Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்! (பாகம் 51)

''எனது சினிமா அனுபவத்தில் வேறு எந்த நடிகரும் பேசிய சம்பளத்தைக் குறைத்துக் கொண்டது என்பது பற்றி நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. அதுதான் ரஜினி.''

ஏவி.எம்.சரவணன் தொடர்கிறார்...

'போக்கிரி ராஜா' படத்தின் படப்பிடிப்பு மைசூர் பகுதியிலும் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வேகமாகச் செல்வதுபோல் ரஜினி நடிக்க வேண்டும்.

இந்தக் காட்சியில் மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும்போது ரஜினி இரண்டு கைகளையும் விட்டுவிட்டு, பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஸ்டைலாக கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு, பின் கைக்குட்டையை மீண்டும் பாக்கெட்டில் வைத்தபின் மீண்டும் ஹாண்டில் பாரில் கைகளை வைத்துக் கொள்வதாக ஒத்திகை பார்க்காமலேயே பேசி முடிவு செய்யப்பட்டது.

கேமரா ஓடத் துவங்கியபோது, ரஜினி சொன்னபடி சரியாகச் செய்து கொண்டு வந்தார். ஆனால் முகத்தைத் துடைத்தபின் பாக்கெட்டில் கைக்குட்டையை வைத்து விட்டு ஹாண்டில் பாரில் கைகளை வைக்கும்போது வண்டி பாலன்ஸ் இழந்து தாறுமாறாக ஓடி சாலையிலிருந்து விலகி ஒரு மரத்தின் மீது மோதி நின்றது.

ரஜினி கீழே விழுந்தாலும் நல்ல வேளையாக பெரிய ஆபத்து எதுவும் நேர்ந்து விடவில்லை. இடது கை கட்டை விரலில் எலும்பு முறிந்து விட்டது. இதெல்லாம் கேமராவில் பதிவாகிவிட்டது. ரஜினியை உடனே மைசூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தோம். மருத்துவர்கள் அவரைச் சில நாட்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும் அவர், ''எனக்குச் கைவிரல் சரியாயிடுச்சு. நான் ரெடி'' என்று தயாராக வந்து நின்றார்.

'மனிதன்' படம் துவங்குவதற்கு முன் ரஜினி என்னிடம் தனக்கு ஊதியமாக இவ்வளவு தொகை வேண்டுமென்று கேட்டார். அது நியாயமானதாகப்பட்டதால் சரியென்று ஒப்புக் கொண்டோம். இந்தச் சந்திப்புக்குச் சில நாட்களுக்குப் பின் ரஜினி என்னைச் சந்திக்க விரும்பி வீட்டிற்கே வந்துவிட்டார்.

''நான் உங்களிடம் 'மனிதன்' படத்திற்கு எனது சம்பளம் பற்றிப் பேசினேன். இதே தொகையை நான் வேறு இரு நிறுவனங்களுக்குச் சொன்னபோது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவர்கள் என்ன சம்பளம் தருகிறார்களோ, அதே தொகையைத் தந்து விடுங்கள் போதும்'' என்று தன் சம்பளத்தைக் குறைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனது சினிமா அனுபவத்தில் வேறு எந்த நடிகரும் பேசிய சம்பளத்தைக் குறைத்துக் கொண்டது என்பது பற்றி நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. அதுதான் ரஜினி. இப்படி எந்தவொரு விஷயத்திலும் தனித்தன்மையோடு விளங்குபவர் ரஜினி.

'மனிதன்' படத்தில் இடம்பெற்ற டைட்டில் பாடல், 'மனிதன், மனிதன்... எவன்தான் மனிதன்'. இது கம்போஸ் செய்யப்பட்ட நிலையில் படத்தின் கதாசிரியர் பஞ்சு அருணாசலம் ''டைட்டில் வந்த சில நிமிடங்களுக்குப் பின் ''வானத்தைப் பார்த்தேன்'' பாடல் வருகிறது. இது ரசிகர்களுக்கு சலிப்பூட்டக் கூடும். இதனால் டைட்டில் பாடல் வேண்டாம்'' என்று சொல்லிவிட்டார்.

இதைத் கேள்விப்பட்ட இசை அமைப்பாளர் சந்திரபோஸ் என்னிடம் வந்து, ''இந்தப் பாடல் (மனிதன் மனிதன்) நல்ல முறையில் வந்திருக்கிறது. இது படத்தில் இடம்பெறாவிட்டாலும் பரவாயில்லை. கேசட்டிலாவது இடம்பெற வேண்டுமென்று விரும்புகிறேன். நான் இசையமைத்த பாடல்களிலேயே இது எனக்கு ஆத்ம திருப்தியளித்த பாடலாகும். பாடல் பதிவாக அதிக செலவும் ஆகாது'' என்று கூறினார்.

சந்திரபோஸின் விருப்பத்திற்குத் தடை போடாமல் பாடல் கேசட்டில் இடம்பெற ஒப்புதல் தந்தேன். பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டபின் ஏவி.எம்.மிலுள்ள ஆலோசனைக் கூடத்தில் எஸ்.பி.முத்துராமன் யூனிட்டிலுள்ளவர்கள் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நானும் அங்கு இருந்தேன்.

'மனிதன் மனிதன்' பாடல் அந்த படத்தில் இடம் பெற்றதற்கு யார் காரணம்....?

அடுத்த இதழில்...

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information