Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து (பாகம் 50)

''முள்ளும் மலரும்'' படத்தைப் பார்த்துவிட்டு என் தந்தை (ஏவி.எம.¢) ரஜினிகாந்த் நடிப்பை மிகவும் பாராட்டினார். தமிழில் இன்னொரு கிரேட் ஆர்ட்டிஸ்ட் உருவாகியிருக்கிறார் என்று எங்களிடம் கூறினார்.

ஏவி.எம்.சரவணன் தொடர்கிறார்...

''போக்கிரிக்குப் போக்கிரி ராஜா'' என்ற பாடல் காட்சியில் ரஜினி ராதிகாவை முதுகில் தூக்கிக் கொள்வதுதான் முதலில் சொல்லப்பட்ட யோசனை. ஆனால் காட்சியின் சிறப்புக்காக ரஜினி, ராதிகாவைத் தன் தோளிலேயே தூக்கிக் கொண்டார். தூக்கிக் கொண்டு நடனமும் ஆடி சிரமப்பட்டார். 'போக்கிரி ராஜா' முரட்டுக்காளை போலவே வெற்றிப் படமாக அமைந்தது. இதன் வெற்றி விழாவில் கலந்து கொண்ட ரஜினி, ''போக்கிரி ராஜா படத்தில் நடித்ததும், இது வெற்றி பெற்றது எல்லாமும் சரவணன் சாருக்குதான் சேரும். இனிமேல் ஏவி.எம்.மில் நான் கதையே கேட்க மாட்டேன்'' என்றார்.

ரஜினி இதற்குப் பின்பும் அடிக்கடி ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருந்தார். ஒருநாள் ஸ்கூட்டர் கவிழ்ந்து ரஜினிக்கு முகத்தில் அடிபட்டு வீட்டில் இருந்தார்.

அவரை நலம் விசாரிக்கப்போன நான், ''நான் உங்களை நடிகர் என்று நினைத்துச் சொல்லவில்லை. நீங்கள் ஒரு பெண்ணுக்குக் கணவர். குழந்தைக்குத் தந்தை. உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. உங்களை நம்பி கணிசமான தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். உங்களது படங்களில் இந்த நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்குமேல் முடக்கப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் நீங்கள் சிந்திக்காமல் இருக்கலாமா? ஸ்கூட்டரில் செல்ல வேண்டிய அவசியம் அப்படி என்ன இருக்கிறது? உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள்? இனிமேலாவது ஸ்கூட்டர் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்'' என்று கேட்டேன்.

ரஜினியோ, ''ஸ்கூட்டர் ஓட்டறதெல்லாம் சும்மா ஜாலிக்குத்தான். எனக்கு எதுவும் ஆகாது'' என்றார்.

''இனி ஸ்கூட்டர் ஓட்டுவதில்லை என்று உறுதி சொன்னால்தான் நான் இங்கிருந்து புறப்படுவேன்'' என்றேன். ரஜினி சிரித்தபடியே அதை ஏற்றுக் கொண்டார். எனக்குத் தெரிந்து அப்புறம் ரஜினி ஸ்கூட்டர் ஓட்டவில்லை.

''முள்ளும் மலரும்'' படத்தைப் பார்த்துவிட்டு என் தந்தை (ஏவி.எம.¢) ரஜினிகாந்த் நடிப்பை மிகவும் பாராட்டினார். தமிழில் இன்னொரு கிரேட் ஆர்ட்டிஸ்ட் உருவாகியிருக்கிறார் என்று எங்களிடம் கூறினார். அது மட்டுமல்ல. அந்தப் படத்தின் விற்பனை உரிமை எந்தெந்த ஏரியாக்களுக்குக் கிடைக்குமோ அவை எல்லாவற்றையும் வாங்கிவிடச் சொன்னார்.

அவருடைய யோசனைப்படி ஏற்கெனவே உரிமை பெற்றிருந்த ஒருவரிடமிருந்து சில ஏரியாக்களை மீண்டும் அதிக விலை கொடுத்து நாங்கள் வாங்கினோம். வியாபார ரீதியிலும் அந்தப் படம் வெற்றிகரமாகவே அமைந்தது.

'அபூர்வ ராகங்கள்' படத்தின் வெற்றி விழா எங்களது ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் என் தந்தை கலந்து கொண்டு படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களுக்குக் கேடயம் வழங்கினார். அந்தப் படத்தில் அறிமுகமான ரஜினிகாந்தும் அவரிடம் கேடயம் பெற்றார். முதன் முதலில் அவரிடம் கேடயம் பெற்றதை ராசியாகக் கருதிய ரஜினி ஏவி.எம். தயாரிப்பில் நடிக்க விரும்பினார்.

தனித்தன்மையோடு விளங்குபவர் ரஜினி...

அடுத்த இதழில்...

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information