சென்னை, ஜூலை 1- அமைதியைத் தேடி ஆன்மீக வழியில் இளையராஜா பின்னால் நானும் செல்கிறேன் என்று நடிகர் ரஜpனிகாந்த் பேசினார். மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகத்துக்கு சிம்பொனி இசை அமைத்து இசையமைப்பாளர் இளையராஜா பாடி உள்ளார். இந்த இசை குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தலைமை தாங்கி இசை குறுந்தகடை வெளியிட பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். விழாவில் Nப்பர் ஸ்டார் ரஜpனிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நிறைய பேசனும் என்று நினைத்தேன். ஆனால் வைகோ பேச வேண்டியது இருக்கிறது. வைகோவின் கர்ஜனைகளை நான் படித்திருக்கிறேன். பார்க்கவில்லை. இன்றைக்குத்தான் பார்க்கப்போகிறேன். அதிலும் ஆன்மீக மேடையை அவருடன் பகிர்ந்து கொள்ள ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. 3 நாளைக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து 5 வயது பையனுடன் ஒரு பாட்டி என்னைப் பார்க்க அனுமதி கேட்டாங்க. அந்த பையன் ரஜினியைக் காட்டுவதாக இருந்தால் இந்தியாவுக்கு வருகிறேன், இல்லாட்டி வரமாட்டேன்னு அடம் பிடித்ததாகச் சொன்னாங்க. சரி அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னேன். சொன்னபடி அவங்க வந்தாங்க. நான் வரவேற்று பேசிக்கிட்டு இருந்தேன். அப்போ அந்த பையன் -வேர் இஸ் ரஜினி, ரஜினி எங்கே? வரச்சொல்லுங்க என்று கேட்டான். நான்தான் ரஜினின்னு சொன்னா நம்பவேமாட்டேன்கிறhன். படா பேஜராப் போச்சு. ரஜினியை வரச்சொல்லுங்க, நீங்க ரஜினியின் அப்பா என்று தொடர்ந்து அடம் பிடிக்கிறhன். சரின்னு பார்பரை வரச்சொல்லி தாடியை எல்லாம் எடுத்து, டை அடிச்சி அவன் முன்னாலே வந்து நின்னேன். அப்பதான் ரஜpனின்னு நம்பினான். போட்டோ எடுத்துக்கிட்டான். அப்படி இல்லைன்னா நானும் இங்கே இளையராஜா போல வெள்ளை தாடியிலதான் வந்திருப்பேன். (தாடி இல்லாமல் தலைக்கு டை அடித்து வந்திருந்தார்). அப்ப அந்த பாட்டி என்னிடம் -ஏன் இப்படி இருக்கீங்க, பிளேடுக்கு என்ன செலாவாகப்போகிறது? ஏன் டை அடிச்சிட்டு இருக்கக் கூடாது? எல்லா பணத்தையும் பொண்டாட்டி கிட்டேயே கொடுத்திடுறீங்களா? பெண்டாட்டி கிட்டே கொடுக்கிறதும் திருப்பதி உண்டியலில் போடுறதும் ஒண்ணுதான். திரும்பக்கிடைக்காது என்று சொன்னாங்க. அப்புறம் ஏன் நிம்மதி வேண்டும், அமைதிவேண்டும் என்று எங்கெல்லாமோ போகிறதாவும் செய்தி வருதேன்னு கேட்டாங்க. இப்போ அவங்களுக்கு பதில் சொல்கிறேன். பத்திரிகையிலே வரும். அதை அவங்க பார்ப்பாங்க. சந்தோஷம் என்பது வந்து போகக் கூடியது. சந்திரமுகி படம் 4 வாரம் ஹவுஸ்புல்லா ஓடிட்டிருக்குன்னு செய்தி வந்தப்போ சந்தோஷமாக இருந்தது. 6 வாரம், 8 வாரம் ஆனப்போ சந்தோஷம் இருந்தது. இப்போ அந்த சந்தோஷம் இல்லை. சந்தோஷம், பணம், புகழ், பெயர், இன்பம் எல்லாம் வந்து போகும். ஆனால் மறைந்துவிடும். அமைதி மட்டும் தான் நிலைத்து இருக்கும். அந்த அமைதியைத் தேடித்தான் இளையராஜா செல்கிறhர். ஆன்மீக வழியில் செல்கிறhர். அவர் பின்னால் நானும் செல்கிறேன்.