Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை! (பாகம் 47)

ரஜினி எங்களோடு வந்து பேசிக் கொண்டிருக்கையில் பேரன் அவனிடம், ''என்ன அங்கிள் போரடிக்கிறீங்க? ஒரே கிஸ்ஸிங், கிஸ்ஸிங்...! நோ பைட்டிங்...!'' என்று அங்கலாய்த்தது கண்டு ரஜினி 'ஓ'வென்று பலமாக சிரித்தான்.

திருமதி ரெஜினா வின்சென்ட்:

ரஜினி முதன் முறையாக அமெரிக்கா போவதற்கு முன் கலந்து கொண்ட படப்பிடிப்பு 'அதிசயப் பிறவி'. அருணாசலம் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது இலங்கையிலிருந்து வந்திருந்த எங்கள் குடும்ப நண்பரான டாக்டர் ஒருவரையும், எனது பேரனையும் (பமேலாவின் மகன்) அழைத்துச் சென்றிருந்தேன்.

நாங்கள் போனபோது ரஜினி கதாநாயகியான ஷீபாவைக் கட்டிப்பிடித்து ஆடுவது, முத்தமிடுவது ஆகிய காட்சிகள் படமாகிக் கொண்டிருந்தன. என் பேரன் எதிர்பார்த்து வந்ததோ ரஜினி சண்டை போட்டு நடிப்பதைப் பார்க்க. அன்று சண்டைக் காட்சிகள் படமாகலாம் என்று ரஜினி தகவல் சொன்னதால், அதற்காக அவன் காத்திருந்தான்.

அதற்கு மேல் பேரன் பொறுமை இழந்து போனான். ரஜினி எங்களோடு வந்து பேசிக் கொண்டிருக்கையில் பேரன் அவனிடம், ''என்ன அங்கிள் போரடிக்கிறீங்க? ஒரே கிஸ்ஸிங், கிஸ்ஸிங்...! நோ பைட்டிங்...!'' என்று அங்கலாய்த்தது கண்டு ரஜினி 'ஓ'வென்று பலமாக சிரித்தான். ரஜினியிடம் அப்படி சிரிப்பைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று?

சில வருடங்களுக்கு முன் ரஜினிக்கு ஏதோ மனப் பிரச்னை. ரஜினி வேதனையுடன் வீட்டிற்கு வந்தான். அப்படி அவன் வேதனைப்பட்டு நான் பார்த்ததேயில்லை. ''யாரை நம்பறதுன்னு தெரியலயே. முன்னை மாதிரி உடம்பு கெட்டுப் போய் இங்கேயே வந்துடலாம் போலிருக்கு'' என்றான்.

அவனுக்கு ஆறுதல் கூறி, ''வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். பெரிசு பண்ணாதே'' என்று அனுப்பி வைத்தேன். தன்னுடைய சந்தோஷத்தை மட்டுமின்றி, சங்கடங்களையும் எங்களோடு பங்கிட்டுக் கொள்கிறவன் ரஜினி.

முதல் முறை அமெரிக்கா செல்வதற்கு முன் ரஜினியைப் பார்த்தபோது, ''அம்மா நாம் வெளியில் போய் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் போகலாம்'' என்றான்.

என் கணவரைக் கண்டால் வணக்கம் சொல்லிவிட்டு அதிகம் பேசாதிருந்த ரஜினி, அப்போதிருந்துதான் அவரிடம் சகஜமாக பேச ஆரம்பித்தான். அவர் ஜோக் சொல்லி சிரிக்க வைக்க மாட்டாரா என்று ரஜினி எதிர்பார்ப்பது வழக்கம்.

ரஜினியை பின்னர் பொட்டானிகல் கார்டனில் 'பாண்டியன்' படப்பிடிப்பிலும், வாகினியில் 'உழைப்பாளி' படப்பிடிப்பிலும் சந்தித்தேன். மலேசியாவிலிருந்து வந்த குடும்ப நண்பர்களை அழைத்துக் கொண்டு வாகினி சென்றபோது, ரஜினி தூங்கிக் கொண்டிருந்தான். அவன் எழும்புகிறவரையில் காத்திருந்தேன். ஷாட்டுக்கு அவன் அழைக்கப்பட்டபோது எழுந்த ரஜினி, என்னைக் கண்டு வியந்த ரஜினி, ''என்னம்மா வந்து ரொம்ப நேரமாச்சா? என்னை எழுப்பியிருக்கக் கூடாதா?'' என்று கேட்டு விட்டு நடிக்கப் போனவன், திரும்ப வந்து பேசிக் கொண்டிருந்தான். அதற்கு பின் ரஜினியை நான் சந்திக்கவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மிக நெருக்கமான பட நிறுவனங்களில் ஏ.வி.எம்.ஒன்று. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.வி.எம். சரவணன் தங்களுடன் பழகிய ரஜினியைப் பற்றிச் சொன்னார்.

ஏ.வி.எம்.சரவணன் என்ன சொல்கிறார்...

அடுத்த இதழில்

 

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information