Mannan

Rajinikanth Mannan

அடிக்குது குளிரு

பாடகர்கள் : ரஜினிகாந்த், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : ரஜினிகாந்த் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அடிக்குது குளிரு ஹா
துடிக்குது தளிரு

பெண் : ஹான்
அடிக்குது குளிரு
துடிக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது

பெண் : வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா

பெண் : அடிக்குது குளிரு…

ஆண் : ஆ அது செரி அது செரி

பெண் : துடிக்குது தளிரு

ஆண் : இத பாருடா…

பெண் : முல்லை பூங்கொடி
கொம்பை தேடுது

ஆண் : அப்டியா…

பெண் : கொம்பைபோல உன்
அன்பை தேடுது

ஆண் : ஓஹோ…

பெண் : வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா

ஆண் : எப்டி… எப்டி…

பெண் : கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா…

பெண் : அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ
ஆடிரதம் அழைக்குது

ஆண் : ஆஆஆ…ய்ய்……

பெண் : கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ
ஆலிலை தவிக்குது

ஆண் : ஓஓஹோ

பெண் : முத்தம் நூறு கேட்டு
வாங்கவே
நாணம் என்னை தடுக்குது

ஆண் : அட்ரா சக்க

பெண் : பித்தம் ஏறி தூண்டில் மீனென
நூலிடை துடிக்குது

ஆண் : இது எப்படி இருக்கு

பெண் : சுகமான கட்டில் நாடகம்
நீயும் நானும் ஆடலாம்

ஆண் : ஆ…ஹா

பெண் : வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்
வெட்கமின்றி கூடலாம்.

ஆண் : அப்டி போடு

பெண் : உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா…

பெண் : அடிக்குது குளிரு

ஆண் : ஆ அது செரி அது செரி…

பெண் : துடிக்குது தளிரு…

ஆண் : அது ரொம்ப செரி ரொம்ப செரி…

ஆண் : சொன்னால் போதும்
நூறு மாப்பிள்ளை …

பெண் : மாலையிட கிடைக்கலாம்

ஆண் : இங்கே வந்து காலை மாலை தான்

பெண் : சேலையை துவைக்கலாம்

ஆண் : என்னைபோல நல்ல மாப்பிள்ளை

பெண் : வாய்ப்பதொரு அதிசயம்

ஆண் : என்னை நீயும் ஏற்றுக்கொண்டது

பெண் : பாவை என் பாக்கியம்

பெண் : நெடு நாட்கள் ஏங்கும்
ஏக்கம் தான்
இந்நாள் இங்கு தீர்ந்தது

ஆண் : இல்லையா பின்ன

பெண் : மங்கை செய்த பூர்வ புண்ணியம்
மன்னன் வந்து சேர்ந்தது

ஆண் : போச்சுடா…

பெண் : உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா…

ஆண் : அடிக்குது குளிரு

பெண் : ஆ..ஆ… அஹ்…ஹஹா……ஹா……

ஆண் : என்னை மடக்குது தளிரு

பெண் : ம்ம்…ஹ்ம்…ஹா….ஹா…

ஆண் : முல்லை பூங்கொடி

பெண் : ம்ம்…ஹ்ம்ம்ம்….ம்ம்ம்ம்…

ஆண் : கொம்பை தேடுது

பெண் : ஹ ஹ ஹ ஹா…

ஆண் : கொம்பைபோல என்

பெண் : ஹ ஹ ஹ ஹா…

ஆண் : அன்பை தேடுது..
வாரே…வாரே…வா…
கட்டிதங்க மேனி கட்டழகு ராணி…

பெண் : அஹா.. ஆஹ்…

ஆண் : கொட்டி பார்த்த தேனீ…

பெண் : ஆஆ ஆஆ அஹ அஹ்ஹ…

ஆண் : கட்டில் பக்கம் வா நீ…

பெண் : அஹ்ஹ்,…ஹா ஹா…

ஆண் : அடிக்குது குளிரு….

அம்மா என்றழைக்காத

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : {அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

ஆண் : அபிராமி சிவகாமி
கருமாரி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம்
அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன்
நான்தானம்மா

ஆண் : பொருளோடு புகழ் வேண்டும்
மகனல்ல தாயே
உன் அருள் வேண்டும் எனக்கென்றும்
அது போதுமே

ஆண் : அடுத்திங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற
வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே…

ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

ஆண் : பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு
ஈடாகுமா

ஆண் : விலை மீது விலை வைத்துக்
கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா

ஆண் : ஈரயைந்து மாதங்கள்
கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு
அறிவேனம்மா

ஆண் : ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட
கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே…ஏ…

ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது….

ஆண் : {அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)

கும்தலக்கடி

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், Chorus
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

குழு : {கும்தலக்கடி
கும்தலக்கடி} (2)

குழு : {கும்தலக்கடி
கும்தலக்கடி} (2)

ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

ஆண் : நான் மாமனாரு வீட்டில்
மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே
அண்ணனாகிப் போனேன்

ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி

ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

ஆண் : பாட்டாளிக் கூட்டமெல்லாம்
பாரவண்டி இழுக்குது

குழு : பாடுபட்டுப் பொழைக்குது
பாட்டுக்கள் எடுத்துப் படிக்குது

ஆண் : அன்னாடம் மீன் பிடிக்கும்
ஏழை சனம் கடலிலே

குழு : போகுறப்போ படகிலே
ஏலேலோ என்று பாடுது

ஆண் : ஏத்தம் இறைப்பவன்

குழு : ஹேய்ய்

ஆண் : ஏரைப் பிடிப்பவன்

குழு : ஹேய்ய்

ஆண் : மூட்டை சுமப்பவன்

குழு : ஹேய்ய்

ஆண் : முடியை வழிப்பவன்

ஆண் : எல்லாம் ஒரு இனம்
இங்கு பாடித்தான் செய்யுது வேல

குழு : ஹேய்ய் ஹே

ஆண் : பாட்டாலே மனம் கொண்ட
பாரங்கள் நீங்குவதாலே

குழு : ஹேய்ய் ஹே

ஆண் : நாம் கூடத்தான்
ஒரு கச்சேரி வைப்போமடா

குழு : ஹேய்

குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

ஆண் : தை மாசம் பிறந்திடுச்சு
பொங்கப் பானை வைக்கலாம்

குழு : புதுசு வாங்கிக்கட்டலாம்
பொங்கலோ பொங்கல் பாடலாம்

ஆண் : ஓயாமல் உழைக்கும் வர்க்கம்
நாளும் இங்கு சிரிக்கணும்

குழு : நாடும் வீடும் செழிக்கணும்
நல்லது எல்லாம் நடக்கணும்

ஆண் : ஏறி கெடக்குது

குழு : ஹேய்ய்

ஆண் : எல்லாம் விலையிலே

குழு : ஹேய்ய்

ஆண் : ஏற்றம் வரலியே

குழு : ஹேய்ய்

ஆண் : எங்க நிலையிலே

ஆண் : மாசம் தான் வரும்
எங்க சம்பளம் பத்தலே சாமி

குழு : ஹேய்ய் ஹே

ஆண் : போனஸ்தான் தரும்
முதலாளியை மெச்சிடும் பூமி

குழு : ஹேய்ய் ஹே

ஆண் : போராடினா வெற்றி நிச்சயம்
நிச்சயம் தான் ஹேய்…

ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

ஆண் : நான் மாமனாரு வீட்டில்
மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே
அண்ணனாகிப் போனேன்

ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி

ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு

ஆண் : ஆமாம்

குழு : இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து

ஆண் : போடு

குழு : {கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து} (2)

மன்னர் மன்னனே

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : Ilayarja
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ

பெண் : எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா

பெண் : {மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ} (2)

பெண் : நான் பணம் படைத்த
பட்டத்து ராஜன் தவப்புதல்வி
நீ திமிர் பிடித்த
பாட்டாளி மக்களின் படைத்தலைவன்

பெண் : ஆட்டம் போடு கூட்டம் போடு
ஆடிபோகும் உன் ஆணவம்
அர்ஜுனந்தான் அஞ்சுகின்ற
அல்லிராணி என் ஜாதகம்

பெண் : என்னை பார்த்து எந்த ஆணும்
இந்த நாளும் எந்த நாளும்
என்னை பார்த்து எந்த ஆணும்
வணங்கி வந்து நின்று
வந்தனங்கள் தந்து செல்லணும்

பெண் : மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ

பெண் : எந்த ஊரு ராணி என்று
என்னை நினைத்தாய்
எட்டு தேசம் ஆளுகின்ற
பெண்ணை முறைத்தாய்
மன்னவா ஓ மன்னவா வா வா

பெண் : {மன்னர் மன்னனே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மாய்
எனக்கு கட்டுப்பட்டு நீ} (2)

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : மாயஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா

பெண் : நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா

ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ

பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி
எந்நாளும்
ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம்
வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்

பெண் : மாமாங்கம் ஆனாலும்
மன்னா உன் மார்சேர்ந்து
சின்ன மலர்தான் சிந்து படிக்கும்

ஆண் : கையோடு கை சேரும்
கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்

பெண் : மேளசத்தம் கேட்பதெந்த
தேதியோ

குழு : லால லால லால லால லால லா

ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த
தேவியோ

குழு : லால லால லால லால லால லா

பெண் : காதும் காதுமாய்

ஆண் : காதல் மந்திரம்

பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ
எந்நாளும் இங்கு

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

பெண் : நின்றாலும் சென்றாலும்
பின்னோடு எந்நாளும்
வந்த நிழலே வண்ண மயிலே

ஆண் : தொட்டாலும் பட்டாலும்
முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே

பெண் : உன்மேனி பொன்மேனி
இந்நாளும் எந்நாளும்
என்னை மயக்க தன்னை மறக்க

ஆண் : ஓடைமீது ஓடம் போல ஆடவா

குழு : லால லால லால லால லால லா

பெண் : உன்னையன்றி யாரும் இல்லை ஆடவா

குழு : லால லால லால லால லால லா

ஆண் : காதல் கன்னிகை

பெண் : காமன் பண்டிகை

ஆண் : காணுகின்ற காலமல்லவா
எந்நாளும் இங்கு

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : மாயஜாலம் என்ன
மையல் கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா

பெண் : நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா

ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ

பெண் : பூ மேனி கொண்டாடும் வெண்பனி
எந்நாளும்

பெண் : ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : ரூபாப்பா ராபாப்பா ராபபப்பா
டுடு டுடு டுடுடுட்டு டுடுடு

சண்டி ராணியே

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சண்டி ராணியே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய்
எனக்கு கட்டுபட்டு நீ

ஆண் : இந்த ஊரு ராணி என்று
உன்னை நினைத்தாய்
தட்டி கேட்க ஆளில்லாமல்
தத்தி குதித்தாய்
சண்டியே ஓ சண்டியே வா வா

ஆண் : சண்டி ராணியே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய்
எனக்கு கட்டுபட்டு நீ

ஆண் : என் சுதந்திரத்தை
எந்நாளும் யாருமே பறித்ததில்லை
என் சரித்திரத்தில் எந்நாளும்
பெண்மகள் ஜெயித்ததில்லை

ஆண் : என்ன ஆச்சு… எங்கு போச்சு…
சின்ன ராணி உன் சாகசம்
ஆட்டம் பாட்டம் நோட்டமெல்லாம்
காட்டலாமா நீ என் வசம்

ஆண் : ஓட்டும்போது ஒட்டுவேனே
முட்டும் பொது முட்டுவேனே
ஓட்டும் பொது ஒட்டுவேனே
எதுக்கு வம்பு தும்பு
என்னிடத்தில் மண்டி போடடி

ஆண் : சண்டி ராணியே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய்
எனக்கு கட்டுபட்டு நீ

ஆண் : இந்த ஊரு ராணி என்று
உன்னை நினைத்தாய்
தட்டி கேட்க ஆளில்லாமல்
தத்தி குதித்தாய்
சண்டியே ஓ சண்டியே வா வா

ஆண் : {சண்டி ராணியே
எனக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய்
எனக்கு கட்டுபட்டு நீ} (2)