Panju Arunachalam (Writer)
ரஜினியின் திரையுலக
முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் பஞ்சு அருணாசலம்
அப்போது ஒரு பேட்டியில் கூறியதாவது:-
"உடல் நலம் சரி இல்லாதபோதும், படப்பிடிப்பை ரத்து செய்யாமல்
நடித்தவர் ரஜினி. இதற்காக அவரை நான் கடிந்து கொண்டது உண்டு.
![](http://www.rajinifans.com/history/images/rajini75.jpg)
அப்போதெல்லாம், "சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டாமா
சார்! தூக்கம் என்ன வேண்டிக் கிடக்கிறது!'' என்பார்.
தயாரிப்பாளர், டைரக்டர்களின் மனதை வருத்தக்கூடாதே என்று தன்
உடலை வருத்திக்கொண்டார்.
ஓய்வே இல்லாமல் நடித்ததால்தான் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது.
அவரைப்போல் பரபரப்பான - சுறுசுறுப்பான நடிகரைப் பார்ப்பது
அபூர்வம்.''
இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.
|