Kodi Parakuthu

Kodi Parakuthu - Image

ஓ காதல் என்னை காதலிக்கவில்லை

Movie Kodi Parakuthu Music Hamsalekha Year 1988 Lyrics Vairamuthu Singers K. S. Chithra, S. P. Balasubramaniam

ஓ...காதல் என்னை காதலிக்கவில்லை
ஓ...காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்

ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...

தேவி வான் சொல்லியா மேகம் வரும்
நீ சொல்லியா காதல் வரும்

தேவா நான் கேட்பது காதல் வரம்
நீ தந்தது கண்ணீர் வரம்

பெண்ணழகு முழுதும் கற்பனை என்று உருகி வழிகிறேன்

என்னழகு உனது அற்பணம் என்று எழுதி விடுகிறேன்

போதும் போதும் புன்னகை என்பது காதலின் பல்லவி

ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...

ஓ.ஹோ.. என் வானமோ ரெண்டானது நீ சொல்லியே ஒன்றானது

ஓ..ஹோ...கள் என்பது பால் ஆனது நான் காணவே நாளானது

என் புடவை உனது கற்பனை கேட்டு இடையை மறந்தது

என் விழிகள் உனது கண்களை கண்டு இமையை மறந்தது

தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...

ஓ..காதல் உன்னை காதலித்ததம்மா
ஓ...காற்றும் உன்னை ஆதரித்ததம்மா

கன்னி வெண்ணிலா கையில் வந்தது
கையில் வந்ததும் காதல் வந்தது

தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்

ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ...

சேலை கட்டும் பெண்ணுகொரு

Movie Kodi Parakuthu Music Hamsalekha Year 1988 Lyrics Vairamuthu Singers K. S. Chithra, S. P. Balasubramaniam

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை..
இவளின் குணமோ மணமோ, மலருக்குள் இல்லை..
ம்..ஹும்..ம்..ஹும்.. ம்..ஹும்..ம்..ஹும்...}

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா (இசை)
ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்..

ஓ..கூந்தலுகுள்ளே ஒரு வீடு கட்டுங்கள்..
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்..
ஆ..ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்..
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்..
ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. }

ஆனந்த சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களை கிள்ளுவதால் ரத்தம் வருமா
இது போல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை..
இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..
ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. } (Over lap)

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன் கண்களுக்குள் பள்ளிகொண்டேன் (இசை)

ம்..ஹும்.. பெண்குழு: ஆ..ஆ..ஆ..
ம்..ஹும்.. பெண்குழு: ஆ..ஆ..ஆ...

ஓ..காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
ஓ..மோகமந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ
பெண்குழு: ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. } (Over lap)

மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது..
மேகத்தை தூது விட்டாய் வானம் வந்தது..
இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..
இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..
ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. }

சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டு
கண்டுகொண்டேன் ஹ..கண்களுக்குள் பள்ளிகொண்டேன்
வானத்து இந்திரரே, வாருங்கள் வாருங்கள்
பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்

{இதுபோல் இதமோ, சுகமோ உலகத்தில் இல்லை..
இவளின் குணமோ, மணமோ, மலருக்குள் இல்லை..
பெண்குழு : ம்..ஹும்.. ம்..ஹும்.. ம்..ஹும்.. }