ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என தலைவர் இன்று செய்தியாளர்கள் மூலமாக பொதுமக்களை கேட்டு கொண்டார்.

இன்று காலை வாக்குப் பதிவு துவங்கியதும், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தி்ல் உள்ள வாக்குச் சாவடியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை வாக்களித்தார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் வந்து ஓட்டுப் போட்டனர்.

வாக்களிக்க வந்த ரஜினியை செய்தியாளர்கள் சூழந்து கொண்டு அவரது கருத்து குறித்து கேட்டனர்.

‘ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். வெற்றி நமதே,’ என்றார்.

பொதுமக்களுடன் வரிசையில் நின்று ரஜினி வாக்களித்தார்.

தலைவர் வழியை பின்பற்றி நாமும் இன்று மறக்காமல் ஒட்டு போட்டு நமது ஜனநாயக கடமையை சரியாக செய்வோம்.

-ரசிகன்.