Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 84)                         

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில்
ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது




முற்றிலும் கிராமிய சூழ்நிலையில் ரஜினி நடித்த "எஜமான்'' படம், 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

இதுவரை, ஏவி.எம். தயாரித்த ரஜினி படங்கள் அனைத்தையும் எஸ்.பி.முத்துராமன்தான் டைரக்ட் செய்தார். முதன் முதலாக இப்படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.

திரைப்படக் கல்லூரியில் பயின்று டைரக்டர் ஆனவர், ஆர்.வி.உதயகுமார்.

சிவாஜியை "புதிய வானம்'' படத்திலும், விஜயகாந்தை "சின்னக்கவுண்டர்'' படத்திலும், கார்த்திக்கை "பொன்னுமணி'', "கிழக்கு வாசல்'' ஆகிய படங்களிலும் இயக்கி புகழ் பெற்றவர்.

இந்தப் புகழ் இவருக்கு ரஜினியின் "எஜமான்'' படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

80 நாள் படப்பிடிப்பு

படத்தில் ரஜினியுடன் மீனா, ஐஸ்வர்யா (லட்சுமியின் மகள்) ஆகியோர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.

பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில், 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு கனவு காட்சி தவிர, படம் முழுவதும் வேட்டி-சட்டையில் நடித்தார், ரஜினி.

1993 பிப்ரவரி 18-ந்தேதி வெளிவந்த "எஜமான்'', 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.

இந்தப்படத்தை இயக்கிய அனுபவம் குறித்து, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் கூறியதாவது:-

"சின்னக்கவுண்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு புதிய படம் இயக்கும்படி நிறைய பேர் என்னைக் கேட்டார்கள். விஜயகாந்த் கூட புதிய படத்திலும் இணைந்து பணியாற்றலாமே என்று சொன்னார். `கலைப்புலி' தாணு கேட்டார். இன்னும் சில தயாரிப்பாளர்களும் கேட்டார்கள். யாருக்கு படம் பண்ணுவது என்கிற யோசனையில் இருந்தபோது, பளிச்சென எனக்குள் ரஜினி வந்து போனார்.

"சான்ஸ் கொடுங்க!''

அதற்குக் காரணம் இருக்கிறது. கிழக்கு வாசல் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின்போது, கேடயம் வழங்க ரஜினி வந்திருந்தார். விழாவில் அவர் பேசும்போது, "உங்க படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க'' என்று `மைக்'கிலேயே கேட்டார்.



டைரக்டர்கள் எல்லாருக்குமே, ரஜினி சாரின் படத்தை இயக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், அவரே இப்படி வெளிப்படையாக அதுவும் மேடையில் என்னிடம் கேட்டது எனக்கு நம்ப முடியாத ஆச்சரியத்தை அளித்தது. நான் அவரிடம், "நாங்க சான்ஸ் கேட்டு, நீங்கதான் சார் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்'' என்றேன்.

ரஜினி சார் மீது ஏற்கனவே எனக்கு அதிக மரியாதை. என் முதல் படம் "உரிமை கீதம்'' படத்தை இயக்கி முடித்த நேரத்தில், படத்துக்கான `டிரெய்லர்' தயாரித்து தியேட்டர்களில் திரையிட்டோம். 10 நிமிடம் வரும் இந்த டிரெய்லரை ரஜினியும் பார்த்திருக்கிறார். பார்த்ததோடு நின்றுவிடாமல், தனது கலை உலக நண்பர்களிடம், "ஒரு படத்தோட டிரெய்லர் எப்படி இருக்கணும்ங்கறதுக்கு உதயகுமார் இயக்கிய `உரிமை கீதம்' பட டிரெய்லர்தான் உதாரணம்'' என்று பாராட்டியிருக்கிறார்.

இது என் காதுக்கும் வந்தது. அப்போதே அவரது பெருந்தன்மைக்கு தலைவணங்கினேன்.

விஜயகாந்த் நாயகனாக நடிக்க நான் இயக்கிய "சின்னக்கவுண்டர்'' படம் ரிலீசானபோது ரஜினி படம் ஒன்றும் ரிலீசானது. படம் வெளிவந்து சில நாட்களில், ரஜினி சாரிடம் இருந்து எனக்கு ஒரு போன். "வாழ்த்துக்கள் உதயகுமார்! உங்க படம் (சின்னக்கவுண்டர்) நல்லா போகுதுன்னு கேள்விப்பட்டேன்'' என்றார்.

பதிலுக்கு நான் அவரிடம், "சார் உங்க படமும் நல்லா போகுதுன்னு சொன்னாங்க'' என்றேன்.

"இல்லே! முதல் இடத்துல உங்க படம்தான் இருக்குது'' என்றார், ரஜினி.

அவரது இந்த பெருந்தன்மைக்கு பதில் சொல்ல நான் யோசித்து வார்த்தைகளை தேடிய நேரத்தில், ரஜினி சார் "நாம் சந்திக்கணுமே'' என்றார்.

"நீங்க சொல்லுங்கள். நீங்க சொல்ற இடத்துக்கு வந்துடறேன்'' என்றேன்.

இடம் சொன்னார். சந்தித்தோம். சுற்றி வளைக்காமல் மளமளவென விஷயத்துக்கு வந்தார். "நீங்க என் படத்தை டைரக்ட் பண்ணணும்'' என்றார்.

ஏற்கனவே கிழக்கு வாசல் பட வெற்றி விழாவில் மைக்கிலேயே வெளிப்படையாக கேட்டவர், இப்போது இரண்டாவது தடவையாகவும் கேட்டார்.

"பண்ணலாம் சார். நீங்களே இப்படி கூப்பிட்டு கேட்பது என் பாக்கியம'' என்றேன்.

"யார் தயாரிச்சா உங்களுக்கு சரியா இருக்கும்?'' இது ரஜினி சாரின் அடுத்த கேள்வி.

"சார் நீங்க யாரை சொல்றீங்களோ அந்த கம்பெனிக்கு டைரக்ட் பண்றேன்'' என்றேன்.

"நான் நாலைந்து கம்பெனி சொல்றேன். அதுல உங்களுக்கு சரியா தோன்றும் கம்பெனியை சொல்லுங்க'' என்றவர், ஏவி.எம். நிறுவனத்துடன் மேலும் 5 கம்பெனிகள் பெயரைச் சொன்னார்.

எனக்கு ஏவி.எம். நிறுவனத்தில் ஒரு படம் பண்ணவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ரஜினி சார் சொன்ன பட்டியலில் ஏவி.எம்.மும் இருந்ததால் உடனே, "ஏவி.எம்.முக்கு பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டேன்.

உடனே ஏவி.எம். சரவணன் சாருக்கு போன் போட்டார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் சரவணன் சாரும் நாங்கள் இருந்த இடத்துக்கு வந்துவிட்டார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஏவி.எம். தயாரிப்பில் ரஜினி நடிக்க, நான் இயக்குவது உறுதி செய்யப்பட்டது.

இளையராஜா

அப்போது ஏவி.எம். நிறுவனங்களின் படங்களுக்கு இளையராஜா இசையமைக்காமல் இருந்தார். என் படங்களில் அவரது பங்களிப்பு மகத்தானது. சின்னக்கவுண்டர் படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்கள் காரணமாக அமைந்திருந்ததை யாரும் மறுக்கமுடியாது. அதனால் இந்தப் படத்திலும் இளையராஜா இருக்கவேண்டும் என்று விரும்பினேன்.

என் விருப்பத்தைச் சொன்னதும், "அவங்களுக்குள்ள `மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்' இருக்கே!'' என்று ஒரு கணம் ரஜினி சார் தயங்க, "சார்! நான் பேசிப்பார்க்கிறேன். ராஜா சார் மறுக்க மாட்டார்'' என்றேன்.

பேசினேன். இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டார். இதனால் ஏவி.எம் - இளையராஜா இசைப்பந்தம் மறுபடியும் தொடர்ந்தது. இதன் பிறகு ஏவி.எம்.மில் இளையராஜாவுக்கென தனி அறை ஏற்படுத்தப்பட்டு, அங்கேயே தனது இசையமைப்பைத் தொடர்ந்தது வரலாறு.

படம் பற்றி பேசும்போது "என்ன மாதிரி கதை?'' என்று கேட்டார் ரஜினி.

நான் "ஜில்லா கலெக்டர்'' என்ற பெயரில் ஒரு கதையை சொன்னேன். "பிரமாதம்'' என்றார். ஏவி.எம்.மில் பூஜையும் போட்டாயிற்று. பூஜை போட்ட அன்றே படத்தின் எல்லா ஏரியாக்களும் விற்றுப்போனது.

தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் சாரிடமும் கதையை சொன்னேன். "கதை நன்றாக இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் செலவு வைக்கும்'' என்றார்.

பிறகு ஒரு மாதம் உட்கார்ந்து வேறொரு கதை தயார் செய்தேன். அந்தக் கதைதான் "எஜமான்.''



மீனா

ரஜினியுடன் மீனாவை ஜோடியாக நடிக்க வைக்கவும் தடையிருந்தது. ரஜினி சாரே, "என்னை `அங்கிள்'னு கூப்பிட்ட பொண்ணு. இப்ப என் ஜோடியா நடிச்சா ரசிகர்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்களோ?'' என்று யோசித்தார்.

மீனா அப்போதுதான் கதாநாயகியாக ராஜ்கிரண் ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார். என்றாலும் மீனா தான் வைத்தீஸ்வரி கேரக்டருக்கு சரியாக இருப்பார் என்று வற்புறுத்திய பிறகு ரஜினி சார் ஒப்புக்கொண்டார்.

எஜமான் படத்தில் `நிலவே முகம் காட்டு' என்று ஒரு நெகிழ்ச்சியான பாடல் உண்டு. அற்புதமாக இசையமைத்து கொடுத்திருந்தார் இசைஞானி. சமத்தூர் வானவராயர் வீட்டில் படப்பிடிப்பு நடந்தது. பாடலைக்கேட்ட ரஜினி, "பாட்டு நல்லா இருந்தாலும் `ஸ்லோ'வா இருக்கே. படத்துல இந்தப் பாட்டு வரும்போது என் ரசிகர்கள் தியேட்டருக்கு உள்ளே இராமல் வெளியே போய்விட்டால்...'' என்றார்.

நான் அவரிடம், "இந்தப் பாடலுக்கான காட்சிகள் மூலம் அவர்களை வெளியே போகவிடாமல் நான் உட்கார வைப்பேன்'' என்றேன்.

படத்தின் முதல் பிரதி தயாரானதும் நானும், ரஜினி சாரும் சேர்ந்து படத்தைப் பார்த்தோம். படம் முடிந்ததும் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டவர், "உதய் சார்! அந்தப் பாட்டுதான் படத்தோட உயிர்'' என்றார்.

எஜமான் படம் ஏவி.எம். தயாரிப்பு என்றாலும், `ஒரு நாளும் உனை மறவாத' என்ற பாடலை மட்டுமே ஏவி.எம். ஸ்டூடியோவில் படமாக்கினேன். மற்ற காட்சிகள் எல்லாமே அவுட்டோரில்தான். "ஏவி.எம். எடுக்கிற படத்துக்கு ஸ்டூடியோவில் ஒரு பாட்டு சீன் மட்டும்தானா?'' என்று சரவணன் சாரே ஆச்சரியப்பட்டார்.''

இவ்வாறு ஆர்.வி.உதயகுமார் கூறினார்.

Next Page>>> Part 85



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information