Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 107)                         

சரித்திர சாதனை படைக்கும்
"சந்திரமுகி'' உருவானது எப்படி?
டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்


ரஜினிகாந்த் நடித்த "சந்திரமுகி'' வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. 2005 ஏப்ரல் 14-ந்தேதி திரையிடப்பட்ட இந்தப்படம் 700 நாட்களைத் தாண்டி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்பட உலகின் வசூல் சாதனைகளை எல்லாம் முறியடித்துவிட்டது.

சந்திரமுகி, சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு. ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சாதனை படத்தை இயக்கியவர் பி.வாசு.

இவர் ஏற்கனவே ரஜினியின் "பணக்காரன்'', "மன்னன்'', "உழைப்பாளி'' ஆகிய படங்களை இயக்கியவர்.



கதையின் கதை

"சந்திரமுகி'' படத்தின் கதை உருவானதிலும், அது படமானதிலும், அதை வாசு டைரக்ட் செய்ததிலும் பெரிய கதையே அடங்கியிருக்கிறது.

அதுபற்றி வாசு கூறியதாவது:-

"சிவாஜி பிலிம்சுக்காக ரஜினி சாரை ஏற்கனவே "மன்னன்'' படத்திற்காக இயக்கினேன். அது வெள்ளி விழா படமாக அமைந்தது. அதே சிவாஜி பிலிம்சுக்காக மீண்டும் ரஜினியை இயக்க வாய்ப்பு கிடைத்தபோது, அளவிட முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

"மன்னன்'' படத்தில் ரஜினி சாரை இயக்கிய பிறகு, எந்தக் கதையென்றாலும் அதை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அடுத்து வந்த "அண்ணாமலை'', "பாட்ஷா'', "படையப்பா'' படங்களின் கதைவரை, என்னிடம் சொல்லி எனது கருத்துக்களையும்

கேட்டுக்கொள்வார்.கதைகளை காட்சி ரீதியாக அவர் சொல்லும் போதே படம் பார்த்த `பீலிங்' ஏற்பட்டு விடும். இந்த கதைப் பட்டியலில் `பாபா' படத்தின் கதை பற்றி மட்டும் என்னிடம் அவர் பேசவில்லை.

கதை பற்றிய எனது கருத்துக்களை கூறும்போது அதை தனது கையில் இருக்கும் குறிப்பேட்டில் எழுதிக்கொள்வார். அதுமாதிரி படம் முடிந்து

"பிரிவி'' காட்சி பார்க்கவும் என்னை அழைப்பார். படம் பார்த்து முடிந்ததும் படம் பற்றி எதுவும் சொல்லாமல் போனால்கூட, அவரே வீட்டுக்கு போன் பண்ணி விடுவார். பொதுவாகவே, மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி விடுபவர்களிடம் அவருக்கு பிரியமும் அதிகம். நம்பிக்கையும் அதிகம். இப்படி அவரது நம்பிக்கைக்குரிய இடத்தில் நானும் இருந்தேன் என்பதில் இன்றளவும் எனக்குப் பெருமை.

விமானத்தில் சந்திப்பு

"பாபா'' படம் வெளியான பிறகு, புதிய படம் எதையும் ரஜினி ஒப்புக்கொள்ளாமல் இருந்த நேரம். விமானத்தில் நாங்கள் தற்செயலாக சந்தித்துக் கொண்டோம். அப்போது நான் கன்னடத்தில் "ஆப்த மித்ரா'' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தபோது, அதே விமானத்தில் ரஜினி சாரும் வர, நலம் விசாரித்துக் கொண்டோம்.

பிறகு அவரிடம், "என்ன சார்! புதிய படம் பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லையே?'' என்று கேட்டேன்.

அதற்கு அவர், "பாட்ஷா'', "படையப்பா'' படத்துக்குப்பிறகு இனிமே புதுசா என்ன படம் பண்ணிட முடியும்? அதிருக்கட்டும். நீங்க இப்ப என்ன படம் பண்றீங்க? என்று கேட்டார்.

நான் அவரிடம், கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தனை வைத்து `ஆப்த மித்ரா' என்ற கன்னடப் படத்தை இயக்கி வருவது பற்றி தெரிவித்தேன். அப்போதும் கூட கதை பற்றி அவரிடம் சொல்லவில்லை.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற "மணிச்சித்ரதாழ்'' படம்தான், எனக்கு "ஆப்த மித்ரா'' கன்னடப் படத்துக்கு இன்ஸ்பிரேஷன். அந்தப் படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய கேரக்டர்கள் வடிவமைப்புடன் "ஆப்த மித்ரா''வை உருவாக்கினேன். இந்தப்படம்தான் பின்னாளில் "சந்திரமுகி''யாக உருப்பெறும் என்பதை அப்போது நினைத்துக்கூட பார்க்கவில்லை.



கோவிலுக்கு வந்த நல்ல செய்தி

"ஆப்த மித்ரா'' ரிலீசானதும் கேரளாவில் உள்ள சக்குளத்து பகவதி அம்மன் கோவிலுக்கு போனேன். இது "பெண்களின் சபரிமலை'' என்று சொல்லப்படும் கோவில். தரிசனம் முடிந்து வெளிவந்த நேரத்தில் கோவில் குருக்கள் என்னிடம், "27 வெள்ளிக்கிழமை தொடர்ந்து வாங்க. நல்ல செய்தி வரும்'' என்றார்.

அவர் சொன்னபடி 27-வது வெள்ளிக்கிழமை தரிசனம் முடித்துவிட்டு குருவாருக்கு வந்தேன். மதியம் 1ஷி மணிக்கு பிரபு சார் போனில் பேசினார். "யப்பா! ஒரு சந்தோஷமான விஷயம். ரஜினி சார் நம்ம பேனர்ல ஒரு படம் பண்றார்'' என்றார்.

இதைக் கேட்டதும் எனக்கு பெரிய மகிழ்ச்சி. உடனே பிரபு விடம், "ரொம்ப சந்தோஷமான விஷயம் சொல்லியிருக்கீங்க'' என்றேன்.

"சந்தோஷம் இதோடு முடிந்து விடவில்லை. படத்தை நீதாம்ப்பா டைரக்ட் பண்றே'' என்றார்.

"நானா?'' ஒரு கணம் எனக்கு இன்ப அதிர்ச்சி. உடனே பிரபு, "ரஜினி சாரே சொன்னார். உன்னைத்தான் நம்ம பேனர் படத்துக்கு டைரக்டரா போடணும்னு கேட்டுக்கிட்டார்'' என்றார்.

இப்போது நிஜமாகவே எனக்கு வியப்பு. நான் அவரை "மன்னன்'' படத்தில் இயக்கி 9 வருஷம் ஆகிவிட்டது. அதற்குப்பிறகு அதுமாதிரி ஒரு பெரிய வெற்றிப்படம் எதுவும் நான் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் ரஜினி சார் என்னை அவர் நடிக்கும் புதிய படத்தை இயக்க சொல்லியிருக்கிறார் என்றால், எப்படி?

"ஆப்த மித்ரா'' ரிலீசாகி முதல் வாரமே பெரிய வெற்றிக்கான அடையாளம் தெரிய ஆரம்பித்திருந்தது. இந்த நேரத்தில் சிவாஜி பிலிம்சுக்காக ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில், வரும் வழியிலேயே ரஜினி சாருக்கு என்ன கதை பண்ணலாம் என்று யோசிக்கத் தொடங்கி விட்டேன். அப்போது என்னிடம் "வலது கை'' என்ற பெயரில் ஒரு "கமர்ஷியல்'' கதை இருந்தது. இந்தக் கதைக்குள் ரஜினி எந்தெந்த மாதிரி பிரகாசிப்பார் என்று கதைக்காட்சிகளை மனக்கண் முன் ஓடவிட்டேன்.

சென்னை வந்து ராம்குமாரை பார்த்தபோது, "யப்பா! ரஜினி சாரே போன் செய்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சாப்பாட்டுவேளை, திடீர்னு ரஜினி சாரிடம் இருந்து போன். "என்ன பண்றீங்க?'' என்று கேட்கிறார். "சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறோம்'' என்றேன். "நம்ம பேனர்ல ஒரு படம் பண்ணுவோமா?'' என்கிறார். "பண்ணலாம் சார்'' என்கிறேன். உடனே அவரே "வாசு டைரக்ஷன்ல "ஆப்த மித்ரா''ன்னு ஒரு படம் வந்திருக்கு. நாம அதை அப்படியே தமிழில் பண்ணலாம்" என்றார். "சந்தோஷமா பண்ணலாம் சார்''னு சொல்லிட்டேன் என்றார்,

ராம்குமார்.எனக்குள் இப்போது விவரிக்க முடியாத உணர்ச்சி அலைகள். "மணிச்சித்ரதாழ்'' படத்தின் கருவை மட்டுமே எடுத்துக்கொண்டு என் பாணியில் சில கேரக்டர்களை உருவாக்கி "ஆப்த மித்ரா''வை இயக்கினேன். அந்தப்படம் ரசிகர்களை கவர்ந்த மாதிரியே ரஜினி சாரையும் கவர்ந்திருக்கிறதே!

மாறு வேடத்தில் ரஜினி

இதைத்தொடர்ந்து ராம்குமார் பெங்களூரில் இருந்த ரஜினியை பார்க்கப் போனார். அவரிடம், "என் நண்பர் காந்தி பெங்களூர் சந்தோஷ் தியேட்டரில் "ஆப்த மித்ரா'' படத்தை பார்த்திருக்கிறார். அவர்தான் படம் பற்றி என்னிடம் பாராட்டி சொன்னார். அதோட நம்ம வாசுதான் டைரக்ட் பண்ணியிருக்கார்'னு சொன்னார். காந்தி ஒரு படத்தை அவ்வளவு சுலபமா பாராட்டற ஆளில்லை. அதனால் காந்தியை அழைத்துக்கொண்டு மாறுவேடத்தில் நானும் சந்தோஷ் தியேட்டரில் `பிளாக்'கில் டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். அதில் கட்டில் தானா மேலே தூக்கற சீனைப் பார்த்ததும் அப்படியே ஆடிப்போயிட்டேன். படம் பெரிசா வரும்னு நம்பிக்கை இருக்கு'' என்றிருக்கிறார்.

நான் சந்தித்தபோது என்னிடமும் படம் பற்றி ரஜினி பாராட்டினார். நான் அவரிடம், "சார்! ஒரேயொரு வார்த்தை. டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் உங்களை வெச்சு ஏற்கனவே `ஜக்குபாய்' படம் இயக்கறதா இருந்தது. இப்ப உள்ள சூழ்நிலையில் நீங்க புதுசா ஏதாவது படம் பண்ணினாக்கூட அதை கே.எஸ்.ரவிக்குமாரே டைரக்ட் பண்ணினாத்தான் சரியாக இருக்கும்'' என்றேன்.

இப்படிச் சொன்னதும் ரஜினி முகத்தில் ஆச்சரியம். "என்ன இது! நீங்களும் ரவிக்குமாரும் ஒரே மாதிரி இருக்கீங்க? அவர்கிட்ட இந்த கதை பற்றி சொன்னேன். "மணிச்சித்ரதாழ்'' படத்தை அவர் பார்த்திருக்கிறார். அவர் என்கிட்டே, "என்ன சார் கலாட்டா பண்றீங்களா? நாங்க உதை வாங்கணும்னு ஆசையா உங்களுக்கு? படத்தில் மோகன்லால் கரெக்டா இடைவேளை நேரத்தில்தான் வரார். நீங்க நடிக்கிற ஒரு படத்துல இடைவேளை வரைக்கும் உங்களைக் காட்டலைன்னா ரசிகர்கள் எங்களை சும்மா விடுவாங்களா?'' என்று கேட்டார். அவர் சொன்னப்புறம்தான் நானும் "மணிச்சித்ரதாழ்'' பார்த்தேன். அப்பத்தான் அதுக்கும் "ஆப்த மித்ரா''வுக்கும் உள்ள ஏகப்பட்ட வித்தியாசம் தெரிஞ்சுது. இந்த விஷயத்தை நான் ரவிக்குமார் கிட்டே சொன்னபோது, "அதனால்தான் சார் சொன்னேன். டைரக்டர் வாசு இந்தப் படத்தை பண்ணினால்தான் சரியாக இருக்கும்'' என்று சொன்னார்.

இதை என்னிடம் விவரித்த ரஜினி, "நீங்களே டைரக்ட் பண்ணனும்னு ஆசைப்பட்டதுக்கு இதுவும் முக்கிய காரணம்'' என்றார்.

"தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து கொள்வோம்'' என்றும் கூறினார்.

அதன் பிறகு மளமளவென பட வேலைகள் தொடங்கின. நான் சில காட்சிகளை மாற்றம் செய்தேன்.

கன்னடத்தில் வடிவேலு கேரக்டர் கிடையாது. தமிழுக்காக அதை சேர்த்தேன். `தேவுடா தேவுடா' பாட்டு கிடையாது. அதை சேர்த்தேன். இதைவிடவும் முக்கியம், கன்னடத்தில் வேட்டையன் கேரக்டரே கிடையாது. தமிழுக்காக உருவானவன்தான் வேட்டையன்.''

இவ்வாறு கூறிய வாசு, மேலும் பல சுவையான தகவல்களை தெரிவித்தார்.


Next Page>>> Part 108



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information