Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 68)                         

"என் கடவுளுக்கு மதம் கிடையாது''
ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம்


"விபூதி பூசிக்கொள்வதை வைத்து, என்னை இந்து என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. என்னுடைய கடவுளுக்கு மதம் கிடையாது'' என்று ரஜினிகாந்த் கூறினார்.

ஆன்மீகம் பற்றியும், தனது விருப்பு வெறுப்புகள் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை ரஜினிகாந்த் பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்டுரைகளிலும், பேட்டிகளிலும் தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது:-

சந்தேகம்

"சின்ன வயசிலே ஆன்மீகத்திலே எனக்கு நிறைய சந்தேகங்கள் வரும். அப்போதெல்லாம் அந்த சந்தேகங்களை என் அப்பாக்கிட்டே சொல்லி விளக்கம் கேட்பேன்.

`எல்லோருமே மனுஷங்கதானே? அப்புறம் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு பேதம் ஏது? இந்தப் பழக்கம் ஏன் வந்துச்சு... தேவையா...? அது ஏன்...? இது ஏன்...?'

இப்படி நிறைய கேள்விகளை அப்பாக்கிட்டே கேட்பேன். அப்பாவும் பதில் சொல்லுவாரு. ஆனா அந்தப் பதில்களிலே எனக்கு

திருப்தியிருக்காது.அப்பாக்கிட்டே மட்டுமில்லாம பெரிய அண்ணன்கிட்டே, அக்காகிட்டே... இப்படி எல்லார்கிட்டேயும் நான் இந்த மாதிரியான கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தேன். அவங்க பதில்கள்லே எனக்கு திருப்தி கிடைக்கவில்லை.

சாமிக்கு லஞ்சம்

வீட்டிலே அடிக்கடி கோவிலுக்குப்போய் வருவாங்க. `இன்னது பண்ணினா இன்னது செய்வேன்'னு சொல்லி சாமிக்கு நேர்த்தி வைப்பாங்க. அது, அது நடந்தா உடனே அந்த நேர்த்தியை `பயபக்தி'யோட செய்வாங்க. என்னடா இது சாமிக்கே `லஞ்சம்' கொடுக்கிறாப்பல இருக்கேன்னு நான் யோசிப்பேன். அவங்ககிட்டே கேட்கவும் செய்வேன்.



அவங்க "அது... அது... அப்படித்தாண்டா... காரணம் கேட்காதே...'' என்று சொல்லுவாங்க. மதம் சம்பந்தமா... கடவுள் சம்பந்தமா... சமுதாயம் சம்பந்தமா... நான் கேள்வி கேட்கிறப்ப எல்லாம் இதேபாணி பதில்தான்.

என் கேள்விகளுக்கு வீட்டிலே யாராலும் சரியா பதில் சொல்ல முடியலே.

ஆனா... நான் பாட்டுக்குக் கேள்விகள் கேட்டுக்கிட்டே இருந்தேன்.

`உன்னோட கேள்விக்கெல்லாம் சரியான பதில் கிடைக்கிற இடத்திலே உன்னைச் சேர்த்து விடறேன்னு சொல்லி, என்னைக் கூட்டிட்டுப்போய் ராமகிருஷ்ணா ஆசிரமப் பள்ளியிலே பெரிய அண்ணன் சேர்த்துட்டாங்க.

ஆசிரமப் பள்ளியிலே சேர்ந்ததுக்கு அப்புறம்தான் நான் படிப்படியாக ஆன்மீகவாதியா மாற ஆரம்பிச்சேன்.

முன்னாடி கஷ்டத்தை, கஷ்டமாகவே பார்த்து வந்த எனக்குப் பெரிய பெரிய கஷ்டங்களைக்கூட சுலபமா ஏத்துக்கிற பக்குவம் வந்தாச்சு. ஆமா... எல்லாத்தையுமே ஈசியா எடுத்துக்கிட்டேன்.

`இந்த உலகத்துலே எதுவும் சாஸ்வதம் இல்லை. நாம இப்ப அனுபவிச்சுக்கிட்டிருக்கிற சொத்து, சுகம், பதவி, பந்தம், பாசம்... ஏன் இந்த உடம்பே சாஸ்வதம் கிடையாது அப்படீங்கிற ஞானம் அப்பத்தான் எனக்கு வந்துச்சு.

அதனாலதான் யாராச்சும் என் வயசைப்பற்றி கேட்கறப்போ, `என்னோட உடம்புக்கு இத்தனை வயசு'ன்னு சொல்றேன். 1950-ல் பொறந்த உடம்பு இது. உடம்புக்குத்தான் வயசு, எனக்கு வயசு கிடையாது. அதாவது ஆத்மாவுக்கு வயசேது?

அசைவ உணவு

`ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் அசைவ உணவு சாப்பிடலாமா?' என்று சிலர் என்னிடம் கேட்கிறாங்க.

ஆன்மீகவாதியா இருந்தால் அசைவமாக இருக்கக் கூடாதுன்னு யார் சொன்னாங்க? ஒருத்தன் என்ன சாப்பிடறான்கிறது முக்கியம் இல்லை. அவன் எப்படி வாழறான்கிறதுதான் முக்கியம். இவனால அடுத்தவங்களுக்கு உபகாரமா இருக்க முடியுமா? இல்லை உபத்திரவமாக இருக்கானா அப்படிங்கிறதை வைச்சுத்தான் அவன் ஆன்மீகவாதியா, இல்லையான்னு முடிவு பண்ணனும்.

அன்பும் மனிதநேயமும் மட்டுமே ஒருத்தனை ஆன்மீகவாதியா நமக்கு அடையாளம் காட்டுது.

என் கடவுளுக்கு மதம் கிடையாது



`எம்மதமும் சம்மதம் என்று கூறும் நங்கள், இந்து மதம் சொல்கிறபடி விபூதி பூசிக்கொள்ளலாமா?' என்று சில பேர்

கேட்கிறாங்க.சின்னவயதிலிருந்தே எனக்கு ஏற்பட்ட பழக்கம்தான் விபூதி பூசறது. அதனால இன்னிக்கும் நான் விபூதி பூசிக்கிறேன். விபூதிப் பூசிக்கிறதை வைச்சுக்கிட்டு, நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன்னு குற்றம் சொல்றதிலே எந்த அர்த்தமும் இல்லை. ஏன்னா என்னோட கடவுளுக்கு மதம் கிடையாது.

உலக அமைதிக்காகவும், மனித சமாதானத்துக்காகவும் நான் மத சமரசத்தை வரவேற்கிறேன். ஆனா தனிப்பட்ட ஒரு மதத்தின் மேலே `வெறி' கொள்றதை - அந்த மதத்துக்காகச் சார்ந்து பேசறதை நான் என்னிக்குமே விரும்பினதில்லை.

துன்பத்துக்கு காரணம்

இன்னிக்கு இருக்கிற துன்பங்களுக்கெல்லாம் என்ன காரணம்னு நாம நினைச்சுப் பார்க்கிறோமா? ஆசை... யெஸ் அதுதான் எல்லா வகையான கஷ்டங்களுக்கும் காரணம்.

போதுங்கிற மனமே பொன் செய்யும் மருந்து. இருக்கிறதிலே திருப்தி கண்டாலே போதும். அதுதான் உண்மையான இன்பம். இருக்கிறதை விட்டுப்புட்டு பறக்கிறதைப் பிடிக்க நினைக்கிறப்போதான் ஏமாற்றமும் விரக்தியும் மிஞ்சுது.

எதிர்காலத்தைப் பற்றிய கவலையிலேயே நிகழ்காலத்தை இழந்துக்கிட்டிருக்கோம். நாளைக்கு என்ன நடக்குமோ? எப்படி சமாளிக்கப் போறோமோ... இப்படி பயந்தே வாழ்க்கையில எந்த நாளையுமே முழுசா அனுபவிக்காம விட்டுடறோம்.

பகல் கனவு

கனவிலே இரண்டு வகை. ராத்திரியிலே காண்றது ராத்திரி கனா. பகல்லே காண்றது பகல் கனவு.

இப்ப நாம வாழ்ந்துக்கிட்டிருக்கிற வாழ்க்கைப் பகல்கனவு. பணம், பொருள், புகழ், பதவி... இதெல்லாம் அந்தப் பகல் கனவோட அஸ்திவாரங்கள். ஆனா சாஸ்வதம் இல்லாத... சட்டுனு கலைஞ்சுப் போயிடக்கூடிய அஸ்திவாரங்கள்.

யெஸ். இன்னும் 25 வருஷம் கழிச்சு, உங்க பழைய வாழ்க்கையை நினைச்சுப் பார்த்தா 25 வருஷங்கறது 25 நிமிஷமா நமக்குத் தெரியும்.

நான் நடிக்க வந்தப்போ சிவாஜி சார் நடிச்சுக்கிட்டிருந்தாரு. ஜெய்சங்கர் நடிச்சுக்கிட்டிருந்தாரு. அதுக்கப்புறம் இரண்டு தலைமுறை நடிக்க வந்திருக்கு. ஆனா எனக்கு நேத்துதான் `அபூர்வ ராக'ங்களில் நடிச்சேன்கிற மாதிரி பீலிங்.

எல்லாமே கனவு... பகல் கனவு. வேகமா ஓடி வேகமா மறைஞ்சுடும். அதுக்காக எதுவுமே இங்கே சாஸ்வதம் கிடையாதுன்னு சொல்லிக்கிட்டு யாருமே சும்மா உட்கார்ந்திடக்கூடாது.

அவங்க அவங்க தங்கள் தங்கள் கடமைகளை ஒழுங்கா செய்யணும். இதை நான் சொல்லலை. பகவானே கீதையிலே சொல்லியிருக்காரு. `கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே'ன்னு.

பணம்

இன்னிக்கு இருக்கிறவங்கள்ல நூற்றுக்கு தொண்ணூறு பேர், பணம் சம்பாதிக்கணும்ங்கிறதை மட்டுமே நோக்கமா கொண்டிருக்காங்க. இவங்கள்லே யாருமே மனுஷங்களைச் சம்பாதிக்கணும்னு நினைக்கிறதே இல்லை. இது ஏன்னு எனக்குப் புரியலை. நம்ம வாழ்க்கையிலே எத்தனை ஆயிரங்களைச் சம்பாதிச்சிருக்கோம்... சம்பாதிக்கப் போகிறோம்கிறது முக்கியம் இல்லை. எத்தனை மனுஷங்களைச் சம்பாதிச்சிருக்கோம்கிறதுதான்

முக்கியம்.''இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.


Next Page>>> Part 69



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information