Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினியும் ரசிகர் மன்றமும் (பாகம் 34)

''அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டால் நிறையப் படங்கள் வந்துவிடுமாமே! திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே கலைத் துறையில் நிலைத்து நிற்க முடியும்.
I must stand on my own leg.'' என்கிறார் ரஜினி

''முள்ளும் மலரும்' வெற்றிக்குப் பின் நிறைய ரசிகர்கள் எனக்குக் கிடைத்தார்கள். மன்றம், சபாக்கள் என் பெயரில் அமைத்தார்கள். ஆனால் எனக்கு இதெல்லாம் பிடிக்காது. நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் தேவையா, இல்லையா என்ற ஆராய்ச்சி தேவையற்றது. அது நடிகர்களின் சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் எனது பெயரில் ரசிகர் மன்றம் அமைத்துக் கொண்டு ரசிகர்கள் தங்கள் சக்தியை விரயம் செய்ய வேண்டாமென்று நினைக்கிறேன்.

ஆனாலும் பல ஊர்களில் எனக்கு மன்றம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'என்னைக் கேட்காமல் ஏன் மன்றம் வைத்தீர்கள்?' என்று நான் கேட்கமாட்டேன். எனக்கு கெட்ட பெயர் வராமல் பார்த்துக் கொண்டால் சரி.

இந்த மாதிரி அமைப்புகள் வியாபார நோக்கில் செயல்படக்கூடாது என்பதே என் கருத்து.

நான் பெங்களூரில் இருந்தபோது சிவாஜி ரசிகனாக இருந்தேன். அங்கு சிவாஜி நடித்த படங்கள் திரையிடப்பட்டால் தோரணங்கள் கட்டுவார்கள். வாண வேடிக்கைகள் நடத்துவார்கள். அந்த மாதிரி ஆர்ப்பாட்டங்களில் எனக்கு விருப்பம் கிடையாது. வேடிக்கை பார்ப்பதுடன் சரி.

ஒரு நடிகருக்கு இப்படி இருப்பதில் தவறில்லை. அந்த நடிகர்தான் தலைசிறந்தவர் என்று மற்றவர்களைப் பழித்துப் பேசுவது தவறு. இது எனது சொந்தக் கருத்து.

அது போலவேதான் அரசியலும்.

"ரஜினி நீயும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்துவிடு. நிறையப் படங்கள் வரும்" என்று சிலர் என்னிடம் சொல்லியதுண்டு.

அதெப்படி? ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டால் நிறையப் படங்கள் வந்துவிடுமாமே! திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே கலைத் துறையில் நிலைத்து நிற்க முடியும். I must stand on my own leg.

என்னுடைய சுய முயற்சியால், உழைப்பதினால் மட்டுமே சந்தர்ப்பங்கள் கிடைத்தால் போதும். வேண்டாம் இந்த அரசியல்! அதென்னமோ இந்த அரசியல் என்றாலே எனக்கு அலர்ஜிதான்!''

(1980-ல் ரஜினிகாந்த்).ரஜினியின் மரியாதை


பத்தாண்டுகளுக்கு முன் ரஜினிகாந்துடன் படப்பிடிப்புக்கு ஒரு சிறுவனும் கூடவே வருவான். அப்போது படப்பிடிப்பில் ரஜினியின் பிரதான உதவியாளனாக இருந்தது அவன்தான். ரஜினிக்குச் சிகரெட், நெருப்புப் பெட்டி இவற்றைக் கொடுப்பது போன்ற வேலைகள் அவனுக்கு. ரஜினி சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டதும் நெருப்புப் பெட்டியை ரஜினி தூக்கித்தான் போடுவார். அதை அவன் கீழே விழாமல் பிடித்துக் கொள்வான். அவன் எப்போதும் விழிப்போடு இருக்கிறானா என்றறியவே ரஜினி அப்படிச் செய்தார்.

அவனது நிஜப்பெயர் வேணு என்றாலும் ரஜினி அவனை ராகவேந்திரா என்றுதான் அழைத்தார். ராகவேந்திரா சுவாமிகள் மீதுள்ள பக்தியின் காரணமாக அவன் பெயரை அப்படி மாற்றியிருந்தார்.

ரஜினி அவனை 'வா போ' என்றழைக்காமல் 'வாங்கோ, போங்கோ' என்றே மரியாதையோடு அழைத்தார். ஏனென்று கேட்டதற்கு, "நான் எல்லோரையும் அப்படி மரியாதையாகத்தான் அழைப்பது வழக்கம்" என்று காரணம் கூறினார்.

அப்புறம் அந்தச் சிறுவனைக் காணவில்லை. அவனுக்குப் பின் உதவியாளராக வந்தவர்தான் இப்போதைய ஜெயராம்.

இன்னும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை
அடுத்த இதழில் காணலாம்..

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information