Kaali (1980 Film)

Rajinikanth Kaali (1980 Film)

லல லால லாலலலா

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லல லால லாலலலா
லல லால லாலலலா
லாலா லலலாலா லாலா
லாலா லலலாலா லாலா

குழு : லாலா லலலாலா லாலா
லாலா லலலாலா லாலா

ஆண் : அடி ஆடு பூங்கொடியே
விளையாடு பூங்கொடியே
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே

குழு : லல லால லலலலா
லல லால லலலலா

ஆண் : மழலை மணிகள் கலைக் கோயில் சிற்பங்கள்
மழலை மணிகள் கலைக் கோயில் சிற்பங்கள்
மனதில் இசைக்கும் பொன் வண்டுகள் இவை
தேவ தத்துவங்கள் என் ஆசை சித்திரங்கள்

ஆண் : என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்றுதான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே…..

குழு : லல லால லலலலா
லல லால லலலலா

ஆண் : அமுதம் பொழியும் கார் கால மேகங்கள்
அமுதம் பொழியும் கார் கால மேகங்கள்
அணைத்தால் உலகே மறக்கின்றதே
நான் பெண்ணைக் கண்டவனா
ஒரு பிள்ளை பெற்றவனா

ஆண் : என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்று தான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே

குழு : லல லால லலலலா
லல லால லலலலா

ஆண் : கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள்
கடவுள் பாடும் ஆனந்த ராகங்கள்
களங்கம் அறியா கடல் சங்குகள்
இவை பார்க்கும் பார்வையிலே
பல பாவம் தீர்ந்து விடும்

ஆண் : என் வாழ்க்கையே இந்த பூக்களை
தினம் காக்கும் சேவை ஒன்று தான்
பாசம் ஒரு தெய்வம் பேசடி கிளியே

குழு : லால லல லாலலலா
லால லல லாலலலா

ஆண் : அடி ஆடு பூங்கொடியே
விளையாடு பூங்கொடியே

குழு : லால லல லாலலலா
லால லல லாலலலா ஆண் மற்றும்

குழு : லால லல லாலலலா
லால லல லாலலலா

அழகழகா பூத்திருக்கு

பாடகர்கள் : பி. சுசீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
ஆசை வைக்கத் தெரியாம
மீசை வெச்சு லாபமென்ன…
ஆசை வைக்கத் தெரியாம
மீசை வெச்சு லாபமென்ன…

பெண் : அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே

பெண் : ஆவாரம் பூவுல கண்ணு
தேவாரம் பாடுது பொண்ணு
ஆவாரம் பூவுல கண்ணு
தேவாரம் பாடுது பொண்ணு
ஆதாரம் தேடுது ஒண்ணு
ஆத்தோரம் பாட்டுக்கு நின்னு

பெண் : கரையோரம் மீன் கெடக்கு
கண் மூடி போற போக்கு
கன்னி இது மல்லிகப் பூ
கல்லாக நெனைக்கிறியே…..

பெண் : அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே
ஆசை வைக்கத் தெரியாம
மீசை வெச்சு லாபமென்ன…

பெண் : அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே

பெண் : காவேரி தண்ணியிருக்கு
காக்காய்க்கு தாகம் இருக்கா
காவேரி தண்ணியிருக்கு
காக்காய்க்கு தாகம் இருக்கா
கண்ணீரா கூப்பிடும் முன்னே
சரியாக புரிஞ்சுக்க என்ன

பெண் : தனியாக நானிருக்கேன்
தொணையோடு கோபமில்லை
தானே வந்து கேட்டதுன்னு
தங்கத்துக்கு மதிப்பில்லை

பெண் : அழகழகா பூத்திருக்கு
ஆசை வைக்கத் தெரியலையே

பெண் : ஆசை வைக்கத் தெரியாமே
மீசை வெச்சு லாபமென்ன
ஆசை வைக்கத் தெரியலையே
லால்ல லலா லால்லலலா
லால்ல லலா லால்லலலா

காளி……காளி…… ஆண் : பத்ரக் காளி உத்தம சீலி

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காளி……காளி……

ஆண் : பத்ரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி

பெண் : பத்ரக் காளி உத்தம
சீலி சொல்லடி சத்திய நீதி

ஆண் : வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு

பெண் : வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு

குழு : பத்ரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி

ஆண் : பாவத்துக்கு சம்பளங்கள்
வட்டியுடன் நீ தருவாய்
சோகப்பட்ட பூமிகளில்
மேக மழை நீ பொழிவாய்

குழு : குளிரில் தீயென நீ வருவாய்
ஆயிரம் வேங்கையின் சேயறிவாய்

ஆண் : பாவத்துக்கு சம்பளங்கள்
வட்டியுடன் நீ தருவாய்
சோகப்பட்ட பூமிகளில்
மேக மழை நீ பொழிவாய்

பெண் : அந்தக் கதை மீண்டும்
நீ வந்து நடத்திட வேண்டும்

குழு : அந்தக் கதை மீண்டும்
நீ வந்து நடத்திட வேண்டும்

ஆண் : நீதிக்கு யார் காவல் நீ தானே
ஊர் காவல் காளி… காளி…

குழு : பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி……
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு

பெண் : சுற்றி ஒரு வாளெடுத்தால்
சுற்றும் பூமி நின்று விடும்
ஏழை மகன் கோபம் கொண்டால்
சூரியனும் வெந்து விடும்

குழு : ஆனது ஆகட்டும் ஆன வரை
தீப் பந்தம் ஏந்துவோம் வானம் வரை

ஆண் : சுற்றி ஒரு வாளெடுத்தால்
சுற்றும் பூமி நின்று விடும்
ஏழை மகன் கோபம் கொண்டால்
சூரியனும் வெந்து விடும்

ஆண் : குத்துப் பட்ட நாகம்
ஆளை கொத்தி முடித்திட தேடும்

குழு : குத்துப் பட்ட நாகம்
ஆளை கொத்தி முடித்திட தேடும்

பெண் : ஆறாத காயங்கள் மாறாத
சோகங்கள் ஆறும் தீரும்

குழு : பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு

ஆண் : பகைவர்கள் காகிதங்கள்
அவர்க்கில்லை ஜீவிதங்கள்

பெண் : தேகங்களே கேடையங்கள்
ரோமங்களும் ஆயுதங்கள்

குழு : ராத்திரி ஏற்படும் பூகம்பங்கள்
ஆத்திரம் தீர்ந்ததும் ஆனந்தங்கள்

ஆண் : பகைவர்கள் காகிதங்கள்
அவர்க்கில்லை ஜீவிதங்கள்

பெண் : தேகங்களே கேடையங்கள்
ரோமங்களும் ஆயுதங்கள்

ஆண் : சூலம் கொண்ட தாயே
அதை இரவல் தந்திடு நீயே

குழு : சூலம் கொண்ட தாயே
அதை இரவல் தந்திடு நீயே

ஆண் : மீசையில் கை போடு
கத்திக்கு நெய் போடு காளி……காளி…

குழு : பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு
வெற்றி மாலைகள் சூடு
வந்து ஆனந்தம் பாடு

குழு : பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி
பத்தரக் காளி உத்தம சீலி
சொல்லடி சத்திய நீதி

ஏ… லலலா லலலா லலலா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏ… லலலா லலலா லலலா
லலலா லலல்லால்லால்லா
லலலா லலலா லலலலல்லா
லலலா லலலா லலலலல்லா

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்

ஆண் : அட ஆடியில் செய்தவன்
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம்
பின்னால் பாரடா

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்

ஆண் : காலம் நம்மைப் பார்த்து
கண்ணடித்தால் பதவி வரும்
அதுவே மெதுவாக ஜாடை செய்தால்
சிறையும் வரும்

ஆண் : பலிக்கும் வரையில் மகராஜா
ஆறாம் மடம் ஏழாம் மடம் எட்டாம் மடம்
சுக்கிரனோ சூரியனோ சனி பகவான் தானோ

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்

ஆண் : கண்ணன் கம்சனைக் கொல்வதற்கு
பிறப்பெடுத்தான்
கந்தன் சூரனை வீழ்த்துதற்கு
அவதரித்தான்

ஆண் : நமக்கும் இது தான் அவதாரம் ஹஹா
உன் பேரையும் என் பேரையும்
ஊரார் சொன்னால்
சந்திரனும் இந்திரனும் நடுங்கிட வேண்டாமா…..

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்

ஆண் : அண்ணன் தம்பிகளும்
நம்மை வெல்வதில்லை
நம்மை தனித் தனியே
எண்ணிக் கொள்வதில்லை

ஆண் : ஒரு தாய் வயிற்றில் மகனானோம்
சாலைகளே காலங்களே சொல்லுங்களே
இருவரிலே ஒருவரையே காணுங்களே…

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்

ஆண் : அட ஆடியில் செய்தவன்
ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா
அவன் தேடிய வினையே வீட்டுக்கு வரலாம்
பின்னால் பாரடா

ஆண் : வாழும் மட்டும் நன்மைக்காக
வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா
வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம்
லால லால்லாலா லால லால்லாலா
லால லால்லாலா லால லால்லாலா