Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி பீட்டர் செல்வராஜ் (பாகம் 22)

ரஜினியிடம் உயர்வு, தாழ்வு மனப்பான்மையெல்லாம் கிடையாது. தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் அவர்.

படத்தில் அலெக்ஸ் பாண்டியனைச் சாராய முதலாளி ஆளவந்தார் (செந்தாமரை) காவல் நிலையத்தில் வந்து மிரட்டுவார். அதற்கு அலெக்ஸ் மசிய மாட்டார். மாறாக ஆளவந்தாரையே சிறையில் தள்ளுவார். இந்தக் காட்சியில் ரஜினிக்கும் செந்தாமரைக்கும் சற்று நீண்ட வாக்குவாதம் இருக்கும். அதில் ரஜினிக்குச் சற்று மாறுபட்ட கருத்து இருந்தது. "பீட்டர் சார்! போலீஸ்காரன் எதுக்கு சாராய முதலாளிகிட்ட விவாதம் பண்ணனும். பிடிச்சு உள்ளே தள்ள வேண்டியதுதானே?" என்று கேட்டார்.

நான் அதற்கு, "சாராய முதலாளி சாதாரண ஆளல்ல. பெரிய பின்னணி உடையவன். அவ்வளவு எளிதில் யாரும் அவனை உள்ளே தள்ள முடியாது என்று இருந்தால்தான் கதையில் சாராம்சம் வலுவாக இருக்கும்" என்றதை ரஜினி ஏற்றுக் கொண்டார். ரஜினியின் விருப்பப்படி அந்தக் காட்சியில் சில திருத்தங்களையும் செய்தேன்.

படமாக்கி முடித்தபின் ரஜினி என்னிடம் தனியாக "நான் உங்கள் வேலையில் குறுக்கிடுகிறேனா?" என்று கேட்டார்.

"நீங்கள் செய்வது தவறே அல்ல. ஏதோ வந்தோம் நடித்தோம் என்றில்லாமல் உங்கள் கேரக்டரில் ஈடுபாடு இருப்பதால்தான் உங்களுக்கு சந்தேகங்களும், யோசனைகளும் எழுகிறது. உங்கள் யோசனைகள் நியாயமானதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம். இல்லையென்றால் உங்களுக்கு விளக்கம் சொல்லி ஒத்துக் கொள்ளச் செய்கிறோம்" என்றபோது ரஜினி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

'மூன்று முகம்' படத்தில் ரௌடியாக மற்றொரு கேரக்டரில் ரஜினி வருவார். அந்த ரஜினியை கராத்தே தெரிந்த ராதிகா அடித்து கீழே தள்ளுவதாக ஒரு காட்சி இருந்தது. யூனிட்டிலிருந்து சிலர் ரஜினியிடம் "உங்களை ராதிகா அடித்துத் தள்ளுவதாக இருந்தால் உங்கள் இமேஜ் பாதிக்கும். ரசிகர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்கள். அப்படி நடித்தால் தவறாகுமோ என்று ரஜினியும் யோசித்திருக்கிறார்.

வாகினியில் படப்பிடிப்பு நடந்தபோது, ரஜினி என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். மேக்கப் ரூமில் இருந்த ரஜினியைப் பார்க்கச் சென்றேன். படத்தில் ராதிகா தன்னை அடிப்பது பற்றிய சந்தேகம் கேட்டார்.

படத்தில் இரண்டு கேரக்டர்களில் ஒன்று ஹீரோ இமேஜ் உடையது. மற்றொன்று செந்தாமரைக்கு உதவும் ரௌடியாக; வில்லத்தனமான வேடம். வில்லன் அடிபட்டால்தான் கேரக்டருக்கு பலம். அதனால் கராத்தே தெரிந்த ஒரு பெண்ணிடம் அடிபடுவதாக நடித்தால் தவறாகாது என்று காட்சியின் தன்மையைப் பற்றிச் சொன்னபோது, ரஜினி சரிதான் என்று ஒத்துக் கொண்டார்.

ரௌடி வேடத்தில் ரஜினி ஜாலியான வசனங்கள் சிலவற்றைப் பேசுவார். சாராயத்தைக் கையில் ஊற்றிக் குடிப்பார். அதெல்லாம் படப்பிடிப்பின் போது ரஜினியே சேர்த்துக் கொண்டது. அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது.

'சிவப்பு சூரியன்' படத்திற்கு கதாசிரியராக இருந்தபோது படப்பிடிப்பு நாட்களில் யூனிட்டிலுள்ளவர்களுடன் மதிய உணவில் அமர்ந்து கொள்வேன். சில சமயம் ரஜினி அழைப்பு விடுப்பார். "நம்மை மட்டும் அழைக்கிறாரே மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?" என்று. நான் சங்கடப்படுவேன். ஆனால் யூனிட்டிலுள்ளவர்கள் "போங்க சார். ரஜினி கூப்பிடும்போது ஏன் தயங்கறீங்க?" என்று அனுப்பி வைப்பார்கள்.

"இன்றைக்கு வீட்டிலிருந்து தலைக்கறி வந்திருக்கு. நீங்களும் சாப்பிடுங்க" என்று ரஜினி சாப்பிட வைப்பார். "லதா அனுப்பியிருக்காங்க" என்று தன் மனைவியைப் பற்றி பெருமையோடு சொல்வார்.

"அவங்க (லதா) பிராமணராச்சே. எப்படிச் செய்றாங்க?" என்று ரஜினியிடம் கேட்டபோது, "எனக்காக செய்றாங்க" என்று ரஜினி சொல்வதைக் கேட்டு, அவரது மனைவியின் செயலை நினைத்து வியப்படைவேன். பின்னர் ரஜினி வீட்டில் அசைவம் சாப்பிடுவதையே நிறுத்திக் கொண்டார். "லதாவுக்கு அசைவம் சமைப்பதிலிருந்து விடுதலை கொடுத்துவிட்டேன்" என்றார் ரஜினி. அந்தளவு மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில் அவருக்கு நிகர் அவரே.

ரஜினி தன் மனைவியைப் பற்றிப் பிறரிடம் பேசும்போது 'அவ, இவ' என்று குறிப்பிடுவதே இல்லை. 'அவங்க, இவங்க' என்று மரியாதையாகத் தான் சொல்வார்.

ஒருநாள் திருமண நாள் என்று விருந்துக்கு அழைத்தார். குறிப்பிட்ட சில பேர்களில் நானும் ஒருவனாக அவர் வீட்டிற்கு அழைக்கப்பட்டதில் பெருமை கொண்டேன். விருந்து முடிந்து முக்தா பிலிம்ஸ் காரில் சென்று விடலாமென்று கிளம்பினேன். வாசல் வரை வந்த ரஜினி என்னிடம் ஏதோ சொல்ல வந்தார். "சரி நாளை பேசிக் கொள்ளலாம்" என்று என்னை அனுப்பி வைத்தார்.

மறுநாள் படப்பிடிப்பில் ரஜினியைச் சந்தித்தபோது, "நேத்து உங்களோட டிரிங்க்ஸ் சாப்பிடலாம்னு நினைச்சேன். ஆனால் நேத்து எல்லா ஏற்பாடும் லதாவோடது" என்றார். "நல்லதுதான் நடந்திருக்கு" என்று பாராட்டினேன்.

நான் தயாரிப்பாளராக மாறியபின் ரஜினியைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் குறைந்துவிட்டன. அவருடன் நெருக்கமான நட்பு இருக்க வேண்டுமென்பதற்காக கதாசிரியராகவே இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறேன்.

எனது 'அம்மன் கோவில் கிழக்காலே' படத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு ரஜினி பரிசுகள் வழங்கியதும், 'நினைவே ஒரு சங்கீதம்' கேசட் வெளியிட்டதும் ரஜினி என் மீது கொண்டுள்ள பாசத்தின் பிரதிபலிப்புகளில் ஒன்றாகும்."

'பணம் படைத்தவன்' எம்.ஜி.ஆர். நடித்து 1965-ல் வெளிவந்த படம். இதில் அவருக்கு ஜோடி கே.ஆர்.விஜயா. இதன் படப்பிடிப்பு கல்கத்தாவில் சில நாட்கள் நடைபெற்றபோது எம்.ஜி.ஆருடன் கே.ஆர். விஜயாவும் கலந்து கொண்டு நடித்தார்.

எம்.ஜி.ஆருக்கு கல்கத்தாவிலுள்ள தமிழர்கள் வரவேற்பு கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதற்கு நன்றி தெரிவித்து பேசிய எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயாவையும் கூட்டத்தினரிடம் அறிமுகம் செய்து வைத்து 'சிறந்த நடிப்பாற்றல் உள்ள நடிகை' என்ற ரீதியில் உயர்வாகச் சொன்னார். அப்படி விஜயாவை எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்து வைத்திருக்க வேண்டியதில்லைதான். காரணம் அது எம்.ஜி.ஆருக்கான கூட்டம். கே.ஆர்.விஜயா அப்போது முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் ஒரு புதுமுக நாயகி. ஆனாலும் தான் சார்ந்த படப்பிடிப்புக் குழுவிலுள்ளவருக்கும் மரியாதை கிடைக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் பண்பு கே.ஆர்.விஜயாவை நெகிழச் செய்துவிட்டது. இந்த நிகழ்ச்சி பற்றி அவர் குறைந்தபட்சம் பத்து பதினைந்து முறையாவது தனது பத்திரிகைப் பேட்டிகளில் குறிப்பிட்டிருப்பார். தன் சினிமா அனுபவங்களை அவர் வெளிப்படுத்திய போதெல்லாம் இந்தச் சம்பவத்தைச் சொல்லாமல் இருந்ததில்லை.

இதே போன்ற பண்பு ரஜினிகாந்திற்கும் உண்டு. அதற்கு உதாரணமாக மதுரையில் நடைபெற்ற 'மூன்று முகம்' படத்தின் வெற்றி விழாவைப் பற்றிச் சொல்லலாம். அந்த விழாவில் பேசியவர்களெல்லாம் ரஜினியைப் பெரிதும் பாராட்டினார்கள். கடைசியாக பேசிய ரஜினி, "இங்கு எல்லோரும் என்னையே பாராட்டினார்கள். ஆனால் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்தான்" என்று மேடையில் பின் வரிசையில் இருந்த கதாசிரியர் பீட்டர் செல்வகுமாரை மேடையின் முன்புறம் வரச் செய்து, ரசிகர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதை செல்வகுமார் எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்கிவிட்டன. ரஜினியிடம், "என்ன இப்படி பண்ணிட்டீங்க?" என்று கேட்டார். "நான் செய்தது நியாயம்தானே?" என்று ரஜினி அவரிடம் பதிலுக்கு கேட்டார். செல்வகுமாருக்கு பேச நா எழவில்லை.

பீட்டர் செல்வகுமார் ரஜினியைச் சற்று வித்தியாசமாக நமக்கு அறிமுகம் செய்கிறார்.

''ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படம் 'பைரவி'. அதில் நான் வசன உதவியாளராக இருந்தேன். வேகமாக வசனம் பேசும் ரஜினிக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது என் வேலைகளில் ஒன்று.

'Time is Money' என்பதைப் போல் நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர் ரஜினி. அந்த உணர்வு ரஜினியிடம் இன்றைக்கும் உண்டு.

அப்போதே ரஜினியிடம் உயர்வு, தாழ்வு மனப்பான்மையெல்லாம் கிடையாது. தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் அவர்.

ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவே பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. 'பைரவி'யில் ரஜினிக்கு எதிரான வில்லன் வேடம் அவருக்கு. ரஜினிக்கு அது சங்கடம்தான். தன்னைவிட சீனியரான ஸ்ரீகாந்துக்கு மதிப்பளிக்க வேண்டி, படப்பிடிப்புக்கு வந்து அவர் முதலில் வேண்டிக் கொண்டது. "டைட்டிலில் ஸ்ரீகாந்த் சார் பெயர் முதலில் வரட்டும். என் பெயர் அடுத்து வந்தால் போதும்" என்பதைத்தான். ரஜினியின் இந்த சினிமா தைரியம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் மீது அதிக மதிப்பும், அன்பும் கொள்ளச் செய்தது.

'பைரவி' முதல் கட்ட படப்பிடிப்பு கிளைமாக்ஸில் ஆரம்பமானது. கையில் சவுக்கை எடுத்துக் கொண்டு ரஜினி ஸ்ரீகாந்தை விரட்டுவது மாதிரி காட்சி. அதற்காக கண்ணாடி முன் நின்று சவுக்கை கழுத்தில், இடுப்பில்..... இப்படிப் பலவிதமாக சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் ரஜினி.

அதையெல்லாம் பார்த்து 'ரஜினி என்ன இப்படிக் கிறுக்குத்தனமாக செய்கிறார்' என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் அந்தப் படப்பிடிப்பில் அவர் ரசிக்கும்படியாகச் செய்தபோதுதான் என் தவறை உணர்ந்தேன்.

முதலாளி ஸ்ரீகாந்திடம் விசுவாசமாக இருக்கிறார் ரஜினி. ஆனால் அதே முதலாளி தன் தங்கையைக் கற்பழித்துக் கொன்றவன் என்று அறியும் போது ஆவேசத்துடன், "நீ சுட்டு விரலைக் காட்டினப்ப நான் வேட்டை நாய் மாதிரி பாய்ஞ்சேன்" என்று சொல்வார்.

நான் ரஜினியிடம் அந்த வசனங்களைச் சொல்லி, சொடக்கு போட்டுக் காண்பித்த போது, "இப்படிச் செய்தால் சிவாஜி சார் மாதிரி இருக்குமே" என்றார். நான் அதற்கு "உங்களது வசனம் பேசும் வேகத்தில் சிவாஜி சார் சாயல் வராது" என்றேன். அதை ரஜினி ஒத்துக் கொண்டார்.

படத்தில் ரஜினிக்கு ஒரு கால் இருக்காது. அதற்காக கட்டையைக் கட்டிக் கொள்வார். அப்படிக் காலில் ஒன்றைக் கட்டிக் கொண்டு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில், காரமடை (கோவை அருகிலுள்ளது) அருகில் பாறைகள் நிறைந்த பகுதியில் சிரமம் பாராமல் நடித்தார்.

இன்னும் பல....

வரும் இதழில்....

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information