Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 87)                         

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி'
பிரியாராமன் அறிமுகம்


நண்பர்களுக்கு உதவுவதற்காக ரஜினிகாந்த் "வள்ளி'' என்ற படத்தை எடுத்தார். கே.நட்ராஜ் டைரக்ட் செய்த இந்தப் படத்தில், ரஜினியின் நண்பர்கள் பலர் நடித்தனர்.

ஆரம்பகால நண்பர்கள் யாரையும் ரஜினி மறந்ததில்லை. படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நேரத்தில், நண்பர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்பினார்.

இந்த எண்ணத்தில் உருவான படம்தான் "வள்ளி.''

இதற்கான கதையை ரஜினியே எழுதினார்.

பெண்ணின் போராட்டம்

ஒரு பெண்ணை காதலித்து, அவளை கர்ப்பிணியாக்கிவிட்டு தலைமறைவாகிறான் ஓர் இளைஞன்.

அவன் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பாவிப் பெண்களை ஏமாற்றுவது என்பது அவனுக்கு பொழுதுபோக்கு.



ஆனால் அந்தப் பெண் உண்ணாவிரதம் இருந்து தங்கள் காதலை ஊருக்கே தெரிய வைத்து அவனை பணிய வைக்கிறாள். துரோகியான காதலன், கணவனான மறுநிமிடமே அவனை கத்தியால் குத்திச் சாய்க்கிறாள், கதாநாயகி.

புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்ட இந்தப் படத்தை, கே.நட்ராஜ் டைரக்ட் செய்தார். ரஜினி நடிப்புக் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே இவர் ரஜினியின் நண்பர். "அன்புள்ள ரஜினிகாந்த்'' படத்தை டைரக்ட் செய்தவர்.

இளையராஜா இசையமைத்தார். படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினியும் நடித்திருந்தார்.

இந்தப்படம் பெரிய அளவில் போகவில்லையென்றாலும் லாபம் வந்தது. அதை நண்பர்களுக்கு பிரித்துக் கொடுத்து மகிழ்ந்தார் ரஜினி.

நட்ராஜ் பேட்டி

"வள்ளி'' படம் உருவானது பற்றிய விவரங்களை டைரக்டர் கே.நட்ராஜ் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

"1992-ம் வருடம் ரஜினி "அண்ணாமலை'' படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். நண்பன் என்ற முறையில் ரஜினி என்னிடம், "நீயும் இந்தப் படத்தில் இரு'' என்றார்.

அவரது `டேஸ்ட்' எனக்குத் தெரியும் என்பதால், படத்தில் அது எதுவும் மிஸ் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ரஜினி என்னிடம் இப்படிச் சொன்னார்.

இதனால் "அண்ணாமலை'' படத்தில் அசோசியேட்டாக சேர்ந்து கொண்டேன். படம் நல்லவிதமாக வளர்ந்து முடிந்தது.

இந்த நேரத்தில் ரஜினி, அவரது நண்பர்களை அழைத்தார். இந்தப் பட்டியலில் விட்டல், வடிவேலு, தும்பு, பிரதீப், சக்தி, அசோக், ரவீந்திரநாத், ரகுநந்தன், சந்திரா சால்வா, அமர் முல்லா, ராஜ்பகதூர் ஆகியோருடன் நானும் இடம் பெற்றிருந்தேன்.



ரஜினி எங்களிடம், "உங்களுக்கு நான் ஒரு படம் நடித்துத்தர விரும்புகிறேன். என்னிடம் கைவசம் ஒரு கதையும் இருக்கிறது. அதையே படமாக எடுக்கலாம். பட வேலைகளோடு நீங்களும் நடியுங்கள். நட்ராஜ் டைரக்ட் பண்ணட்டும். இது தொடர்பான வேலைகளை இனி மளமளவென தொடங்கி விடலாம்'' என்றார்.

திரைக்கதை

ரஜினியின் வேகம்தான் "சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்'' வேகம் ஆயிற்றே. மறுநாளே படம் தயாரிப்பது தொடர்பான வேலைகளை ஆரம்பித்து விட்டார். அவர் எழுதி வைத்திருந்த கதையை என்னிடம் கொடுத்தார். நான் உதவி இயக்குனர்களிடம் பெங்களூர் சென்று, ஒரு வாரத்தில் திரைக்கதை தயார் செய்தேன். ரஜினி கதையுடன் வசனமும் எழுதினார். எந்த கேரக்டருக்கு யார் சரியாக இருப்பார்கள் என்று தேர்வு செய்தேன்.

படத்தின் நாயகி பிரியாராமன் `வள்ளி' படத்தில்தான் அறிமுகமானார். இவரை தனது புதிய படத்தில் நடிக்க வைக்க, டைரக்டர் பாரதிராஜா ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்தார். ரஜினி கேட்டுக்கொண்டதால் பிரியாராமனை எங்கள் படத்தில் அறிமுகப்படுத்த சம்மதித்தார் பாரதிராஜா.

கவுரவ வேடம்

படத்தில் முதலில் ரஜினி நடிப்பதாக இல்லை. "நண்பர்களுக்காக நீங்கள் தயாரிக்கும் படத்தில் நீங்கள் நடிக்காவிட்டால் எப்படி?'' என்று உரிமையுடன் கேட்டோம். இதனால் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்க சம்மதித்து, 5 நாட்கள் நடித்துக் கொடுத்தார்.

1993-ம் ஆண்டு ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கியது. ஜுன், ஜுலை என படப்பிடிப்பு தொடர்ந்து ஆகஸ்டு மாதத்தில் படம் ரிலீஸ் ஆனது.

`பஞ்ச்' வசனம்

இந்தப்படத்தில் ரஜினி பேசிய `பஞ்ச்' வசனங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மக்கள் இலவச மோகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டும் ரஜினி, "அரசாங்கத்துக்கிட்ட இலவசமா வேட்டி-சேலை கேட்காதீங்க, வேலை வெட்டி கேளுங்க'' என்று சொல்லும் காட்சிகளில் ரசிகர்கள் கைதட்டினார்கள்.

அதுமாதிரி காதலுக்கும் புது விளக்கம் சொல்வார். "நீ விரும்புகிற பெண்ணைவிட உன்னை விரும்புகிற பெண் கிடைச்சாதான் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.''

படத்தில் நான் டைரக்ஷனை கவனித்ததுபோல, ரஜினியின் மற்ற நண்பர்கள் நடிப்பில் திறமை காட்டினார்கள். கதாநாயகனின் அப்பாவாக விட்டல், கதாநாயகியின் அப்பாவாக அமர்முல்லா, மல்யுத்த சாம்பியனாக பிரதீப் சக்தி நடித்தார்கள்.

நடிகர் அலெக்ஸ் அறிமுகமான படமும் இதுதான். மல்யுத்த வீரராக நடித்தார். காதலனாக சஞ்சய், கதாநாயகிக்கு வாழ்வு கொடுக்கும் இளைஞனாக ஹரிராஜ் ஆகிய புதுமுகங்கள் நடித்தனர்.



50 நாட்களில் 55 ரோல்களில் தயாரான படம் இது. பலர் புதுமுகங்கள் என்றாலும் முன்னதாக கொடுத்த பயிற்சியின் காரணமாக, பெரும்பாலும் `ரீடேக்' வாங்காமல் நடித்தார்கள்.

கிளைமாக்ஸ்

தேவர் பிலிம்சில் அசோசியேட்டாக பணியாற்றியிருப்பதால் அந்த வேகம் எனக்குள்ளும் இருந்தது. படப்பிடிப்பை சாலக்குடி, பொள்ளாச்சி, சென்னை ரெட்ஹில்ஸ் என மூன்று பிரிவாக எடுத்தோம். பொள்ளாச்சியில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்க முடிவு செய்திருந்தோம். நாங்கள் போயிருந்த நேரத்தில் மழை சீசன் தொடங்கி விட்டதால், கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் சென்னை வந்து ரெட்ஹில்ஸ் பகுதியில் படமாக்கினோம்.

கிளைமாக்சில் இரண்டாயிரம் துணை நடிகர் - நடிகைகளையும், ஏகப்பட்ட கார்களையும் வைத்து, பிரமாண்டமாக எடுத்தோம்.

என்னை இப்போது சந்திக்கும் ரசிகர்கள் கூட, அந்த கிளைமாக்ஸ் பற்றி ஆச்சரியம் தெரிவிப்பார்கள்.

பாடல்கள்

படத்தில் இளையராஜாவின் இசையில் "என்னுள்ளே என்னுள்ளே'', "வள்ளி வரப்போறா'', "கூக்குவென கூவும் குயிலக்கா'', "என்னென்ன கனவு கண்டாயோ'' என அத்தனை பாடல்களும் சிறப்பாக அமைந்தன.

இதில் "கூக்கூ'' பாடலை லதா ரஜினிகாந்தும், "என்னென்ன கனவு கண்டாயோ'' பாடலை இளையராஜாவும் பாடியிருந்தார்கள்.

புகழ்

இந்தப்படத்தில் என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் ஹரி, மணிபாரதி இருவரும் இப்போது டைரக்டர்களாக இருக்கிறார்கள். ஹரி ஆக்ஷன் படங்களில் புகழ் பெற்று வருகிறார். சரவணன் என்ற இன்னொரு உதவி இயக்குனர் இப்போது புதிய படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார். இவரும் பெரிய அளவில் வருவார்.

ரஜினிக்கும் எனக்குமான நட்பு, திரைப்படக் கல்லூரியில் ஆரம்பித்து 34 வருடங்களாக தொடர்கிறது. `சிவாஜி' படத்துக்குப்பின் ரஜினியின் புகழ் இன்னும் உச்சத்துக்கு வரும்.

ரஜினி இல்லாமல் நாங்கள் இல்லை. அவரது வளர்ச்சிதான் எங்கள் பெருமை. நண்பன் என்ற முறையில் அவரை தலையில் வைத்து தாங்க வேண்டுமே தவிர, மடியில் உட்கார்ந்து கொண்டு தடையாக இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.''

இவ்வாறு டைரக்டர் கே.நட்ராஜ் கூறினார்.

Next Page>>> Part 88



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information