ஜெயசுதாவும் நாயகியாக அறிமுகமானார். திருமணத்துக்குப்பின் நடிக்காமல் இருந்த ஜெயசுதா மறுபடியும் நடிக்க வந்த படம் "பாண்டியன்.'' இதில் ரஜினியின் அக்காவாக நடித்திருந்தார்.

அவருடைய கணவராக - வில்லன் வேடத்தில் சரண்ராஜ் நடித்திருந்தார்.

கன்னடம்

"பாம்பே தாதா'' என்ற கன்னடப் படத்தைத் தழுவி (கதை: பிரபாகர்) "பாண்டியன்'' எடுக்கப்பட்டது. வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார்.

படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். ரஜினிக்கும் குஷ்புவுக்கும் ஒரு போட்டி பாடல் நடனக்காட்சி படத்தில் பிரபலம்.

இளையராஜா இசையில் `உலகத்துக்காக பிறந்தவன் நானே! வளர்ந்தது என்னை தமிழன்னைதானே', `அன்பே நீ என்ன கண்ணனோ மன்னனோ', `பாண்டியனா கொக்கா கொக்கா', `அடி ஜிம்பா ஜெயிப்பது இந்த பாண்டியனா' ஆகிய பாடல்கள் ரசனைக்குரியவை.

இளையராஜாவின் மகனும் இசை அமைப்பாளருமான கார்த்திக்ராஜா இசையில் `பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா' என்ற பாடலும் படத்தில் இடம் பெற்றிருந்தது.

லாபத்தில் பங்கு

படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் கணிசமான பகுதியை முத்துராமன் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், மீதியை னிட்டில் உள்ள 14 பேருக்கும் பிரித்துக் கொடுக்கும்படியும் னிட்டைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள்.

அதற்கு முத்துராமன் மறுத்துவிட்டார். "நானும் இந்த னிட்டில் ஒருவன்தான். எல்லோருக்கும் சம பங்கு கிடைப்பதே நியாயம்'' என்று கூறி, 15 பங்குகளாகப் பிரித்து, தனக்கு ஒரு பங்கை மட்டும் எடுத்துக்கொண்டார்.



"பாண்டியன்'' தயாரிப்பு அனுபவங்கள் பற்றி முத்துராமன் கூறியதாவது:-

"படம் முடிந்ததும், மனைவியை அழைத்துக்கொண்டு மலேசியா, சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தேன். எதிர்பாராத வகையில், அவள் மறைந்துவிட்டாள்.

டைரக்டராகப் பணியாற்றத் தொடங்கியது முதல், அதிகாலை படப்பிடிப்புக்குச் சென்றால், வீடு திரும்ப இரவு வெகு நேரம் ஆகும். குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக் கொண்டதும் என் மனைவிதான். குழந்தைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது.

முன்னோடி

அப்படிப்பட்ட மனைவியை இழந்த நான், துயரத்தை மறைத்துக்கொண்டு, யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக படத்தை முடித்து குறிப்பிட்டபடி வெளியிட்டேன்.

இதற்கு எனக்கு வழிகாட்டி என் பள்ளி ஆசிரியர் நல்லமுத்து அவர்கள். ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றியவர். அவர் மனைவி இறந்தபோதுகூட மறுநாள் வேலைக்கு வந்துவிட்டார். "நடக்கக்கூடாதது நடந்து விட்டது. அந்த கவலையில் சும்மா இருப்பதில் பயன் என்ன? கடமையைச் செய்வதே, இறந்தவருக்கு செய்யும் அஞ்சலி'' என்று கூறினார்.

என் மனைவி இறந்தபோது, என் ஆசிரியர்தான் நினைவுக்கு வந்தார். அவரைப் பின்பற்றி, என் கடமையைச் செய்தேன்.

நான் எப்போதும் வேலையில் மூழ்கியிருந்ததால், என் மனைவி இருந்தபோது நான் அவளுக்கு உதவ முடியவில்லை. நான் ஓய்வு பெறும் காலத்தில் எனக்கு மனைவி இல்லாமல் போய்விட்டாள்.

கடமை முக்கியம் என்றாலும், ஒவ்வொருவரும் மாதத்தில் சில நாட்களையாவது குடும்பத்திற்கென்று ஒதுக்கவேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். என் அனுபவத்தின் வாயிலாக இந்த உண்மையை அனைவருக்கும் கூறுகிறேன்.

உயர்ந்த மனிதர்

ரஜினிகாந்த் மிக உயர்ந்த மனிதர். என்னிடமும், என் னிட்டைச் சேர்ந்தவர்களிடமும் கொண்ட அன்பினால் ஒரு படத்தையே எடுத்துக் கொடுத்தார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளோம்.

"பாண்டியன்'' படத்தை எடுத்து முடிப்பதில் சரவணன் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. டைரக்ஷனில் நான் முழுக்கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக, படத்தயாரிப்பு என்ற பளுவை அவர்தான் சுமந்தார். அவருக்கும் நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.''

இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

சென்னையில் 116 நாட்கள் ஓடிய "பாண்டியன்'' மற்ற ஊர்களில் நூறு நாட்களை எட்டிப்பிடித்தது.


Next Page>>> Part 83



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information