Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம் (பாகம் 36)

'தம்பிக்கு எந்த ஊரு?' படப்பிடிப்பு. ரஜினி, மாதவி சம்பந்தப்பட்ட காட்சி படமானது. காட்சிப்படி ரஜினி அணிந்திருந்த பேண்ட், சர்ட் எல்லாம் சகதியாக இருக்க வேண்டும். மேக்கப் மேனிடம் அதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னபோது, அது ரஜினி காதில் விழுந்துவிட்டது. அடுத்த நிமிஷம் அவர் ரோடு ஓரத்தில் இருந்த சாக்கடை சகதியை அள்ளி மேலே பூசிக் கொண்டு "நான் ரெடி சார்!" என்றார்.

ஆம். ரஜினியின் ஆசை நிறைவேறியது. நிறைவேற்றியவர் இயக்குநர் ராஜசேகர்.

ராஜசேகர் மேலும் கூறுகிறார்:

அவரது வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் அங்கேயே 'மாவீரன்' என்ற தலைப்பைக் கொடுத்தேன்.

இதன் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது ஒரு காட்சியில் ரஜினிகாந்த் அம்பிகாவை குதிரையில் ஏற்றிக் கொண்டு போகும்போது அம்பிகா குதிரையிலிருந்து கீழே விழுந்து இடுப்பில் பலத்த அடிப்பட்டு, படப்பிடிப்பு ரத்தானது பற்றிய செய்தி தினசரி பத்திரிகைகளில் கூட வந்திருந்தது.

பத்திரிகையில் வராத செய்தி இது. ரஜினிக்கு முன் பக்கம் கால்களை இருபுறமும் தொங்கவிடாமல் ஒரே பக்கத்தில் கால்களைப் போட்டவாறு குதிரையில் அமர்ந்திருந்தார் அம்பிகா. குதிரை சென்ற வேகத்தில் அம்பிகா பாலன்ஸ் இழந்து ரஜினியின் கையைப் பிடித்தபடியே கீழே விழுந்திருக்கிறார். அதனால் ரஜினியும் கீழே விழ வேண்டியதாயிற்று. அவருக்கும் இடுப்பில் அடிப்பட்டு உள்காயம் ஏற்பட்டிருந்தாலும், வலியை வெளியே சொல்லாமல், தொடர்ந்து இரண்டு நாட்கள் நடித்தார். ஆனால் நடக்கும்போது மட்டும் கால்களில் கம்பீரத்தைக் கொண்டு வரமுடியவில்லை. தனது வேதனையை யாரிடத்திலும் வெளிப்படுத்தாமல் தன் இருப்பிடத்துக்குச் சென்று தானே சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.

நடிகர்களில் ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம். ஒருமுறை கொடைக்கானலில், 'தம்பிக்கு எந்த ஊரு?' படப்பிடிப்பு. ரஜினி, மாதவி சம்பந்தப்பட்ட காட்சி படமானது. காட்சிப்படி ரஜினி அணிந்திருந்த பேண்ட், சர்ட் எல்லாம் சகதியாக இருக்க வேண்டும். மேக்கப் மேனிடம் அதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னபோது, அது ரஜினி காதில் விழுந்துவிட்டது. அடுத்த நிமிஷம் அவர் ரோடு ஓரத்தில் இருந்த சாக்கடைச் சகதியை அள்ளி மேலே பூசிக் கொண்டு "நான் ரெடி சார்!" என்றார். யூனிட்டில் இருந்த அத்தனை பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

ஏற்கெனவே இன்னொரு நடிகர் விஷயத்தில் எங்களுக்கு நேர்மாறான அனுபவம். அவரது பாண்டில் சகதியைப் பூசச் சென்றபோது அவர் தடுத்து நிறுத்தி, "எனக்கு இந்த சேறு சகதியெல்லாம் அலர்ஜி! பான் கேக்கை வச்சு சகதி பூசின மாதிரி செய்!" என்று சொல்லிவிட்டார். அதையும் இதையும் ஒப்பிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்" என்றார் ராஜசேகர்.

கடுமையான சோதனைக் காலம்

வாழ்க்கையில் மிகப் போராடி புகழின் உச்சியை எட்டிய திரைப்படக் கலைஞர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பகுதியில் சோகம், கடுமையான சோதனைகள் இருக்கும்.

எம்.ஜி.ஆருக்கு 1958-ல் நாடக மேடையில் கால் ஒடிந்த போதும், 1967-ல் துப்பாக்கியால் சுடப்பட்டபோதும் எம்.ஜி.ஆர். அவ்வளவுதான் என்றார்கள். ஆனால் இந்த விபத்து, ஆபத்துகளிலிருந்து எம்.ஜி.ஆரின் உடலும், உயிரும் மீண்டு முன்னைவிட புகழ் பெற்றார்.

ரஜினிக்கும் அவரது வாழ்வில் ஒரு ஆறுமாத காலம் இருண்ட காலமாக அமைந்தது. அது 1979-ல். அப்போது அவரது உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்ட அவரது அபரிமிதமான வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சிலர், அவருக்கு ஏற்பட்ட நலக்குறைவைப் பயன்படுத்தி ஒழித்துக் கட்ட முனைந்தார்கள்.

நெருக்கமான நட்பில் இருந்தவர்கள்கூட இந்த நேரத்தில் ரஜினிக்கு உதவாமல் ஒதுங்கிப் போனார்கள். 'கடவுள் கூட ரஜினிக்கு உதவமாட்டார்' என்று சொல்லப்பட்ட நேரத்தில் அன்பு காட்டி ஆதரித்தவர்...

யார்...?

அடுத்த இதழில்

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information