Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 103)                         

21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா''
2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா?
கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!


"படையப்பா'' படத்தை தயாரித்து முடித்தபோது, அதன் நீளம் 21 ஆயிரம் அடியாக இருந்தது. "இரண்டு இடைவேளைகளுடன் படத்தை திரையிடலாமா?'' என்று ரஜினி யோசித்தார். இதுபற்றி கமலஹாசன் கருத்தையும் கேட்டறிந்தார்.

முடிவில் நீளத்தைக் குறைத்து ஒரே இடைவேளையுடன் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த தகவலை, படத்தின் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்டார்.

பேட்டி

ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படங்களான "முத்து'', "படையப்பா'' ஆகியவற்றை டைரக்ட் செய்த ரவிக்குமார் "படையப்பா'' தயாரிப்பின்போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-

"முத்து வெற்றிப்படமாகி விட்டதால் "படையப்பா'' படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தபோது, இதையும் வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற வேகம் எனக்குள் ஏற்பட்டது.

`நீலாம்பரி' கேரக்டருக்கு, நடிகை ரம்யாகிருஷ்ணன் சரியாக இருப்பார் என்பதை ரஜினிதான் சொன்னார்.

ஆனால் எங்கள் னிட்டிலோ, நீலாம்பரி கேரக்டரில் ரம்யாவை போட யாருக்கும் இஷ்டமில்லை. என்றாலும் ரஜினி சாரின் விருப்பமே என் விருப்பமாகவும் இருந்ததால், ரம்யா கிருஷ்ணனே நீலாம்பரி ஆனார். அந்த கேரக்டருக்கு நன்றாகப் பொருந்தினார்.

குழந்தை பிறந்தது

படையப்பா படத்துக்கு, ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை போட ஏற்பாடு செய்தோம். ஆனால், பூஜைக்கு முந்தினநாள் என் மகள் யஷ்வந்தி பிறந்தாள்!

மறுநாள் பூஜை முடிந்ததும் மைசூருக்கு படப்பிடிப்புக்காக போய்விட்டோம். இதை மனதில் வைத்து, இப்போது யஷ்வந்தியை பார்த்தாலும் ரஜினி "வாம்மா படையம்மா'' என்றுதான் கூப்பிடுவார்.



மைசூரில் முருகன் கோவில் செட் போட்டு, காட்சிகளை படம் பிடித்தோம். கோவிலுக்குள் வருகிற மாதிரியான காட்சிகளை ஏவி.எம்.மில் செட் போட்டு எடுத்தோம். மற்றபடி முதல் ஷெட்லிலேயே படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்துவிட்டேன். சிவாஜி சார் இறந்து போகிற காட்சியும் முதல் ஷெட்லிலேயே எடுத்துவிட்டேன்.

மைசூரில் கோவில் பின்னணியில் ரஜினி அல்லாத காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்த போது, ரஜினி கோவில் படிக்கட்டில் உட்கார்ந்து

இருந்தார்."கடைசிப்படம்''

நான் மைக்கில் பேசி காட்சிக்கான தயார் நிலையில் இருந்தபோது, கோவில் படிக்கட்டில் இருந்தபடி ரஜினி சார் உரத்த குரலில், "ரவிக்குமார் சார்! இதுதான் என் கடைசிப்படம்'' என்றார்.

பதிலுக்கு நான், "ஏன், அரசியலுக்கு போறீங்களா?'' என்று கேட்டேன்.

அவரோ, "இந்தப்படம் வெள்ளி விழா கொண்டாடணும். அப்படியானால்தான் அடுத்த படத்தில் நடிப்பேன். இல்லேன்னா இந்தப் படத்தோட சரி'' என்றார்.

நான் விடவில்லை. "அதுக்கென்ன சார்! நான் `சிட்டி' ரைட்ஸ் (சென்னை நகர உரிமை) வாங்கி `தேவி' குரூப்பில் "வெள்ளி விழா'' வரை ஓட்டிட்டுப் போறேன்'' என்றேன்.

அவரும் விடாமல், "அப்படியெல்லாம் இல்லை. இந்தப்படம் வசூலில் `ரெக்கார்டு பிரேக்' பண்ணணும். அப்படி நடந்தாத்தான் அடுத்த படத்தில் நடிக்கிறது பற்றி யோசிப்பேன்'' என்றார்.

இத்தனையும் படப்பிடிப்பு குழுவினர் முன்னாலேயே நடக்கிறது. எனக்கோ "கோவில் வாசலில் இருந்து இப்படி வெளிப்படையாக பேசுகிறாரே'' என்ற கவலை. இந்தப்படம் இவரது எதிர்பார்ப்பையும் தாண்டி நீண்ட நாள் ஓடவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தீவிரமானது.

படையப்பா ரிலீசானபோது, அதுவரை இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் தகர்த்து, `ரெக்கார்டு பிரேக்' செய்தது. பல வருஷம் கழித்து வந்த "சந்திரமுகி''தான் "படையப்பா'' வசூல் ரெக்கார்டை முறியடித்து இருக்கிறது. அதுகூட எல்லா இடங்களிலும் அல்ல.



படம் பார்த்த முதல்-அமைச்சர் கலைஞர், படம் முடிந்து வெளியே வந்ததும் மகிழ்ச்சி முகமாய் ரஜினியை பார்த்து "படையப்பா! அனைத்து சாதனைகளையும் உடையப்பா'' என்று வாழ்த்தினார். அந்த வாழ்த்தும் பலித்துவிட்டது.

2 இடைவேளை

படத்தை எடுத்து முடித்த நேரத்தில் ஒரு சிக்கல். படம் மொத்தம் 21 ரீல் வருது. 21 ரீலையும் பார்த்த ரஜினி சார் என்னிடம், "நல்லா இருக்கு. ஆனா 21 ரீல் வந்திருக்கு. எப்படி குறைக்கப் போறீங்க?'' என்று கேட்டார்.

"என்னால் முடிந்த வரை குறைக்கிறேன்'' என்று சொன்னேன். அப்படி இப்படியாக 2 ஆயிரம் அடியை குறைத்தேன். இப்ப 19 ரீல் ஆச்சு. ரஜினி சாரிடம் சொன்னேன். அவர் "19 ரீல் படம்னா இரண்டு இடைவேளை விட்டால்தானே சரியாக இருக்கும்?'' என்று கேட்டார்.

ராஜ்கபூர் நடித்த "சங்கம்'', "மேரா நாம் ஜோக்கர்'' ஆகிய படங்களுக்கு 2 இடைவேளை வைத்தார்கள். அது மாதிரி தமிழில் "படையப்பா''வுக்கும் செய்யலாமா என்று ரஜினி சார் யோசித்தார். இதுபற்றி, தனது ஆப்த நண்பர் கமல் சாரிடமும் யோசனை

கேட்டார்."எக்காரணம் கொண்டும் இரண்டு இடைவேளை வைக்காதீர்கள். அது சரியாக இருக்காது. நீளத்தை குறைக்கும் பொறுப்பை டைரக்டரிடம் விட்டு விடுங்கள். அவர் பார்த்துக்கொள்வார்'' என்று கமல் கூறினார்.

இதுபற்றி ரஜினி தீவிரமாக சிந்தித்தார். "குறைந்த பட்சம்

5 ரீலாவது குறைத்தால்தான் சரியாக இருக்கும். ஆனால், எல்லா சீனும் முக்கியமானவை. உங்களால் 5 ரீல் குறைக்க முடியுமா?'' என்று என்னிடம் கேட்டார்.

"குறைக்கிறேன் சார் என்று அவரிடம் சொல்லி விட்டேனே தவிர, காட்சிகளின் வீரியம் குறையாமல், கதையின் விறுவிறுப்புக்கு பங்கம் நேராமல் 5 ரீல்களை குறைப்பது என்பது எனக்கு பெரும் சவாலாகவே இருந்தது. என்றாலும் 4 நாட்கள் தொடர்ந்து இரவு பகலாக உட்கார்ந்து 14 ஆயிரத்து 500 அடியாக படத்தை குறைத்தேன். அதன்பின் படத்தை பார்த்தபோது காட்சிகள் குறைக்கப்பட்டது தெரியாமல், படம் விறுவிறுப்பாக இருந்தது.

பேசாமல் போன ரஜினி

முதல் பிரதி தயாரானதும், ஏவி.எம். ஏசி தியேட்டரில் படம் பார்த்தோம். ரஜினி சார் சில நண்பர்களுடன் வந்திருந்தார். என்னுடன் சில நண்பர்களும் வந்திருந்தார்கள். படம் முடிந்ததும் ரஜினி சார் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் என்னிடம் கைகொடுத்து விட்டுப் போய்விட்டார். படம் பற்றி எதுவும் சொல்லாமல் போனதால் எனக்கு இரவு முழுக்க தூக்கம் இல்லை.

ஆனால் மறுநாள் காலையில் நேரில் வரச்சொல்லி போன் செய்தார். அவரை சந்தித்தபோது "நேற்று படம் முடிந்ததும் உங்ககிட்ட எதுவும் சொல்லாமல் போய்விட்டேன். நம்ம இரண்டு பேர் சைடிலும் வந்தவங்க மத்தியில் நான் "படம் சூப்பர்''னு சொல்லிட்டா, அவங்களும் அதையே சொல்லிடுவாங்க. நமக்கு படம் பற்றிய அவங்களோட உண்மையான கருத்து கிடைக்காது. என் நண்பர்கள் "படம் நல்லா இருக்கு. ஆனால் இதுக்கு எதுக்கு "படையப்பா''ன்னு பேரு? நீலாம்பரின்னே வெச்சிருக்கலாமே'' என்று சொன்னாங்க. எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு. 14 ரீலா குறைத்த பிறகும், குறைத்த மாதிரி தெரியாமல் `விறுவிறு'வென்று போகுது. உடனே `ரீரிக்கார்டிங்' ஆரம்பிக்கச் சொல்லிடுங்க'' என்றார்.

ரஜினி சார் கணிப்பும், என் கணிப்பும் ஒரே மாதிரி இருந்ததை ரசிகர்களும் உறுதி செய்தார்கள். அவர்களும் எங்கள் உணர்வுகளை பிரதிபலித்ததால் படையப்பா சாதனை படைத்தது.''

இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.

Next Page>>> Part 104



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information