Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 90)                         

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''



ரஜினிகாந்த் படத்தை வாங்கக்கூடாது என்று விநியோகஸ்தர்கள் சங்கம் போட்ட தடையை ("ரெட்கார்டு'') மீறி தயாரான படம் "உழைப்பாளி.''

"எங்க வீட்டுப்பிள்ளை'', "மிஸ்ஸியம்மா'', "மாயாபஜார்'' போன்ற சிறந்த படங்களைத் தயாரித்த "விஜயா - வாகினி'' பட நிறுவனம், சுமார் 20 ஆண்டுகள் படத்தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்தது.

நீண்ட இடைவெளிக்குப்பின், ரஜினியை வைத்து, மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கத் தீர்மானித்தது.

ரஜினியுடன் ரோஜா, சுஜாதா, கவிதா, சங்கீதா, ஸ்ரீவித்யா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் ஆனார்கள். பாடல்களை வாலி எழுத, இளையராஜா இசை அமைப்பார் என்று அறிவிப்புகள் வெளியாயின.

எதிர்பாராத பிரச்சினை

அப்போது, யாரும் எதிர்பாராத பிரச்சினை ஒன்று எழுந்தது.

அந்தக் காலக்கட்டத்தில், பல திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. பல பட அதிபர்கள் நஷ்டத்தை சந்தித்தனர்.

இதனால் நடிகர் - நடிகைகள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று, பட அதிபர்களும், விநியோகஸ்தர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதுபற்றி நடிகர் - நடிகைகளும், விநியோகஸ்தர்களும், பட அதிபர்களும் தனித்தனியாகக்கூடி, ஆலோசனைகள் நடத்தி வந்தார்கள்.

"தயாரிப்புச் செலவு அதிகமாகக் காரணமே, நடிகர்களின் சம்பளம்தான்'' என்று பட அதிபர்கள் தரப்பில் கூறப்பட்டதை, நடிகர்கள் ஏற்கவில்லை. "எங்களுக்கு இருக்கும் `மார்க்கெட் வேல்'வை வைத்துத்தானே சம்பளம் தருகிறீர்கள். படம் விற்கப்படுவதும், நடிகர்களின் புகழை வைத்துத்தானே!'' என்பது நடிகர்கள் தரப்பு வாதம்.

முத்தரப்பு கூட்டம்

இந்தப் பிரச்சினையில் ஒரு முடிவுக்கு வர, முத்தரப்பு கூட்டம் நடந்தது.

பட அதிபர்கள், நடிகர் - நடிகைகள், விநியோகஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ரஜினி பேசும் நேரம் வந்தது. அவர் பேசும்போது, "வரியைக் குறைக்கச் சொல்லி அரசாங்கத்திடம் கேளுங்கள். தியேட்டர் வாடகையை குறைக்கச் சொல்லுங்கள். இது இரண்டும் சாத்தியமானா எல்லாமே சரியாயிடும'' என்று அவர் மனதில் தோன்றிய கருத்தை பளிச்சென்று சொல்லிவிட்டு, காரில் ஏறிப்போய் விட்டார்.

மற்ற நடிகர்களும் வெளியேறினார்கள்.

தடை

இது, விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

"ரஜினி நடித்த படங்களை வாங்கக்கூடாது'' என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தடை ("ரெட்கார்டு'') போட்டது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை துணைத்தலைவருமான "சிந்தாமணி'' எஸ்.முருகேசன் இந்த தடை உத்தரவை பிறப்பித்தார்.

அந்தக் காலக்கட்டத்தில், சென்னை விநியோகஸ்தர்கள் சங்கம் எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் சங்கங்கள் கட்டுப்பட்டு நடந்தன.

பதிலடி

விநியோகஸ்தர்கள் சங்கம் எடுத்த முடிவு, பட உலகில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ரஜினி நடிக்க விஜயா - வாகினி தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட "உழைப்பாளி'' படம், திட்டமிட்டபடி தயாராகுமா என்ற கேள்விக்குறியும் எழுந்தது.

நிலைமையை தீவிரமாக ஆராய்ந்த விஜயா - வாகினி நிறுவனம், திட்டமிட்டபடி "உழைப்பாளி'' படத்தை தயாரிப்பது என்றும், விநியோகஸ்தர்களை எதிர்பார்க்காமல் படத்தை நேரடியாக ரிலீஸ் செய்வது என்றும் தீர்மானித்தது.

இந்த முடிவு எடுக்கப்பட்டதும், பி.வாசு டைரக்ஷனில் படம் வேகமாக வளர்ந்தது.

கதை

"உழைப்பாளி'' கதை விறுவிறுப்பானது.

தொழிலதிபர் ரவிச்சந்திரன், தனது தொழில் திறமையால் கோடீஸ்வரர் ஆகிவிடுகிறார். அவரது மனைவி சுஜாதாவின் 3 அண்ணன்களுக்கும் இந்த திரண்ட சொத்தை தாங்களே அனுபவிக்கவேண்டும் என்ற விபரீத எண்ணம் ஏற்படுகிறது.

இதனால் தொழிலதிபரை கொன்றுவிட்டு, அவரது வாரிசான சிறுவன் ரஜினி வாயிலும் விஷத்தை ஊற்றி விடுகிறார்கள். ரஜினி, அக்கா ஸ்ரீவித்யாவால் காப்பாற்றப்படுகிறார். தாய் மாமன்களுக்கு பயந்து தலைமறைவாக வாழ்கிறார்.

ரஜினி வாலிபனாகிறார். ஒரு தொழிற்சாலையில் "உழைப்பாளி''யாக வேலையில் சேருகிறார். அங்கே ரவுடியாக இருந்து அராஜகம் செய்தவர்களின் கொட்டத்தை அடக்குகிறார்.

ஒருமுறை ரஜினி ஒரு பங்களாவுக்கு வர நேரிடுகிறது. வந்த இடத்தில் அந்த பங்களாவுக்கு மட்டுமல்ல, கோடீசுவரர் ரவிச்சந்திரனுக்கும் வாரிசு என்பது தெரியவருகிறது. தனது தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தாய்மாமன்களின் கண்காணிப்பில் இருப்பதும் தெரிகிறது.

தாயாரைக் காப்பாற்றி தாய்மாமன்களை ஜெயிலுக்கு அனுப்புகிறார், ரஜினி.

இடையே ரோஜாவுடனான காதல் காட்சிகளும் உண்டு.

உணர்ச்சி மிக்க வசனம்

இந்தப் படத்தில், தமிழக ரசிகர்கள் மீது தான் வைத்திருக்கும் அன்பை வெளிப்படையாக தெரிவிக்க எண்ணினார், ரஜினி. அதற்கென உருவாக்கப்பட்ட வசனத்தை உணர்ச்சிபூர்வமாக பேசவும் செய்தார். அந்த வசனம் வருமாறு:-

"நான் ஒரு அனாதை. வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வந்தேன். தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான சகோதர - சகோதரிகள் என் மீது பாசம் வெச்சிருக்காங்க. என் மனசுக்கு பட்டதை `சட்'டுன்னு சொல்வேன். `பட்'டுன்னு செய்வேன்.

நாளைக்கு நான் அப்படி இருப்பேன், இப்படி இருப்பேன்னு சொல்றாங்க. ஆனா நான் சொல்றேன். நேத்து என்னை ஆண்டவன் கூலியா வெச்சிருந்தான். இன்னிக்கு நடிகன் ஆக்கியிருக்கான். நாளைக்கு எப்படி இருப்பேன்னு தெரியாது. அது அந்த ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும்.''

ரஜினியின் வாழ்க்கை நிலையை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்திய இந்த வசனம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

படத்துக்கு இசை இளையராஜா. "ஒரு மைனா மைனாக்குருவி மனசார பாடுது'', "உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்ல'', "ஒரு சோலக்கிளி சோடிதன்னை தேடுது தேடுது'', "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே'', "முத்திரை போட்டு குத்திடு தப்பாது ராஜா'' ஆகிய பாடல்களுக்கு அமர்க்களமாக இசையமைத்து இருந்தார், இளையராஜா.

வெற்றி

விநியோகஸ்தர்கள் சங்க தடையை மீறி, சில ஊர்களில் "உழைப்பாளி'' படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கினார்கள்.

எனினும் பெரும்பாலான ஊர்களில், விஜயா - வாகினி நிறுவனமே நேரடியாக ரிலீஸ் செய்தது.

24-6-1993-ல் வெளியான இந்தப்படம், நூறு நாட்களைத்தாண்டி ஓடி வெற்றி பெற்றது. சென்னையில் 116 நாட்களும், மதுரையில் 142 நாட்களும் ஓடியது.


Next Page>>> Part 91



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information