28 July 2002

 

 

 

 

 

 

 

 

சாதித்திருக்கிறது நடிகர்‌ சங்கம்‌!

எதிரும்‌ புதிருமாகத்‌ திரிந்தவர்கள்‌, எதிரெதிர்‌ முகாம்களில்‌ இருப்பவர்கள்‌ என பலதரப்பட்ட தமிழ்‌ சினிமா நட்சத்திரங்களை ஒன்று திரட்டி ஒரே மேடையில்‌ ஏற்றியதே சாதனைதான்‌?

' எங்கள்‌ ஒட்டுமொத்தக்‌ கலலஞர்‌ களின்‌ ஒற்றுலமக்குக்‌ கிடைத்த வெற்றி இது!' என்று திலர நட்சத்திரங்கள்‌ மார்தட்டிக்‌ கொண்ட
மலேஷிய-சிங்கப்பூர்‌ ககலவிழா கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. வெற்றியின்‌ பெரும்பங்கு விஜயகாந்த்துக்‌ குத்தாள்‌।

அத்தனை நட்சத்திரங்கள்‌ இருந்தாலும்‌ ஆரவாரங்கள்‌ அத்தனையும்‌
ஆரம்பத்திலிருந்தே ரஜினிக்‌ சூத்தான்‌।

சென்னை விமானம்‌ நட்சத்திரங்களால்‌ நிரம்பியதும்‌ சந்தோஷக்‌ கலாட்டாக்கள்‌ ஆரம்பித்தன. திடீரென மனோரமாவின்‌ மகன்‌ பூபதி ரஜினி அமர்ந்திருந்த சீட்‌ பக்கம்‌ வந்து, ''உனக்கு நான்‌ அந்தக்‌ காலத்திலேயே ரசிகர்மன்றம்‌ வெச்சேன்‌. எனக்கு நீ என்ன
பண்ணினே?'' என்ற ரீதியில்‌ ஏக வசனத்தில்‌ பேச, பலருக்கும்‌ அதிர்ச்சி. ஆனால்‌ ரஜினி கூலாக, ''சரி, என்ன பண்ணணும்னு நீயே சொல்லுப்பா..'' என்று பூபதியிடம்‌ சொன்னாராம்‌. பிறகு சரத்குமார்தான்‌ பூபதிலய அந்தப்‌ பக்கமாகத்‌ தள்ளிக்‌ கொண்டுபோய்‌ அவரது இருக்லகையில்‌ அமர்த்தினாராம்‌.

ரஜினி, காஜா மைதீன்‌,

விமானத்தில்‌ மட்டுமில்லல, மலேஷியாவில்‌ போய்‌ இறங்கிய பிறகும்‌ ரஜினி யைச்‌ சுற்றியே அத்தனை பரபரப்பும்‌.
ஒட்டலில்‌ இருந்து ரிகர்சலுக்காக பஸ்ஸில்‌ கிளம்பும்போது ரஜினி இருக்‌ கும்போதே பிரகாஷ்ராஜ்‌ கொஞ்சம்‌
கசமுசாவென்று சத்தம்‌ போட்டா ராம்‌. பிறகு விஜய காந்த்‌, பிரகாஷ்‌ ராஜை அலழைத்‌ துக்‌ கண்டித்தது தனிக்கதை.
கலலைவிழாவுக்கு வந்த பலரும்‌ 'ஜாலி மூடில்‌ இருந்ததில்‌ ஏகப்பட்ட குழப்பங்கள்‌!

மொத்த நிகழ்ச்சிகளின்‌ முழு விவரங்கலளயும்‌ பட்டியல்‌ போட்டு ஆளுக்கொரு காப்பி கொடுத்து விட்டார்கள்‌. அந்த
ஷெட்யூல்படி சரியான நேரத்‌ துக்கு வந்துபோன ஒரே நபர்‌ ரஜினிதான்‌. மற்றவர்‌ கவளக்‌ கட்டி மேயத்து இழுத்துவர
படாத பாடு பட்டது 'ரோஜா கம்லபன்ஸ்‌' காஜா லமைதீனின்‌ டீம்‌. ஆனால்‌, அத்தலனை டென்ஷனையும்‌ அழகாகச்‌
சமாளித்து சபாஷ்‌ வாங்கினார்‌ காஜா!