Bhuvana Oru Kelvikuri
ராஜா என்பார்
Movie |
Bhuvana Oru Kelvi Kuri |
Music |
Ilaiyaraaja |
Year |
1977 |
Lyrics |
|
Singers |
S. Janaki, S. P. Balasubramaniam |
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
கல்லுக்குள் ஈரம் இல்லை
நெஞ்சுக்கும் இறக்கம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகம் இல்லை
கல்லுக்குள் ஈரம் இல்லை
நெஞ்சுக்கும் இறக்கம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகம் இல்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழி இல்லை
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கொரு கிளையும் உண்டு
எனக்கென்று என்ன உண்டு
நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கொரு கிளையும் உண்டு
எனக்கென்று என்ன உண்டு
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை
ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்லுறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்லுறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
விழியிலே மலர்ந்தது
Movie |
Bhuvana Oru Kelvi Kuri |
Music |
Ilaiyaraaja |
Year |
1977 |
Lyrics |
|
Singers |
S. P. Balasubramaniam |
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே...
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே
ம்... ம்.... ம்....ம்ஹும்.
|