Mullum Malarum

Mullum Malarum - Image

ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்

Movie Mullum Malarum Music Ilaiyaraaja Year 1978 Lyrics Gangai Amaran Singers S. P. Balasubrahmanyam, L. R. Anjali and Chorus

ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்

யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம்
தொங்கனும் தோரனமாக
ஏண்டா டேய் ரானிய கூப்பிடு அவளோட சேதிய கூப்பிடு
ஹே மதுரை ராஜியம் என்னது
ஒனக்கொரு பாதியை கொடுக்கிறேண்டா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே

ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே
தந்தனா பூசுங்க சாமியே
ஏலேலே லே லேலே பாருங்க என்ன
வேணும் அத கேளுங்க
ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே

பொண்ணா பூ பூத்து வைரம் காயாக
கைக்கும் என்னோட தோட்டம்
பொண்ணா பூ பூத்து வைரம் காயாக
கைக்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு போகம் விளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன்
மனசிருக்கு பொழச்சி பாக்குறேன்
ஹே போனா போகுது வேலை
உனக்கொரு வேலைய கொடுக்குறேண்டா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே

ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே
லேலால லேலால லேலே லேல லேலலா
சொல்லாமே சொல்லு மல்லாப்பு மாலையில் சாமிக்கு
போட்டுட்டு சொல்லி சொல்லி பாருங்க
லேலே லேல லேலலலா லேலேலேலே லேலேலேலே லேலேலேலே

ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா ஊர்கோலம் போகும் சாமி
ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்ல வாழ நீ தான் நேர் வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது
சாமிய தான் எல்லோரும் கேட்குது
நீ கேட்ட கேட்டதை கொடுக்க
சாமிய பாத்து கேளுங்கடா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்

செந்தாழம் பூவில்

Movie Mullum Malarum Music Ilaiyaraaja Year 1978 Lyrics Kannadasan Singers K. J. Yesudas

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளெ வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

நித்தம் நித்தம் நெல்லு சோறு

Movie Mullum Malarum Music Ilaiyaraaja Year 1978 Lyrics Gangai Amaran Singers Vani Jayaram

நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா

பச்சரிசி சோறு உப்பு கருவாடு சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு
குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா

பாவக்கா கூட்டு பருப்போட சேத்து பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு
சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமையா
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா

பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு
பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்
அதுக்கு என ஒலகத்துல இல்லவே இல்ல
அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல
இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா

அடி பெண்ணே

Movie Mullum Malarum Music Ilaiyaraaja Year 1978 Lyrics Panchu Arunachalam Singers Jency Anthony

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை

வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன பூங்காற்றில் ஒரு ராகம் பொன் வண்டின் ரீங்காரம்
பாடும் பாடல் என்ன சித்தாடை முத்தாடு செவ்வந்தி நீயே
சிங்காரம் பார்வை சொல்லும் சேதியல்லவோ
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே அடி பெண்ணே

நீரோடும் ஒரு ஓடை மேலாடும் திருமேடை தேடும் தேவையென்ன
பார்த்தாளும் ஒரு ராணி பாலாடை இவள் மேனி கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான எண்ணங்கள் நீயே கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே அடி பெண்ணே