Rajini History (Tamil) - List of Titles

பஸ் கண்டக்டராக வேலை பார்த்தவர் `சூப்பர் ஸ்டார்' ஆனார். திருப்பங்கள் நிறைந்த ரஜினிகாந்த் வாழ்க்க

சின்ன வயதில் நடத்திய லீலைகள்!

படிக்கப் பிடிக்காமல் சென்னைக்கு ஓடி வந்தார் கூலி வேலை பார்த்தார்; பட்டினி கிடந்தார

சினிமாவில் சேர ஆசை வந்தது எப்படி?

திரைப்படக் கல்லூரியில் 2 ஆண்டு நடிப்பு பயிற்சி

பாலசந்தருடன் முதல் சந்திப்பு

கண்டக்டர் வேலையில் இருந்து "டிஸ்மிஸ்''

3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார், பாலசந்தர் `தமிழை கற்றுக்கொண்டால், எங்கேயோ கொண்டுபோய் விடுவேன்!'

"அபூர்வ ராகங்கள்'' முதல் நாள் படப்பிடிப்பு

சிவாஜிராவ் என்ற பெயருக்கு பதிலாக `ரஜினிகாந்த்' என்று பெயர் சூட்டினார், பாலசந்தர


"அபூர்வராகங்கள் படத்தின் கதாநாயகன் நான்தான்!'' நண்பர்களிடம் ரஜினி விட்ட "ரீல்''

"மூன்று முடிச்சு'' படத்தில் முக்கிய வேடம் "அவர்கள்'' படம், நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தத


1977-ல் 15 படங்களில் நடித்தார், ரஜினிகாந்த் திருப்புமுனை ஏற்படுத்திய படம் "புவனா ஒரு கேள்விக்குறி''  


பாரதிராஜாவின் "16 வயதினிலே'' `பரட்டை' வேடத்தில் முத்திரை பதித்தார், ரஜினி

புதுமையான வேடத்தில் நடித்த `ஆயிரம் ஜென்மங்கள்' ரஜினியின் முதல் வண்ணப்படம்

ஒரே ஆண்டில் (1978) 20 படங்கள்! இரவு - பகலாக நடித்தார


கதாநாயகனாக நடித்த முதல் படம் - "பைரவி'' கலைஞானம் தயாரித்த படம


"சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்!'' ஏற்க மறுத்தார், ரஜினிகாந்த்!

ஸ்ரீதரின் `இளமை ஊஞ்சலாடுகிறது' ரஜினி - கமல் போட்டி போட்டு நடித்தனர்

திரைக்காவியமாக அமைந்த "முள்ளும் மலரும்'' தங்கைப் பாசம் மிக்கவராக ரஜினி நடித்தார்

"ரஜினிக்கு கதாநாயகன் வேடமா?' கூடவே கூடாது!' மகேந்திரனிடம் எதிர்ப்பு தெரிவித்த பட அதிபர்!

மீண்டும் பாலசந்தர் டைரக்ஷனில் ரஜினி `தப்புத்தாளங்கள்' படத்தில் சரிதாவுடன் நடித்தார்

சிவாஜியுடன் ரஜினி நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்''

இடைவிடாத படப்பிடிப்பால் சந்தித்த சோதனைகள்

ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பு

"இருண்ட காலம்'' பற்றி டைரக்டர் பாலசந்தர்

சூரியனை மறைத்த கிரகணம் நீங்கியது! புதுப்பொலிவுடன் நடிக்கத் தொடங்கினார், ரஜினி


`நான் வாழவைப்பேன்' படத்தில் ரஜினியின் அற்புத நடிப்பு சிவாஜியின் பாராட்டைப் பெற்றார்

குணச்சித்திர நடிப்பில் `ஆறிலிருந்து அறுபதுவரை' முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் வெற்றி

யானைகளுடன் ரஜினி நடித்த `அன்னை ஓர் ஆலயம்' சிறுத்தையை தோள் மீது சுமந்த அபூர்வ காட்சி

ரஜினிக்கு எம்.ஜி.ஆர். "அட்வைஸ்'' "உடம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்''

ரஜினியின் மாபெரும் வெற்றிப்படம் `பில்லா' இரட்டை வேடங்களில் அசத்தினார்

"ஜானி''யில் புதுமையான இரட்டை வேடம் ஸ்ரீதேவியுடன் இனிய காதல் காட்சிகள்

ஏவி.எம். தயாரித்த "முரட்டுக்காளை'' கதாநாயகன் - ரஜினி; வில்லன் - ஜெய்சங்கர்

ரஜினி இதயத்தில் காதல் மலர்ந்தது! பேட்டி காண வந்த லதாவை மணக்க விருப்பம்

லதாவுடன் திருமணம்: ரஜினி அறிவித்தார் முதலில் செய்தி வெளியிட்ட `தினத்தந்தி'க்கு பாராட்டு

திருமண அழைப்பிதழ் அடிக்காதது ஏன்? திருமணத்துக்கு நிருபர்கள் ஏன் வரக்கூடாது? தேன் நிலவுக்கு வெளிநாடு போவீர்களா? சரமாரி கேள்விகளுக்கு ரஜினியின் அதிரடி பதில்கள்!

ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் நடந்தது அன்றே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

திருமணத்துக்குப்பின் ரஜினிகாந்த்

காதலுக்கு அஸ்திவாரம் போட்ட `தில்லுமுல்லு' படம் வெற்றி நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தார


அப்பா-மகனாக ரஜினி நடித்த "நெற்றிக்கண்'' புதுமையான கதை; நடிப்பில் திருப்புமுனை

ஏவி.எம். தயாரித்த "போக்கிரிராஜா'' 148 நாள் ஓடியது

தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ரங்கா'' ரஜினி-ராதிகா இணைந்து நடித்தனர்

ரஜினி நடித்த காவியம் `எங்கேயோ கேட்ட குரல்' படம் முழுவதும் வெறும் வேட்டி-சட்டையுடன் நடித்தார்!

மூன்று வேடங்களில் அசத்திய "மூன்று முகம்''

"சண்டைக்காட்சிகளில் அசர வைத்தார்'' டைரக்டர் ஜெகந்நாதன் வெளியிடும் தகவல்கள்

ஏவி.எம் தயாரித்த `பாயும் புலி' "கராத்தே'', "குங்பூ'' சண்டைக்காட்சிகளில் ரஜினி

ரஜினி நடித்த இந்திப்படம் "அந்தா கானூன்'' மகத்தான வெற்றி இந்திப்பட உலகில் வெற்றி உலா

பெயர் மாற்றத்துடன் வெளிவந்த "நான் மகான் அல்ல'' கண்ணாடி மாளிகையில் பயங்கர சண்டைக்காட்சி!

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த `கை கொடுக்கும் கை' முன்பு வில்லனாக நடித்த ரஜினி, இப்போது கதாநாயகனாக நடித்தார்

தனிச்சிறப்பு வாய்ந்த "அன்புள்ள ரஜினிகாந்த்'' ரஜினியாகவே ரஜினி நடித்த படம்

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் உருவானது எப்படி? பட அதிபர் தமிழ்மணி வெளியிடும் தகவல்கள்

ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

ஏவி.எம். தயாரித்த `நல்லவனுக்கு நல்லவன்' சிறந்த நடிப்புக்காக ரஜினி பல விருதுகள் பெற்ற படம

ரஜினியின் 100-வது படம் "ஸ்ரீராகவேந்திரர்'' ஸ்டைல்களை ஒதுக்கி விட்டு, மகானாகவே வாழ்ந்து காட்டினார்்

சிவாஜி - ரஜினி நடித்த "படிக்காதவன்'' 210 நாட்கள் ஓடியது

பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' கவுதமி அறிமுகமான படம்

ரஜினி - பிரபு இணைந்து நடித்த "தர்மத்தின் தலைவன்'' படத்தில் குஷ்பு அறிமுகம்

ஆங்கிலப் படத்தில் நடித்து ரஜினி சாதனை! சொந்தக் குரலில் பேசினார்!

ரஜினியின் 125-வது படம் "ராஜாதி ராஜா'' 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகள்

"ஏவி.எம்''மின் "ராஜா சின்ன ரோஜா'' கார்ட்டூன்களுடன் ரஜினி நடித்தார்! 80 ஆயிரம் படங்களை வரைந்து உருவாக்கிய காட்சி!

சத்யா மூவிஸ் வெம்ளி விழா ஆண்டில் ரஜினி நடித்த வெம்ளி விழா படம் - "பணக்காரன்''

கூடு விட்டு கூடு பாய்ந்தார், ரஜினி! எமலோகத்தில் கலாட்டா!

அப்பாவியாக வாழ்ந்து காட்டிய "தர்மதுரை''

ரஜினிக்கும், கமலுக்கும் மோதலா?

தொழிலில் போட்டி இருந்தாலும் "எங்கம் நட்பை யாராலும் பிரிக்க முடியாது'' கமலஹாசன் பேட்டி  

கே.பாலசந்தர் - ரஜினி அபூர்வ சந்திப்பு மனம் விட்டுப் பேசினார்கம்

"என் கடவுளுக்கு மதம் கிடையாது'' ஆன்மீகம் பற்றி ரஜினி விளக்கம


மணிரத்னம் டைரக்ஷனில் ரஜினி நடித்த "தளபதி'' 100 தியேட்டர்களில் ஏக காலத்தில் திரையிடப்பட்டத


"படப்பிடிப்பின்போது ரஜினி கடலில் மூழ்கினார்" நடிகை சுமித்ரா வெளியிட்ட தகவல்

இல்லறமா? துறவறமா? ரஜினி ஆலோசனை

ரஜினியுடன் விஜயசாந்தி இணைந்து நடித்த `மன்னன்' 200 நாட்கள் ஓடிய படம்

"உங்கள் மனைவியை கோபித்துக் கொள்வீர்களா?" ரஜினியிடம் சிவகுமார் கேள்வி

ரஜினிக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?

ரஜினி கட்டிய திருமண மண்டபம் கருணாநிதி திறந்து வைத்தார் 14-12-1989

ரஜினியின் பெரிய வெற்றிப்படம் `அண்ணாமலை' வசூலைக் குவித்து வெள்ளி விழா கொண்டாடியது

ரஜினியுடன் சில அனுபவங்கள் ஏவி.எம்.சரவணன் வெளியிடும் தகவல்கள்

ராகவேந்திரர் மீது ரஜினிக்கு ஏற்பட்ட கோபம்

பழைய நண்பர்களை மறக்காத ரஜினி! "நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் அவர்''

`நான் நடிகனாக காரணம் - என் உயிர் நண்பன் ராஜ்பகதூர்' ரஜினி நெகிழ்ச்சி பேட்டி


எஸ்.பி.முத்துராமன் �னிட்டின் உதவிக்காக ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''

மனைவி மறைந்த துயரத்தை அடக்கிக்கொண்டு `பாண்டியன்' படத்தை முடித்து வெளியிட்டார், முத்துராமன்

ரஜினிக்கு குஷ்பு பாராட்டு `நல்ல நடிகர்; நல்ல மனிதர்'

ஆர்.வி.உதயகுமார் டைரக்ஷனில் ஏவி.எம். தயாரித்த "எஜமான்'' வெள்ளி விழா கொண்டாடியது

`ரஜினிக்குள் ஒரு டைரக்டரே இருக்கிறார்' பாரதிராஜா புகழாரம


"மனித நேயம் மிக்கவர்கள் தமிழர்கள்'' ரஜினி நெகிழ்ச்சி

நண்பர்களுக்கு உதவ ரஜினி எடுத்த படம் `வள்ளி' பிரியாராமன் அறிமுகம்

நாட்டாமை படத்தின் தெலுங்குப் பதிப்பு ரஜினி நடித்த `பெத்தராயுடு' வெற்றி விழாவில் தங்கக்காப்பு அணிவித்தார், நாகேசுவரராவ்

மீனா, ரோஜா 2 கதாநாயகிகளுடன் ரஜினி நடித்த "வீரா'' நகைச்சுவை கலந்த வெற்றிப்படம்

தடையை மீறி தயாரான "உழைப்பாளி''

ரஜினியுடன் திரைப்பட விநியோகஸ்தர்கள் சமரசம்

ரஜினி எங்கே? டைரக்டர் பி.வாசு தவிப்பு! ஓட்டலில் ரூம் கிடைக்காததால் காருக்குள் படுத்து தூங்கினார்

ரஜினியின் வெற்றி மகுடத்தில் ஒரு வைரம் "பாட்ஷா''

"பாட்ஷா'' வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

பாட்ஷா விழாவில் ரஜினி பேச்சு எதிரொலி ஆர்.எம்.வீரப்பன் பதவி இழந்தார்

ரஜினியின் "முத்து'' அபார சாதனை! ஜப்பானில் 23 வாரம் ஓடியது

"முத்து'' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி? டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி

தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி ஆதரவு டெலிவிஷனில் பிரசாரம்

ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் ரஜினி நடத்தி வைத்தார


8 பேருக்கு உதவ ரஜினி தயாரித்த "அருணாச்சலம்'' லாபத்தை பங்கிட்டுக் கொடுத்தார்

`சரியானவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவுபவர்' ரஜினி பற்றி பட அதிபர் கலைஞானம்

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மகத்தான வெற்றிப்படம் "படையப்பா'' சென்னையில் 30 வாரம் ஓடியத


21 ஆயிரம் அடியில் உருவான "படையப்பா'' 2 இடைவேளையுடன் படத்தை திரையிடலாமா? கமலஹாசனிடம் யோசனை கேட்டார், ரஜினி!

"பாபா'' - எதிர்பாராத தோல்வி

காவிரி தண்ணீர் பிரச்சினை ரஜினிகாந்த் உண்ணாவிரதம் `நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி கொடுக்கத் தயார்' 13-10-2002

2004 பாராளுமன்ற தேர்தல்: பாரதீய ஜனதாவுக்கு ரஜினி ஆதரவு

சரித்திர சாதனை படைக்கும் "சந்திரமுகி'' உருவானது எப்படி? டைரக்டர் பி.வாசு வெளியிடும் தகவல்கள்

"சந்திரமுகி''யில் சிம்ரனுக்கு பதில் ஜோதிகா நடித்தது ஏன்?

தமிழ்நாட்டில் ரஜினிக்கு 30 ஆயிரம் ரசிகர் மன்றங்கள்! வெளிநாடுகளிலும் ரசிகர்கள் குவிகிறார்கள்

"ரஜினிகாந்த் சிறந்த நடிகர்; மாமனிதர்'' நட்சத்திரங்கள் மனம் நெகிழ்ந்த பேட்டி

பிரமாண்டமாக உருவாகியுள்ள "சிவாஜி'' ரஜினி படமா? ஷங்கர் படமா? டைரக்டர் ஷங்கர் வெளியிட்ட "ரகசியங்கள்''

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் குடும்பம்

`சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஜாதகம் அரசியலா? ஆன்மீகமா? சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தெரியும்

  Join Us

Rajini's History (Part 81)                         

எஸ்.பி.முத்துராமன் னிட்டின் உதவிக்காக
ரஜினி நடித்துக் கொடுத்த "பாண்டியன்''


டைரக்டர் எஸ்.பி.முத்துராமனுக்கும், அவருடைய குழுவைச் சேர்ந்த 14 பேருக்கும் உதவுவதற்காக ரஜினிகாந்த் எடுத்துக் கொடுத்த படம் "பாண்டியன்.''

டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் 75 படங்களை டைரக்ட் செய்தவர். ரஜினியின் அதிக படங்களை (25) டைரக்ட் செய்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

னிட்

எஸ்.பி.முத்துராமன் னிட்டில், கேமராமேன் (விநாயகம்), எடிட்டர் (ஆர்.விட்டல்), மேக்கப்மேன் (முஸ்தபா) மற்றும் தயாரிப்பு நிர்வாகி, இணை டைரக்டர், உதவி டைரக்டர் என்று 15 பேர் உண்டு. இவர்கள், எந்த ஒரு படத்துக்கும் குழுவாகவே பணிபுரிவார்கள். வேறு டைரக்டர்களிடமோ, தயாரிப்பாளர்களிடமோ போய் பணியாற்றுவதில்லை.

சுமார் 15 ஆண்டுகள் எஸ்.பி.முத்துராமனுடன் இந்த னிட் பணிபுரிந்தது.

சினிமா கலைஞர்களும் சரி, தொழில் நுட்ப கலைஞர்களும் சரி, அவர்கள் புகழோடு இருக்கும் வரைதான் வருமானம். பிற்காலத்துக்கு உதவ "பென்சன்'' எதுவும் கிடையாது.

ரஜினி உறுதிமொழி

தன்னுடன் இணைந்து பணியாற்றிய 14 பேர்களின் எதிர்காலத்துக்கும் உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று முத்துராமன் எண்ணினார். அப்போது முத்துராமன் இயக்கத்தில் "ராஜா சின்ன ரோஜா'' படத்தில் ரஜினி நடித்துக்கொண்டிருந்தார். அவருடன் முத்துராமன் இதுபற்றிப் பேசினார்.

"என்னுடன் இணைந்து பணியாற்றிய 14 பேருக்கும் உதவ விரும்புகிறேன். எங்களுக்காக நீங்கள் ஒரு படம் செய்து கொடுக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

"நீங்கள் சொன்னதை என் மனதில் வைத்துக் கொண்டேன். தக்க சமயத்தில் உங்களுக்காகவும், உங்கள் னிட்டுக்காகவும் ஒரு படம் செய்து கொடுக்கிறேன்'' என்றார்.

புதிய டைரக்டர்

இந்த சமயத்தில் ஏவி.எம்.மின் "ராஜா சின்ன ரோஜா'' படப்பிடிப்பு முடிந்தது.

அதுவரை, ரஜினி நடித்த ஏவி.எம். படங்கள் அனைத்தையும் எஸ்.பி.முத்துராமன்தான் டைரக்ட் செய்தார். அடுத்த படத்துக்கு, ஒரு மாறுதலுக்காக புது டைரக்டரை போடலாம் என்று சிலர் சரவணனுக்கு யோசனை தெரிவித்தார்கள்.

இதை சரவணன் ஏற்கவில்லை. "ரஜினியை வைத்து முத்துராமன் டைரக்ஷனில் நாம் எடுத்த எல்லா படங்களும் வெற்றிகரமாக ஓடியிருக்கின்றன. அப்படியிருக்க, ஏன் மாற்றவேண்டும்'' என்று கேட்டார்.

எனினும், மாறுதல் தேவை என்ற கருத்து ஏவி.எம். ஸ்டியோவில் பலருக்கும் தொடர்ந்து இருந்து வந்தது.

ரஜினி கண்ட தீர்வு

இந்த விஷயம் ரஜினியின் காதுக்கு எட்டியது. அவர் இதுபற்றி சரவணனிடம் பேசினார்.

"ரசிகர்கள் மாறுதலை விரும்புவது இயற்கை. முத்துராமன் யதார்த்தவாதி. மிக நல்ல மனிதர். இதுபோன்ற யோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்பார். நான் அவரிடம் பேசுகிறேன்'' என்றார், ரஜினி.

அப்போது சரவணன் ஒரு யோசனை சொன்னார். "முத்துராமன் னிட்டுக்காக ஒரு படம் செய்து கொடுப்பதாக ஏற்கனவே நீங்கள் தெரிவித்து இருக்கிறீர்கள். அந்தப் படத்தை முதலில் செய்து கொடுத்து விடுங்கள். அதன் பிறகு ஏவி.எம். படத்தில் நடிக்கலாம். அதுதான் நியாயமானதாக இருக்கும்'' என்பதே சரவணன் தெரிவித்த யோசனை.

"ஓ.கே. இதுதான் நல்ல யோசனை'' என்றார், ரஜினி.



பாண்டியன்

இதன் பிறகு ரஜினியும், எஸ்.பி.முத்துராமனும் சந்தித்துப் பேசியதில், முத்துராமனின் னிட்டுக்காக "பாண்டியன்'' என்ற படத்தைத் தயாரிப்பது என்று முடிவாயிற்று.

"என்ன பேனரில் படத்தை தயாரிக்கலாம்?'' என்று முத்துராமன் கேட்டபோது, "உங்கள் தாயார் பெயரையே வையுங்கள்'' என்று ரஜினி கூறினார். அதன்படி "விசாலம் புரொடக்ஷன்ஸ்'' என்ற பெயரில் படக்கம்பெனி தொடங்கப்பட்டது.

பொதுவாக, முத்துராமன் டைரக்ஷன் பணியை தவிர வேறு எந்த பணியிலும் தலையிடுவதில்லை. ஆனால் தன் னிட்டுக்காக "பாண்டியன்'' படத்தைத் தயாரித்ததால், அதன் தயாரிப்பாளராகவும் செயல்பட வேண்டியிருந்தது.

இந்தப் பொறுப்பை சேர்த்து கவனிப்பதில் உள்ள சிரமங்களை ரஜினியிடமும், சரவணனிடமும் முத்துராமன் கூறினார். "நீங்கள் கவலைப்படவேண்டாம். நீங்கள் டைரக்ஷனில் கவனம் செலுத்துங்கள். மற்ற வேலைகளை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம'' என்று ரஜினியும், சரவணனும் கூறினார்கள்.

அதன்படி தயாரிப்பு பணிகளின் பளுவை அவர்கள் ஏற்றார்கள். குறித்த காலத்தில் படத்தை எடுத்து முடிப்பதற்கான ஏற்பாடுகளை ரஜினி செய்தார். படச்செலவுகள், பட விற்பனை போன்ற விஷயங்களை சரவணன் கவனித்துக் கொண்டார்.

இதனால், எஸ்.பி.முத்துராமன் வேறு கவலைகள் இன்றி படத்தின் டைரக்ஷனில் மட்டும் கவனம் செலுத்த முடிந்தது.

குஷ்பு

இந்தப் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடித்தார். முத்துராமன் டைரக்ட் செய்த படத்தில் அறிமுகம் ஆனவர் என்பதால், அவரிடம் குஷ்பு மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். எனவே, குறைந்த சம்பளத்தில் நடிக்க முன்வந்தார்.

படம் வேகமாக வளர்ந்தது. 1992 தீபாவளிக்கு (அக்டோபர் 25) படம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது.

படம் கிட்டத்தட்ட தயாராகி முடிந்துவிட்டது. ஒரு சில வேலைகளே பாக்கி.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. படம் வருவதற்கு 10 நாட்களே இருந்த நிலையில், டைரக்டர் எஸ்.பி.முத்துராமனின் மனைவி கமலா திடீரென்று காலமானார்.

மனைவியின் மரணம் முத்துராமனை வெகுவாக பாதித்தது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், படத்தை திரையிட எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்த விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கையைப் பிசைந்தனர்.

"படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடலாம்'' என்று ரஜினியும் கூறினார்.

எல்லாவற்றையும் யோசித்துப்பார்த்த முத்துராமன், ஒரு முடிவுக்கு வந்தார்.

(முத்துராமன் எடுத்த முடிவு - நாளை)

ரஜினி `சுயதரிசனம்'

"ஆரம்ப காலங்களில் நான் முரட்டுத்தனமாகப் பலரிடம் நடந்து கொண்டதை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன். ஆனால் அதற்குக்காரணம், குறுகிய மனப்பான்மை அல்ல. அவர்களின் அணுகுமுறையும் ஒரு காரணம்.''

- ரஜினிகாந்த்.


Next Page>>> Part 82



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information