Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Panakaran (1990)

Panakkaran is a 1990 Indian Tamil-language action drama film starring Rajinikanth and Gautami. This film ran for more than 200 days and was declared a blockbuster hit film. It was dubbed in Telugu as Kondaveedi Puli and in Hindi as Dhanwan No. This film is a remake of Lawaaris (1981).

 

Plot

Sumithra is a famous singer and she is in love with Vijayakumar, a leading business man. She gets pregnant before wedding but Vijayakumar wants it to be aborted. Sumithra, who doesn't want to abort her child, decides to break up with Vijayakumar and she leaves with her brother Radharavi without informing Vijayakumar. Sumithra gives birth to a baby boy but Radharavi takes away the baby and gives it to Senthamarai asking it to be killed and lies to Sumithra that the baby was a stillborn. Sumithra leaves the hospital without informing anyone and even Radharavi doesn't know her whereabouts.

Meanwhile, Senthamarai, a drunkard decides to raise the baby on his own instead of killing with the intention of making some money with the help of baby. He names the baby as Muthu (Rajinikanth). Muthu gets a job in a factory which is owned by Saranraj, who happens to be the son of Vijayakumar and Sathyapriya. It is shown that Vijayakumar leads an unhappy life with his wife Sathyapriya in an estate. He feels guilty about his betrayal to Sumithra thinking she is dead and Radharavi uses this opportunity to make some money out of it. One day, Muthu breaks the liquor bottles with the hope of stopping Senthamarai's alcohol habit. But Senthamarai gets furious seeing this and reveals that Muthu is an orphan which makes Muthu worry and he leaves Senthamarai's home.

Muthu understands that workers are not paid properly in Saranraj's factory and decides to fight against it which angers Saranraj and Radharavi. Latha(Gautami), who happens to be Radharavi's only daughter falls in love with Muthu without knowing his true identity. Saranraj transfers Muthu to work in his estate present at a hill station with plans of killing him. Muthu meets Vijayakumar in the estate and gets into his good books. During a function, Saranraj plans to kill Muthu but accidentally Vijayakumar gets hurt and is in need of a rare blood group for surgery. Now it is revealed that Sumithra is alive and she stays in an ashram. Seeing the advertisement for blood requirement, she comes forward to save Vijayakumar. On the way, Saranraj and Radharavi tries to kill her so that Vijayakumar will also die. But Muthu saves her. Now it is revealed that Muthu is the son of Sumithra and they are united. Vijayakumar is saved and he marries Sumithra with the consent of Sathyapriya.

 

பணக்காரன்

பணக்காரன் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழிப் படம். இதில் ரஜினிகாந்த் மற்றும் கௌதமி நடித்தார்கள். இந்த படம் 200 நாட்களுக்கு மேல் ஓடியது மற்றும் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அறிவிக்கப்பட்டது. இது தெலுங்கில் கோண்டவீடி புலி என்றும் இந்தியில் தன்வான் எண் 1 என்றும் அழைக்கப்பட்டது. இந்த படம் அமிதாப் பச்சன் நடித்த லாராரிஸின் ரீமேக் ஆகும்.

கதை

சுமித்ரா ஒரு பிரபல பாடகி, அவர் ஒரு முன்னணி வணிக மனிதரான விஜயகுமாரை காதலிக்கிறார். திருமணத்திற்கு முன்பு அவள் கர்ப்பமாகிறாள், ஆனால் கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும் என்று விஜயகுமார் விரும்புகிறார். தனது குழந்தையை கருக்கலைக்க விரும்பாத சுமித்ரா, விஜயகுமாருடன் பிரிந்து செல்ல முடிவுசெய்து, விஜயகுமாரிடம் தகவல் தெரிவிக்காமல் தனது சகோதரர் ராதாரவியுடன் புறப்படுகிறார். சுமித்ரா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள், ஆனால் ராதாரவி குழந்தையை எடுத்துச் சென்று செந்தாமரை என்பவனிடம்  குழந்தையை கொடுத்து கொல்லும்படி கேட்டுக்கொள்கிறார். சுமித்ராவிடம் குழந்தை பிறக்கவில்லை என்று பொய் சொல்கிறார். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சுமித்ரா மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறார், ராதாரவிக்கு கூட அவள் இருக்கும் இடம் தெரியாது.

இதற்கிடையில், செந்தாமரை என்ற குடிகாரன் குழந்தையை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் குழந்தையை கொலை செய்வதற்குப் பதிலாக குழந்தையைத் தானாகவே வளர்க்க முடிவு செய்கிறான். அவர் குழந்தைக்கு முத்து என்று பெயரிடுகிறார். விஜயகுமார் மற்றும் சத்தியப்பிரியாவின் மகனாக இருக்கும் சரண்ராஜுக்கு சொந்தமான ஒரு தொழிற்சாலையில் முத்துக்கு ஒரு வேலை கிடைக்கிறது. விஜயகுமார் தனது மனைவி சத்தியப்பிரியாவுடன் ஒரு தோட்டத்தில் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை நடத்துகிறார் என்பது காட்டப்படுகிறது. சுமித்ரா இறந்துவிட்டதாக நினைத்து அவர் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறார். ராதாரவி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதில் இருந்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறார். ஒரு நாள், முத்து செந்தாமரை குடி பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று மது பாட்டில்களை உடைக்கிறார். ஆனால் செந்தாமரை இதைக் கண்டு கோபமடைந்து முத்து ஒரு அனாதை என்பதை அவனிடம் வெளிப்படுத்துகிறார், இது முத்துவை கவலையடையச் செய்கிறது. அதனால் அவர் செந்தாமரை வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

சரண்ராஜின் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பதை முத்து புரிந்துகொண்டு, அதற்கு எதிராக போராட முடிவு செய்கிறார், இது சரண்ராஜ் மற்றும் ராதாரவி ஆகியோரை கோபப்படுத்துகிறது. ராதாரவியின் ஒரே மகளாக இருக்கும் லதா முத்துவின் உண்மையான அடையாளத்தை அறியாமல் அவனை காதலிக்கிறாள். சரண்ராஜ் முத்துவை கொலை செய்ய திட்டமிட்டு ஒரு மலைவாசஸ்தலத்தில் இருக்கும் தனது தோட்டத்தில் வேலை செய்ய அவரை அங்கு மாற்றுவார். அங்கு முத்து விஜயகுமாரை எஸ்டேட்டில் சந்திக்கிறார். ஒரு விழாவின் போது, ​​சரண்ராஜ் முத்துவைக் கொல்ல திட்டமிட்டுள்ளார், ஆனால் தற்செயலாக அவருக்கு பதிலாக விஜயகுமார் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கு அறுவை சிகிச்சைக்கு அவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. இப்போது சுமித்ரா உயிருடன் இருக்கிறார், அவள் ஒரு ஆசிரமத்தில் தங்கியிருக்கிறாள் என்பது தெரியவந்துள்ளது. ரத்தத் தேவைக்கான விளம்பரத்தைப் பார்த்து, விஜயகுமாரைக் காப்பாற்ற அவள் முன்வருகிறாள். வழியில், சரண்ராஜும், ராதாரவியும் அவளை கொல்ல முயற்சிக்கிறார்கள், இதற்கிடையில் விஜயகுமாரும் உயிருக்கு போராடுகிறார். ஆனால் முத்து சுமித்ராவை அவர்களிடமிருந்து  காப்பாற்றுகிறான். முத்து சுமித்ராவின் மகன் என்பது தெரிய வந்துள்ளது, அவர்கள் ஒன்றுபடுகிறார்கள். விஜயகுமார் காப்பாற்றப்பட்டு சத்தியப்பிரியாவின் சம்மதத்துடன் சுமித்ராவை மணக்கிறார்.

உறவுகம் புனிதமானவை. அதை "பணம்'' என்ற போர்வைக்கும் போட்டு புதைத்து விடக்கூடாது என்பதை விளக்கிய படம்.

ரஜினிகாந்த்

 

அனாதை இளைஞனாக - தாயின் அவமானத்தை துடைக்கப் போராடும் இளைஞனாக ரஜினி அற்புதமாக நடித்தார்.

ஒரு கட்டத்தில் பெண் வேடத்தில் தோன்றி அசத்தினார்.

ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் கவுதமி. ரஜினி - கவுதமிகடிகார முட்களுடன் இணைந்து பாடும், "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது'' என்ற பாடல் புதுமையாக படமாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.

தனது நிலையை எண்ணி ரஜினி பாடுவதாக வரும், "நான் உம்ளுக்கும்ள சக்கரவர்த்தி; ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி'' என்ற பாடல் காட்சியில் ரஜினியின் உருக்கமான நடிப்பு நெகிழ வைத்தது.

படத்தில் வரும் "நூறு வருஷம் இந்த மாப்பிம்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கே வாழணும்'' என்ற பாடல், திருமண வீடுகளில் நிரந்தரமாகி விட்டது.

புவனா ஒரு கேம்விக்குறி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சுமித்ரா, இந்தப் படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

தயாரிப்பு

பணக்காரன் என்பது இந்தி திரைப்படமான லாவாரிஸ் இன் ரீமேக் ஆகும். இது ரஜினிகாந்த் மற்றும் பி.வாசு இணைந்த முதல் படமாகும். 1990 பொங்கலுக்கு வெளிவந்த இந்தப்படம், 25 வாரங்கம் ஓடி, வெம்ளி விழா கொண்டாடியது. படத்தின் வெற்றி இந்த ஜோடிக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் தூண்டியது. இந்த ஜோடி மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி மற்றும் குசேலன் ஆகியவற்றை இணைந்து உருவாக்கினார்கள்.




பணக்காரன் - ரசிகனின் விமர்சனம்

90களின் முதல் ரஜினி படம் என்ற பெருமை பணக்காரனை சாரும். 

 

இந்தியில் இருந்து  நிறைய அமிதாப்பச்சனின் படங்களை தமிழில் மறு ஆக்கம் செய்து ரஜினி நடித்திருப்பார். அவ்வாறு அவர் நடித்த கடைசிப் படம் பணக்காரன் தான்.  இந்தியில் பணக்காரன் laawaris என்ற பெயரில் 1981இல் திரைக்கு வந்து இருந்தது. 

 

இயக்குனர் பி. வாசு ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்த முதல் படமும் பணக்காரன் தான். 

 

80களின் பிற்பகுதி ரஜினி படப் பார்மூலாவைக் கொண்டே பணக்காரன் பெரும்பாலும் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் சூப்பர் ஸ்டார்க்கான நேரங்களும் படத்தில் காணக் கிடைத்தன என்றே சொல்லலாம். 

 

அன்றைய நிலையில் ரஜினி தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தப் பெரும் தங்கச் சுரங்கம் என்று தான் சொல்ல வேண்டும்.  குறைந்த செலவில் குறிப்பிட்ட நேரத்தில் தயாரிப்பு முடிந்து திரைக்கு வந்து வசூலை அள்ளிய ரஜினிகாந்த் படங்களில் ஒன்று தான் பணக்காரன். 

 

பொங்கல் வெளியீடாக வந்து சக்க போடு போட்டது. 

 

கதை சுருக்குமாய் ஒரு சில வரிகளில்  சொல்லி விட முடியும், பெற்றோர் இருந்தும் அனாதையாய் வளர்ந்து நிற்கும் ஒரு இளைஞனின் கதை தான் பணக்காரன். 

 

ஒரு சாதாரணக் கதைக்கு வாசு தமிழ் சினிமா ரசனைக்கு ஏற்ப காரம் குணம் மணம் சேர்த்து திரைக்கதை எழுதி இருக்கிறார். ரஜினிக்காக இன்னும் கொஞ்சம் மசாலா கொஞ்சம் ஆங்காங்கே கூடுதலாக தூவி இருக்கிறார். 

 

ஒரு பணக்கார இளைஞன் பணத்திமிரிலும் வாலிப முறுக்கிலும் ஒரு பெண்ணை ஏமாற்றி விடுகிறான். அந்தப் பெண் ஒரு பாடகி. அந்த பாத்திரத்துக்கு ஒரு பாட்டும் வைக்கப் பட்டிருக்கிறது.  அந்தப் பாட்டு திரைக்கதையில் ஒரு மெல்லிய நூலாக சம்பவங்களைக் கோர்க்க பயன்பட்டிருக்கிறது 

அதையும் பின்னால் விரிவாகப் பார்ப்போம்.அவளுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறக்கிறது. 

 

அவள் அண்ணன் குழந்தையைக் கொல்லச் சொல்லி ஒரு குடிகாரனிடம் கொடுத்து விடுகிறான். 

 

அந்த குடிகாரன் குழந்தையைக் கொல்லாமல் தன் சுய நலனுக்காக வளர்க்கிறான்.  

 

குழந்தை சுயம்புவாக வளர்கிறது.

 

இப்படி ஒரு முன் கதையோடு படம் துவங்குகிறது. 

 

அந்தக் குழந்தை யார் என்று சொல்ல வேண்டியது இல்லை, அது தான் படத்தின் நாயகன், ரஜினி. 

 

டைட்டில் ஓடும் போதே கதையும் நகர்கிறது. 

 

கதையில் ஒரு முடிச்சு விழுந்து விடுகிறது, ரஜினிகாந்த் வளர்ந்து எப்படி தன் தாய்க்கு நடந்த அநீதியைத் தட்டிக் கேட்க போகிறார் என்னும் ஒரு ஆர்வம் பார்வையாளர்களுக்கு  ஏற்பட்டு விடுகிறது. 

 

கதை அப்படியே வளர்ந்த ரஜினிகாந்த்க்கு வருகிறது,  ரஜினிக்கு இந்தப் படத்தில் பெயர் முத்து. 90களில் முத்து என்ற பாத்திரப் பெயர்களில் தான் ரஜினி அதிகம் நடித்து இருப்பார் என்பது ஒரு கூடுதல் தகவல். ( முத்து வீரப்பன் - வீரா,  முத்து - முத்து ) வழக்கம் போல் துடிப்பும் துள்ளலும் சேர்ந்து ரஜினி திரையில் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகிகிறார். 

 

ரஜினி அறிமுகம் ஆகும் போது பின்னால் ஒலிப்பது, அவர் தாய் பாடிய அதே பாட்டு தான்.  அந்த பாட்டைக் கேட்ட நிலையில் ரஜினி தன் மெய் மறந்து ஆடுகிறார்.  அதனால் அவர் வேலை போகிறது.  மேலாளரிடம் தன்னை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார் ரஜினி,  அந்த இடம் மெல்லிய ரஜினியிசம் தவழும் இடம், பார்க்கும் நமக்கு புன்னகை பூக்க வைக்கும் இடம், கெஞ்ச கெஞ்ச மிஞ்சும் மேலாளரைக் கடைசியில் ரஜினி போடா என்று உதறி செல்லும் போது அது தான் ரஜினி என்று சொல்ல வைக்கிறது. 

 

வேலை இழந்து வீட்டுக்கு வரும் ரஜினி தன் கொடுமைக்கார தந்தை என்ன சொல்லுவாரோ என்று பயப்படுகிறார். 

 

தந்தையோ காரணம் என்ன என்று விசாரிக்கிறார். பாடலைக் காரணமாய் சொல்லும் மகனிடம் எந்த கோபத்தைக் காட்டாமல், இதற்கு நீ ஆடத் தான் செய்வ என்று சொல்லி நகர்ந்து விடுகிறார். 

 

ரஜினி ஒரு சேரியில் வாழ்கிறார். அங்கு அவருக்கு இருக்கும் நண்பன் சபாபதி ( ஜனகராஜ் ).

சபா ரஜினியை பக்கத்து ஊரில் இருக்கும் புது பேக்டரிக்கு வேலைக்குப் போக ஆலோசனை சொல்லுகிறான். 

 

படத்தில் நாயகன், காமெடியன், மற்றும் சில முக்கியப் பாத்திரங்கள் அறிமுகம் ஆகி விட்ட நிலையில் இப்போது நாயகியை ரசிகனுக்கு காட்ட வேண்டிய நேரமல்லவா,  வருகிறார் நாயகி. 

 

ரஜினி படத்தில் அறிமுகம் ஆன கவுதமி தான் நாயகி, ரஜினியோடு அவருக்கு இது மூன்றாவது படம்.  இதில்  திமிர் பிடித்த பணக்காரப் பெண்ணாக  நாயகனுக்கு அறிமுகம் ஆகிறார். 

 

கார் ஓட்டி தன் பணியாளரை சேற்றில் தள்ளி விளையாடும் விநோதமான அறிமுகம். 80களின் ரஜினி பட நாயகிகள் பெரும்பாலும் இப்படித் தான் இருப்பார்கள்,  அவர்களைக் காதலித்து அடக்கி ரசிகனை மகிழ்விப்பார் ரஜினி. 

 

இதிலும் அதைத் தான் செய்கிறார். 

 

மோதலில் ஆரம்பிக்கும் ரஜினி -கவுதமி உறவு பின்னர் காதலில் முடிகிறது. மோதல் காதலுக்கு செல்லும் பயணம் சுவாரஸ்யமான காமெடி, சண்டைக் காட்சி, பாடல் காட்சி என்று இயக்குநர் நிறைத்து இருக்கிறார்.  ரசிகர்களுக்கும் அலுப்புத் தட்டாமல் ஓடுகிறது. 

 

அடுத்து படத்தின் இன்னொரு  வில்லன் பாத்திரமும்  நமக்கு அறிமுகம் ஆகிறது.  பழைய வில்லனும் சேர்ந்தே மீண்டும் வருகிறார். 

 

பழைய வில்லன் என்று இங்கு குறிப்பிடுவது ரஜினியின் மாமா பாத்திரம். சிறு வயதில் ரஜினியைக் கொல்லக் கொடுத்த அதே மாமா தான்.

ராவ் பகதூர் என்ற அந்த வேடத்தில் நடித்திருக்கிறார் நடிகர் ராதாரவி.  

 

" இந்த ராஆவ் பகதூர்" என்று அவர் தன் பெயரை நீட்டி சொல்லும் அழகு வெகுவாக ரசிக்கப் பட்டது.

 

அவர் தான் ரஜினியின் தாய் மாமன் என்பதும், அவர் ரஜினியைக் கொலை செய்ய முயன்றவர்  என்பதும் பார்வையாளர்களுக்குத் தெரிந்து விடுகிறது. 

 

திரையில் ரஜினிக்கோ ராதாரவிக்கோ  அது இன்னும் தெரியாது,  கவுதமி ராதாரவியின் மகள், அதனால் அவர் ரஜினிக்கு மாமன் மகள் என்பதும் படம் பார்ப்பவர்களுக்கு நிறுவப்படுகிறது. 

 

சரி இன்னொரு வில்லன் என்று சொன்னோம் இல்லையா அவரைp பார்ப்போம்,  அந்த இன்னொரு வில்லன் நடிகர் சரண்ராஜ், ராதாரவி குடும்பத்திற்கு பண உதவி செய்கிறான். அதற்கு காரணம் அவனுக்கு ராதாரவி மகள் கவுதமி மீது ஒரு கண். 

 

ராதாரவிக்கு இது தெரியும் அவருக்கும் இது சம்மதம் தான்,  

 

கவுதமிக்கு சரண்ராஜ் பேரில் பிடித்தம் இல்லை. சரண்ராஜ் ஒரு பெண் பித்தனாக காட்டப் படுகிறார். 

 

இந்த நிலையில் தான் ரஜினி கவுதமி காதல் மலர்கிறது.  சரண்ராஜ் ரஜினியை ஒழிக்க ஒரு வஞ்சக திட்டம் போடுகிறார். 

 

தன்னுடைய எஸ்டேட்க்கு வேலை உயர்வு கொடுத்து அனுப்புகிறார்.  ரஜினியும் சந்தோசமாக கிளம்புகிறார்.  

 

சரண்ராஜ் தன் எஸ்டேட்டில் வேலைப் பார்க்கும் ரவுடிகளை வைத்து ரஜினியைத் தீர்த்து கட்ட திட்டமிட்டு ரஜினியை அங்கு  அனுப்பி வைக்கிறார். 

 

ரஜினியாச்சே சொல்லவா வேண்டும், அங்கு எல்லாமே தலை கீழாக நடக்கிறது. ரவுடிகளை ரஜினி புரட்டி எடுக்கிறார். 

 

எஸ்டேட்ஐ தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். 

 

அங்கு ரஜினி சரண்ராஜ் தந்தையை சந்திக்கிறார்.  படம் பார்க்கும் நமக்கு தெரிந்து விடுகிறது,  மகனும் அப்பாவும் சந்திக்கிறார்கள் என்று.  ரஜினியின் தாயை தன் இளம் வயதில் ஏமாற்றி விட்டு வந்தவர் தான் இப்போது ரஜினி சந்திக்கும் சரண்ராஜ் தந்தை.  நடிகர் விஜயகுமார் அந்த வேடத்தை ஏற்றிருந்தார்.  

 

கதையில் எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உறவு என்று ஆகி விடுகிறது. 

 

இந்த நிலையில் கவுதமியும் ஜனகராஜும் ரஜினியைத் தேடி எஸ்டேட்க்கே வருகிறார்கள்.  ரஜினி கவுதமி காதல் மேலும் வளர்கிறது. 

 

சரண்ராஜ்க்கு ரஜினியின் ஆளுமை மீது பொறாமை பொங்குகிறது.  ரஜினியை எப்படியாவது வீழ்த்தியே தீர்வது என்று வெறி கொண்டு அலைகிறார். 

 

ரஜினியிடம் தங்கைப் போல் உரிமை கொண்டாடும் பெண் ஒருத்தியை  மானப்பங்கம் செய்து விட்டு, அந்த பழியை ரஜினி மீது போட முயல்கிறார். 

 

ரஜினி தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைத்து அந்த பெண்ணை சரண்ராஜ் மனைவியாக ஏற்று கொள்ள வைக்கிறார்.  இது அந்தக் காலத்து நீதி, தற்காலத்துக்கு பொருந்துமா என்பதை யோசிக்க வேண்டும். 

 

இதற்கு பின் ரஜினி தன் குடும்பக் குழப்பங்களை எவ்வாறு தீர்த்து எல்லாவற்றுக்கும் சுபம் சொல்லுகிறார் என்பது தான் படம். 

 

அதை இயக்குனர் தமிழ் சினிமா மற்றும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் கொடுத்து இருக்கிறார். 

 

படத்திற்கு இசை இளையராஜா, இதில் ராஜா ஒரு பாடல் எழுதியும் இருக்கிறார்.  இரண்டு பாடல்கள் பாடியும் இருக்கிறார்.

 

மற்ற பாடல்களை கவிஞர் பிறைசூடன் மற்றும் கவிஞர் புலமைப்பித்தன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள்.  

 

ரஜினிக்கு ராஜா குரல் கொடுத்து இருக்கும் தருணங்கள் வெகு குறைவு.  அதில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய  பாடல்  "நான் உள்ளுக்குள் சக்கரவர்த்தி" என்று தாராளாமாய் சொல்லலாம்.  

 

படத்தின் அறிமுக பாடலான "மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்" அந்த பாடலின் வரிகளுக்காக கொண்டாடப்பட்டது. இந்த பாடல் தான் இளையராஜா எழுதியது. 

 

"டிங் டாங் டிங் " பாடல், கச்சிதமாக செட் போட்டு எடுக்கப்பட்ட பாடல், அதில் நூற்றுக்கணக்கான சுவர் கடிகாரங்கள் அடுக்கி வைக்கப் பட்டு இருப்பது பார்க்க சிறப்பாக இருக்கும். 

 

"சைலென்ஸ்...காதல் செய்யும் நேரமிது " இது இன்னொரு காதல் பாடல், நூலகம் செட் அப் இல் ரசிக்கும் படி படமாக்கப் பட்டிருக்கும். 

 

பணக்காரன் படப் பாடல்களில் மிகவும் பேசப்பட்ட பாடல் "நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் " ஆகும். இந்தப் பாடல் படத்தில் மூன்று இடங்களில் வரும். 

 

மூன்றாவது முறை வரும் இடத்தில் ரஜினியின் மீது படமாக்கப்பட்டிருக்கும். பாடல் வரிகளுக்கு ஏற்ப ரஜினி போட்ட  வேஷங்கள் ரசிகர்களிடம்  பெருத்த வரவேற்பைக் குவித்தன.பாடல் வரிகள் தனிப் பெரும் பாராட்டைப் பெற்றது என்றால் பாடலுக்காக ரஜினி போட்ட சேட்டை கெட்டப்கள்  பாட்டை வேறு தளத்திற்கு கொண்டு போய் நிறுத்தி விட்டது என்றால் அது மிகையல்ல. 

 

இரு தலைமுறை ரஜினி ரசிகர்களின் திருமண நிகழ்வு பாடலாக இன்றளவும் இந்த பாட்டு நிலைத்து நின்று விட்டது, ரஜினிக்கும் ராஜாவுக்குமானப் பெருமை. 

 

சண்டைக்காட்சிகள் 

 

பணக்காரன் படத்தின் இன்னொரு முக்கிய அம்சம், படத்தில் அமைக்கப்பட்டிருந்த சண்டைக்காட்சிகள். 

 

மும்பை சண்டைக்காரர்கள் நிறைய பங்களிப்பு செய்து இருந்தனர். 

 

அப்போதெல்லாம் ரஜினி படத்தில் சண்டை என்றால், ரஜினி எல்லாரையும் அடித்து முடித்தப் பின், தனியே ஒரு 

ஃபைட்டர் ரஜினியோடு மோதுவார். அந்த ஃபைட்டர்கள் பெரும்பாலும் ரஜினியை விட உருவத்தில் பல மடங்கு பெருத்து இருப்பதாய் காட்டுவார்கள். 

 

டேவிட் கோலியாத் சண்டை பார்முலா அது. சிறுவர்களும், சிறுவர்களாய் மாறிய ரசிகர்களும், அய்யயோ ரஜினி என்னப் பண்ணப் போறாரு என்று நகம் கடித்துக் காத்து இருப்பார்கள். 

 

ரஜினி தன் "ரஜினி மேஜிக்" பண்ணி பின் கடைசியாக அந்த அரக்கர் போல் இருக்கும் பைட்டரை வீழ்த்தி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளுவார்.  பணக்காரனில் அப்படி ஒரு சண்டைக் காட்சி ஒர்க் ஷாப் பின்னணியில் வரும். 

 

"டேய் புடிடா, இந்த பீடி முடியறதுக்குள்ள உன் தலைவனை முடிக்கிறேன்" என்று சண்டையை சொன்ன மாதிரியே முடிப்பார். 

 

ரஜினி படங்களில் 80களின் பிற்பகுதியில் இருந்து சண்டைக்காட்சிகளில் காமெடிக்கு பிரதான இடம் உண்டு.  சூப்பர் ஸ்டார் பார்முலா அது. குழந்தை ரசிகர்கள் உருவான நேரம் அது,  ரஜினி பட சண்டைகளில் ரத்தம் அதிகம் ஆனால் காமெடித் தெறிக்கும். ரஜினியின் உடல் மொழி வன்முறையின் தீவிரத்தைக் குறைத்து காட்டும். 

 

எஸ்டேட் ரவுடிகளோடு ரஜினி சண்டை போடும் காட்சி அப்படி ஒரு சண்டை தான். பல மொழி பேசும் ரவுடிகளிடம் ரஜினி முத்தலில் பம்முவது போல் பம்மி பின் 

 

தமிழ் நாடு கூப்பிடுதுன்னு அவங்களைக் கூப்பிட்டு தன் பன்மொழித் திறம் காட்டி அதிரடியில் இறங்கும் இடம் சரவெடி சண்டைக்காட்சி.

 

கிளைமேக்ஸ் சண்டைக் காட்சி சாகசம் நிறைந்து இருக்கும். ரோட்டில் நடக்கும் கார் சேஸ் மற்றும் குண்டு வெடிப்புக்கள் என பரபரப்புக்கு குறைவில்லாமல் இருக்கும். 

 

காமெடி காட்சிகள். 

 

ரஜினி தனித்து நின்றே காமெடியில் கொடியைப் பறக்க விட கூடிய திறமையாளர்,  இதில் அவருக்கு துணையாக ஜனகராஜ் வேறு. 

 

ஏரோபிளேனில் ஊருக்கு கிளம்பும் காட்சியில் ரஜினியின் ஸ்டைலும் காமெடியும் போட்டிப் போடும். கூட ஜனகராஜ் வேறு ரகளை செய்வார். 

 

கவுதமி அறிமுக காட்சியில் கார் டயர் கிழிக்கும் காட்சி இன்னொரு சிரிப்பு பட்டாசு. ஜனகராஜின் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்றைய சில அரசியல் மேடைகளின் மொழிப்பெயர்ப்புகளுக்கு எல்லாம் முன்னோடி என்று சொல்லலாம். மனிதர் வெளுத்து வாங்கி இருப்பார். 

 

நடிகர்கள் 

 

நடிகை சுமித்ரா ரஜினியின் தாய் வேடத்தில் வந்து இருக்கிறார் , படத்தை ஆரம்பித்து வைத்து பின்னர் முடித்து வைக்க வருகிறார். 

 

செந்தாமரைக்கு குடிகார வளர்ப்பு தந்தை வேடம், அதிகம் இல்லை என்றாலும் வரும் கொஞ்ச நேரத்திலும் தன் தேர்ந்த நடிப்பால்  முத்திரை பதிக்கிறார். குடிகாரனாக விக்கல் காட்டும் அவர் நடிப்பு யதார்த்தம். 

 

விஜயகுமார் ரஜினி மற்றும் சரண்ராஜ்க்கு தந்தையாக வருகிறார்.  தான் இளமையில் செய்த தவறை நினைத்து மருகும் ஒரு பாத்திரம். சிறப்பாக செய்து இருக்கிறார். 

 

விஜயகுமார்க்கு ஜோடியாக, அக்கால லேடீஸ் கிளப் மோகம் கொண்ட நாகரீக  பணக்கார தாயாக, சத்யப் பிரியா, விஜயகுமார் ரஜினி சத்யப்பிரியா ஆகியோர் இதே உறவுமுறை பிரதிபலிக்கும் வகையில் சில வருடங்கள் கழித்து இதே சத்யா மூவிஸ் தயாரிப்பில் நடித்து வந்த படம் தான் "பாட்ஷா".

 

நடிகை பூரணி ரஜினியை அண்ணன் என்று அழைக்கும் ஒரு பாத்திரம். கொஞ்சமே வருகிறார், சரண்ராஜால் பாலியல் பாதிப்புக்கு உள்ளாகி அவரையே மணக்கிறார். 

 

தியாகு, பாண்டு எல்லாம் சிறு சிறு வேடங்களில் வருகிறார்கள். 

 

கவுதமிக்கு பெரிய வேலை இல்லை. ரஜினியை சுற்றி சுற்று வந்து மோதுகிறார் பின் காதலிக்கிறார். ஜனகராஜ் உடன்  சேர்ந்து சரண்ராஜ் ஐ சந்திக்கும் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க வாய்ப்பும் பெறுகிறார். 

 

ஜனகராஜ் ஆங்கிலம் பேசியே சிரிக்க வைக்கிறார், கவுதமியின் உதவியாளராக வரும் போது அவர் போட்டிருக்கும் உடைகளும் சிரிப்பை வரவழைத்து விடுகின்றன. 

 

சரண்ராஜ் வில்லனாக வருகிறார், கெட்டு சீரழிந்த பணக்கார வீட்டுப் பிள்ளை வேடம்,  தன் சொந்த தந்தையைக் கொல்ல துணியும் ஒரு வில்லத்தனமானக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

 

ராதாரவி, ராவ் பகதூராக நரித்தனம், வெறித்தனம் கூடவே கொஞ்சம் காமெடி கலந்து வில்லத்தனம் செய்திருக்கிறார்.  

 

ரஜினிக்கு இது இன்னொரு ரஜினி படம். 

 

வழக்கம் போல படத்தை தன் தோளில் சுமக்கிறார். தன் துறு துறு திரை ஆளுமையால் ரசிகர்களைக் கட்டி இழுக்கிறார்.  தன் நகைச்சுவை நடிப்பால் மக்களை சிரிக்க வைக்கிறார்.  தன் யதார்த்த பாவங்களால் குடும்பங்களை ஆள்கிறார்.  மெல்லிய நடனங்களால் பார்ப்போரைப் பரவசப்படுத்துகிறார் 

 

ரஜினி இந்தப் படத்தில் நிறைய காட்சிகளில் கோட்டு போட்டே வருவார், அவரது உடைகள் சிறப்பாகவும் ஸ்டைலாகவும் இருக்கும் 

 

"நான் நினைச்சா உங்க இடத்துக்கு, அதாவது தலைவன் இடத்துக்கு ரொம்பவே சுலபமா வந்துடுவேன்.. ஆனா எனக்கு அது வேண்டாம், அந்த ஆசை இல்லை, நான் ஒரு தொண்டன், என்னிக்குமே தொண்டனா இருக்கவே ஆசைப்படுறேன் "

 

என்று தன் அரசியல் பார்வையை திரையில் சொல்லுகிறார். 

 

பணம் காசு இருப்பவன் எல்லாம் பணக்காரன் அல்ல யாருக்கு எல்லாம் நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் அமைகிறார்களோ அவர்கள் தான் உண்மையான பணக்காரன் என்று ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லி படத்தை முடித்து வைக்கிறார். 

 

பணக்காரன் தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

 

பணக்காரன் படம் வந்த ஆண்டு 1990

இயக்கம் - பி வாசு 

தயாரிப்பு  - இராம. வீரப்பன், சத்யா மூவிஸ் 

இசை - இளையராஜா 

ஒளிப்பதிவு  - எம். சி. சேகர் 

 

பணக்காரன் 90களின் முதல் ரஜினி படம் மட்டும் அல்ல சூப்பர் ஸ்டார் படமும் கூட. 

ரஜினி என்ற நடிகர் தன் ரசிகர்களுக்கு அன்பான அறிவுரைகள் கொடுக்க ஆரம்பித்து இருந்தார். அதை அவர் ரசிகர்களும் கேட்க ஆரம்பித்தார்கள். 

 

பணக்காரன் - ஒரு ஜாலியான சூப்பர் ஸ்டார் படம். 

 

- தேவ்

ஓவியம் : அறிவரசன்





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information