Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

மின்னலைப் போல வந்தார் ரஜினி - ஏ.வி.எம்.சரவணன் (பாகம் 48)

''நீங்கள் எப்போது என்னை நடிக்கச் செய்கிறீர்களோ, அப்போது எனக்கு மார்க்கெட்டில் என்ன சம்பளம் இருக்கிறதோ அதைத் தந்து விடுங்கள். கூடுதலாக இருந்தால் கூடுதலாகத் தாருங்கள். குறைவாக இருந்தால் அதையே கொடுங்கள். மார்க்கெட் மங்கிப் போனால் நீங்கள் என்னை வைத்து படமே எடுக்க வேண்டாம்'' என்றார் மிக இயல்பாக ரஜினி.

ஏ.வி.எம்.சரவணன் ரஜினியுடனான தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

ஏ.வி.எம். நிறுவனம் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்க எண்ணிய நேரம் அது. இரண்டு பிரபல டைரக்டர்களைக் கொண்டு இரண்டு படங்களை உருவாக்க முடிவு செய்திருந்தோம். அதில் ஒரு படத்தில் பிரபல கதாநாயகன் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவரது தேதிகள் எப்போது எங்களுக்குக் கிடைக்கும் என்பது முடிவாகவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் ரஜினிகாந்த் திடீரென்று ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார். அப்போது வடபழனி பிரஸ்ஸில் இருந்தேன். வில்லனிலிருந்து ஹீரோவாக மாறி பரபரப்பாக ரஜினி முன்னேறிக் கொண்டிருந்த நேரம் அது. எடுத்த எடுப்பிலேயே ''உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை'' என்றார்.

அவரது விருப்பம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. சம்பள விவரம் கேட்டேன். ''இப்போது நான் ஒரு தொகை வாங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது என்னை நடிக்கச் செய்கிறீர்களோ, அப்போது எனக்கு மார்க்கெட்டில் என்ன சம்பளம் இருக்கிறதோ அதைத் தந்து விடுங்கள். கூடுதலாக இருந்தால் கூடுதலாகத் தாருங்கள். குறைவாக இருந்தால் அதையே கொடுங்கள். மார்க்கெட் மங்கிப் போனால் நீங்கள் என்னை வைத்து படமே எடுக்க வேண்டாம்'' என்றார் மிக இயல்பாக ரஜினி.

முதலில் அட்வான்ஸ் தருவதாகச் சொன்னேன். ரஜினி ஒப்புக் கொள்ளவில்லை. 'முதலில் கால்ஷீட் தேதிகளைத் தந்து விடுகிறேன். படப்பிடிப்புக்குப் போகும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறிவிட்டுப் போய்விட்டார். அவர் வந்ததும் போனதும் ஏதோ மின்னலைப் போல் இருந்தது. எந்த ஒரு கதாநாயக நடிகருடனும் எனக்கு அப்படி ஒரு அனுபவமே ஏற்பட்டதில்லை.

நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்த படத்தின் நாயகன் தனது கால்ஷீட் தேதிகளைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார். அதனால் ரஜினியின் தேதிகளை நான் மாற்றிக் கொண்டே இருந்தேன். ரஜினியும் அதை வேறு படங்களுக்கு மாற்றிக் கொண்டார். ஒரு கட்டத்தில் அந்த ஹீரோ தனது கால்ஷீட்டை முடிவு செய்ய முடியாத சூழ்நிலையில் ரஜினியை வைத்துப் படமெடுத்துவிட உறுதி செய்தேன்.

அதற்காக ரஜினியிடம் பேச அவரை எப்போது சந்திக்கலாமென்று கேட்பதற்காக எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த கே.வீரப்பனை அனுப்பி வைத்தேன். ரஜினி அந்த நேரம் வீட்டில் இருந்தார். ''சரவணன் சார் என்னைப் பார்க்க வருவதா? நானே பார்க்கிறேன்'' என்றவர், தன்னிடம் கார் இல்லாததால், வீரப்பன் வந்திருந்த வெஸ்பா ஸ்கூட்டரில் அவரைப் பின்னால் உட்கார வைத்து ரஜினியே ஓட்டிக் கொண்டு என் வீடு தேடி வந்து விட்டார். அப்போது நல்ல மழை வேறு பெய்து கொண்டிருந்தது.

ரஜினியின் நடவடிக்கைகளைக் கண்டு மலைத்தார் ஏ.வி.எம். சரவணன்......

அடுத்த இதழில்.....

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information