Chief Minister Karunanithi Felicitation Ceremony
(24 Sep 2006)

Entire Tamil cinema seemed to have gathered in Nehru Stadium just to grace the occasion by their mere star-studded presence to mark the cultural event in the pages of the history of Kollywood. On top of that performances by dudes and damsels of Tamil industry to express their gratitude towards the Chief Minister were visually extravagant and spectacular.
Rajini's speech was received with huge applause making the entire stadium to reverberate with applauds. Rajini stated that Karunandhi rules the hearts of every Tamil.
Rajini uttered that it is imperative to put up with rigorous criticisms and the Chief Minister has tremendous level of tolerance, which has elevated him to this position. He further said that people who seem to be joyful in the industry are not really happy and many of them pretend to be so.
He remarked that every Friday marks the destiny of a movie star. He requested that the offerings from the side of the Chief Minister should be received with wide arms.

தமிழ் திரை உலகம் சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
இங்கே கமலஹாசன் பேசும்போது கலைஞருக்கு ஞாபக சக்தி அதிகம் என்று சொன்னார். உடனே கலைஞர் என் காதில் எனக்கு ஞாபக சக்தி குறைவுதான் என்றார். அதனால்தான் கலைஞர் இந்த பாராட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்.
சினிமா துறையில் இருப்பவர்களைப் பற்றி வெளியில் இருக்கும் நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்கள். திட்டுகிறார்கள். அவர்களுக்கு சினிமாவில் நன்றாக இருக்கும் பத்து பேர்களைத்தான் தெரிகிறது. சிரமப்படுகிற, கஷ்டப்படுகிற பத்தாயிரம் பேர்களை தெரியவில்லை. நன்றாக இருப்பதாக பேசப்படும் 10 பேர்களில் கூட உண்மையாகவே நன்றாக இருப்பவர்கள் 5 பேர்கள்தான். சினிமாவில் கொடிகட்டி பறந்த மிகப்பெரிய மனிதர்களெல்லாம் இப்போது எங்கே? மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, விஜயா வாஹினி, மேகலா பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் எல்லாம் எங்கே? எத்தனை பெரிய தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் , நடிகர்கள் முகவரி தெரியாமல் போய் விட்டார்கள். நான் எல்லாம் எம்மாத்திரம்?
அமிதாப்பச்சன் வீடு ஏலத்துக்கு வந்தது. சோப்ராவிடம் அவர் வாய்ப்பு கேட்டு போனார். அவருக்கே இந்த நிலை என்றால் ரஜினி மாதிரி ஆளெல்லாம் எந்த மூலைக்கு?
தாய்க்கு கூட குழந்தை அழுதால்தான் பால் கொடுக்க தெரியும். ஆனால் குழந்தை அழாமலே இந்த தாய் (கருணாநிதி) பால் கொடுத்து இருக்கிறார். இவரை அடுத்து இனி ஆட்சிக்கு யார் வந்தாலும் 2006-ல் திரையுலகுக்கு கலைஞர் அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள். அதற்காக நானும் துணை நிற்பேன்.
அரசியல்வாதிகளுக்கே 5 வருடங்களுக்கு ஒருமுறைதான் ஜாதகம் மாறும். ஆனால் சினிமாவில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜாதகம் மாறும். திரையுலகுக்கு பல சலுகைகளை வாரி வழங்கிய முதல்வருக்கு லட்சம் முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
|