நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. ஹுக்கும் தலைப்பில் வெளியான லிரிக்கல் வீடியோவில் ரஜினி கொல மாஸாக இருக்கிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இந்த பாடலை பட குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டு ட்ரெண்டாக்கி உள்ளனர். இந்த பாடல் முழுவதும் ரஜினி கெத்தா அவருக்கே உரித்தான ஸ்டைலில் அலப்பறை செய்திருக்கிறார். பேக்ரவுண்டில் சிறைச் சிறைச்சாலையில் துப்பாக்கி, கத்தியுடன் தலைவர் பூந்து விளையாடுகிறார்.

இந்தப் பாடலில் ரஜினியின் மேனரிஸத்தை ரொம்பவே சிலாகித்து எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் சூப்பர் சுபு. அனிருத் குரலில் அலப்பறையாக ஒலிக்கிறது ‘அலப்பற கெளப்புறோம்’ பாடல். அனிருத்தின் துள்ளல் இசைக்கு கேட்கவா வேண்டும்? ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஏற்கனவே வெளிவந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் - காவாலா பாடலில் தமன்னா பெயரைத் தட்டிச் சென்ற நிலையில், இந்த ஹுக்கும் பாடல் ரஜினி ரசிகர்களின் பசிக்கு செம தீனியாக இருக்கிறது.

ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் இதோ!

 

பாடல் வரிகள்

 

அலப்பறை கிளப்புறோம்.. **தா பாரு டா 
கலவரம் எறங்குனா **தா டாரு டா
நிலவரம் புரியுதா.. உக்காருடா.. 


தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு டா..


வரமொற ஒடச்சிட்டா செட் ஆனவன், தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்,
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன், 
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்..


நடக்குற நடை புயலா..!
முடி ஒத்துகுற ஸ்டைலா..!
கனவில்லை இது ரியலாச்சே..!
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..!


பளபள பளக்குற வெயிலா! 
அடி 100க்கு டயலா..!
செத்துக்குற திரையென ஜெயிலாச்சே..!
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..!


அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்.. 


உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்.. 


பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு.. 


டைகர்கா ஹுக்கும்... 


அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்.. 
 நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்.. 
நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான்... 


சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா, அட்டக்கத்தி எல்லாம் பொடிதான். கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா, உச்ச தலையில இடிதான்... 


நரையிருச்சுன்னு முறைச்சா, துரைகிட்ட வந்து கொலைச்சா, சிறையில் சிக்கி தொலையாதே.. ஒரச்சற வரையில உனக்கொரு கொறையில.. 


தொட நெருங்கிட முடியாதே, எது இழுக்கிது தெரியாதே, குள்ள நரிக்குது புரியாதே..


விதிகளை திருப்புற.. தலைவரு அலைப்பற.. 


உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்.. 


பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பரிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு.. 


அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்.. 


அலப்பறை கிளப்புறோம்.. தலைவரு நிரந்தரம்.. 


டைகர்கா ஹுக்கும்... 


அர்த்தமாயிந்த ராஜா...!