Enkeyo Ketta Kural

Rajinikanth Enkeyo Ketta Kural

பட்டு வண்ண சேலைக்காரி

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பட்டு வண்ண சேலைக்காரி

ஆண் : எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..

ஆண் : ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை……

ஆண் : பட்டு வண்ண சேலைக்காரி
எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை……
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை……

ஆண் : பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு

ஆண் : பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு
தேனாய் வளர்ந்த அகத்தின் அழகு
பார்த்தால் இனிக்கின்ற பருவம்
பாலில் மிதக்கின்ற உருவம்
மாலை வெயில் பழகும் மேனிக்கண்ட மயக்கம்
வா தென்றலே சொர்க்கத்தின் பக்கத்தில் வா

ஆண் : பட்டு வண்ண சேலைக்காரி

ஆண் : காலம் கனிந்து வளரும் உறவு
மேளம் முழங்க தொடரும் உறவு
தாய்மை கொடுக்கின்ற அம்சம்
வாழை வளர்க்கின்ற வம்சம்
வாழுகின்ற வரைக்கும் பாசம் வந்து தழைக்கும்
வா சொந்தமே உள்ளத்தில் என்றென்றும் வா

ஆண் : பட்டு வண்ண சேலைக்காரி
எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்..
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை……
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன புதுமை
அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை……

ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது

பாடகர்கள் : ஜென்சி
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது ஹா

பெண் : ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது
ஒரு கூட்டில் ஆடுது குருவி
அந்த நெனப்பு மயக்குது
தினம் தூங்கும்போதிலே கனவு
என்ன முழிக்க வைக்குது

பெண் : அந்த ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது

பெண் : நான் வளர்த்த கோழியெல்லாம் முட்டை போடுது
னனனன னனனன னனனன னனனானா
நாத்து நட்டு பதியம் வச்ச ரோஜா பூக்குது
இப்போ பாலும் கசக்குது நல்ல பழமும் புளிக்குது
இப்போ பாலும் கசக்குது நல்ல பழமும் புளிக்குது
தேகம் எங்கும் தேனு மாயம் என்ன சொல்வேன்
இந்த நோயில் தினமும் தினமும் உருகுது

பெண் : ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது
ஒரு கூட்டில் ஆடுது குருவி
அந்த நெனப்பு மயக்குது
தினம் தூங்கும்போதிலே கனவு
என்ன முழிக்க வைக்குது

பெண் : அந்த ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது

பெண் : ராவு நேர நிலவு வந்தா உடம்பு கொதிக்குது
னனனன னனனன னனனன னனனானா
ஓடை நேரில் குளிக்குபோது தணலா எரியுது
இப்போ பாயும் நோகுது தலையணையும் நோகுது
இப்போ பாயும் நோகுது தலையணையும் நோகுது
நேரம் கெட்ட நேரம் ஏதோ ஒண்ணு தோணும்
இந்த நோயில் தினமும் தினமும் உருகுது

பெண் : ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது
ஒரு கூட்டில் ஆடுது குருவி
அந்த நெனப்பு மயக்குது
தினம் தூங்கும்போதிலே கனவு
என்ன முழிக்க வைக்குது

பெண் : அந்த ஆத்தோரம் காத்தாட ஒரு ஆசை தோணுது
மனம் ஏங்கி போகுது
லல லாலாலா லாலாலா லல லால லாலலா
லல லால லாலலா

நீ பாடும் பாடல் எது

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நீ பாடும் பாடல் எது
நீ பாடும் பாடல் எது
தாளத்தில் சேராத பாடல் உண்டா
ராகத்தில் இல்லாத கீதம் உண்டா
பாவங்கள் இல்லாத வாழ்வில்

பெண் : நீ பாடும் பாடல் எது
நீ பாடும் பாடல் எது

பெண் : பண்போடு சேராத
எண்ணங்கள் பாழாகும்

பெண் : அன்போடு சேராத
ஆசைகள் வீணாகும்
தர்மத்தில் அடங்காத உள்ளம் என்றும்
தள்ளாடி தள்ளாடி துன்பம் கொள்ளும்
ஒரு காவல் ஏது கணவனை பிரிந்தால்
கோவில் ஏது இறைவனை மறந்தால்

பெண் : நீ பாடும் பாடல் எது
நீ பாடும் பாடல் எது

பெண் : காலங்கள் நூறாக
காண்கின்ற பண்பாடு

பெண் : வேதங்கள் நாளோடு
விளைகின்ற நல்வாழ்வு
வேலிக்குள் நான் கண்ட பூந்தோட்டமே
தாலிக்கு நான் தந்த தாத்பர்யமே
இனி காசியோடு கங்கையுமில்லை
ஆசி கூறும் கருணையும் இல்லை

பெண் : நீ பாடும் பாடல் எது
நீ பாடும் பாடல் எது
தாளத்தில் சேராத பாடல் உண்டா
ராகத்தில் இல்லாத கீதம் உண்டா
பாவங்கள் இல்லாத வாழ்வில்

தாயும் நானே தங்க இளமானே

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தாயும் நானே தங்க இளமானே
தாலாட்டு பாடும்
வாயும் நானே வண்ணப் பூந்தேனே……

பெண் : தாயும் நானே தங்க இளமானே
தாலாட்டு பாடும்
வாயும் நானே வண்ணப் பூந்தேனே……
நீயில்லாத நானும்தான்
நிலவில்லாத வானம்தான்……

பெண் : தாயும் நானே தங்க இளமானே
தாலாட்டு பாடும்
வாயும் நானே வண்ணப் பூந்தேனே……

பெண் : அன்பு நெஞ்சம் எல்லை மீறும்
அங்கு கொஞ்சம் தொல்லை நேரும்
அன்பு நெஞ்சம் எல்லை மீறும்
அங்கு கொஞ்சம் தொல்லை நேரும்
தோட்டம் காக்க வேலி போட்டேன்
உன்னை காக்க கேள்வி கேட்டேன்
தோட்டம் காக்க வேலி போட்டேன்
உன்னை காக்க கேள்வி கேட்டேன்

பெண் : தாயும் நானே தங்க இளமானே
தாலாட்டு பாடும்
வாயும் நானே வண்ணப் பூந்தேனே……

ஆண் : நாளை மலரும் கன்னிப் பூவே
எங்கள் வானின் வெண்ணிலாவே
நாளை மலரும் கன்னிப் பூவே
எங்கள் வானின் வெண்ணிலாவே
நன்மை தீமை என்ன புரியும்
வளர்ந்த பின்னால் உண்மை தெரியும்
நன்மை தீமை என்ன புரியும்
வளர்ந்த பின்னால் உண்மை தெரியும்

பெண் : தாயும் நானே தங்க இளமானே
தாலாட்டு பாடும்
வாயும் நானே வண்ணப் பூந்தேனே……
நீயில்லாத நானும்தான்
நிலவில்லாத வானம்தான்……

பெண் : தாயும் நானே தங்க இளமானே
தாலாட்டு பாடும்
வாயும் நானே வண்ணப் பூந்தேனே……