Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!'' (பாகம் 58)

ரஜினியின் எண்ணங்களை, செயல்பாடுகளைக் கவனிக்கையில் அவர் எதையோ பெரிய அளவில் சாதிக்கப் போகிறார் என்று தெரிகிறது.

எஸ்.பி.முத்துராமன் தொடர்கிறார்.....

மிஸ்டர் பாரத்: ரஜினியுடன் சத்யராஜும் சமமான வேடத்தில் நடித்திருந்தார். ''என்னம்மா கண்ணு சௌக்கியமா?'' போட்டி பாடல் இருவருக்கும். அதனால் அந்தக் காட்சியில் பரபரப்பும், கைதட்டலும் பலமாக இருந்தது. படத்தில் தாய் மகனை பழி வாங்கத் தூண்டும் கருத்தை மக்களால் பெரிய அளவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வேலைக்காரன்: நகைச்சுவையோடு முழுப்படம் எடுக்க நினைத்து செய்தது. ரஜினியின் பாத்திரம் ஜனரஞ்சகமாக அமைந்தது. டெல்லி, காஷ்மீர், ஆக்ரா என்று பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். கடுமையான பனி சீசனில் காஷ்மீரில் எங்கு பார்த்தாலும் பனிக்கட்டி. அதில் அமலா பரத நாட்டிய உடையணிந்து வெறுங்கால்களோடு நடனம் ஆடி, ஷாட் முடிந்ததும் ரஜினியின் கால்மீது நின்று கொள்வார்.

இப்படத்தின் வெற்றி விழாவில் பாராட்டிப் பேசிய ம.பொ.சி. ரஜினியின் வேகம் பற்றிக் குறிப்பிட்டு ''எனக்கு அவர் பேசும் வசனங்கள் புரியவில்லை. ஆனால் என் பேரன்களோ, 'எங்களுக்குப் புரிகிறது. உங்களுக்குப் புரியாவிட்டால் என்ன?' என்று என்னோடு சண்டைக்கு வந்து விட்டார்கள்'' என்று நகைச்சுவையோடு சொன்னார்.

மனிதன்: ''காளை காளை'' பாடல் காட்சியில் ரஜினியின் நடன அசைவுகள் ரசிகர்களுக்கு பஞ்சாமிர்தம் போல.
இப்படத்தின் கிளைமாக்ஸ் - வெடி குண்டுகள் வீசி பதினைந்து நாள் படமாக்கப்பட்டது. 'மனிதனு'க்காக எரியும் காரில் சிக்கிய ஸ்டண்ட் நடிகர் ஒருவர் தன் கைவிரல் ஒன்றை இழந்தார். எரியும் காரில் ரஜினியை உட்கார வைத்து குளோசப் எல்லாம் எடுத்தோம்.

குரு சிஷ்யன்: பஞ்சு அருணாசலம் ரஜினியை வைத்து படமெடுக்க இரண்டு வருடமாக முயற்சித்துக் கொண்டிருந்தார். திடீரென்று, ''ஒரு பதினைந்து நாள் இருக்கிறது. அதற்குள் ஒரு படம் முடியுமா?'' என்று கேட்டார். முடியும் என்று ஆரம்பித்து 26 நாட்களில் முடித்தோம். கதையில் நகைச்சுவை தன்மை இருந்ததால் விரைவாக எடுக்க முடிந்தது. பிரபுவும் இருந்ததால் சுலபமாக இருந்தது. மற்றொரு வெற்றிப்படம்.

தர்மத்தின் தலைவன்: பேராசிரியர், பேட்டை ரௌடி என ரஜினிக்கு இரண்டு வேடம். ஞாபக மறதி பேராசிரியர் வேடத்தை ரஜினி ரசித்து, அதை மேலும் டெவலப் செய்து நடித்தார். காட்சியில் இல்லாததையெல்லாம் ரஜினி தன் கற்பனையில் மேலும் சேர்த்து மெருகேற்றினார். தவிர இந்த படம் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டபோது முழு பொறுப்பையும் தானே எடுத்து முடித்தார்.

'புவனா ஒரு கேள்விக்குறி' யின் போது ரஜினி ஆரம்பகால நடிகன். எனது டைரக்ஷனில் 23 படங்கள் செய்து விட்டார். இப்போது நடிப்பில் அபார வளர்ச்சி அவரிடம். ஆனால் அவரது கேரக்டரில் எந்த மாற்றமும் இல்லை. மனதில் படுவதை தயங்காமல் சரியாக சொல்வார். ரஜினியிடம் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு தான்.

ஏராளமான பேர்களுக்கு தாராளமாக, ஆனால் வெளியில் தெரியாது உதவிகள் செய்து வருகிறார். பல மாணவ - மாணவியரின் படிப்புச் செலவுகளை ரஜினியே ஏற்றுக் கொண்டிருக்கிறார். கஷ்டப்படுகின்ற நடிகர்களுக்கும் பண உதவிகள் செய்து வருகின்றார்.

ரஜினியின் எண்ணங்களை, செயல்பாடுகளைக் கவனிக்கையில் அவர் எதையோ பெரிய அளவில் சாதிக்கப் போகிறார் என்று தெரிகிறது.

ஜனவரி 1, பிறந்த நாள், திருமண நாள், பொங்கல் நாட்களிலெல்லாம் ரஜினி எங்கள் படப்பிடிப்பில் தான் இருப்பார். எங்களை உறவினராக வைத்து மதிக்கின்றவர் ரஜினி என்று ரஜினியுடனான தன் அனுபவங்களைச் சுவாரசியமாக விளக்கி கூறினார் எஸ்.பி.முத்துராமன்.

முற்றும்

Previous Page

Previous

 




 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information