Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 104)                         

ரஜினிகாந்த் வாழ்க்கைப்பாதை
"பாபா'' - எதிர்பாராத தோல்வி

நஷ்டம் அடைந்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்தார், ரஜினி

"பாபா'' படம் சரியாக ஓடாததால், அதை வாங்கி நஷ்டம் அடைந்தவர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார், ரஜினிகாந்த்.

இவ்வாறு நஷ்டத்துக்கு பொறுப்பு ஏற்று பணத்தைத் திருப்பித் தந்தவர்கள் இதற்கு முன்போ, பின்போ எவரும் இல்லை.

"படையப்பா'' படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு "பாபா'' படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்தது. அண்ணாமலை, "பாட்ஷா'' படங்களை டைரக்ட் செய்த சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை டைரக்ட் செய்யப்போகிறார் என்ற தகவல், ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில்

மூழ்கடித்தது.சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் "ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் அண்ணாமலை, பாட்ஷா. எனவே, ரஜினி-சுரேஷ்கிருஷ்ணா கூட்டணி இன்னொரு பிரமாண்டமான வெற்றிப்படத்தை கொடுக்கப்போகிறது'' என்று நினைத்தனர். எனவே எதிர்பார்ப்பு அதிகமாகியது.

ரஜினியுடன் மனீஷா கொய்ராலா, கவுண்டமணி ஆகியோர் நடித்தனர். வாலி, வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார்.

"பாபா'' மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிக விலை கொடுத்து "பாபா'' படத்தை வாங்கினார்கள்.

பா.ம.க. எதிர்ப்பு

படம் வெளிவருவதற்கு முன்பே, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசுக்கும், ரஜினிக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன.



சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடிக்கும் ஸ்டைல்கள் மூலம், தமிழக இளைஞர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாக்கிவிட்டார் என்று ரஜினி மீது ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதனால் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை நிலவி வந்தது.

2002 ஆகஸ்டு 15-ந்தேதி "பாபா'' படம் திரையிடப்பட்டது. அன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் படம் திரையிடப்பட இருந்த தியேட்டரின் திரை கிழிக்கப்பட்டது. படத்தின் `கட் அவுட்', பேனர் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன. படப்பெட்டி கடத்திச் செல்லப்பட்டது.

விருத்தாசலத்தில், படத்தை திரையிட இருந்த தியேட்டரின் மானேஜர் கடத்தப்பட்டார். தமிழகம் முழுவதும், "பாபா'' படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பதற்றம் நிலவியது. போலீஸ் காவலுடன் படம் ஓடியது.

வட தமிழ்நாட்டில் பல இடங்களில் படம் திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

ரஜினி அறிக்கை

இதுபற்றிய தகவல்கள், ரஜினிக்குத் தெரிவிக்கப்பட்டன.

"உணர்ச்சிவசப்படாதீர்கள். அமைதியாக இருங்கள்'' என்று தன் ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள் விடுத்தார். "டாக்டர் ராமதாசை நீதிமன்றத்தில் சந்திப்பேன்'' என்றும் கூறியிருந்தார்.

ஜெயங்கொண்டத்தில், திரை கிழிக்கப்பட்ட தியேட்டர் அதிபருக்கு ரூ.1 லட்சம் கொடுத்ததுடன், புதிய படப்பெட்டி ஒன்றையும் ரஜினி அனுப்பி வைத்தார்.

பரபரப்பான சூழ்நிலையில் வெளியான "பாபா'' வழக்கமான ரஜினி படங்களைப் போல் அமையவில்லை. பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாகவும், ஆன்மீகம் அதிகமாகவும் இருந்தன. எனவே படம் பெரும்பாலோருக்கு ஏமாற்றத்தை அளித்தது.

தவிரவும், படம் ஒரே சமயத்தில் ஏராளமான தியேட்டர்களில் திரையிடப் பட்டதுடன், தினமும் நாலைந்து காட்சிகள் நடந்தன. இதனால், விரைவிலேயே கூட்டம் குறையத் தொடங்கியது.

என்றாலும் சென்னையில் படம் நூறு நாட்கள் ஓடியது.

திருப்பிக்கொடுத்தார்

தன் படத்தை வாங்கிய எவரும் நஷ்டம் அடையக்கூடாது என்று ரஜினி நினைத்தார்.

அதன்படி, `பாபா' படம் வாங்கி நஷ்டம் அடைந்த வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவருக்கும் கோடிக்கணக்கான பணம் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டது.



இந்த தகவலை `பாபா' படத்தின் வினியோகஸ்தர்களான ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ், திருப்பூர் சுப்பிரமணியம், நாகராஜராஜா ஆகியோர் 27-9-2002 அன்று நிருபர்களிடம் தெரிவித்தனர்.

இதுபற்றி திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:-

"உலக சினிமா வரலாற்றில் எந்த ஒரு நடிகரும், தயாரிப்பாளரும் செய்திராத அளவுக்கு ரஜினிகாந்த் மிகவும் தாராள மனதுடன் நடந்து கொண்டு, நல்ல பெயரை சம்பாதித்து இருக்கிறார்.

திரை உலகில் உள்ள அனைவருக்கும் முன்னோடியாக அவர் நடந்து கொண்டார்.

ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், எங்களை அழைத்து, `பாபா' படம் வாங்கியவர்கள் ஒரு பைசாகூட நஷ்டம் அடையக்கூடாது. யார் - யாருக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டதோ அதன்படி எல்லா பணத்தையும் திருப்பிக்கொடுத்து விடுங்கள். `பாபா' படத்தை விற்ற பணம் அப்படியே இருக்கிறது. அதில் இருந்து நான் ஒரு பைசா கூட தொடவில்லை'' என்றார்.

"முழு பணமும் திருப்பிக் கொடுக்கப் பட்டால்தான் எனக்கு தூக்கம் வரும். கொடுக்காவிட்டால் தூக்கம் வராது'' என்று கூறினார்.

110 தியேட்டர்கள்

அவர் சொன்னபடி 110 தியேட்டர் அதிபர்களுக்கும்,

10 வினியோகஸ்தர் களுக்கும் கோடிக்கணக்கில் பணம் திருப்பி தரப்பட்டுவிட்டது.''

இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் கூறினார்.

ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ், பட அதிபர் ஜீ.வி., நாகராஜ் ராஜா, ஆல்பர்ட் தியேட்டர் மாரியப்பன், முன்னாள் `எம்.பி' அடைக்கலராஜின் மகனும், வினியோகஸ்தருமான பிரான்சிஸ், தியேட்டர் அதிபர்கள் ஜெயகுமார், கண்ணப்பன், ராஜாராம், பங்களா சீனு ஆகியோரும் பேசினார்கள்.

நாகராஜராஜா பேசும்போது, "உப்பிட்ட தமிழ் மண்ணை ஒருபோதும் ரஜினி மறக்கமாட்டார்'' என்றார்.

லாப - நஷ்டம்

ஒரு விநியோகஸ்தர் குறிப்பிடுகையில், "பாபா படத்துக்கு ரூ.20 கோடி வசூலாகியது. ரஜினிக்கு இது தோல்வி என்று கருதப்படுகிறது. ஆனால், விஜய் போன்ற இளம் நடிகர்கள் நடிக்கும் படங்கள் ரூ.20 கோடி வசூலித்தால், அது மகத்தான வெற்றிப்படமாக கருதப்படுகிறது'' என்று கூறினார்.

(ரஜினி உண்ணாவிரதம் - நாளை)

***

ரஜினி `சுயதரிசனம்'

உலகத்தில் எப்போதும் சந்தோஷமா இருக்கிறவங்க மூணு பேர். ஞானி, குழந்தை, பைத்தியக்காரன்.


ஞானி - எல்லாவற்றையும் அறிந்தவர். குழந்தை-எதையும் அறியாதது. பைத்தியக் காரன் - எதுவும் தெரியாது; எதுவும் புரியாது.

- ரஜினிகாந்த்.

Next Page>>> Part 105



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information