கன்னட திரையுலகின் பவள விழாவின் இரண்டாம் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் இந்தியாவின் இணையில்லா சூப்பர்ஸ்டார், என்றும் இளமை மாறா எந்திரன், நமது தலைவர் ரஜினி அவர்கள்.

தனது பிரத்தியேக கறுப்பு உடையில் மின்னலாய் வந்த ரஜினியைப் பார்த்து ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது.

விழாவில் பத்து நிமிடங்கள் பேசினார் சூப்பர்ஸ்டார்.

முந்தைய தினம் கமல்ஹாசன் கன்னடத்தில் பேசியதாக செய்தித் தாள்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டதாகக் குறிப்பிட்ட ரஜினி, கன்னடத்தின் மிகச் சிறந்த இலக்கியங்கள் இன்னும் திரைப்படங்களாக வரவில்லை. அது துரதிருஷ்டமானது. கன்னடத்தில் உள்ள சிறந்த எழுத்தாளர்களை திரைத்துறைக்குள் கொண்டுவாருங்கள், என்றார் (முழு பேச்சும் விரைவில் தனியாக தரப்படும்).

விழாவில் நடிகை லட்சும், பிரபுதேவா உள்ளிட்டோருக்கு ரஜினி கையால் சிறப்பு செய்யப்பட்டது.

இனி தலைவரின் அசத்தல் படங்களைப் பார்த்து அனுபவியுங்கள்!

குறிப்பு: சூப்பர் ஸ்டார் ஞாயிற்றுக்கிழமையே வருவார் என எதிர்பார்த்து நேற்று ஏராளமான ரசிகர்கள் குவிந்துவிட்டனர். ஆனால் கமல் மட்டுமே வந்திருந்தார். ரஜினி வராத ஏமாற்றத்தில் விழாவுக்கு வந்தவர்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகினர்.

அதனால் இன்று வருவாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் ரஜினியை மேடையில் திடீரெனப் பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டனர்.

-சங்கநாதன்