Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 97)                         

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி


ரஜினியின் "முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றியும், "முத்து'' உருவானபோது கிடைத்த அனுபவங்கள் பற்றியும் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் விளக்கினார்.

அவர் கூறியதாவது:-

"ஏவி.எம். நிறுவனத்துக்காக நான் `சக்திவேல்' படத்தை இயக்கியபோதுதான் ரஜினி சாருடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. சக்திவேல் படத்தின் டப்பிங் சமயத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்த `வீரா' படத்தின் பாடல் காட்சிகளை பார்ப்பதற்காக ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார். என்னைப் பார்த்ததும், "உங்களைப் பற்றி ஏவி.எம். சரவணன் சார், விஜயகுமாரெல்லாம் நிறைய சொல்லியிருக்காங்க'' என்று ஏற்கனவே பழகியவர் மாதிரி இயல்பாக பேச தொடங்கினார்.

ரசிகன்

நான் பட உலகுக்கு வரும் முன்பு ரஜினி சாரை ரசிகனாக நேசித்தவன். எங்கள் வீடு மந்தைவெளியில் இருந்தது. மந்தைவெளி மெயின் ரோட்டில் ரஜினி சாரின் ஒயிட் கலர் பியட் 5004 வரும்போது காத்திருந்து பார்த்த அனுபவங்கள் உண்டு. அப்போது இவரை நேரில் பார்த்து இரண்டு வார்த்தை பேச முடியுமா என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் அவரே பின்னாளில் என் டைரக்ஷனில் முத்து, படையப்பா படங்களில் நடித்து அவை வெற்றிப் படங்களானது என்பது என்னை இப்போதும் பரவசப்படுத்தும் விஷயங்கள்.

நான் இயக்க வந்த புதிதில் "சேரன் பாண்டியன்'', "புருஷலட்சணம்'', "பொண்டாட்டி ராஜ்யம்'', "புரியாதபுதிர்'' என்று இயக்கியதில் ரசிகர்கள் வட்டத்திலும் தெரிய ஆரம்பித்திருந்தேன். என் படத்தில் சரவணன், செல்வா, ஜெயராமன், குஷ்பு என நடித்தார்கள். இதில் குஷ்புதான் அன்றைக்கு பெரிய நடிகை.

இந்த மாதிரி சமயத்தில் ரஜினி சார் என் படத்தில் நடிப்பார் என்று எப்படி நினைக்க முடியும்?



"சக்திவேல்'' படத்தை முடித்து ரிலீசுக்கு தயாரான நேரத்தில் ஒருநாள் எனக்கு சரவணன் சாரிடம் இருந்து போன். "மேனா தியேட்டர் வரை வர முடியுமா? அங்கே உங்கள் படத்தை ரஜினி பார்த்துக் கொண்டிருக்கிறார்'' என்றார்.

மேனா தியேட்டருக்கு ஓடினேன். தியேட்டரில் ரஜினி சார் தனியாக படம் பார்த்துக் கொண்டிருந்தார். முழுப் படமும் பார்த்து முடித்தவர், என்னிடம் கை குலுக்கினார். "படத்தை எவ்வளவு நாளில் முடித்தீங்க?'' என்று கேட்டார்.

"29 நாளில்'' என்றேன். ஆச்சரியப்பட்டார். "இவ்வளவு பிரமாண்டமா பெரிய அளவில் கூட்டம் கூட்டி, 29 நாளில் முடிச்சதை நம்பவே முடியலை'' என்று ஆச்சரியப்பட்டவர், மறுபடியும் கைகுலுக்கிவிட்டுப் போனார்.

நாட்டாமை

அடுத்து அவரை சந்தித்தது எனது "நாட்டாமை'' படத்தின் `பிரிவி' சமயத்தில்தான். நான் அவருக்கு போன் பண்ணி, "சார்! நீங்க நாட்டாமை படத்தை பார்க்க வரணும். உங்களுக்கு எப்ப சவுகரியப்படும்னு சொல்லுங்க'' என்றேன்.

பதிலுக்கு அவர், "நீங்க `ஷோ' போட றப்ப சொல் லுங்க. நான் வந்து டறேன்'' என்றார்.

நான் அவரிடம் "சார்! இன்றைக்குக்கூட மேனா தியேட்டரில் ஆறரைக்கு ஷோ இருக்கு'' என்றேன். "முடிஞ்சா வந்துடறேன்'' என் றவர், மாலையில் வந்து படத்தைப் பார்த்தார்.

படம் முடிந்ததும், என்னை அருகில் அழைத்தவர், அப் படியே கட்டிப் பிடித் துக்கொண்டார். "வாட் எ பிக்சர்! வாட் எ பிக்சர்!'' என்று பாராட்டினார்.

"இந்த மாதிரி ஒரு படம் பார்த்து ரொம்ப காலம் ஆச்சு'' என்று கூறியபடி லிப்ட்டுக்கு வந்தார். லிப்டில் படத்தின் தயாரிப்பாளர் சவுத்ரி சார் அவரை சந்தித்தார்.

அப்போது ரஜினி அவரிடம், "தெலுங்கு ரைட்ஸ் கொடுத்திட்டீங்களா?'' என்று கேட்டார். "கேட்டுக்கிட்டு இருக்கிறாங்க'' என்று சவுத்ரி சார் சொன்னதும், "சார்! நான் சொல்றவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா?'' என்று கேட்டார்.

சவுத்ரி சார் "சரி'' என்றார்.

"நாட்டாமை'' படம் வெற்றி எனத் தெரிந்ததும் தெலுங்கில் பிரபல முன்னணி நடிகர் சிரஞ்சீவி உள்பட பலரும் சவுத்ரி சாரிடம் `ரீமேக்' உரிமை கேட்டார்கள். ரஜினி சாருக்கு லிப்ட்டில் கொடுத்த வாக்குக்காக அவர் யாரிடமும் கொடுக்கவில்லை.

பிறகு ரஜினி தனது நண்பர் மோகன்பாபுவுக்கு நாட்டாமையின் தெலுங்கு "ரைட்ஸ்'' வாங்கிக் கொடுத்தார். அதோடு நில்லாமல் பெத்தராயுடு என்ற பெயரில் தயாரான தெலுங்குப்படத்தில் அவரும் நடித்தார்.

தமிழில் `நாட்டாமை'யாக விஜயகுமார் நடித்த கேரக்டரில், ரஜினி தெலுங்குக்காக சில மாற்றங்கள் செய்து அந்தக் கேரக்டரில் நடித்து அசத்தினார். படம் பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு நாங்கள் அடிக்கடி போனில் பேசிக்கொள்வோம். அப்படி பேசும்போது இடையிடையே, "எப்போது எனக்கு படம் பண்ணிக் கொடுப்பீங்க?'' என்று கேட்பார். "நீங்க எப்ப கூப்பிட்டாலும் நான் ரெடி சார்'' என்பேன்.

"பாட்ஷா'' எப்படி?

ஒருநாள் ரஜினி சாரிடம் இருந்து போன். "பாட்ஷா படத்தை இன்றைக்கு ஆல்பட் தியேட்டரில் பார்க்கிறோம். வந்துடுங்க'' என்றார். ஆல்பட் தியேட்டர் பாக்சில் ரஜினி சாருடன் சேர்ந்து படம் பார்த்தேன். படம் முழுவதும் எனக்குப் பிடித்திருந்தது.

"படம் எப்படி?'' என்று ரஜினி கேட்டார். "சார்! லாஜிக் மிஸ்டேக் மட்டும் இடிக்குது. உங்களோட மும்பை நண்பர்களுக்கெல்லாம் வயசாயிடுது. ஆனா உங்களுக்கு மட்டும் வயசாகாதா? என்றாலும நீங்க `இமேஜ்' உள்ள ஹீரோ. அதனால ரசிகர்கள் இதை பெரிசா எடுத்துக்க மாட்டாங்க. மற்றபடி படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது'' என்றேன்.

ரஜினி அப்போது என்னிடம், "மனதில் உள்ளதை பட்டுன்னு சொல்ற இந்த குணம்தான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது. நாங்களும் படம் வளர்றப்ப இதுபற்றி பேசினோம். ரசிகர்கள் பெரிசா எடுத்துக்க மாட்டாங்கன்னு விட்டுட்டோம்'' என்று சிரிச்சார்.



அப்பத்தான் என்னிடம், "நாம படம் பண்றோம். படத்தின் தயாரிப்பாளர் கே.பாலசந்தர் சார்!'' என்றார்.

சின்ன வயசில் கே.பி. சார் படம் பார்க்க ஏங்கியிருக்கிறேன். இப்போது அவர் தயாரிப்புக்கு நான் டைரக்டரா? எனக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

மலையாளத்தில் அப்போது வெற்றி பெற்றிருந்த `தேன்மாவின் கொம்பத்தே' படத்தின் கதைச் சுருக்கத்தை ரஜினி சார் என்னிடம் சொன்னார். `ஒரு பெண்ணை முதலாளி - அவரது வேலைக்காரன் இருவருமே காதலிக்கிறார்கள். தொழிலாளியும் அந்தப் பெண்ணும் ஒரு காட்டில் தொலைந்து போகிறார்கள். இந்தப் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு கதையை டெவலப் பண்ணுங்க'' என்றார்.

மலையாளப் படத்தில் `அப்பா ரஜினி' கேரக்டரெல்லாம் கிடையாது. தமிழுக்காக இப்படி பல புதிய விஷயங்கள் சேர்த்தோம். அந்த அப்பா கேரக்டரை சேர்க்கச் சொன்னதே ரஜினிதான். டிஸ்கஷன் முடிந்து பார்த்தபோது, கதையே முற்றிலும் புதுசாகத் தெரிந்தது.

என்றாலும் கதை என்ற இடத்தில் மலையாள கதை ஆசிரி யரையே போட்டோம். நான் திரைக்கதை - டைரக்ஷன்.

புதுவிதமான படப்பிடிப்பு

படத்துக்கு "முத்து'' என்று பெயர் சூட்டினோம். முதல் ஷெட்ல் மைசூரில் தொடங்கினோம். போனதும் `ஒரு வன் ஒருவன் முத லாளி' பாடலை எடுத் தோம். இந்தப் பாடல் காட்சிக்காக லாரியில் குதிரைகள், குதிரை வண்டி என ஏற்றிக்கொண்டு போயிருந்தோம்.

இந்தப் பாடல் காட்சியை பல இடங்களில் `ஷூட்' பண்ண விரும்பினேன். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எடுப் போம். பாதிப்பாடல் முடிந்த நிலையில் 20 ஆயிரம் பேரை திரட்டி கிளைமாக்ஸ் காட்சியை எடுக்கத் தொடங்கினேன். இதையும், அந்த அப்பா கேரக்டர் சம்பந்தப்பட்ட காட் சிகளையும் மொத்தம் 28 நாளில் எடுத்து முடித்தேன்.

இடையிடையே வித்தியாசமான இடங்களில் `ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலும் தொடரும். இப்படி இந்தப் பாடல் காட்சி மட்டும் 7 நாட்கள் படமானது. ஒரு கட்டத்தில் "இந்தப்பாட்டு இன்னுமா முடியலை?'' என்று ரஜினி சாரே கூட ஆச்சரியப்பட்டார்.

66 நாட்களில் படம் தயார்

`குலுவாலியே முத்து வந்தல்லோ' பாடல் காட்சிகள் கேரளாவில் படமானது. மொத்தப் படப்பிடிப்பும் 66 நாட்களில் முடிந்தது என்றாலும் குதிரை சண்டைக்காட்சிகளை மட்டும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் 16 நாட்கள் எடுத்தார். படத்தில் அந்தக் காட்சியும் பரபரப்பாக

பேசப்பட்டது.முதல் ஷெட்லிலேயே கிளைமாக்ஸ் எடுத்தபோது ரஜினி சார் ரொம்ப ஆச்சரியப்பட்டுப் போனார். `என் அனுபவத்தில் படத்தின் தொடக்கத்திலேயே `கிளைமாக்ஸ்' காட்சி எடுத்தது நீங்கள்தான்'' என்று கூறினார்.

அப்பா கேரக்டர் படமாகும்போது மட்டும், "என் இமேஜம் கெட்டுடாமல், ரசிகர்கள் பிரமிப்பா உணர்ற மாதிரி அந்த காட்சி இருந்தால் நல்லது'' என்று கூறினார். படத்தைப் பார்த்தபோது, "என் எதிர்பார்ப்புக்கு மேலேயே அந்த அப்பா கேரக்டரை கொண்டு வந்துவிட்டீர்கள்'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரிய வெற்றி பெற்றதோடல்லாமல், ஒரு வருடம் கழித்து ஜப்பானிலும் வெளியாகி அங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அங்கே `டான்சிங் மகாராஜா' என்ற பெயரில் வந்ததால், ரஜினி ஜப்பான் ரசிகர்களின் `டான்சிங் மகாராஜா' ஆகிவிட்டார். இதன் பிறகு என்னை சந்திக்கும் ஜப்பான் ரசிகர்கள் "நீங்கதான் டான்சிங் மகாராஜா படத்தின் டைரக்டரா?'' என்று கேட்டு கை குலுக்கி

செல்வார்கள்.ரஜினியுடன் நடித்த நடிகை மீனாவும் ஜப்பானில் ரொம்ப பிரபலமாகிவிட்டார். ரஜினி சாருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றமெல்லாம் அமைத்து தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். இது `முத்து' படம் மூலமாக நடந்தது என்பதில் எனக்குப் பெருமை.''

இவ்வாறு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.


Next Page>>> Part 98



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information