Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட் (பாகம் 46)

''அம்மா... உங்களுக்காக ஆழ்வார்ப்பேட்டை வீட்டை விலைக்கு வாங்கி அங்கேதான் உங்களை உட்கார வைக்கப் போகிறேன்'' என்றான்.

திருமதி ரெஜினா வின்சென்ட் மேலும் கூறினார்:

ஒரு சமயம் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவர், ரஜினியைப் படமெடுக்க விரும்புவதாகப் பலமுறை என்னை தொந்தரவு செய்து அழைத்துச் சென்றுவிட்டார். ரஜினி கவனமாக அவர் கூறுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு, ''அம்மாவிடம் சொல்லியனுப்புகிறேன்'' என்று நாசூக்காகத் தவிர்த்து விட்டான்.

இந்த விஷயத்தில் நான் வருத்தப்படுகிறேன் என்று ரஜினி நினைத்துக் கொண்டானோ என்னவோ, என்னை சமாதானப்படுத்த நினைத்து ஒரு நாள் போன் செய்து, ''அம்மாவைப் பார்க்க வருகிறேன்'' என்றான். அவன் வரப்போகிறான் என்று விருந்தெல்லாம் தயார் செய்து காந்திருந்தால் ஆளைக் காணோம். மறுநாளும் வருவதாகச் சொல்லி வரவில்லை. எங்களுக்கு காரணம் புரியவில்லை.

திடுதிப்பென்று அன்று இரவு 10.00 மணிக்கு மேல் வந்தான். ''மன்னிச்சிடுங்க அம்மா. நேற்றைக்கும் இன்னைக்கும் எதிர்பாராத பட வேலைகள். ஒருத்தர் கண்டிப்பா படம் பார்க்கணும்னு அழைச்சிட்டுப் போயிட்டார்'' என்று எல்லோரிடமும் வருத்தம் தெரிவித்துப் பேசிக் கொண்டிருந்தான். இரவு 12.00 மணி ஆயிற்று.

''வாருங்கள் வெளியே போய் சாப்பிடலாம்'' என்று ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றான். அங்கு சாப்பிட்டு முடிக்க 1.00 மணி தாண்டிவிட்டது. அதற்கப்புறம் தனது 'ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு'' அழைத்துச் சென்று காட்டினான். அப்போது கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதையெல்லாம் பார்த்து வீடு திரும்ப அதிகாலையாகி விட்டது. ரஜினி தனது வீட்டிற்கு சென்றபோது பொழுது விடிந்துவிட்டது.

இதற்கப்புறம் நீண்ட இடைவெளிவிட்டு ரஜினியைப் பார்க்க ஏவிஎம் போனேன். அங்கு படப்பிடிப்பில் இருந்தவன் வேகமாக என்னை நோக்கி வந்தான். ''என்னம்மா உங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு? டாடி (என் கணவர்) எப்படி இருக்கிறார்? வாக்கிங் போறாரா? குடிக்கறதைக் குறைச்சிட்டாரா?''

இப்படி என்னைப் பேச விடாமல் தானே பேசிக் கொண்டிருந்தான். திடீரென்று ''அம்மா... உங்களுக்காக ஆழ்வார்ப்பேட்டை வீட்டை விலைக்கு வாங்கி அங்கேதான் உங்களை உட்கார வைக்கப் போகிறேன்'' என்றான். ''உனது அன்பு எப்போதும் போல் இருந்தால் போதும். எனக்காக எதுவும் செய்ய வேண்டாம்'' என்றேன். அழ்வார்ப்பேட்டை வீட்டை இடிக்கப் போகிறார்கள் என்ற விஷயம் அவனுக்குத் தெரியாது.

முன்பு ஒரு சமயம் (திருமணத்திற்கு அப்புறம் என்று நினைக்கிறேன்) ரஜினி என்னிடம் வந்து, '' என்னோட கால்ஷீட், பணவரவு-செலவு- இப்படி எனது சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் நீங்களே பார்த்துக்குங்க அம்மா'' என்று கேட்டான்.

''நான் தனி ஆள் இல்லையப்பா. எனக்கு குடும்பப் பொறுப்புகள், சமூகப் பணிகள் இருக்கு. நீ கேட்கறது நடக்காத காரியம்'' என்று மறுத்துவிட்டேன்.

சந்தோஷத்தை மட்டுமின்றி, சங்கடங்களையும் எங்களோடு பங்கிட்டுக் கொள்கிறவன் ரஜினி
-திருமதி ரெஜினா வின்சென்ட்

-அடுத்த இதழில

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information