Aarilirunthu Arubathu Varai

Rajinikanth Aarilirunthu Arubathu Varai

ஆண் பிள்ளை என்றாலும்

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா, B. S. Sasirekha
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : சசிரேகா மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

பெண் : மூத்த பிள்ளை காவல் என்றானே
காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ…ஏ….
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

பெண் : தீபத்தை ஏற்றினான்
பாபத்தை போக்கினான்
வாழ்வெனும் பெரும்கடலில்
போராடினான்

பெண் : தேனியைப் போலவே
நாள் எங்கும் ஓடினான்
அன்பெனும் குலவிளக்காய்
ஒளி வீசினான்

பெண் : காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
நம்பிக்கை உள்ளத்தில் பூவாக மாறும்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

பெண் : எதிர் நீச்சல் போடவும்
புது வாழ்வு தேடவும்
சின்னஞ்சிறு கிள்ளை
இவன் துணிந்தான் அம்மா

பெண் : ஏன் என்று கேட்கவும்
நான் என்று கூறவும்
பொறுப்புடனே பெருஞ்சுமையை
சுமந்தான் அம்மா

பெண் : நெஞ்சுக்குள் தெய்வம்
வாழ்கின்ற கோயில்
நெஞ்சுக்குள் தெய்வம்
வாழ்கின்ற கோயில்

பெண் : எந்நாளும் துணை உண்டு
நீ வாழ வேண்டும்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ

பெண் : மூத்த பிள்ளை காவல் என்றானே
காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ…ஏ….
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

கண்மணியே

பாடகர்கள் : S.P. Balasubrahmaniyam, எஸ். ஜானகி
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ்.ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ

பெண் : எத்தனை
எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

குழு : …………………

ஆண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ

ஆண் : எத்தனை
எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

பெண் : ………………………..

ஆண் : மேளம் முழங்கிட
தோரணம் ஆடிட காலமும்
வந்ததம்மா நேரமும்
வந்ததம்மா

பெண் : பார்வையின்
ஜாடையில் தோன்றிடும்
ஆசையில் பாடிடும்
எண்ணங்களே இந்தப்
பாவையின் உள்ளத்திலே

ஆண் : பூவிதழ் தேன்
குலுங்க சிந்தும்
புன்னகை நான்
மயங்க

பெண் : ஆயிரம் காலமும்
நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன்
வாழ்ந்திருப்பேன்

ஆண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ

பெண் : எத்தனை
எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

பெண் : ……………………….

பெண் : பாலும் கசந்தது
பஞ்சணை நொந்தது
காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்

ஆண் : நாளொரு வேகமும்
மோகமும் தாபமும் வாலிபம்
தந்த சுகம் இளம் வயதினில்
வந்த சுகம்

பெண் : தோள்களில்
நீயணைக்க வண்ணத்
தாமரை நான் சிரிக்க

ஆண் : ஆயிரம் காலமும்
நான் உந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன்

பெண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ

ஆண் : எத்தனை
எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

பெண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ

வாழ்க்கையே வேஷம்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன்
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன

ஆண் : காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்

ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்…..

ஆண் : அன்பை நான் தந்தேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்

ஆண் : நெஞ்சிலே ஈரம் அது
காய்ந்து போன பாலைதானா
வறண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது
ஞானிதானே நானும்

ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்…….

பெண் : ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய்……..
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆரிரோரிரோரி ராரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
ஆராரிரோ

ஆண் : மலர்களை அள்ளி தரும்
கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்

ஆண் : கலங்குதே கண்கள் நான்
போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்

ஆண் : வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன

ஆண் : காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்

ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்……